Tuesday, July 29, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 129

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இலந்தையடி பாடசாலைக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

0

நுரைச்சோலை இலந்தையடி சிங்கள மகா வித்யாலயத்திற்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் W.K.L.S. தமேல் தலைமையில் நேற்று இடம்பெற்றது

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் பாடசாலையின் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் தொகுதிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் இல்லாததால் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பாகவும், விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மாவட்டத்திற்கு உள்ளேயே பிரிவினைகள் ஏற்பட்டது தொடர்பாகவும் அரசியல்வாதிகள் தமது சொந்த இலாபங்களுக்காக மக்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.

இழந்த அடி பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து சிறந்த முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தி மூலம் பாடசாலையின் தேவைகள் பூரதி செய்யப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் எருக்கலம்பிட்டியில் கூட்டு குர்பானி விநியோகம்

0

புத்தளம் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பினரால் இம்முறையும் புத்தளம் எருக்கலம்பிட்டியில் கூட்டு குர்பானி விநியோகம் இடம்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப்பெருநாள் கூட்டு குர்பானி விநியோகம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்று வருகின்றது.

2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் வஹ்தா நலன்புரி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் குர்பான் கொடுப்பதற்காக மக்களை ஆர்வப்படுத்தி, நெறிப்படுத்தி சிறந்த வழிகாட்டல்கள் மூலம் குர்பானியை நிறைவேற்றச்செய்து அவைகளை சிறந்த முறையில் மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் ஓர் பாரிய சவாலான வேலைத்திட்டத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்து வரும் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பின் சேவை அளப்பரியது.

அந்த வகையில் இம்முறையும் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பினரால் கூட்டு குர்பானி விநியோகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இம்முறையும் நாட்டின் நாளா பகுதிகளிலும் வாழும் எருக்கலம்பிட்டி மக்களிடமிருந்து கூட்டு குர்பானிக்கான பங்களிப்புகளை பெற்று, சுமார் 27 மாடுகளை கொள்வனவு செய்து, ஒரே தினத்தில் அறுத்து விநியோகம் செய்தமையானது பாரிய ஒரு வெற்றியாகும் என அல் வஹ்தா நலன்புரி அமைப்பின் தலைவர் ஜனாப் செய்னுலாப்தீன் அபுல் ஹைர் தெரிவித்தார்.

அர்ப்பணிப்புள்ள மிக உயர்ந்த சேவையினை தொடர்ச்சியாக செய்து வரும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பினருக்கு eNews1st நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவு!

0
  • 6,000 உயர்தர மாணவர்களுக்கும் தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம் ஆரம்பமானது.
  • அடையாளமாக 5108 மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
  • உடனடியாக நிலுவைத் தவணையுடன் புலமைப்பரிசில் உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.
  • ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்விப் புலமைப்பரிசில் வழங்குவதற்காக இவ்வருடத்தில் 04 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நாட்டின் பிள்ளைகளுக்கு இன்னும் 05-10 வருடங்களில் சிறந்த நாடு உருவாக்கப்படும்.

ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வருமானம் வழங்குவதற்காக ‘அஸ்வெசும’ வேலைத்திட்டமும் காணி உரிமையை வழங்க உறுமய வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகளுக்கு கல்விஅறிவை வழங்குவதற்காக ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து 100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6 000 ரூபா வீதம் 6000 மாணவர்களுக்கு 02 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடசாலைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச புலமைப்பரிசில் 04 என்பதோடு அதிகபட்ச புலமைப்பரிசில் 22 ஆகும். ஏப்ரல் 2024 முதல் 12 மாதங்கள் வரை, ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3000/- வீதம் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இன்று 5108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு அடையாளமாக புலமைப் பரிசில்களை வழங்கினார்.

புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்தார்.

அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு ஆப்பு!

0

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (18) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், உத்தேச வாடகை வருமான வரி குறித்தும் இந்த சபைக்கு கருத்தை தெரிவிக்க வேண்டும். நாம் செல்வ வரியொன்றை அறிமுகப்படுத்துகிறோம். மேலும் அதன் வரையறை மிக அதிகமாக இருக்கும். எனவே, நாட்டின் 90% வீடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தரவரிசையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் வாடகை வருமான வரி விதிக்கிறோம். அதன் பிறகு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த மதிப்பீடுகள் மாகாண சபைகளுக்கு சொந்தமானது. தரவரிசைப் பட்டியலின்படி இந்த வரி விதிக்கப்பட்டால், பெறப்படும் பணம் மாகாண சபைக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் கூறலாம். எனவே, அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற வேண்டும். எனவே வாடகை வருமான வரி என்ற வித்தியாசமான சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த வருமான வரி மத்திய அரசுக்குச் சொந்தமானது.

நாங்கள் பொதுவாக இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். தற்போதுள்ள சட்டச் சிக்கலைத் தீர்க்கவே இதைச் செய்தோம். ஆனால் வரி வரையறை மிக அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டி ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நாம் செல்வ வரி விதிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கும் வரி விதிக்கப்படுமோ என்று மிகவும் கவலைப்படுவதையும் நான் அறிவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எழுவாங்குளம் – மன்னார் பஸ் போக்குவரத்து ஆரம்பம்

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் காதர் மஸ்தான் ஆகியோரின் பாரிய முயற்சியினால் புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி (கலாஓயா பாலம்) வரையான பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி வரையான பஸ் சேவைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை மரிச்சிக் கட்டி (கலாஓயா பாலம்) தொடக்கம் மன்னார் வரையான பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மன்னார் முதல் மடிச்சிக்கட்டி வரைக்குமான பஸ் சேவைக்கு போக்குவரத்து சபையின் அனுமதி மிக விரைவில் கிடைக்கப்பெற்று பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் நம்பிக்கை தெரிவித்தார்.

பல வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்ட குறித்த போக்குவரத்து வீதியானது, மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பாரிய முயசியின் பின்னணியில் மீண்டும் குறித்த வீதி திறக்கப்படுவதினால் பல மணி நேர விரயம் இல்லாமல் போவதுடன், குறுகிய நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி திறக்கப்படுவதன் மூலம் புத்தளத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தி அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவலைப்பதன் மூலம் புத்தளத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகுடம் சூடியது எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை

மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றது.

பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் தலைமையில் நேற்றைய தினம் தலைமன்னார் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்றது.

16,18 மற்றும் 20 வயது பிரிவினர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் யாவும் நேற்றைய தினம் இடம்பெற்றது.

16 வயது பிரிவினருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை மற்றும் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேண்ட்) ஆகியன இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேண்ட்) கல்லூரியை எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை தோற்கடித்து சாம்பியன் ஆனது.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திவந்த எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை முதல் முதலாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் ஆகி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

பல சிரமங்களுக்கு மத்தியில் வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை வீராங்கனைகளுக்கு ஊரில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் துப்பாக்கிக் கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு கைத்துப்பாக்கியொன்றைக் கொள்வனவு செய்யும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹண்டர் பைடன் பொய்யுரைத்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் பாவனை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே துப்பாக்கிக் கொள்வனவிற்கான விண்ணப்பப்படிவத்தில் தாம் உண்மையையே கூறியுள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.

எனினும் 3 மணித்தியால வாதப்பிரதிவாதங்களின் பின்னர் ஹண்டர் பைடன் குற்றவாளியென 12 ஜூரிகள் அடங்கிய குழாம் தீர்ப்பளித்துள்ளது.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியொருவரின் மகன் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பை அடுத்து ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூரி குழாமின் தீர்ப்பை மதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் கட்டிட தீவிபத்தில் 41 பேர் பலி

0

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இந்திய பிரஜைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டின் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.