Tuesday, November 4, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 12

புத்தளம் பகுதியில் கடை திறப்பு விழாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

ஜூட் சமந்த

புதிதாக திறக்கவிருந்த ஒரு வணிக ஸ்தாபனத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

புத்தளம், சேனகுடியிருப்புவைச் சேர்ந்த நவோத் கிம்ஹான் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம், ரத்மலை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

புத்தளம், ரத்மலை பகுதியில் புதிதாக திறக்கவிருந்த ஒரு வணிக ஸ்தாபனத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​மின்சாரம் தாக்கி அந்த இளைஞர் உயிரிழந்தார். புதிய வணிக ஸ்தாபனத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்படாததால், அருகிலுள்ள கடையில் இருந்து தற்காலிகமாக மின்சாரம் பெற நடவடிக்கை எடுத்தனர்.

மின்சாரம் பெற பயன்படுத்தப்படும் கம்பியை தயார் செய்யும் போது, ​​அந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹஷிஸ் போதைப்பொருளுடன் சிக்கியவர் குறித்து அதிர்ச்சி தகவல்!

0

ஜூட் சமந்த

அண்மையில் வென்னப்புவ பகுதியில் வைத்து போதைப்பொருள் தொகையுடன் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க மாரவில நீதவான் வென்னப்புவ பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அடியம்பலம – வல்பொலவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட கொன்வேவ, நாகொல்லாகமவில் தற்போது வசிக்கும் 37 வயதுடைய சந்தேக நபரையும், ரத்மலை, தெற்கு, நாகொல்லாமில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த சந்தேக நபர், வென்னப்புவ நகரில் உள்ள பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகளால் கடந்த 17 ஆம் தேதி இரவு 500 கிராம் 11 மில்லிகிராம் ஹஷிஷுடன் கைது செய்யப்பட்டார்.

சோதனையை நடத்திய அதிகாரிகள், சந்தேக நபரின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகையை கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருள் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இமேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பெறப்பட்டதாகவும், நீர்கொழும்பில் வசிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சோதனையை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மணிக்கூகே நூரேஷ் சுபுன் தயாரத்ன அல்லது ஹீனட்டியன மகேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்தவர் என்றும், இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜூன் 17, 2023 அன்று மினுவங்கொட – போரகொட வணக்கத்திற்குரிய சுகத்சீவ மாவத்தை அருகே இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களுக்கு மோட்டார் காரை வழங்கியதாகவும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த காலத்தில் மினுவங்கொட பகுதியில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், நாகொல்லாகம பகுதியில் தற்காலிகமாக வசித்து போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சந்தேக நபரை கண்காணித்து வந்த காவல்துறை சிறப்புப் படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர், அவருக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபரிடமும் போலீசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வென்னப்புவ தலைமையக காவல் ஆய்வாளர் திலின ஹெட்டியாராச்சி மற்றும் பிற அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதவக்குளம், ஆண்டிகம பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்!

0

ஜூட் சமந்த

தனது மகனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் எல்லை மீறி சென்றதை அடுத்து மகனை ஏர் ரைஃபிள் துப்பாக்கி மூலம் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று 18 ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் ஆனமடுவ, ஆண்டிகம, கடையந்தலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதவக்குளம், ஆண்டிகம, கடையந்தலுவ பகுதியைச் சேர்ந்த முகமது ரஷிக் முகமது (வயது 17), ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாகவும், நேற்று 18 ஆம் தேதி இரவு ஏற்பட்ட இதே போன்ற வாக்குவாதமே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர் பயன்படுத்திய ஏர் ரைஃபிள்ரக துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகள் திறப்பு!

0

ஜூட் சமந்த

பெய்துவரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இன்று 19 ஆம் தேதி அதிகாலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி மற்றும் மேலும் 02 வான்கதவுகள் தலா 04 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள 04 வான்கதவுகளில் இருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 8100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் தலா 06 அடி வீதம் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள இந்த வான்கதவுகளில் இருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 7206 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 தானியங்கி வான்கதவுகளும் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 2940 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயா மற்றும் தெதுரு ஓயாவிற்குள் பாயும் என்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

இது காட்டுமிராண்டித்தனமான செயல் – ரஷீத் கான்!

0

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

5 உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டதில் 3 கிரிக்கெட் வீரர்கள் இறந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது எல்லைத்தாண்டிய வான்வழி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் நடவடிக்கையை காட்டுமிராண்டித்தனம் என குறிப்பிட்டிருக்கும் ரசீத் கான், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் உயிரைப் பறித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ACB-ன் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

திறமையால் விளங்கும் தலைவர் – எஸ்.எம். ஹுஸைமத்!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்தின் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

நோக்கமும், நெறிமுறையும், நேர்மையும் கொண்ட கல்வியாளர்கள் யாரென்றால், அவர்களில் முதன்மையாகத் தோன்றும் பெயர் எஸ்.எம். ஹுஸைமத் அவர்களது பெயரே. தனது கல்விச் சேவையை மனதார அர்ப்பணித்துக் கொண்டு, கல்வியின் ஒளியை மாணவர்களின் உள்ளங்களில் பரப்பும் உன்னத பணியில், இவர் ஒரு பரிசுத்தத் தோழனாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

தன்னலமின்றி, மாணவர்களின் வளர்ச்சி மற்றும் பாடசாலையின் மேம்பாட்டிற்காக இடைநடுவிலே நிற்கும் இவரது சேவை, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தில் நிலையான அடித்தளமாக அமைந்துள்ளது. கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், மரியாதை, சமூக பணி, ஒற்றுமை போன்ற தத்துவங்களையும் மாணவர்களுக்கு உறுதியாகப் போதிக்கிறார்.

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை நுட்பமாகத் தூரம் கொண்டு செல்லும் இந்தத் திறமைசாலி முதல்வர், ஆசிரியர் குழுவுடன் நல்ல ஒத்துழைப்புடன் வேலைசெய்வதோடு, பெற்றோர்களுடனும் ஒரு நல்ல புரிந்துணர்வை பேணுகிறார். இதன் விளைவாக, எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் இன்று சமூகத்தில் மதிப்பிடப்பட்ட கல்வி நிலையமாக உயர்ந்துள்ளது.

அவருடைய வழிகாட்டுதலால் இந்தப் பாடசாலை கல்வி, விளையாட்டு, கலாசார துறைகளில் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எம். ஹுஸைமத் அவர்களின் பொற்கரங்கள் பல புதியதையும், பயனுள்ளதையும் படைக்கும்.

இவ்வாறு மாணவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக கட்டியமைக்கச் செய்கிற எஸ்.எம். ஹுஸைமத் அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள் மற்றும் தொடர்ந்த வெற்றிகள் நிலைத்திருக்க வாழ்த்துகள்!

S.M. ரிஜாஜ் – MA
புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்.

இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயார்!

இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாஆசிஃப் தெரிவித்துள்ளார்.

எல்லையில் இந்தியா அத்துமீற வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட கவாஜா, அதற்கு பதில் அளிப்பதற்கான உத்திகளை பாகிஸ்தான் ஏற்கனவே வகுத்துள்ளதாகவும் கூறினார். எனினும் இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது எனவும், எந்தவொரு சூழ்நிலைக்கும் தாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், சட்டவிரோத குடியேறிகள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 50 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் அனைத்து ஆட்சியாளர்களும் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாக குறிப்பிட்ட கவாஜா, ஆனால் அவர்கள் யாரும் பாகிஸ்தானின் உதவியை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்றார்.

ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்கு, பயங்கரவாதத்தை தவிர ஆப்கானியர்கள் வேறு எதையும் தரவில்லை என்றும் கவாஜா விமர்சித்தார்.

ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு!

0

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கலைப் பிரிவு மாணவிகளுக்கு இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.

இன்றைய (18) தினம் சாய்ந்தமருது  கமு/மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஸ்மார்ட் வகுப்பறையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் கலை உயர் பிரிவு மாணவிகளுக்காக புவியியல் பாடத்தின் சிறப்பு இலவச கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி ரிப்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊக்கமூட்டும் உரையினையும் ஆற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கான் கிரிக்கட் வீரர்கள் மூவர் பலி!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று ஒரு சோகமான செய்தியை பகிர்ந்துள்ளது. அந்த செய்தியில், பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் பதிவில், பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததாகவும், அதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளது.

இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்தில், உர்குன் மாவட்டத்தைச் 3 கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் உட்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், வீரர்கள் நட்பு ரீதியிலான போட்டியில் பாக்டிகா மாகாணத்திற்கு விளையாடசென்று உர்குனுக்கு வீடு திரும்பிய போது கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் 3 கிரிக்கெட் வீரர்களின் இழப்பை பெரிதாக மதிப்பதாக தெரிவித்துள்ள வாரியம், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்தாண்டு நவம்பரில் பாகிஸ்தானில் நடக்கவிருந்த பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

2025 ஒக்டோபர் 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப.1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.