Tuesday, July 29, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 130

மக்களின் உணர்வுகளை வென்ற அலிசப்றி ரஹீம் எம்.பி

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமான சந்திப்பு நேற்று (10) ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களுக்கான அவசர நிவாரண உதவிகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மேலும் புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக முகம்கொடுததுவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் பெற்றுக் கொடுத்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் புத்தளம் பிரதேசத்தின் பல கிராமங்களின் வீதிகள், பாலங்கள் என வீடுகளும் பாரிய அளவில் பாதிக்கட்ட விடயங்களை முன்வைத்த அலி சப்ரி ரஹீம், இவற்றை துரித கதியில் நிவர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமிடையான பலதரப்பட்ட சந்திப்பின் மூலம் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாலிங்க தேடிய பைனாஸின் இல்லத்துக்கு ரிஷாட்

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் முகநூல் காணொளியின் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டு புகழ்பெற்ற அநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ பிரதேசத்தின் இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை (8) விஜயம் மேற்கொண்டதுடன், பைனாஸின் திறமையை பாராட்டி, வாழ்த்தி, ஒரு தொகை பணத்தையும் வழங்கிவைத்தார்.

அத்துடன், பைனாசின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்குள்ள ஈடுபாடு, அதீத திறமை குறித்து கேட்டறிந்துகொண்ட தலைவர் ரிஷாட், அவரின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதன்போது, இளம் வீரர் பைனாஸின் பெற்றோர், உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் அங்கு ஒன்றுகூடியிருந்ததுடன், தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஹைருதீன், நிஸ்தார் மற்றும் இல்ஹாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வெள்ளதை ஏற்படுத்தும் கட்டிடங்கள் உடைக்கப்படும்

0

கொழும்பின் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் ஷவேந்திர சில்வா

0

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் இந்த மீள்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2387/43 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி தொடர்பான சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலத்துக்கான நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியை நிறைவு செய்ததையடுத்து, ​ 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல் தடவையாக இலவச ஹஜ் வாய்ப்பு

0

சவூதி அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படை வீரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு சவூதி அரசாங்கம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த அறிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இராஜாங்க

 அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரசாங்கத்திடம் இருந்து அனுசரணை மற்றும் சிறப்பு கோட்டாக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததை தொடர்ந்து முதன்முறையாக முஸ்லிம் முப்படை வீரர்கள் ஐவருக்கு சிறப்பு கோட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இன்று (ஜூன் 07) சவூதி அரேபிய தூதுவர் அல்கஹ்தானியை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துடன், முப்படை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சவூதி தூதுவருக்கும் விசேடமாக சவூதி அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தமைக்கு நன்றி தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர், எதிர்வரும் ஆண்டுகளில் பாதுகாப்புப் துறை பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாக தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம் பாதுகாப்புப் படையினருக்கும் ‘உம்ரா’ புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்றும் சவூதி தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவுவதற்கு சவூதி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், இது தொடர்பில் இந்நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை ஹஜ் குழு உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமாகிய  மில்பர் கபூர் மற்றும் ஹஜ் யாத்திரை மேட்கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சருடன் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

பிக்குவின் சரமாறியான தாக்குதலில் வயோதிபர் உயிரிழப்பு

0

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காயமடைந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், காயமடைந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அவர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10,000/- ரூபா

0

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 10,000 கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இந்தப் பணம் வழங்கப்படுவதாகவும், அனர்த்தம் காரணமாக பகுதி அளவில் அல்லது முழுமையாக சேதம் அடைந்த அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர், அடுத்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை பிரதேச மக்களின் நலன்களைத் தேடியறியும் நோக்கில் நேற்று (07) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கொலன்னாவ ஸ்ரீ சம்புத்தராஜ புராண விகாரையில் நடைபெற்ற நடமாடும் மருத்துவ முகாமிற்கும் சென்று பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது,

பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு உடனடியாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், பகுதி அளவில் அல்லது முழுமையான சேதம் ஏற்பட்ட வீடுகளைக் கண்டறிந்து, அந்தக் குடும்பங்களுக்கு மேலும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

2019 சுற்றறிக்கையின்படி, வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால், இடைத்தங்கல் முகாமில் இருந்த மக்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றறிக்கையை மாற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டை துப்புரவு செய்யும் பணிகளைத் தொடர முடியும்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தின் பங்களிப்புடன் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மருந்துகள் தேவைப்படும் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு, மக்கள் பொதுவாக தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக சிறு குழந்தைகளையும் முதியோரையும் இதுபோன்ற நோய்களில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், டெங்கு நோய் பரவும் அபாயத்தில் உள்ளோம். அதை எதிர்கொள்ளும் திட்டத்தை தயாரித்துள்ளோம். கடற்படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்படாத அருகில் உள்ள மக்களையும் இணைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிணறுகளை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வைத்திய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மருத்துவக் குழுக்களும் வைத்திய முகாம்களை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. பிரதேச செயலகங்கள் ஊடாக பல மருத்துவ சிகிச்சை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இராணுவ மருத்துவக் குழுக்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேச மக்கள் குறித்தும் ஜனாதிபதி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியற்ற நிர்மாணங்கள், காணிகளை நிரப்புதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனவே, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் காணி நிரப்புப் பணிகளை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது.

களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் IDH மருத்துவமனை, இ.போ.ச டிப்போ போன்ற அரச நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு அனைவரின் இணக்கப்பாட்டுடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” என்று அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் கொலன்னாவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணாவின் நிலை!

0

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 6.30 நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 294 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதனிடையே ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.கவோடு தெலுங்கு தேசம், ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் களம் கண்டனர். ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், தெலுங்கு தேசம் 142 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. 

இதில் நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எக்ஸ் வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1,07,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்துப்பூர் தொகுதியில் ஏற்கெனவே 2014 மற்றும் 2019 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி ஓரமா உட்காரு உனக்கெல்லாம் இடம் இல்லை..

0

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் அதிரடி ஆட்டம் ஆடக் கூடிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருந்தார்.

அவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவுக்கு நேர்ந்த கதி..

டாப் அணிகளை காலி செய்த பாகிஸ்தான் எப்போதும் இந்திய அணி துவக்க ஜோடியாக ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேனை பயன்படுத்தும். அந்த வகையில் அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என முதலில் கருதப்பட்டது. ஆனால், விராட் கோலி இந்திய டி20 அணியில் இடம் பெற்ற பின் அவரை துவக்க வீரராகவும் களமிறங்க வைக்க திட்டம் உருவானது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக களம் இறங்கும் வகையில் இந்திய அணி திட்டமிடப்பட்டு வருவதால் ஜெய்ஸ்வாலுக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பயிற்சிப் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் நம்பினர்.

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. பயிற்சிப் போட்டியில் பேட்டிங்கில் 11 வீரர்களும் பவுலிங்கில் 11 வீரர்களும் விளையாடலாம் என்பதால் இந்திய அணி அதை பயன்படுத்தி 14 வீரர்களுடன் களம் இறங்கியது.

விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் துவக்க வீரராக விராட் கோலியின் காலியாக இருந்ததை அடுத்து ஜெய்ஸ்வால்-க்கு துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் நம்பினர். ஆனால், ரோஹித் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களம் இறங்கினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த போட்டி முழுவதும் ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. “பயிற்சி போட்டியில் கூடவா ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருவேளை உலகக்கோப்பை தொடரின் இடையே விராட் கோலி பேட்டிங் வரிசை மாற நினைத்தால் அல்லது காயம் காரணமாக பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டி வந்தால் அப்போது ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த நோக்கத்திலாவது அவருக்கு பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை கேப்டன் ரோஹித் சர்மா.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை

0

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்க அணி. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் ஜோன்ஸ் ஆடிய ஆட்டத்தால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர் அடித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகப்பெரும் சாதனையை செய்தார். அதில் 103 மீட்டருக்கு மேல் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இதை அடுத்து ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவின் நாயகனாக மாறினர்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இந்தப் போட்டியில் கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் நவ்நீத் 61, நிக்கோலஸ் கிர்ட்டன் 51. ஸ்ரேயாஸ் மவ்வா 32 ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி அமெரிக்க அணி சேஸிங் செய்தது. அந்த அணி முதல் 8 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து இருந்தது.

அப்போது ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஆண்ட்ரியாஸ் களத்தில் இருந்தனர். இருவரும் அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கினர். ஆண்ட்ரியாஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். ஆரோன் ஜோன்ஸ் முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும், அதன் பின் சிக்ஸர் மழை பொழிந்தார். அவரது அதிரடியால் 13 மற்றும் 14 ஆவது ஓவர்களில் மொத்தமாக 53 ரன்கள் குவித்தது அமெரிக்க அணி.

ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் நான்கு ஃபோர், பத்து சிக்ஸ் அடித்து இருந்தார். இதை அடுத்து வெற்றி பெற வாய்ப்பில்லை என கருதப்பட்ட அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 சிக்ஸ் அடித்த ஆரோன் ஜோன்ஸ் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் ஒரு முறை ஒரே போட்டியில் 11 சிக்ஸர்களும், மற்றொரு போட்டியில் 10 சிக்ஸர்களும் அடித்து இருந்தார். அந்த சாதனையை நெருங்கிய ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

உலகக்கோப்பை வரலாற்றில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ரன் சேஸ்களில் துவக்க வீரராக அல்லாத வீரர் ஒருவர் அடித்த அதிக ரன்கள் என்ற சாதனையை செய்து இருக்கிறார் ஆரோன் ஜோன்ஸ். மேலும், உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த துவக்க வீரர் அல்லாத வீரர் என்ற வரலாற்று சாதனைகளையும் நிகழ்த்தினார்.