Sunday, August 2, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldபோரில் திடீர் திருப்பம்! இரானுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகும் அமெரிக்கா?

போரில் திடீர் திருப்பம்! இரானுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகும் அமெரிக்கா?

உலகமே மூச்சுப்பிடித்துக் கொண்டு மத்திய கிழக்கை உற்றுநோக்கிக் கொண்டிருந்த அந்த ஆபத்தான தருணத்தில், ஒரே ஒரு பதிவு ஒட்டுமொத்தப் போக்கையும் மாற்றி அமைத்துள்ளது! இரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் புதிய தாக்குதல்களை இந்த வார இறுதியில் தொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வந்தன. நிலமை உச்சகட்டப் போர்ப் பதற்றத்தை எட்டியிருந்த வேளையில்தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிது நேரத்திற்கு முன்பாக வெளியான அந்தப் பதிவு, உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரான் மீது நடத்தப்படவிருந்த பேரழிவுத் தாக்குதல்களை அமெரிக்கா முழுமையாக ரத்து செய்துள்ளதாக ட்ரம்ப் அதில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

“உலக நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு”: ட்ரம்ப் வெளியிட்ட அந்தப் ரகசியக் காரணம்!

தாக்குதலைத் தீவிரப்படுத்துவதை விடுத்து, அமெரிக்கா ஏன் திடீரென பின்வாங்கியது என்ற கேள்வி உலக அரங்கில் காட்டுத்தீயாகப் பரவியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ட்ரம்ப், “உலகத்தின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டும், ஒரு வெற்றிகரமான மற்றும் வளமான இரானின் இருப்பை உறுதிசெய்வதற்காகவும், மிக விரைவில் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தத் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அதிரடித் தீர்மானம் அமெரிக்காவினால் தனித்து எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், தங்களின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலுடன் கலந்தாலோசித்து இணைந்தே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இரானின் கடும் எச்சரிக்கையும்… பின்வாங்கிய அமெரிக்காவும்!

இந்தத் தாக்குதல் ரத்து அறிவிப்புக்கு முன்பாக, இரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. வொஷிங்டனுடன் இணைந்து செயல்படும் அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு பிராந்திய நாடும் “நிச்சயமாக இந்தப் போர்த் தீயில் சிக்கிக்கொள்ளும்” என இரான் பகிரங்கமாக எச்சரித்திருந்தது. பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதே அமெரிக்காதான் என்றும் இரான் குற்றம் சாட்டியிருந்தது.

இவ்வாறானதொரு கொதிநிலைக்கு மத்தியில்தான், நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த இரான் மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகள் அமெரிக்காவிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தன.

மத்திய கிழக்கு நாடுகளின் தூது: மலர்கிறதா புதிய அமைதி ஒப்பந்தம்?

இரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் இணைந்து, இரானுடன் ஒரு இணக்கப்பாடான ஒப்பந்தத்திற்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையில், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை “ஒத்திவைக்குமாறு” அமெரிக்காவிடம் அவசரக் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டே தற்காலிகமாகத் தாக்குதல்களை ரத்து செய்ய சம்மதித்ததாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இந்தச் சலுகை சும்மா கிடைக்கவில்லை! இரான் கைசாத்திடப் போகும் எந்தவொரு புதிய ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மிகக் கடுமையான இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

ட்ரம்ப்பின் இரண்டு முக்கிய நிபந்தனைகள்: அடுத்து நடக்கப்போவது என்ன?

அமெரிக்கா முன்வைத்துள்ள அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிபந்தனைகள் உலக வர்த்தகத்தையும் பாதுகாப்பையும் நேரடியாகத் தீர்மானிக்கக் கூடியவை.

  • உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கிய பாதையாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) உடனடியாக, முழுமையாகவும் முற்றிலும் திறக்க வேண்டும்.
  • உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் இரானின் அணுஆயுத அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு இரான் முழுமையாகப் பணியுமா அல்லது இது புயலுக்கு முந்தைய அமைதியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

போரில் திடீர் திருப்பம்! இரானுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகும் அமெரிக்கா?

உலகமே மூச்சுப்பிடித்துக் கொண்டு மத்திய கிழக்கை உற்றுநோக்கிக் கொண்டிருந்த அந்த ஆபத்தான தருணத்தில், ஒரே ஒரு பதிவு ஒட்டுமொத்தப் போக்கையும் மாற்றி அமைத்துள்ளது! இரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் புதிய தாக்குதல்களை இந்த வார இறுதியில் தொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வந்தன. நிலமை உச்சகட்டப் போர்ப் பதற்றத்தை எட்டியிருந்த வேளையில்தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிது நேரத்திற்கு முன்பாக வெளியான அந்தப் பதிவு, உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரான் மீது நடத்தப்படவிருந்த பேரழிவுத் தாக்குதல்களை அமெரிக்கா முழுமையாக ரத்து செய்துள்ளதாக ட்ரம்ப் அதில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

“உலக நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு”: ட்ரம்ப் வெளியிட்ட அந்தப் ரகசியக் காரணம்!

தாக்குதலைத் தீவிரப்படுத்துவதை விடுத்து, அமெரிக்கா ஏன் திடீரென பின்வாங்கியது என்ற கேள்வி உலக அரங்கில் காட்டுத்தீயாகப் பரவியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ட்ரம்ப், “உலகத்தின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டும், ஒரு வெற்றிகரமான மற்றும் வளமான இரானின் இருப்பை உறுதிசெய்வதற்காகவும், மிக விரைவில் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தத் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அதிரடித் தீர்மானம் அமெரிக்காவினால் தனித்து எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், தங்களின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலுடன் கலந்தாலோசித்து இணைந்தே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இரானின் கடும் எச்சரிக்கையும்… பின்வாங்கிய அமெரிக்காவும்!

இந்தத் தாக்குதல் ரத்து அறிவிப்புக்கு முன்பாக, இரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. வொஷிங்டனுடன் இணைந்து செயல்படும் அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு பிராந்திய நாடும் “நிச்சயமாக இந்தப் போர்த் தீயில் சிக்கிக்கொள்ளும்” என இரான் பகிரங்கமாக எச்சரித்திருந்தது. பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதே அமெரிக்காதான் என்றும் இரான் குற்றம் சாட்டியிருந்தது.

இவ்வாறானதொரு கொதிநிலைக்கு மத்தியில்தான், நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த இரான் மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகள் அமெரிக்காவிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தன.

மத்திய கிழக்கு நாடுகளின் தூது: மலர்கிறதா புதிய அமைதி ஒப்பந்தம்?

இரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் இணைந்து, இரானுடன் ஒரு இணக்கப்பாடான ஒப்பந்தத்திற்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையில், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை “ஒத்திவைக்குமாறு” அமெரிக்காவிடம் அவசரக் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டே தற்காலிகமாகத் தாக்குதல்களை ரத்து செய்ய சம்மதித்ததாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இந்தச் சலுகை சும்மா கிடைக்கவில்லை! இரான் கைசாத்திடப் போகும் எந்தவொரு புதிய ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மிகக் கடுமையான இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

ட்ரம்ப்பின் இரண்டு முக்கிய நிபந்தனைகள்: அடுத்து நடக்கப்போவது என்ன?

அமெரிக்கா முன்வைத்துள்ள அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிபந்தனைகள் உலக வர்த்தகத்தையும் பாதுகாப்பையும் நேரடியாகத் தீர்மானிக்கக் கூடியவை.

  • உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கிய பாதையாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) உடனடியாக, முழுமையாகவும் முற்றிலும் திறக்க வேண்டும்.
  • உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் இரானின் அணுஆயுத அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு இரான் முழுமையாகப் பணியுமா அல்லது இது புயலுக்கு முந்தைய அமைதியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular