Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 110

சாதித்து காட்டிய கொத்தாந்தீவு பாடசாலை 6 மாணவர்கள்!

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் சித்தி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 39 மாணவர்களில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

1.முஹம்மது சமீம் ஆயிஷா ஐனா 155
2.வஸீம் ரஜா ஆகில் அஹ்மட் – 144
3.முஹம்மத் முபீத் ஆயிஷா அத்தியா – 143
4.முஹம்மத் இஜிலான் பாத்திமா இஷாபா – 137
5.வஸீம் ரஜா ருக்கையா அலா – 134
6.முஹம்மது றியாஸ் றஹ்பா -134

ஆகியோர் புத்தளம் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் எஸ் நஸ்மி தெரிவித்துள்ளார்.

இம் மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட வகுப்பாசிரியர்களான
ஏ. சீ. எப். நஸ்ரின், ஏ. எல். எப். றிஸ்வானா ஆகியோருக்கும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை அதிபர் எஸ் நஸ்மி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று (04) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திபெற்ற மாணவரகளை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் இடம்பெற்ற போது பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

நாகவில்லு பாடசாலையில் 9 மாணவர்கள் சித்தி!

இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் 9 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் முஹம்மத் அர்சத் ருகையா என்ற மாணவி அதிகூடிய புள்ளிகளாக 154 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் முஹம்மத் அர்சத் ருகையா 154 புள்ளிகளையும், முபீன் முசாப் அஹமத் 148 புள்ளிகளையும், ஜிப்ரி ஹிக்மா 147 புள்ளிகளையும், ரமீஸ் அபான் அஹமத் 143 புள்ளிகளையும், சிபாத் பாத்திமா அபா 140 புள்ளிகளையும், ஹாரிஸ் அப்துல்லாஹ் ஹசன் 139 புள்ளிகளையும், சுஜாவு ஷான் அஹமத் 138 புள்ளிகளையும், அபீக் அஹமத் 132 புள்ளிகளையும், வாசிப் பாத்திமா அனீகா 131 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சையில் அசத்திய எருக்கலம்பிட்டி மாணவர்கள்!

இம்முறை இடம்பெற்ற (2025) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியில் 5 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் ஹிலால் சப்கி முஹம்மத் 165 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 131 என்ற வெட்டுப்புள்ளியை கடந்து, எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவர்கள் திறமைச் சித்தி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளவரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் ஹிலால் சப்கி முஹம்மத் 165 புள்ளிகளையும், முஹம்மது சஜாத் சஹாம் 152 புள்ளிகளையும், இல்முதீன் முஹம்மது இனாஸ் 143 புள்ளிகளையும், சபான் முஹம்மது அஸ்ஜாத் 142 புள்ளிகளையும், பாஹில் அப்துல்லாஹ் 138 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சிறப்பாக தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பரீட்சியில் தோற்றி சித்திபெற தவறிய மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்!

0

சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்கு நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகவும் குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன. 

தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாகத் தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் கலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட கலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாகக் கலைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தரம் 2-11 வரை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்கல்

உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வகுப்பறையொன்றிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மாத்திரம் பேண வேண்டியது அவசியமாகும்.

அதனால், நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இடைநிலைத் தரங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தற்போது கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு உள்வாங்குவதற்கு தேவையாகவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பாடசாலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, புதிய சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனை செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள உபசெயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் முதலிடம்!

0

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். 

இதேவேளை, தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 194 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல், அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 51,969 ஆகும், இது 17.11% சதவீதமாகப் பதிவாகியுள்ளது. 

இது கடந்த ஆண்டைவிட 1.06% அதிகம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார். 

மாகாண மட்டத்தில், 70 அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் சப்ரகமுவ மாகாணம் முதலிடத்தையும், தென் மாகாணம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், சப்ரகமுவ மாகாணம் மிக உயர்ந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஊவா மாகாணம் இரண்டாவது இடத்தையும், தென் மாகாணம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட மட்டத்தில், 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் குருநாகல் மாவட்டம் முதலிடத்தையும், ஹம்பாந்தோட்டை, கேகாலை மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்துள்ளன.

அதிவேக வீதியில் இடம்பெற்ற படுபயங்கர விபத்து!

0

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லொறி ஒன்றும், பவுசர் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீதி விபத்துகளில் 8 வயது சிறுமி உட்பட ஆறு பேர் பலி!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (02) நடந்த வீதி விபத்துகளில் 8 வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துகள் பொல்கஹவெல, இரத்தினபுரி, கட்டுநாயக்க, ஏறாவூர், குளியாபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

குளியாபிட்டிய-ஹெட்டிபொல வீதியில், கோமுகமுவ சந்திக்கு அருகில், ஹெட்டிபொல திசையில் இருந்து வந்த லொறி, எதிர்த்திசையில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். 

இதில், படுகாயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். 

குளியாபிட்டிய பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், பொல்கஹவெல-கேகாலை வீதியில் பொல்கஹவெல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் சென்ற தனியார் பேருந்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இம்புல்கஸ்தெனியவைச் சேர்ந்த 8 வயது சிறுமி காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

அதேநேரம், இரத்தினபுரி-பாணந்துறை வீதியில் இரத்தினபுரி நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதகு ஒன்றில் மோதியது. இதில் காயமடைந்த சாரதி மற்றும் பயணியான 82 வயது பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்தார்.

இதேவேளை, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில், ஆடியம்பலம-கிம்புலாபிட்டிய வீதியில் கிம்புலாபிட்டிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதிய விபத்தில் பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்தில் பாதசாரியான 50 வயது நபர் உயிரிழந்தார். 

இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில், களுவன்கேணி ரயில் கடவையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 26 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் களுவன்கேணியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. 

சிலாபம்-புத்தளம் வீதியில், கொட்டபிட்டி சந்திக்கு அருகில், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதிய விபத்தில், படுகாயமடைந்த பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதசாரி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று மழை வருமா, வராதா?

0

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (03ஆம் திகதி) நண்பகல் 12.09 அளவில் மாரவில, தம்பெலஸ்ஸ, மாவத்தகம, உக்குவெல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாநாட்டை ஒத்திவைத்த ஐக்கிய தேசியக் கட்சி!

0

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இன்று (02) கொழும்பில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவித்தார். 

ஒத்திவைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவை இந்த மாதம் வேறு ஒரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.