செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியானது பாரியளவு ஆபத்தை ஏற்படுத்தும் என செயற்கை நுண்ணறிவின் தந்தை என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.
one decision பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
AI தொழில்நுட்பத்தால் ஏற்படவிருக்கும் மிக பெரிய ஆபத்துக்களை மென்பொருள் நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், AI யினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும், அவற்றை வெளியுலகிற்கு அறியப்படுத்தாது மறைத்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2025 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நேற்று (29) வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் நேற்று (29) வரையான காலப்பகுதியில் 928,787 கிலோ ஹெராயின், 1,396,709 கிலோ ஐஸ், 11,192,823 கிலோ கஞ்சா, 27,836 கிலோ கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ ஹாஷிஷ் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (29) முழுவதும் மேலும் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்துக்கொண்டுள்ளன.
சோதனை நடவடிக்கையின் போது, 25,111 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 10,128 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்படி, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுக்காக 948 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்த சோதனை நடவடிக்கையின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,695இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது
இதன் காரணமாக 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து கடற்கரையில் மோதியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4 மீட்டர் (13 அடி) உயரம் வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதி மற்றும் ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பசிபிக் முழுவதும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல தீவு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை பெரிய காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, சுனாமி ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவின் கடலோரப் பகுதிகளையும் தாக்கியது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் மையப்பகுதி அவச்சா விரிகுடாவில் அமைந்துள்ள சுமார் 1,65,000 மக்கள்தொகை கொண்ட கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்காவிலிருந்து கிழக்கே தென் கிழக்கே சுமார் 125 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் இருந்தது. முதலில் நிலநடுக்கத்தின் அளவு 8.0 ஆக இருந்தது, பின்னர் 8.8 ஆக USGS மாற்றியது.
இந்த சுனாமியின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கம்சட்கா பிராந்தியத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சர் தெரிவித்தார். “அனைவரும் நீர்நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும்” என்று அமைச்சர் லெபெடேவ் கேட்டுக்கொண்டார். அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அபாயகரமான சுனாமி அலைகள் மூன்று மணி நேரத்திற்குள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தது.
ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகளின் பகுதிகளில் அலைகளின் உயரம் சராசரி அளவை விட 3 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாவ், மார்ஷல் தீவுகள், சூக் மற்றும் கோஸ்ரே ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் 0.3 முதல் 1 மீட்டர் வரை சுனாமி அலைகள் இருக்கும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது. தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானின் கடற்கரைகளில் 0.3 மீட்டருக்கும் குறைவான சிறிய சுனாமி அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டுவடத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின்னால் பயணித்த அவரது நண்பர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.
அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன.
இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக் .அவனது புகைப்படம் காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார்.
முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார்.
“இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்’
உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் “மற்ற குழந்தைகளைப் போலஇருக்கவோநிற்கவோ முடியாது” என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார்.
“எனக்கு வேறு வழியில்லை. என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது.ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்
உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து பிபிசியிடம் பத்திரிகையாளர் அகமது அல்-அரினிஇவ்வாறு தெரிவித்தார்
“நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது”
எலும்புகள்மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள்
“நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என்று அகமது கூறினார்.
காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள் அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்’ என்று . அல்-அரினி பிபிசியிடம் கூறினார்.
வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார்.
‘இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.’
நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையேஎன தெரிவிக்கின்றார் அல்-அரினி
அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார்.
“காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.
சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: “குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்.”
அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது.
துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல.
“நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்” என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன்.
“காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்
சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார்.
நான் இங்கே சுற்றிசுற்றிவந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் தெரிவித்தார்.
நாளை (30) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வில்பத்து பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விடத்தல்தீவு வனப்பகுதி வலயத்தில் 168 ஹெக்டேர் நிலத்தை இறால் பண்ணையை பராமரிப்பதற்காக விடுவிப்பதற்காக முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் வனவிலங்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
குறித்த வர்த்தமானி அறிவிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரை ராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, மீளாய்வு செய்த பிறகு வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, குறித்த வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
இருப்பினும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதாக அறிவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
பிரதிவாதிகள் அதற்கேற்ப செயல்படத் தயாராக உள்ளனர் என்ற நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இணக்கம் வௌியிட்டார்.
பின்னர், அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி திரும்பப் அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 80,000 பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.
மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர்.
தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேரை காணவில்லை. மியுன் மாகாண அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக மழை,வெள்ளத்திற்கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புபணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30 நிமிடம் பிரேக் வழங்குகிறது. மேலும் சுயஇன்பத்துக்காக தனி அறையை ஏற்படுத்தி வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லஞ்ச் பிரேக் இருப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். சில தனியார் நிறுவனங்களில் டீ பிரேக் கூட அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள அலுவலகத்தில் 30 நிமிடம் பிரேக் வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். இந்த வினோத ‛பிரேக்’கை வழங்கி உள்ள நிறுவனத்தின் பெயர் எரிகா லஸ்ட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனராக எரிகா லஸ்ட் இருக்கிறார்.
இந்நிலையில் தான் கொரேனாா பரவலுக்கு பிறகு ஊழியர்கள் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக எரிகா லஸ்ட் உணர்ந்தார். ஏனென்றால் மனஅழுத்தத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் மனஅழுத்தம் நேரடியாக அவர்களின் பணியை பாதித்தது.
இதனால் எரிகா லஸ்ட் ஊழியர்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக தினமும் பணியின்போது ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள 30 நிமிடம் ‛பிரேக்’ வழங்கி வருகிறார்.
மேலும் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள பணியாளர்களுக்கு தனியாக அறை ஒன்றையும் அவர் ஒதுக்கி வழங்கி உள்ளார். அந்த அறையை சுயஇன்ப நிலையம் என்று ஊழியர்கள் அழைக்கின்றனர். இதன்மூலம் ஊழியர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு பணியை உற்சாகத்துடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த சுயஇன்ப ‛பிரேக்கை’ அவர் சோதனை முயற்சியாக கொண்டு வந்தார். அவரது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளார்.
ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்குக் கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக செல்வி சுமதுரிகா சஷிகலா பிரேமவர்தன அவர்களின் நியமனத்திற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
அத்துடன், பிரேசில் கூட்டாட்சிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. சி.ஏ.சமிந்த இனோகா கொலன்னே அவர்களின் நியமனத்திற்கும், மாலைதீவுக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திரு. மொஹமட் ரிஸ்வி ஹசன் அவர்களை நியமிப்பதற்கும், துருக்கிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திரு. எல்.ஆர்.எம்.என்.பி.ஜீ.பீ கதுருகமுவ அவர்களை நியமிப்பதற்கும், நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. றுவன்தி தெல்பிட்டியவை நியமிப்பதற்கும், தென்கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக திரு. மாரிமுத்து பத்மநாதன் அவர்களை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. அயேஷா ஜினசேனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர்களான குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, (கலாநிதி) உபாலி பண்ணிலகே, சரோஜா சாவித்திரி போல்ராஜ், கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.