பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இஸ்ரேலில் அடுத்த முறை நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ம் தேதி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதலை காரணம் காட்டி கடந்த 49 நாட்களாக இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்க்ள கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகம். இதை இப்படியே விட்டால் ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் காலியாகிவிடும் என பயந்த அண்டை நாடுகள், போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கின. பிணை கைதிகளை விடுவிப்பதாக சொன்னால் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக இஸ்ரேல் கூறியது. இதனையடுத்து தற்போது போர் தற்காலிமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், பிணை கைதிகளாக உள்ள தங்களின் உறவினர்களை மீட்ட தாமதம் செய்துவிட்டார் என்றும் இஸ்ரேல் மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் கள நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தேர்தல் வந்தால் நெதன்யாகு மீண்டும் பிரதமராக தேர்வாக மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஹீப்ரு செய்தி நிறுவனமான Maariv இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது நெதன்யாகு கட்சிக்கு வெறும் 3.25 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் மொத்தம் 120 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை வென்றது. கூட்டணி கட்சிகளும் 32 இடங்களை வென்று 64 என்கிற பெரும்பான்மையுடன் நெதன்யாகு பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த முறை லிகுட் கட்சி 18 இடங்களில் சுருங்கிவிடும். கூட்டணி கட்சிகளை எல்லாம் சேர்த்தாலும் கூட மொத்தமாக 49 இடங்களைதான் பெற முடியும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. மறுபுறம் எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய ஒற்றுமைக் கட்சி 43 இடங்களை வெல்லும். கூட்டணியை சேர்த்தால் 79 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றும் என கணிப்புகள் கூறியுள்ளன. அதேபோல இஸ்ரேலின் பிரதமாராக இருக்க யார் பொருத்தமானவர்கள் என்றும் கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு 52% பேர் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் காண்ட்ஸ்தான் பொருத்தமானவர் என்று பதிலளித்துள்ளனர். 27% பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு சப்போர் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.” |
இஸ்ரேல் பிரதமரின் தலையில் இடியை இறக்கிய கருத்துக்கணிப்பு!
இஸ்ரேல் பிரதமரின் விஷம் கலந்த பதில்
இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் குறித்தும் தனது வருங்கால திட்டம் குறித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. ஒரு பக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், மறுபறம் இஸ்ரேலில் புகுந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன. இந்த தாக்குதலால் முதலில் இஸ்ரேல் ஆட்டம் கண்டாலும் கூட பதில் தாக்குதலை ஆரம்பித்தது. முதலில் காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், மெல்லப் படையெடுப்பையும் ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான சிறுவர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன்மின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சண்டை ஹமாஸுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், இந்த சண்டையை வைத்து காசாவைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ இஸ்ரேல் முயலவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க பாலஸ்தீனிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். காசா பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சரியானது இல்லை என்று சமீபத்தில் அமெரிக்கா கூறி இருந்தது. மேலும், இஸ்ரேல் ஹமாஸ் சண்டை முடிந்த பிறகும் கூட, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் பைடன் கடந்த வாரம் தான் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதை ஆமோதிக்கும் வகையில் இப்போது இஸ்ரேலும் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், நாங்கள் காசாவைக் கைப்பற்ற முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்க முற்படவில்லை, காசாவை ஆள வேண்டும் என்பதும் எங்கள் திட்டமில்லை. காசாவில் ஒரு மக்கள் ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறோம் என்று நெதன்யாகு கூறியிருப்பது முழு உலகையும் கேளிக்கைக்கு உள்ளாக்கி இருப்பதாக மேற்குலகம் குற்றம் சுமத்தியுள்ளது அதேநேரம் கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலைப் போல மற்றொரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் ராணுவத்தில் ஒரு பகுதி தேவைப்பட்டால், காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ரெடியாக இருக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க முடியும். ஹமாஸ் மீண்டும் வராமல் தடுக்க இது மட்டுமே ஒரே வழி என்று தெரிவித்தார். இந்த சண்டைக்குப் பிறகு காசாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமில்லை. இப்போது ஹமாஸ் தான் அங்கே வீரர்களைக் குவித்துள்ளனர். அந்த நிலையை மாற்றி, காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார். காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள நெதன்யாகு அங்கு அனைத்து மக்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், யார் கொன்று குவித்தார்கள் என்பது பற்றி தெரியாதது போல் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. மனிதர்கள் வாழ்ந்த இடங்களை சீர்குலைத்து அணைத்து கட்டிடங்களும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டு எந்த மக்களை அங்கு நிம்மதியாக வாழ வைக்க நினைக்கிறார் இந்த இஸ்ரேல் பிரதமர் என்பது அனைவரின் வினாவாக உள்ளது. சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தினசரி 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த விடயம் தற்போது இஸ்ரேலை சமாதானத்தை விரும்பும் நாடாக காண்பிக்க முயல்கிறது இஸ்ரேலிய மேற்குலகம். |
இலங்கை கிரிக்கெட்டை காட்டிக்கொடுத்த அதிகாரி
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காக தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்ற அவசர கூட்டத்தில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நேற்று முதல் இடைநிறுத்தியது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில், இது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திடீர் முடிவாக இருந்தாலும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனைகளை குறி வைக்கும் குண்டுகள்! சிதறும் மனித உடல்கள்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல் 36வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது. எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர்.
ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது. எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக் கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக் கொண்டனர்.
சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.
ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. இவ்வாறான நிலையில் ஆரம்பமான மோதலில் இஸ்ரேல் கண்மூடித்தனமான பல தாக்குதலில் இறங்கியது. இப்படி 36வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
உயிரிழந்தவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 4,506. காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷிஃபா மீது இஸ்ரேல் ராணும் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 13 பேரும், பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறுகையில்,
ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கீழ் சுரங்கங்களை அமைத்து தங்களை தற்காத்து வருகின்றனர். அப்பாவி பொதுமக்களை அவர்கள் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று பள்ளி மற்றம் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நீடித்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதேபோல ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”
சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த அதிர்ச்சி முடிவு-இலங்கை நிர்வாகம் திகைப்பில்
உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானம் குறித்து மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் மேன்முறையீட்டு செயற்பாடுகள் இடம்பெறும்.
அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது.
இந்திய அணி அபார வெற்றி! கதறி அழுத தென்னாபிரிக்கா
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி இன்று(5) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 49ஆவது சதம் இதுவாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை பெற்றிருந்தார்.
இந்தநிலையில், இன்றைய தினம் விராட் கோலி பெற்ற சதத்துடன், சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அத்துடன், இந்திய அணிசார்பில் ஸ்ரேயாஷ் ஐயர் 77 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 327 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி .. ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து … ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக மெர்கோ ஜொன்சன் 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய தென்னாபிரிக்க அணியின் ஏனைய வீரர்கள் 14க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நீரிழிவு நோய் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீரிழிவு நோய்த் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையின் சனத்தொகையில் 10 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை விரட்ட ஹமாஸ் போட்டுள்ள பகீர் பிளான்
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளைச் சமாளிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முதலில் தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதேநேரம் இப்போது ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.
காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மிக விரைவில் முழு வீச்சில் படையெடுப்பையும் ஆரம்பிக்க உள்ளது.
ஹமாஸ் படை: இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஹமாஸ் முழு வீச்சில் ரெடியாகி வருகிறது. இதனால் மிகப் பெரிய மற்றும் நீண்ட போருக்கு ஹமாஸ் தயாராகி வருகிறது.
இதன் மூலம் போர் நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது.காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் குழு அங்கே ஆயுதங்கள், ஏவுகணைகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைக் குவித்து வருகிறது.
காசாவுக்கு அடியில் இருக்கும் சுரங்கப்பாதைகளைக் கொண்டு ஹமாஸ் பல மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என்பதில் ஹமாஸ் உறுதியாக இருக்கிறது. மேலும், இஸ்ரேல் படைகள் உள்ளே இறங்கினால் அவர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்களை விரக்தியடையச் செய்யவும் ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.
குறிவைக்கப்படும் அமெரிக்கா?
முதலில் ஹமாஸ், அடுத்து இப்போ ஹிஸ்புல்லா! இஸ்ரேல் போரில் பகீர் திருப்பம் என்ன திட்டம்:
இஸ்ரேலை முடிந்தவரைத் தடுத்து நிறுத்துவதே ஹமாஸ் நோக்கமாக இருக்கிறது. ஹமாஸை சில வாரங்கள் வரை தொடர்ந்து தடுத்து நிறுத்தினால், அதற்குள் சர்வதேச அழுத்தம் காரணமாகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஹமாஸ் நம்புகிறது. இதை இலக்காக வைத்தே ஹமாஸ் திட்டம் போட்டு வருகிறது.
ஹமாஸ் வசம் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக கத்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இஸ்ரேலில் இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுவித்தால் தங்களிடம் இருக்கும் அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிப்போம் என்று ஹமாஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இதனால் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்பது ஹமாஸுக்கு நன்கு தெரியும். அது தெரிந்தாலும் ஹமாஸ் தனது திட்டத்தில் பின்வாங்க ரெடியாக இல்லை.
ஹமாஸ் குறித்து நீண்ட ஆய்வு செய்யும் கத்தார் பல்கலைக்கழக வல்லுநர் அதீப் ஜியாதே இது குறித்துக் கூறுகையில், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் பார்த்திருப்பீர்கள். மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட அந்த தாக்குதலை நிபுணத்துவம் பெற்றவர்கள்தான் திட்டமிட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பதை ஹமாஸ் உணர்ந்தே இருந்தது. இதனால் அவர்கள் ஏற்கனவே நீண்ட காலப் போருக்குத் தயாராகியிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். நீண்ட கால சண்டைக்கு ரெடியாகாமல் ஹமாஸ் அந்தத் தாக்குதலை நடத்தி இருக்காது என்றார்.
அதேநேரம் ஹமாஸின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவும் கருத்து கூறி இருக்கிறது. அதாவது காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் போது அதை ஹமாஸ் எவ்வளவு முடியுமா எவ்வளவு நீட்டிக்கும். அப்போது உயிரிழப்பு நிச்சயம் அதிகரிக்கும். அந்த செய்திகளை வைத்து மக்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதே ஹமாஸின் திட்டமாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஏற்கனவே சுமார் 40,000 பேரைத் திரட்டவிட்டதாகவே கூறப்படுகிறது. இவர்களுக்கு அங்குப் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்ட பல நூறு கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதைகள் எல்லாம் அத்துப்படி.
80 மீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்த சுரங்கப்பாதை வலையமைப்பில் அவர்களால் மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும். 120 கிமீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகளையும் ஹமாஸ் வைத்துள்ளனர்.
இத்துடன் மேலும் பல ஆயுதங்களையும் அவர்கள் குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், போர் ஆரம்பித்தால் எப்படியும் அது நீண்ட காலத்திற்குச் செல்லும் என்பதால் உணவுகளையும் கூட ஹமாஸ் சேமித்து வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. அதாவது அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பே ஆயுதங்கள், உணவுகளைக் குவித்துள்ளனர்..
மேலும் வீரர்களையும் திரட்டியுள்ளனர். இப்போது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் இதை வைத்து இஸ்ரேலைத் தடுக்க முடியும் என்று ஹமாஸ் நம்புகிறது.
ஏற்கனவே, அண்டை அரபு நாடுகள் இஸ்ரேலின் செயல்களைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. வரும் நாட்களில் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நிஜ்ஜார் விவகாரம்.. ஐநா வரைக்கும் கொண்டு சென்ற கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை சாடி வரும் கனடா, ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தியாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளது.
தங்கள் மண்ணில் அந்நிய தலையீடு இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது.இந்தியா-கனடா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தான். கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலைகளுக்கு பின்னணியில் இந்திய ஏஜெண்ட்களின் பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. இந்தியாவுக்கு பங்கு இருக்கலாம் என்று கனடா சொல்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அதேபோல், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதற்கிடையே கனடா விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குவதகாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.50 முறை துப்பாக்கிச்சூடு.. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை குறித்த சிசிடிவி காட்சிகள்? பரபர தகவல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்கள் எதையும் கனடா வழங்கவில்லை என்று இந்தியா கூறியிருந்தது. ஆனால், கனடா பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது என ட்ரூடோ கூறினார். இவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை மோதலும் தடித்து வருகிறது.
இப்படி மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கனடா இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் நடந்து வருகிறது.அதாவது, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில், இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடும் வகையில் கனடா சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான கனடா தூதர் போப் ரே கூறியதாவது:-
அந்நிய நாடுகளின் தலையீட்டால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியல் தேவைகளுக்காக அரசுகளுக்கு இடையேயான விதிகளை வளைக்க முடியாது.அதே நேரத்தில் சமத்துவத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் மதிப்புகளை நாங்கள் உறுதி செய்ய வேண்டியும் உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால் நாங்கள் ஏற்றுக்கொண்ட விதிகளை பின்பற்றாமல் இருந்தால் எங்களின் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான சமூகத்தின் திரை கிழிக்கப்படும் என்றார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடாவை சாடும் வகையில் பேசினார். ஜெய்சங்கர் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசியல் வசதிக்காக தீர்மானிக்கக் கூடாது என்று சாடியிருந்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஜெய்சங்கரின் இந்த உரை இருந்தது.
சோகத்தில் முடிந்த திருமணம்: தீ விபத்தில் 100 பேர் பலி
ஈராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஈராக், நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், திருமண மண்டபத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கட்டடத்தின் கூரைகள் அங்காங்கே இடிந்து விழுந்ததில் தீ வேகமாக பரவியுள்ளது.
இதனால் மண்டபத்தைவிட்டு வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
முதல்கட்ட விசாரணையில் திருமண நிகழ்வின்போது வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உயர்நிலைக் குழு விசாரணைக்கு ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது.