Monday, July 28, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 133

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பு!

0

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று (20) அதன் தவிசாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஈட்டர் தாக்கதலை அடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலயே இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் அதன் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!

0

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை தொடர்களை நடத்திய இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.

மும்பை, ஆமதாபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ நிர்வாகம் வழங்கி வருகின்றது. கோல்டன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் இலவசமாக விஐபி இருக்கையில் அமர்ந்து காணலாம்.

Image

முதலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

தொடர்ந்து, மேலும் பல பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது வாட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்

https://chat.whatsapp.com/Dbro3n5Nm3r3YPQXC7jPxn

 

மற்றுமொரு பரபரப்பு தகவல் வெளியிட்ட பா.உ டயனா கமகே

0

சுற்றுலாத்துறையை மேப்படுத்த “ நைட் லைப் “ மிக மிக அவசியம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்.

சுற்றுலாத்துறையை மேப்படுத்த “ நைட் லைப் “ அவசியம். இலங்கை வரும் சுற்றுலாப்பயணி பகலில் சீகிரிய மலைக்கு ஏறுவார்கள், ஶ்ரீ மஹா போதிக்கு செல்லவார்கள், இரவில் சீகிரிய மலைக்கு ஏற முடியாது, ஶ்ரீ மஹா போதிக்கு செல்ல முடியாது.

அப்படி என்றால் இரவு 6 மணிக்கே ஹோட்டல் அறையில் போய் தூங்க சொல்கிறீர்களா ? இரவு வேளையில் அவர்கள் செலவிட நாம் அதற்கான வழிமுறைகளை அமைத்துகொடுக்க வேண்டும். மதுபான சாலைகள் திறந்து இருக்க வேண்டும்.

ஏன் நாட்டில் யாருமே மது அருந்துவதில்லையா ? கஞ்சா அடிப்பதில்லையா ? விபச்சார தொழிலில் ஈடுபடுவதில்லையா ? பிறகு ஏன் நைட் லைப் மட்டும் வேண்டாம் என்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நைட் லைப்பை ஆரம்பித்தால் சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்ல நாட்டு மக்களை நைட் லைபுக்கு இழுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் – கிளிநொச்சி சிவில் பிரதிநிதிகள், ஜப்பான் தூதராலய அதிகாரியுடன் சந்திப்பு

0

புத்தளம் வாழ் யாழ் – கிளிநொச்சி சிவில் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான் தூதராலய உயர் அதிகாரிகளுடன் இன்று 19/09/2023 மாலை 4.00 மணியளவில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கான ஜப்பான் தூதராலயத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி Kana MORIWAKI அவர்களை சந்தித்து சமகால இடர் நிலைமைகளையும் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சில கோரிக்கைகளும்  முன்வைக்கப்பட்டன.

எதிர்காலத்தில் இது தொடர்பாக காத்திரமான முன்னெடுப்புக்களுக்கு தாம் உதவுவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதராலயத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது வடமாகாண இடம் பெயர் செயலகத்தின் முன்னால் ஆணையாளர் S. மதீன் ஆசிரியர், மெளலவி அப்துல் மலிக், B. நிலாம், M.H.பைறூஸ் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மகஜர் ஒன்றும்  கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் நூல் அறிமுக விழா

0

மறைந்த பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும் எனும் தலைப்பில் கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையினால் வெளியிடப்பட்ட நூலின் அறிமுக விழா கடந்த வியாழக்கிழமை (07.09.2023) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் கொழும்பு தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கௌரவ பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறை பேராசிரியர் சுமதி சிவமோகன் கருத்தாளமிக்க நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.

ஓய்வு நிலை வரலாற்றுத்துறை பேராசிரியர் B. A. ஹுஸைன்மியா அவர்கள் ‘நான் கண்ட ஹஸ்புல்லாஹ்’ எனும் தலைப்பில் பேராசிரியர் மர்ஹும் எஸ். எச். ஹஸ்புல்லாஹ்வுடனான தனது 45 வருட பன்முக உறவின் சுருக்கத்தை உணர்வு பூர்வமாக முன்வைத்தார்.

பேராசிரியர் எஸ். எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ என்ற இந்த நூலாக்க முயற்சி குறித்து கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவரும் ஒய்வுநிலை அரபு மொழித்துறை பேராசிரியருமான மெளலவி M. S. M. ஜலால்டீன் சிறப்புரை நிகழ்தினார்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தான் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நின்று சமூகப் பணியாற்றியவர். பல்வேறு தேசிய அமைப்புகளுடனும் இணைந்து தனது பணிகளை அவர் முன்னெடுத்திருக்கிறார். அந்த வகையில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வுக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் இடையிலான சமூகப் பணிசார் தொடர்பு பற்றி ஜமாஅத்தின் உதவிப் பொதுச் செயலாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பிரதம செயற்திட்ட அதிகாரியுமான M.H.M. ஹஸன் கருத்துரைத்தார்.

May be an image of 1 person and studying
அவ்வாறே பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தேசிய சூரா சபையுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள் தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் சிரேஷ்ட ஆய்வாளராக கடமையாற்றுகின்ற, பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மாணவர் M. அஜிவடீன் கருத்துரை வழங்கினார்.

சகோதரர் M. L. M. தெளபீக் அவர்களால் நெறியாக்கம் செய்யப்பட்ட நூல் அறிமுக விழாவில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் பணியாற்றுகின்ற பல்வேறு சமூக தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஆண்களும் பெண்களுமாக பெரும் எண்ணிக்கையானோர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவின் போது முக்கிய பத்து பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

May be an image of 14 people, dais and text

இறுதியாக பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பம் சார்பாகவும் கொழும்பு வாழ் எருக்கலம்பிட்டி மற்றும் மன்னார் மாவட்ட முஸ்லிம் சமூகம் சார்பாகவும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் கௌரவ தலைவர் லுக்மான் சஹாப்டீன் அவர்களால் நிறைவுரையும் நன்றியுரையும் வழங்கப்பட்டு நூல் அறிமுக விழா நிறைவு செய்து வைக்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் டாப் 10 வீரர்கள்!

0

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான அணிகள் மற்றும் வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சாதனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பல முறை தங்களது அணிகளுக்காக வெற்றியையும் தேடித் தந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து முதல் 10 இடங்களில் இருப்பவர்களை பின்வருமாறு காணலாம்.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,278 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.95 ஆக உள்ளது.

அவரது ஸ்டிரைக் ரேட் 88.98 ஆகும். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 152. உலகக் கோப்பை போட்டிகளில் அதிகம் சதம் அடித்தவரும் இவரே. கடந்த 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக முறையே 523 ரன்கள் மற்றும் 673 ரன்கள் குவித்தார்.

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

உலகக் கோப்பை தொடரில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.86 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 79-க்கும் அதிகமாக உள்ளது.

அவர் 5 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 140*. இதனை அவர் இந்தியாவுக்கு எதிரான 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்தார்.

குமார் சங்ககாரா (இலங்கை)

உலகக் கோப்பை தொடரில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா 1,532 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.74 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86.55 ஆகும். அவர் 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124.

பிரையன் லாரா (மே.இ.தீவுகள்)

பிரையன் லாரா உலகக் கோப்பை தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1,225 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 42.24 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 116.

ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பை போட்டிகளில் அறிமுகமானார் டி வில்லியர்ஸ். அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,207 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 63.52 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 117-க்கும் அதிகமாக உள்ளது. அவரது சிறந்த ஸ்கோர் 162*. அவர் 4 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்)

ஆடுகளத்தில் களமிறங்கினால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பவர் கிறிஸ் கெயில். உலகக் கோப்பையில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,186 குவித்துள்ளார். அவரது சராசரி 35.93 ஆகும். ஸ்டிரைக் ரேட் 90.53 ஆக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 215. இதுவே உலகக் கோப்பை தொடரின் முதல் இரட்டை சதமாகும்.

சனத் ஜெயசூர்யா (இலங்கை)

உலகக் கோப்பையில் 38 போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூர்யா 1,165 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 34.26 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 90.66 ஆக உள்ளது. அவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 120.

ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)

உலகக் கோப்பையில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 1,148 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.92 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 74.40 ஆகும். அவர் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 128*.

ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

உலகக் கோப்பை வரலாற்றில் வங்கதேசம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,146 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.84 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 82-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124*. அவர் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

திலகரத்னே தில்ஷன் (இலங்கை)

உலகக் கோப்பை தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன் 1,112 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 52.95 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 92-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 161*. 2011 ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக தில்ஷன் உள்ளார். அவர் 2011 உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் 500 ரன்கள் எடுத்தார். அதில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும்.

ஐரோப்பாவில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி

0

ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ நாட்டில் நடைபெற்று வரும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் 26 நாள்களாக மெத்தையிலேயே படுத்துள்ளனர்.

மாண்டெனெக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 21 பேர் இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

சுமார் 26 நாள்கள் 463 மணிநேரம் கடந்துள்ள நிலையில், தற்போது 7 பேர் விடாமுயற்சியுடன் போட்டியில் நீடித்து வருகின்றனர்.

இந்த போட்டியை பொறுத்தவரை 24 மணிநேரமும் மெத்தையிலேயே படுத்திருக்க வேண்டும். உட்காரவோ, நிற்கவோ அனுமதி இல்லை. தவறுதலாக படுக்கையில் இருந்து எழுந்தால்கூட உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

8 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி உணவு உண்பதெல்லாம் படுத்துக் கொண்டுதான். படுத்துக் கொண்டே செல்போன் மற்றும் லேப்டாப் உபயோகிக்கவும், புத்தகங்கள் படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கடைசி வரை படுத்து வெற்றி பெறுபவருக்கு ‘சோம்பேறி குடிமகன்’ என்ற விருதுடன் ரூ.88,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும், படுக்கையில் உள்ள போட்டியாளர்களின் உடல்நிலையும் தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

கடந்தாண்டு நடைபெற்ற இந்த போட்டி 117 மணிநேரத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இந்தாண்டு இன்னும் 7 பேர் வெற்றிக்காக போராடி கொண்டுள்ளனர்.

மணிப்பூர் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் பலி

0

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நான்கு மாதங்களில் நிகழ்ந்த வன்முறை விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறை வெளியிட்ட தகவலில்,

மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 175 பேர் பலியாகியுள்ளனர். 1108 பேர் காயமடைந்தனர். 32 பேர் காணாமல் போயுள்ளனர்.

4,786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அதில் 386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட 386 மதக் கட்டங்களில் 254 தேவாலயங்கள் மற்றும் 132 கோயில்கள் ஆகும்.

காணாமல் போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 பல்வேறு வகையான வெடிபொருள்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பலத்த எதிர்ப்பு

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிமின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது பகுதியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் நிகழ்வுகள் சாய்ந்தமருதில் நாளை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்று தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் தவறிவிட்டதாக தெரிவித்து சாய்ந்தமருது பகுதி மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமரர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23 வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள், பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலருக்கும் எதிராக போராட்டகாரர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

சாய்ந்தமருது காவல்துறையினர் வீதி போக்குவரத்தை சீர்செய்ததுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோஷமெழுப்பிய போராட்டகாரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

குறிப்புகள் எதுவும் இல்லை
குறிப்புகள் எதுவும் இல்லை

குறிப்புகள் எதுவும் இல்லை
குறிப்புகள் எதுவும் இல்லை
குறிப்புகள் எதுவும் இல்லை

லிபியாவில் அணை உடைந்து 20,000 போ் உயிரிழப்பு?

0

லிபியாவில் அணை உடைந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 20,000 போ் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 5,100-ஐக் கடந்துள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்குப் பிராந்திய அரசின் பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் அபு கிவூத் கூறியதாவது:

வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்து, அதிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரையும், அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்தியதரைக் கடலுக்குள் அடித்துச் சென்றது.

ஏற்கெனவே பாதிப்புப் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தக் கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன என்றாா் அவா்.

ஏற்கெனவே, அணை உடைப்புக்குப் பிறகு 10,000 போ் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாயமான அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அல்-பய்தா மருத்துவ மையத்தின் இயக்குநா் அப்துல் ரஹீம் மாஸிக் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியவில்லை; இதன் காரணமாக பாதிப்பு விவரங்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறினா்.

மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ள வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்குப் பகுதியை அந்தக் கடலில் உருவான சக்திவாய்ந்த ‘டேனியல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகக் கடுமையாகத் தாக்கியது.

இதனால் பெய்த கனமழையில், அந்தப் பகுதியில் மலையிலிருந்து பாயும் வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப் பெரிய சப்தத்துடன் வெடித்து உடைந்தது.

அதையடுத்து, அந்த அணையிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் பாய்ந்த அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச் சென்றது.

வெள்ளத்தில் மூழ்கி உயரிழந்த சுமாா் 5,100 பேரது சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சுமாா் 90,000 போ் வசித்து டொ்ணா நகர மக்கள், இந்த பேரிடருக்குப் பிறகு 2 நாள்களாக அரசின் உதவியின்றி தனித்து விடப்பட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சூழலில், வெள்ள பாதிப்புப் பகுதிகளுக்கு கிழக்குப் பிராந்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமைதான் வந்தடைந்தனா்.

உள்ளூா் மீட்புக் குழுவினருடன் கிழக்குப் பிராந்திய அரசுப் படைகள், அரசுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

லிபியாவில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாஃபியின் ஆட்சியை நேட்டோவின் ஆதரவுடன் கிளா்ச்சியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்ந்தனா்.

அதன் பிறகு பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதிக் கொண்ட அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் திரிபாலியைத் தலைநகராகக் கொண்ட ஓா் அரசும், அதற்குப் போட்டியாக கிழக்கே மற்றோா் அரசும் நடைபெற்று வருகின்றன.

அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் குழப்பம் காரணமாக, நாட்டின் உள்கட்டமைப்பை பராமரிக்க முடியாமல் போனதால்தான் வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.