Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 129

நேபாள பாராளுமன்றம் நேற்று இரவுடன் கலைப்பு!

0

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். 

இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். 

ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது. 

இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் கத்மண்டுவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர். 

இதில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். 

இதனால் போராட்டமும், வன்முறையும் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி 9ஆம் திகதி பதவி விலகினார். 

உடனடியாக நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை இராணுவம் கையில் எடுத்தது. அதன்பின்னர் வன்முறை ஓய்ந்து நாடு முழுவதும் படிப்படியாக அமைதியும், இயல்பு நிலையும் திரும்புகிறது. 

பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. 

இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இடைக்கால அரசின் பிரதமராக நேபாள உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி, காத்மண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர். 

இதில் சுசீலா கார்கிக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் போராட்டக்காரர்களின் ஆதரவும் இருந்ததால் அவர் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இரவு நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக்கொண்டார். 

அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இதன் மூலம் அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2016-ம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக பதவியேற்ற அவர், 11 மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்தார். 

அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய கடுமையே, ஜென் சி தலைமுறையினரின் பிரதமர் தேர்வுக்கு காரணமாக இருந்துள்ளது.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளருக்கு பிடியாணை!

0

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

நேற்று (12) மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக தவறியமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து வெலிகம பிரதேச சபைக்குப் போட்டியிட்ட சட்டத்தரணி தாரக நாணயக்காரவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர ஆஜராகாத நிலையில் அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தமது கட்சிக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகத் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் பிரதிவாதியின் பிணையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதால், இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கையும் களவுமாக சிக்கிய இராணு கட்டளை அதிகாரி!

0

பாதாள குழுவுக்கு பணத்திற்காக T-56 ரக ஒரு தொகை தோட்டாக்களை விற்ற மல்லாவி இராணு முகாமின் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றப்பிரிவின் தடுப்பு உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபரான திலின சம்பத் ஹப்பு ஆராச்சி எனப்படும் வாலஸ் கட்டாவிடம் நான்கு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின்படி, கட்டளை அதிகாரி  இரண்டு சந்தர்ப்பங்களில் துப்பாக்கி தோட்டாக்களை வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில், வெளிநாட்டில் மறைந்திருந்த கமாண்டோ சாலிந்தாவின் வேண்டுகோளின் பேரில், சந்தேகத்திற்குரிய கட்டளை அதிகாரி கம்பஹா பகுதியில் தனது உத்தியோகபூர்வ கெப் வண்டியில் வைத்து ஒருமுறை ஒரு தொகை தோட்டாக்களை வழங்கியதாகவும், மீதமுள்ளவைகளை சாலிந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் மற்றொரு நபருக்கு வழங்கப்பட்டதாகவும் வாலஸ் கட்டாவின் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் இயக்குநர், உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், கட்டளை அதிகாரி OIC தலைமை ஆய்வாளர் லிண்டன் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கைது குறித்த கட்டளை அதிகாரி கைதுசெய்யப்பட்டார்.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நீண்ட விசாரணையில், கமாண்டோ சாலிந்தா 2015 ஆம் ஆண்டு குறித்த சந்தேக நபர் தனக்குக் கீழ் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியதாகவும், அவரது நட்பின் அடிப்படையில், தனது ஜீப்பில் இருந்து 260 தோட்டாக்களை இரண்டு நபர்களுக்குக் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அந்த வகையில் கமாண்டோ சாலிந்தா ஐந்து சந்தர்ப்பங்களில் தனது வங்கிக் கணக்கிற்கு அறுநூற்று ஐம்பதாயிரம் ரூபாயை வரவு வைத்ததாக மூத்த காவல்துறை அதிகாரி மேலும் கூறினார்.

மாகாண சபைகளில் 61,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!

0

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

நாடு தழுவிய சேவைகளுக்கு 1,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 பேரை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச துறையை வலுப்படுத்தும் ஒரு பரந்த நடவடிக்கையாக, 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாமலின் திருமணத்தால் மின்சார சபைக்கு ஏற்பட்ட சிக்கல்!

0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியதன் மூலம், இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதியளித்தது. 

இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளதுடன், அதில் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்த மனு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதிபத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெரகொட, நாமல் ராஜபக்ஷவின் திருமணத்திற்கான மின்சாரக் கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியது தொடர்பாக மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதால், இந்த வழக்கில் நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே விடயம், சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான அறிவிப்பு மட்டுமே என்று சட்டத்தரணி கூறினார். 

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த அமர்வு, மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது. 

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு இலங்கை மின்சார சபைக்கு 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

பின்னர் இந்த வழக்கைத் தாக்கல் செய்த பின்னரே குறித்த மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொதுமக்களின் சிறிய மின்சாரக் கட்டணம் கூட சரியான நேரத்தில் செலுத்தப்படவில்லை என்று கூறி, இலங்கை மின்சார சபை மின்சாரத்தைத் துண்டித்து வருவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், இவ்வளவு பெரிய மின்சாரக் கட்டணத்தை சரியான நேரத்தில் வசூலிக்க நடவடிக்கை எடுக்காதது கடுமையான தவறு என்று கூறியுள்ளார். 

இலங்கை மின்சார சபையின் இந்த அசாதாரண நடவடிக்கை மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

44 லட்சம் மாணவர்களுக்கு சீனாவின் இலவச சீருடை!

0

அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கான இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்லை கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. 

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது . 

இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை ஜனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 

5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” என்றார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுவதாக குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் சீன தூதுவராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரணைமடு சென்ற ஆசிய அபிவிருத்திக் குழு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடு குளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் அமைக்கப்பட்ட இரணைமடு குளம் மற்றும் இரணைமடு குள ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை பார்வையிட்டு அவற்றின் மூலம் விவசாயிகள் பெறும் பயன்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

குறித்த விஜயத்தின் போது வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் பிரிவு) என்.சுதாகரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.கருணாநிதி, கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் கே.பிரகாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் இரணைமடு குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர், திருவையாறு ஏற்று நீர்ப்பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மன்னார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபவனி!

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு மன்னார் மக்களால் பெரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், அதற்கு பலம் சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் 10.09.2025 கால் நடையாக நடந்து சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந் நிலையில் துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி. எமது நிலங்களும், எமது வளங்களும் எமக்கானதே. முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம். கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

மாணவர்களை ஏற்றும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து, இந்த விசேட கூட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்களுடன் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்தநிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் பாடசாலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்குமென கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

0

நீதவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

காலி நீதவான் ஐ.என்.என். குமார கமகே, கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன, கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண, பலபிட்டிய நீதவானாகவும், ஆர்.டி. ஜனக, கொழும்பு மேலதிக நீதவானாகவும் மாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 நீதவான்கள், மேலதிக நீதவான்கள் மேலதிக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.