Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 133

கழகங்களுக்கு வழங்கப்பட்ட 60 படகுகள்!

0
கடற்படை படகு உற்பத்தி முற்றத்தில் தயாரிக்கப்பட்ட 60 படகுகள் மற்றும் காயக் படகுகள் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச படகுகள் மற்றும் காயக் படகுகள் கூட்டமைப்பில் (International Canoe Federation – IFC) அனுசரணையுடன், இலங்கை தேசிய படகுகள் மற்றும் காயக் படகுகள் சங்கத்தால் (National Association for Canoeing and Kayaking in Sri Lanka – NACKSL) வெலிசறை கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட படகுகள் மற்றும் காயக் படகுகள் கையளிக்கப்பட்டன.

தீவின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு தயாரிக்கப்பட்ட குறித்த அறுபது (60) படகுகள் மற்றும் காயக் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த 2025 மார்ச் 17 அன்று வெலிசறை கடற்படை படகுத் தளத்தில், கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உயர் தரத்தினால், தயாரிக்கப்பட்ட முப்பது (30) படகுகள் மற்றும் முப்பது (30) காயக் படகுகள், தீவின் புகழ்பெற்ற நீர் விளையாட்டு கழகங்களுக்கு வழங்கப்பட்டன.

அதாவது; இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை Bolgoda Lake rowing club, Lanka Adventure, Adventure SEAL, North wing project in Jaffna, Diyawanna Water sports club ஆகிய விளையாட்டுக் கழகங்களினாலும், கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம், திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அறிவியல் பீடம் மற்றும் தீவின் பல்வேறு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை விளையாட்டுக் கழகங்களுக்குப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் இது செய்யப்பட்டது.

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!

0

9 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோரை ஏற்றிச் சென்ற காப்ஸ்யூல், சுமார் 17 மணி நேர விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இன்று (19) காலை பூமிக்குத் திரும்பியது.

இவர்களை சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அருகிலுள்ள கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரண்டு விண்வெளி வீரர்களும் எட்டு நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் சென்றனர், ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்க வேண்டியிருந்தது. மற்றும் பாரி வில்மோர் ஆகியோரை ஏற்றிச் சென்ற காப்ஸ்யூல், சுமார் 17 மணி நேர விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இன்று (19) காலை பூமிக்குத் திரும்பியது.

இவர்களை சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அருகிலுள்ள கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரண்டு விண்வெளி வீரர்களும் எட்டு நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் சென்றனர், ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்க வேண்டியிருந்தது.

சுகாதார துறையில் 3 தசாப்தமாக வடக்கில் பிரச்சினை!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 வைத்திய சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு தீர்த்து இவற்றை இயங்க வைக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

3 தசாப்தங்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை என்றும், இதனைக் கருத்தில்கொண்டு ஆளணி மறுசீரமைப்பு, வெற்றிடமாகவுள்ள ஆளணிகளை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சைக் கோருவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நிதிக்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், வவுனியா மற்றும் மாங்குளம் மருத்துவமனைகளில் பொறுப்பு மருத்துவ அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி, முன்னாள் மருத்துவபீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

சரணடைந்த தேசபந்து தென்னகோன்!

0

நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். 

பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து சிறப்பு கவனத்தை ஈர்த்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார். 

நேற்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த ஒரு குழு ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை சோதனை செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அங்கு 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் அடங்கியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார். 

அத்துடன் ​அவரது துப்பாக்கி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பிஸ்டல் வகை ஆயுதத்தையும், இரண்டு நவீன கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இந்த கையடக்க தொலைபேசிகள் மூலம் அதிக அளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

அர்ச்சுனா எம்.பி க்கு பாராளுமன்றம் தடை!

0

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். 

அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது. 

குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கப்படுமா? இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் வான் தாக்குதலில் 404 பேர் பலி!

0

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற வான்வழி தாக்குதலில், 404 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

புனித ரமலான் காலப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரை 404 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையான போர்நிறுத்த உடன்படிக்கை கடந்த ஜனவரி 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதிலிருந்து நேற்றைய தினம் வரையில், இஸ்ரேல் பல தடவைகள் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதுடன், 170 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர்.

மார்ச் 2 அன்று, போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியான நிலையில், இஸ்ரேல் காசாவிற்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தியதுடன், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் விநியோகத்தை துண்டித்தது.

இது உலகளாவிய ரீதியில் பெரும் கண்டனத்தை எழுப்பியதுடன்,இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தன. காசாவிற்கு வெளியே மனிதாபிமான உதவிகளும் சென்ற லாரிகள் நிறுத்தப்பட்டதால் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்தன, இதன் விளைவாக பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் அதிகரித்தது.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான போரில் குறைந்தது 48,577 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாகவும் 112,041 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 3 ஆம் தேதி, பலஸ்தீன அரசாங்க ஊடக அலுவலகம் இறப்பு எண்ணிக்கையை 61,700 க்கும் அதிகமாகப் புதுப்பித்தது, இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்துவிட்டதாகக் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது.

கோத்தபாய குறித்து உயர்நீதிமன்றின் அறிவிப்பு!

0

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்தது. 

இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட, ஹேனகம, பொகுனுவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும என்ற பெண்ணொருவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமைகள் மனுவின் தீர்ப்பை வழங்கி, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து!

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு பாரிய கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், நாவற்குழி மாதா கோவிலடியிலே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் மூவர் இருந்ததுடன், அவர்கள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண்  குழந்தை ஆகியோர் குறித்த காரில் பயணித்தபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கு காரணம் நித்திரை கலக்கமே என விபத்தில் சிக்கியவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

Click here to join our whatsApp group

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்!

அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர்  உபுல் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

குர்ஆனை கையில் வைத்து பேசிய ஹிஸ்புல்லா எம்.பி!

0

நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஊடாக கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாட்டில் 321 பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 132 பதிவு செய்யப்படாத அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 72 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன. அந்த பதிவுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அதேநேரம் இந்த அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் ஊடாக கொண்டுசெல்லப்பட வேண்டும். இது தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டுவந்த நிலையில், பொதுவான பாடத்திட்டம் அமைக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. 

குறித்த குழு அது தொடர்பான பாடத்திட்டத்தையும் தயாரித்திருந்தது. பின்னர் இந்த பாடத்திட்டத்தை மீள் பார்வையிட 2022ஆம் ஆண்டும் நிபுணர்குழு அமைக்கப்பட்டபோது, அந்த நிபுணர்குழுவும் அதுதொடர்பில் ஆராய்ந்து குறித்த பாடத்திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தது. 

பின்னர் கல்வி அமைச்சுக்கு இது மாற்றப்பட்டபோது இந்த பாடத்திட்டத்தை மீள் பரிசீலனைசெய்ய மீண்டும் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவும் குறித்த பாடத்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கிறது. 

அதனால் அரசாங்கம் இந்த பாடத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்களுக்கு முறையான பயிற்சி திட்டம் ஒன்று முஸ்லிம் கலாசார திணைக்களம் ஊடாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நிகழ்த்தப்படும் பிரசங்கங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இதேவேளை, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பிராந்தியம் ஒன்று மட்டக்களப்பில் இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்னர் இது அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் முறையாக இயங்காமல் இருக்கிறது. 

அதனால் அதற்கு ஒரு உதவி பணிப்பாளர் ஒருவரை நியமித்தும் தேவையான அதிகாரிகளை நியமித்தும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து சிறிய தேவைக்கும் கொழும்புக்கு வந்துபோக தேவை ஏற்படாது. அத்துடன் இந்த பிராந்தியத்தை ஊவா மாகாண மக்களும் பயன்படுத்த முடியும். 

மேலும் அரபு மொழி புத்தங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதற்கு இருக்கும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் ஒருவருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட பல ஆயிரம் அல்குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பு பிரதிகள் இன்னும் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோன்று, சர்வதேச நாடுகளில் அமைந்துள்ளவாறு ‘பைத்துல்மால் நிதியம்’ அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும், மகர சிறைச்சாலை பள்ளிவாசல் பிரச்சினை மற்றும் நோர்வூட் பள்ளிவாசலுக்கு சொந்தமான வீட்டு பிரச்சினை போன்றவற்றை சுட்டி காட்டியதுடன் அவற்றை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.