Tuesday, June 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 129

எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள்…

0

மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களில் வருமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சுமார் 45 வறிய மாணவர்களுக்கான இக் கற்றல் உபகரணங்கள் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற பெற்ற முன்னால் அதிபர் திருமதி தாஹிரா உம்மா கப்பாபிச்சை அவர்களால் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் இம் முயற்சிக்கு பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மி அவர்கள் நன்றி கூறியதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஓய்வுபெற்ற அதிபர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

எருக்கலம்பிட்டி மகனின் பெயரில் தூதுவராலயத்தில் வாசிகசாலை

0

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவில் கஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டதோடு வழங்கப்பட்ட சிறப்புரிமையும் நீக்கப்பட்ட தருணம் அது.

முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், கஷ்மீர் வாழ் மக்களும் பெரும் அவலங்களுக்குள்ளாகி இருந்தனர்.

அவ்வேளையில் நீண்ட காலமாகக் கஷ்மீருக்காகக் குரலெழுப்பி வந்தவரும், முன்னாள் இலங்கை வானொலி ஹிந்தி சேவைப் பணிப்பாளரும், வர்த்தக சேவைப் பணிப்பாளரும், கஷ்மீர் மூவ்மென்ட், மற்றும் கஷ்மீர் ஸ்டடி போரம் ஆகியவற்றின் தலைவருமான அல் ஹாஜ் முஹம்மது ஜமால்தீன் அவர்கள் பதிவிட்ட சில கருத்துக்களை எமது eNews1st இணையம் தொகுத்து வழங்குவதில் பெருமிதம் அடைகிறது.

1934ல் மன்னார் எருக்கலம்பிட்டியில் மொஹிதீன்
கப்புடையார் – குல்சும் உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் ஆரம்பம் முதல்
மன்னார் எருக்கலம்பிட்டியில் கல்வி கற்றதோடு தரம் 5 படித்து முடித்துவிட்டிருந்த நேரத்தில் சீ.டபிள்யூ. டபிள்யூ கண்ணங்கராவின் இலவச கல்வித் திட்டம் உதயம் பெற்று பல வரிய மாணவர்களின் கல்வியில் வெளிச்சம் வீசியது. கண்ணங்கராவின் இலவச கல்வித் திட்டத்தினால் தொடர்ந்து கல்விகற்கும் வாய்ப்பு இறைவன் கிருபையால் அவருக்கு கிடைத்தது.

பின்னர் யாழ் மத்திய கல்லூரிக்கு உயர்தர கல்விக்காகச் சென்று கல்வியைத் தொடர்ந்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் அங்கு எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் வென்றதன் விளைவாக அதன் அபார ஈடுபாடு பல்கலைக்கழக நுழைவுக்கு பெரும் சவாலாக மாறியதுடன் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் ஆசிரியராக 3 வருடம் சேவையாற்றவும் வழி வகுத்தது.

இந்தியாவிற்கு மேல்படிப்பிற்காக சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் (University of Lucknow) பட்டப்படிப்பும் பூர்த்தி செய்ததன் மூலம் இந்திய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

பட்டப்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பி இருந்த நிலையில் இலங்கை தேசிய வானொலி சேவையில் இணைவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது.

இலங்கை தேசிய வானொலி சேவையின் நேர்முகப் பரீட்சைக்கு சென்று தெரிவாகியதுடன் தேசிய வானொலி சேவையின் வெளிநாட்டுப் பிரிவின் வெளிநாட்டுச் சேவைகளுக்கான உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

குறுகிய காலம் செய்திப்பிரிவில் சேவை செய்த போதிலும் வெளிநாட்டுச் சேவைப் பிரிவு அவரது தலைமையின் கீழ் இருந்தமையானது அவரின் முதல் வெற்றியாகவே அவரால் பார்க்கப்பட்டது.

இலங்கை தேசிய சேவையில் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் அவரின் கவர்ச்சிகரமான வர்ணனை மூலம் உள் நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மக்களின் மனதை வென்றிருந்ததுடன் அவரது வர்ணணை மற்றும் மொழி ஆற்றல் தொடர்பாக இந்தியாவில் அவரை பற்றிய ஒரு புத்தகமும் வெளிவந்திருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.

1987 யில் இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் பணிப்பாளராக பதவியேற்ற மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் 1993ல் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

இந்திய பொலிவூட் திரைப்பட பாடல்களை உலகிற்கேயே ஒலிபரப்புச் செய்த பெருமை அப்போதைய தேசிய வானொலி சேவைக்கே உரித்தாகும்.

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் தேசிய ஊடகங்களில் இந்திய பாடல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததனால் இந்தியாவின் கோவாவிலுள்ள மக்கள் ஆங்கில பாடல்களை கேட்டு வந்தனர். இதைப் பாரத்த மும்பையிலுள்ள திரைப்பட இயக்குநர்கள் மற்றும் இந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இலங்கைக்கு வந்து அவர்களது திரைப்படங்களின் பாடல்களை ஒளிபரப்புவதற்காக ஒரு அலைவரிசையினை தேசிய வானொலி சேவையிடம் பல நிபந்தனைகளுக்கு மத்தியில் வாங்கினார்கள்.

இந்தியாவிற்கு மட்டுமன்றி முழு ஆசியாக் கண்டத்திலும் பொலிவூட் இசைகள் கேட்கக் காரணமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்பது பலரும் அறிந்திராத உண்மை.

முன்னாள் பணிப்பாளர் மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் இந்தியாவில் இருந்த நாட்களின் போது காஷமீர் மக்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள், அடக்குமுறைகள் எல்லாம் அவரின் உள்ளத்தினுள் ஆழமாய் பதிந்தது.

அந் நாட்களில் இந்திய பிரதமர் கஷ்மீர் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானம் பொருத்தமற்றது என்று கூறியதற்கு மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் மறுப்பு தெரிவித்து ஓர் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

அன்றுதான் இந்த கஷ்மீர் மூவ்மண்ட் அமைப்பு ஆரம்பமாகியது. கருப்புத் தினம் மற்றும் ஒற்றுமை நாள் ஆகிய தினங்கள் கஷ்மீரில் முக்கிய தினங்களாக இன்றுவரை அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இருந்துகொண்டு கஷ்மீருக்காக குரல் கொடுத்து வந்த மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் காஷ்மீர் ஆதரவு கூட்டம் ஒன்று மஹாவெலியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் வாசுதேவ நாநயக்கார போன்ற இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை மாலை நேரத்தில் இந்த கூட்டம் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் வியாழக்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.

குறித்த தொலைபேசி அழைப்பை மஹாவெலி நிர்வாகசபையின் தலைவர் மேற்கொண்டு உங்களது இந்த கூட்டத்தைப் பற்றி இந்தியாவின் இரகசிய சேவையாட்கள் இந்திய உயர் ஸ்தானிகரிடம் தப்பான முறைப்பாடுகளை தெரிவித்துள்ளார்கள் எனவும் தாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாக பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள் எனவும் தெளிவுபடுத்தினார்.

அந்த கூட்டத்தை தடுக்க இந்தியா கடும் திட்டங்களை தீட்டியதுடன் மர்ஹூம் ஜமால்தீன் அவர்களுக்கு பல நெருக்கடிகளையும் கொடுத்தது.

குறித்த நிகழ்ச்சிக்கு வருவோரை வை.எம்.எம்.ஏ. மண்டபத்திற்கு வரும் படி கூறுமாரு மகனிடம் சொல்லிவிட்டு ஜமால்தீன் அவர்கள் நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றி பெரும் சவாலுக்கும் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வை நடத்தி முடித்து வெற்றியும் கண்டார்.

இவ்வாறான பெரும் முயற்சிக்கும் அர்ப்பணிப்பிற்காகவும் பாகிஸ்தானுக்கான சேவைகள் விருதான “சிதாரா ஐ இம்தியாஸ்” எனும் விருது 2016ல் பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் வைத்து அந்நாட்டு ஜனாதிபதியால் மர்ஹும் ஜமால்தீன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வெளிநாட்டொருவரால் காஷ்மீர் மக்களுக்காக ஒலிக்கப்பட்ட மிக முக்கிய குரல் என்றால் அது மர்ஹும் ஜமால்தீன் அவர்களின் குரல் என்றால் மிகையாகாது.

ஒக்டோபர் 27ம் திகதி கறுப்புத் தினமும் பெப்ரவரி 5ம் திகதி ஒருமைப்பாட்டு தினமும் வருடாந்தம் காஷ்மீரில் நடாத்தப்படுகின்றது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது முஸ்லிம் அல்லாதவர்களும் வருகை தருவதால் அந்த தினம் மேலும் சிறப்பு பெறுகிறது.

காஷ்மீர் மக்கள் மீது மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் வைத்த அன்பும் பற்றும் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு பல கஷ்டங்களையும் சோதனைகளையும் கொடுத்திருந்தாலும் அவரின் ஆத்மார்த்தமான சேவையை பாகிஸ்தான் அரசாங்கம் மறந்துவிடவில்லை.

மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் அவரின் நினைவு சின்னமாக பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிலுள்ள தனது பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் அன்னாரின் பெயரில் வாசிகசாலை ஒன்றை நிறுவியுள்ளமையானது எருக்கலம்பிட்டி மண்ணுக்கும் மக்களுக்கும் என்றென்றும் மகிழ்ச்சி தரும் அழியாச்சின்னமாகும்.

காஷ்மீர் மக்களுக்காக அன்று ஒலித்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் குரல் என்றென்றும் அம்மக்களுக்காக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மக்களின் துயர் துடைக்க தன்னையே அர்ப்பணித்த இம் மாமனிதர் மர்ஹூம் ஜமால்தீன் அவர்களுக்காக நாமும் இரு கரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக….

தாய் மண்ணின் மான்பை பறை சாற்றிய மர்ஹூம் மொஹிதீன் கப்புடையார் முஹம்மது ஜமால்தீன் அவர்களை நினைவுகூருவதில் பெருமிதம் கொள்கிறது எருக்கலம்பிட்டி.

தகவல்: M.A.C. முகம்மது கமால்தீன் (JP)

எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO-London)மற்றுமொரு பணி

0

எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO-London) மற்றுமொரு வேளைத்திட்டம் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

எருக்கலம்பிட்டி கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டும் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் (EWO-London)) புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த வாகன தரிப்பிட வசதியின்மைக்கான தீர்வு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கில்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான இடப்பற்றாக்குறை மற்றும் தரிப்பிட வசயின்மை என்பன நீண்ட நாட்களாக நிலவி வந்துள்ள நிலையில் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் சுமார் 1லட்சத்து 25ஆயிரம் ரூபா செலவில் நிரந்தர வாகன தரிப்பிடம் ஒன்று பாடசாலை வளாகத்தினுல் அமைக்கப்பட்டு பாவனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வருடம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் மேற்படி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் எருக்கலம்பிட்டி மகளிர் வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் (EWO-London) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும்.

கடந்த பல வருடங்களாக க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக பல லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட அமைப்பின் சில உறுப்பினர்கள் அவர்களின் சொந்த நிதியில் இருந்தும் பாடசாலைகளுக்கான நிதி உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அமைப்பினரால் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடம் பெரிதும் பாராட்டத்தக்க விடயம் என பாடசாலை அதிபர் ஜனாப் S.M. Husaimath அவர்கள் தெரிவித்ததுடன், இவற்றை செய்து தந்தமைக்காக பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு (EWO-London) நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் இது போன்ற சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திப்பதாகவும் எமது eNews1st இணையத்திற்கு தெரிவித்தார்.

இவர்களின் சேவைகள் தொடர eNews1st இணையச் சேவையும் வாழ்த்துவடன் இது போன்று மேலும் பல அமைப்புக்களும் முன் வந்து சமூக தேவைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

“G80” அமைப்பிற்கு நன்றி தெரிவித்த முதலைப்பாலி பாடசாலை அதிபர்

0

முதலைப்பாலி பாடசாலை அதிபரின் நன்றி நவிலல்

புத்/கல்/முதலைப்பாலி முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அறை நிரந்தர அதிபர் அறையாக அண்மையில் புதுப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டி G80 அமைப்பினரால் குறித்த அதிபர் அறை புனரமைக்கப்பட்டு பதுப்பொழிவுடன் நிரந்தர அதிபர் அறையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நிரந்தர அதிபர் அறை ஒன்று பாடசாலையில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மேற்படி அமைப்பினரால் அதிபர் காரியாலயம் திருத்தம் செய்யப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் அறை நிரந்தர அதிபர் அறையாக மாற்றப்பட்டமையை பாராட்டி பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன G80 அமைப்பிற்கு நன்றி தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த அமைப்பின் பல அங்கத்தவர்கள் அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு அதிபர் பாராட்டு

0

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO) இவ்வருடத்திற்கான க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இப் பொதுநல மன்றத்தினால் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலையின் க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக இலவச வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை ஓர் விஷேட அம்சமாகும்.

அந்த வகையில் கடந்த வருடம் ஒன்பது பாடங்களிலும் திறமையான சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைக்க இவ்வமைபு முக்கிய பங்களிப்பு வழங்கியதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் எமது eNews1st இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் எருக்கலம்பிட்டி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பை பாராட்டுவதுடன் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் தெரிவித்தார்.

நாகவில்லுவில் பாரிய வேளைத்திட்டங்கள் ஆரம்பம்!

0

எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகரும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் மற்றும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன புத்தளம் மாவட்ட தலைவருமான கௌரவ றியாஸ் அவர்களுக்கிடையேயான சினேக பூர்வ சந்திப்பொன்று நேற்றைய தினம் (16.01.2021) சகோதரர் றியாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது பு/எருக்கலம்பிட்டியின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்களினால் பிரத்தியேகமாக சில கோரிக்கைகளும் சகோதரர் றியாஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2 கி.மீ. பொத்துவில்லு பாதை புனரமைப்பு இடம்பெறவுள்ளதுடன் மேலதிகமாக நாகவில்லு வைத்தியசாலை வீதியை காபட் வீதியாக செய்து தருவதாக சகோதரர் றியாஸ் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும் எமது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுத்தரும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் RO PLANT திட்டமொன்றும் மேலதிகமாக செய்து தருவதாக எமது பள்ளிவாசல் தலைவரிடம் தெரிவித்துள்ளமை ஓர் முக்கிய அம்சமாகும்.

எனவே சகல வழிகளிலும் உதவி நல்கிவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் சகோதரர் றியாஸ் அவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக பள்ளிவாசல் தலைவர் நன்றி தெரிவித்ததுடன் மிக விரைவில் பொத்துவில்லு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்கள் eNews1st ற்கு தெரிவித்தார்.

இவ்வாரான சமூக பணிகளில் ஈடுபடும் சகலருக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக ஆமீன்…