Monday, July 28, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 131

மாணவர்கள் மத்தியில் அதிகரித்த அபாயகரம்

0

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், வைத்தியர் ஷாக்கிய நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

புகையிலைப் பொருட்கள் தற்போது பாடசாலைகளில் பெருகி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியாக இ-சிகரெட்டுக்களின் பாவனை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இ-சிகரெட்டுக்கள் மூலம் நிகோடின் பழக்கம் அதிகரிப்பதுடன் இது உடலிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நிகோடின் பயன்பாட்டால் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பொதுவான உடல் அசௌகரியம் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நிகோடினின் ஆபத்துக்கள் குறித்து சிறுவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர், வைத்தியர் ஷாக்கிய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆப்பு வைக்க தயாராகும் மொட்டுக்கட்சி

0

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். 

இந்த நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு தங்களது கட்சி ஒத்துழைப்பு வழங்காது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கட்சி என்ற ரீதியில் தங்களது தரப்பினர் குறித்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசியலில் அதிசயத்தை நிகழ்த்தியவர் ரணில்

0

இலங்கையில் ஒரு அரசியல் அதிசயத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தியுள்ளதாக நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தள(twitter) பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “18 மாதங்களுக்கு முன்பு நாடு அதன் ஆழமான பொருளாதார நெருக்கடியில் இருந்தது.

தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு எரிபொருளை வாங்க நீண்ட நெடுந்தொலைவுகள் இருந்ததுடன் பணவீக்கம் வானளவாக உயர்ந்ததோடு பெரும்பாலான வணிகங்கள் சரிவின் விளிம்பில் இருந்தன.

அப்போதைய அதிபரை மக்கள் வீழ்த்தியதுடன் தற்போது நிலத்தில் ஸ்திரத்தன்மை திரும்பி பணவீக்கம் குறைவாக உள்ளதுடன் மின்வெட்டு மற்றும் எரிபொருளுக்காக அணிவகுத்து நிற்பது கடந்த கால விடயங்கள்.

பொருளாதார துன்பங்கள்

பல இலங்கையர்களுக்கு வாழ்க்கை இன்னும் கடினமாக உள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல துன்பங்கள் உள்ளன ஆனால் இலங்கை முன்னோக்கிப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

அரசியலில் அதிசயத்தை நிகழ்த்தியவர் ரணில் : எரிக் சொல்ஹெய்ம் பெருமிதம் | Eric Solheim S Twitter Post On Gotabaya

சிறந்த எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது அதிபர் ரணில் விக்ரமசிங்க தப்பி ஓடாதவர். 

கொழும்பில் எனது பழைய நண்பர்களான ரணில் மற்றும் அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவு அருந்தியது அருமையாக இருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி ஆபத்தானது-ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம்

0

கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியானது பக்கவிளைவை ஏற்படுத்துவதாக அதன் நிறுவனமான இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா (Corona) வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்த நிலையில் இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா (AstraZeneca) நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (University of Oxford) இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

கோவிஷீல்டு தடுப்பூசி

இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வந்ததது.

பக்க விளைவு

அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இது தொடர்பான ஆவணத்தில் கொரோனா தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவை ஏற்படுத்தும் கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புகொண்ட நிறுவனம் | Uk Approves Corona Vaccine Impact

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு(டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்துமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்குமெனவும் எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை இந்திய பொதுத் தேர்தல்-சுவரஷ்யமான தகவல் இதோ

0

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லொக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

970 மில்லியன் மக்கள் வாக்களிக்க

முதல் கட்ட தேர்தல் நாளையும் (19), 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ளது! இந்திய பொதுத்தேர்தல் | Indian General Election Starts Tomorrow

இந்தநிலையில் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்த பொதுத் தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வலுவான தலைமையை வழங்கி வரும்நிலையில் மோடியின் பாஜக தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயர்.

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்!

கட்சி அறிக்கை வெளியீடு

இந்தப் பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நாளை ஆரம்பமாகவுள்ளது! இந்திய பொதுத்தேர்தல் | Indian General Election Starts Tomorrow

2019 பொதுத் தேர்தலில் மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். அந்தத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஒரு மகத்தான சாதனை. 1980இல் பாஜக இந்து தேசியவாதக் கட்சியாக அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, இவ்வளவு பெரிய வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை.

நாளை (19) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன்15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது ‘பாரதிய ஜனதாவும்’ தங்களது கட்சி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் அவமானப்பட்ட இளையராஜா

0

பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில், அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா என்று சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு சட்டத்தரணி; வாதம் ஒன்றை முன்வைத்தார் எனினும் இந்த வாதத்தை ஏற்க மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இளையராஜா திகழ்கிறார்.

இந்தநிலையில் இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களை, எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேன்முறையீடு செய்த இளையராஜா

இதற்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டது.

இதனையடுத்து மேல் நீதிமன்றத்தன் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேன்முறையீடு செய்தார்.

இந்தநிலையில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டு, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

எனினும் தயாரிப்பாளரிடம் உரிமையை பெற்றுள்ளதால் பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த 10ம் திகதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இசை நிறுவனம் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, ‛திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர், ரோயலிட்டி என்ற அறிவுசார் சொத்துரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார்.

இளையராஜா மேலானவர்

எனவே இந்த விடயத்தில் இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

இளையராஜா தான் தான் அனைவருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என்றும் சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட இளையராஜாவின் சட்டத்தரணி, ‛‛ஆம் இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்’ எனக்கூறினார். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‛‛இசை மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்சீதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள்” ஆகியோர் எல்லோருக்கம் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், இளையராஜாவை அப்படி கூறுவதை ஏற்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

எனினும் இளையராஜா தரப்பு சட்டத்தரணி, ‛‛எல்லோருக்கும் மேலானவன் எனக்கூறியது, பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா, தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என்பது உங்களுக்கே தெரியும்’ என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிமன்றம் விசாரணையை எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தது.

COPE இலிருந்து அதிரடியாக விலகிய 8 எம்.பி.க்கள்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. சரித்த ஹேரத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்டோர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான, (CoPE) கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கடந்த மார்ச் 07ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒவ்வொருவராக இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ள சரித்த ஹேரத், குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எஸ்.எம். மரிக்கார் எம்.பி தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இடுகையொன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ள அவர்,

இலங்கையின் அரச நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் குழுவின் தலைவர் பதவிக்கு பொருத்தமற்ற ஒருவரை நியமித்தமை போன்ற காரணங்களால், எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், இன்று முதல் கோப் குழுவிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் தனது இராஜினாமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நான் கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்தேன், ஏனெனில் அது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்ல, மாறாக அது ரோஹித அபேகுணவர்தனவை தலைவராக கொண்ட மொட்டு எண்டர்பிரைஸ் குழுவாகும்.

தமது இராஜினாமா குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஹேஷா விதானகே, நளின் பண்டார,  இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இணைந்து கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், நேற்றையதினம் (18) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன விலகிய நிலையில், இன்றையதினம் விலகிய தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், எஸ்.எம். மரிக்கார், ஹேஷா விதானகே, நளின் பண்டார உள்ளிட்ட 8 பேர் இதுவரை கோப் குழுவிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8400 உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு அடித்த அதிஷ்டம்

0

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40% பெண்கள் சுகாதார அணையாடை பாவனை நிறுத்தம்

0

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்டில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பா. உ செல்வராசா கஜேந்திரன் மீது சரமாரியாக தாக்குதல்

0

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 07பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், காவல்துறையினரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாதணிகளுடன் ஆலயத்திற்குள் புகுந்த காவல்துறையினர் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டு காவல்துறையினர் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 07 பேரும் நெடுங்கேணி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.