Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 115

இஸ்ரேல் கொடியை முத்தமிட வைத்து கொடூரத் தாக்குதல்!

காசாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்த நிலையில், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான தகவல் உலகை உலுக்கியுள்ளது. காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 40க்கும் மேற்பட்ட கப்பல்களில் சென்ற ‘குளோபல் சுமுத்’ நிவாரணக் கப்பல் கூட்டணியை இஸ்ரேல் கடற்படை அண்மையில் வழிமறித்தது. அதில் பயணம் செய்த, பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்கு துருக்கி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட ஆர்வலர்களில் ஒரு பகுதியினர் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு நேற்று நாடு கடத்தப்பட்டனர். இது தொடர்பாக துருக்கி பத்திரிகையாளர் எர்சின் செலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கிரெட்டா தன்பெர்க்கை இஸ்ரேல் படையினர் மிகக் கடுமையாக அவமானப்படுத்தினர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, கொடூரமாகத் தாக்கினர். மேலும், அவரைத் தரையில் மண்டியிட வைத்து இஸ்ரேல் நாட்டு கொடியை வலுக்கட்டாயமாக முத்தமிட வைத்தனர்.

இதேபோல, இத்தாலிய பத்திரிகையாளர் லொரன்சோ அகோஸ்டினோ, ‘கிரெட்டாவின் மீது இஸ்ரேல் கொடியைப் போர்த்தி, வெற்றிப் கோப்பையைப் போல அவரை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். பல நாட்கள் தங்களுக்கு உணவு தராமல் பட்டினி போட்டதாகவும், கழிவறையில் இருந்த நீரைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் மற்ற ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்’ என்றார். இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இது ‘முழுக்க முழுக்கப் பொய்’ என்றும், கைதான அனைவரும் சட்டப்படி நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

கல்பிட்டியில் தொடர்ச்சியாக சிக்கும் கடத்தல் பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படையினர், கடந்த வெள்ளிக்கிழமை (03) கற்பிட்டி குடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி வெள்ளிக்கிழமை (03) இரவு கற்பிட்டிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​ சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு இரண்டு (02) சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மேற்படி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி முகத்துவாரம் மற்றும் பள்ளிவாசல்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் அமீனுக்கு சர்வதேச அங்கீகாரம்!

மூத்த ஊடகவியலாளர் அமீன் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

துருக்கியின், இஸ்தான்புல் நகரை தலைமையகமாகக் கொண்டியங்கும் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றம் (Palestine International Forum for Media and Communication – Tawasol) 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதுடன், பலஸ்தீன மக்களின் குரலை உலக ஊடகங்களில் வலுப்படுத்துவது மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், ஊடக நிபுணர்கள் ஆகியோருக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய இலக்காகும்.

இம்மன்றம் வருடந்தோறும் நடத்தும் மாநாடுகள், பயிற்சிகள், ஊடக முன்முயற்சிகள் மற்றும் ஆய்வுகளின் மூலம் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கின்றது.

இலங்கையின் ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட என்.எம். அமீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன், இலங்கையில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு நிறுவனமான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (SAFMA) இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் பணிகளில் முக்கிய பங்காற்றி வரும் அவர், ஒழுக்க நெறியுடன் கூடிய ஊடகப் பண்பாட்டை வளர்த்தெடுத்தல், ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தல் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பில் முன்னிற்பதற்காக பரவலாக பாராட்டப்பட்டுள்ளார்.

Tawasol மன்றத்தின் இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள என்.எம். அமீன் அவர்கள் இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் மன்றத்துக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதோடு, பலஸ்தீன விவகாரம் மற்றும் ஊடகத்துறை வளர்ச்சி தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!

0

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 

இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்கு சென்று கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் லொறியின் சாரதி, ஆண் ஒருவர் , 2 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்த நிலையில் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்போது லொறியின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 

குறித்த லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் இன்னும் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சடலங்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. 

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆராச்சிகட்டுவ பிரதேசத்தை பயமுறுத்திய விமானம்!

0

ஜூட் சமந்த

ஆராச்சிகட்டுவ – நல்லதரண்கடுவ பகுதியில் நேற்று இரவே வேளையில் சந்தேகத்திற்கிடமான விமானம் ஒன்று பல முறை தாழ்வாக பறந்ததாக பிரதேச மக்கள் பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த விமானம் மிகவும் தாழ்வாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பறந்ததாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

விமானத்தின் சக்கரங்களை கண்களால் காண முடிந்ததாகவும், குறித்த விமானத்தில் இருந்து ஒருவகையான வெளிச்சம் வெளிப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள், குறித்த விமானம் ஏதேனும் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என நினைத்து பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்ததாக தெரிவித்தனர்.

விடயம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் பிரிவு, நேற்றைய தினம் ஏற்பட்ட மழையினால் கட்டுநாயக்க விமான நிலையம் நீரில் மூழ்கி இருந்ததாகவும், அதனால் குறித்த விமானம் தரை இறங்க முடியாமையால் சிறுது நேரம் வானில் பறந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதையல் தோண்டுவதற்காக புதைத்த நகைகள் மாயம்!

0

ஜூட் சமந்தா

புதையல் தோண்டுவதற்கு எனக்கூறி ரூ.21,25,000 மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேரை இம்மாதம் 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிங்கிரிய – ஊராபொத்த பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் ஒரு தாய் மற்றும் ஒரு மகளும் அடங்குவர்.

கல்வல – ஆண்டிகம பகுதியைச் சேர்ந்த ராசதோரேஜ் ராஜேஸ்வரி (45) என்பவர் அளித்த புகாரின் பேரில், சந்தேக நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆண்டிகம – கஜுவத்த பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டை ஒரு பெண் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், வீடு அமைந்துள்ள நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக அந்தப் பெண் மறுநாள் தன்னிடம் கூறியதாகவும் புகார்தாரர் போலீசாரிடம் தெரிவித்தார். புதையலை மீட்டெடுக்க, வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தமான தங்க நகைகளை தோட்டத்தில் புதைக்க வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் யாராவது இறந்துவிடுவார்கள் என்று அந்தப் பெண் புகார்தாரரிடம் கூறியிருந்தார்.

அதன்படி, கடந்த மாதம் 4 ஆம் தேதி சந்தேக நபரிடம் ரூ.21,25,000 மதிப்புள்ள தங்க நகைகளை வெள்ளைத் துணியில் சுற்றி கொடுத்து புதைக்கப்பட்டுள்ளதுடன், புதையல் மீட்கப்படும் வரை புதைத்த தங்க நகைகளை எடுத்தால், வீட்டில் யாராவது இறந்துவிடுவார்கள் என்று புகார்தாரரிடம் கூறியிருந்தார். தங்க நகைகள் புதைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சந்தேக நபரும், அங்கிருந்த அவரது மகளும் வீட்டிலிருந்து காணாமல் போனதாக புகார்தாரர் கூறியியுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும், தங்க நகைகள் சுற்றப்பட்டிருந்த துணிப் பையைத் திறந்தபோது, ​​ஒரு நெக்லஸ், ஒரு கயிறு தகடு மற்றும் இரண்டு போலி மோதிரங்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் புகார்தாரர் போலீசாரிடம் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில், முக்கிய சந்தேக நபர், அவரது மகள் மற்றும் மற்றொரு நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் திருடப்பட்ட தங்க நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WI எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி!

0

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எனினும், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 286 ரன்கள் முன்னிலையுடன் 448/5 ரன்கள் எடுத்தது.

அபாரமாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரத்யேக சாதனையை இந்திய அணி படைத்தது. பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா இன்று தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில், டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டதுபோலவே இதிலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களைத் தாரை வார்த்தது. இதனால் அந்த அணி 146 ரன்களுக்குச் சுருண்டது.

இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக அலிக் அதான்ஷ் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களையும் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கையில் அறிமுகமாகும் ரோபோடிக் அறுவை சிகிச்சை!

0

தலவத்துகொடவில் ரூ.10 பில்லியன் செலவில் ஹேமாஸ் நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

நாட்டின் சுகாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் ஹேமாஸ் நிறுவனம், நேற்று (03) தலவத்துகொடையில் தனது அதிநவீன, முழுமையான வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டபட்டது.

சுமார் 900 சுகாதார நிபுணர்களைப் பணியமர்த்தவும், 150 நோயாளர்களுக்கான படுக்கை விரிபுபடுத்தவும் கொண்டதாக வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன அவசர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும், மேலும் அடிக்கல் நாட்டு விழா “சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அர்த்தம்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹேமாஸ் மிக உயர்ந்த சுகாதாரப் பராமரிப்புக்கான முதலீட்டைச் செய்துள்ளதுடன் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப அதன் சேவைகளை விரிவுபடுத்தவும், தேசிய சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்

நாட்டில் முதலீடு செய்வதில் வணிக சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது நிரூபிக்கிறது என்றும், இந்த மருத்துவமனை நாட்டில் முதல் முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்துதல், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், இருதயவியல், நரம்பியல், இரைப்பை குடல், எலும்பியல் போன்ற சிகிச்சை பிரிவு வசதிகள் உள்ளிட்ட சிறப்புப் பராமரிப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால அர்ப்பணிப்புக்காக ஹேமாஸ் குழுமம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் திட்டமிடல் பிரிவு மற்றும் நிதி பிரிவுகளுக்கு தனது நன்றியைத் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துக் கொண்டார்.

ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ் நிகழ்வில் உரையாற்றுகையில்; இலங்கையின் முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை பயிற்சி மையத்தை நிறுவவும், இது அடுத்த தலைமுறை மருத்துவர்களின் அறுவை சிகிச்சை திறன்களை மேலும் மேம்படுத்த உதவுகிறது என தெரிவித்தார்.

ஹேமாஸ் குழுமத்தின் சுகாதாரப் பிரிவின் தலைவர் முர்தாசா யூசுப்மலி, இந்தத் திட்டம் ஹேமாஸ் மருத்துவமனைகள் வலையமைப்பின் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, மற்றும் நமது நாட்டை ஒரு வளர்ந்து வரும் பிராந்திய சுகாதார மையமாக நிலைநிறுத்துகிறது என்று கூறினார்.

இலங்கையில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவாக்கப்பட்ட மருத்துவமனை வலையமைப்பு, துல்லியமான இதய சிகிச்சைக்கான அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, விரிவாக்கப்பட்ட இருதய பராமரிப்பு மற்றும் அவசர இருதய பராமரிப்பு வசதிகள், சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் துறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை, மற்றும் ஸ்கோலியோசிஸ் சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட விரிவான முதுகெலும்பு பராமரிப்பு, சிக்கலான தசைக்கூட்டு நிலைமைகள் மற்றும் பிரத்யேக எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவ அலகு, மற்றும் ரோபோ நுட்பங்களை உள்ளடக்கிய மேம்பட்ட சிறுநீரக மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல அதி நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ், ஹேமாஸ் குழும சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் தலைவர் முர்தாசா எசுஃபாலி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சந்திரா, இயக்குநர் பொது மேலாளர் டாக்டர் பிரதீப் எவர்ட், மூத்த பிரமுகர்கள், ஆலோசகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹேமாஸ் குழும தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருக்கு தங்கப் பதக்கம்!

0

ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்விக்கு, பாக்கிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்க முடிவு

துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.

இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது. அதற்குப் பதிலளித்த நக்வி, ”கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்காக பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அவர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், நக்வியின் நிலைப்பாடு பாகிஸ்தானின் அரசியல் மற்றும் விளையாட்டுச் சமூகங்கள் முழுவதும் பாராட்டுகளைத் தூண்டியுள்ளது, மேலும் நாட்டின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான, ’ஷாஹீத் சுல்பிகர் அலி பூட்டோ எக்ஸலன்ஸ் தங்கப் பதக்கம்’ அவருக்கு வழங்கப்பட உள்ளது. ’தி நேஷன்’ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி , சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து சங்கங்களின் தலைவரான வழக்கறிஞர் குலாம் அப்பாஸ் ஜமால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

”இந்தியாவுடன் அரசியல் மற்றும் விளையாட்டு பதற்றங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் நக்வியின் நடவடிக்கைகள் தேசிய பெருமையை மீட்டெடுத்துள்ளன. இது கிரிக்கெட்டைப் பற்றியது மட்டுமல்ல. இது கண்ணியம், இறையாண்மை மற்றும் அழுத்தத்தின் கீழ் வளைந்து கொடுக்க மறுப்பது பற்றியது” என்று ஜமால் தெரிவித்துள்ளார். இதற்கான விழா, விரைவில் கராச்சியில் நடைபெற இருப்பதாகவும், அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமை விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

ஐ.நா சபையில் பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும்!

யுத்தத்திற்கு பின்னரான பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச பார்வை இலங்கை மீது காணப்பட வேண்டுமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும் என தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சம்பியன் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கிளிநொச்சி சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சீருடை அறிமுக நிகழ்வு அணி உரிமையாளர் ந.குகதீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ .சுமந்திரன் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்;

நாளை மறு தினம் ஆறாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான அறுபத்து ஒன்று தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

சென்ற வருடம் இணை அனுசரனை நாடுகள் கொண்டு வரும்போது இலங்கை அரசாங்கம் அதனை எதிர்த்தது. வாக்கெடுப்பு நேரத்தில் வாக்கெடுப்பை கோரவில்லை அது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த முறையும் இந்த எதிர்பார்ப்பினை இணை அனுசரனை நாடுகள் கொண்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்ட சில திருத்தங்களை கூட மேற்கொண்டுள்ளனர். சில வார்த்தை பிரயோகங்களினால் சில நாடுகள் எதிர்த்தால் அது நிறைவேற்றாமல் போனால் அது பாதகமாக அமையும். இந்த தீர்மானத்தால் என்ன பிரயோசனம் என்று பலர் எதிர்த்துள்ளனர்.

குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனால் யுத்தத்திற்கு பின்னரான வடக்கு கிழக்கின் பொறுப்பு கூறல் நல்லிணக்கம் தொடர்பான பார்வை இல்லாது போகும். குறிப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரின் பார்வை தொடர்ந்து காணப்படும். தொடர்ச்சியாக குறித்த தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகளுக்கு நன்றி கூறுகின்றோம்.

உள்ளடக்கத்தில் சில எதிரான கருத்துக்கள் உள்ளன அதனை சுட்டிகாட்டியிருக்கின்றோம். இந்த முயற்சியை கொண்டுவரும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.