Sunday, June 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 14

யாழ் ராணி புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி!

யாழ் ராணி புகையிரத்துடன் மோதி பளை கச்சாய்வெளி பகுதியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட யாழ் ராணி புகையிரதம் காலை 7.30 மணியளவில் பளை கச்சாய்வெளி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் பளை தம்பகாமம் பகுதியைச்சேர்ந்த 4 6வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று சர்வதேச அன்னையர் தினம்!

0

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. 

அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

அன்னா 1854 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது பிறந்தார். மேலும் அம்மை, டைபாய்டு மற்றும் டிஃப்தீரியா போன்ற நோய்களால் தனது உடன்பிறந்தவர்களில் சிலரை இழந்தார். 

அவரது தாயார், ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ், தனது சொந்த அனுபவங்களால் உந்தப்பட்டு, குழந்தை இறப்பைத் தடுக்க தாய்மார்களுக்கு சுகாதாரத்தை கற்பித்தல் போன்ற தாய்மையை மையமாகக் கொண்ட காரணங்களுக்காக தனது வாழ்க்கையை செலவிட்டார். 

அன்னாவின் இளம் வயதில் அவரது தாயார், அன்னையர் தினம் ஒன்று வேண்டும்” என்றார். அவர் வளர்ந்தபோது, ​​அன்னா ஒரு ‘அன்னையர் தினம்’ ஸ்தாபனத்தை தனது வாழ்க்கையின் பணியாக மாற்றினார். 

அவர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தேவாலயத் தலைவர்களுக்கு தனது ஆதரவைப் பெறுமாறு கடிதம் எழுதினார். 

இந்த நிலையில், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தாய்மார்களைக் கொண்டாடும் நாளாக அர்ப்பணிக்கப்பட்டது. 

அதாவது, அவரின் அம்மா இறந்த மே 9 ஆம் திகதிக்கு அருகில் இருக்கும் என்று குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்தார். 

1908 ஆம் ஆண்டில், அவரது சொந்த ஊரான கிராஃப்டன் மற்றும் பிலடெல்பியாவில் இரண்டு பெரிய அன்னையர் தின நிகழ்வுகள் நடைபெற்றபோது அவரது முயற்சிகளுக்கு வெகுமதி கிடைத்தது. 

மே 8, 1914 அன்று, அன்னையர் தினத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் கையெழுத்திட்டார். 

பின்னர், அன்னையர் தின கொண்டாட்டங்கள் வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகளாக மாறியதால், இந்த நிகழ்வை வணிகமயமாக்குவதற்கு அன்னா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 

ஏனென்றால் வீட்டில் தனது குடும்பத்தை பராமரிக்கும் தாயை, சிறந்த தாய் எனக் கொண்டாடுங்கள் என்றார்.

கோர விபத்தில் 15 பேர் பலி. வீடியோ இணைப்பு!

0

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.

பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த பலரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

முதலாமிடம் பெற்றது எருக்கலம்பிட்டி பாடசாலை!

இலங்கை ஒலிபரப்புத் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நடாத்திய அறிவுக் களஞ்சிய போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி முதலாமிடம் பெற்றுக்கொண்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 12 பாடசாலைகள் கலந்துகொண்ட குறித்த அறிவுக் களஞ்சிய போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி முதலாமிடம் பெற்றுக்கொண்டமைக்கு ஊர் மக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி பண்டாரவளி பாடசாலையுடன் மோதி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.

அதனைத் தொடர்ந்து சிலாவத்துறை பாடசாலையுடன் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியிலும் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி அதீத திறமையை வெளிப்படுத்தி வெற்றியீட்டிக்கொண்டதுடன், அதனை அடுத்து வேப்பங்குளம் பாடசாலையுடனும் மோதி சிறப்பு வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மன்னார் தாராபுரம் பாடசாலை மற்றும் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சிறப்பான வெற்றியை பதிவுசெய்து மன்னார் மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்று மகுடம் சூடிக்கொண்டது.

இதேவேளை வட மாகாண மட்ட போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதுடன், குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய அரசியலமைப்பு சபை செயலாளர்!

0

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதன்படி, அவரது ராஜினாமாவை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன 

பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க, 25, மே 2023 அன்று அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 

இருப்பினும், பின்னர் அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவிக்காக அவருக்கு சுமார் 500,000 ரூபாய் கொடுப்பனவும், ஒரு உத்தியோகபூர்வ வாகனமும் பிற வசதிகளும் வழங்கப்பட்டன.

கொழும்பில் இரண்டு இடங்களில் தீ விபத்து!

0

கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீயை அணைக்க 06  தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை வரிசையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பற்றி எறிந்த சமூக செயற்பாட்டு மையம்!

0

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.

இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. 

இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும்  பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன. 

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆலயங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் வான வேடிக்கைகள் நிகழ்த்துபவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பண்பாட்டு மலச்சிக் கூடத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டு நிகழ்வுகளும், அரங்க செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்!

0

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று (10) முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இதற்கு இணையாக, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இன்று முதல் தொடங்கவுள்ளது. 

இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவத்தை ஏற்பாடு செய்கின்றன. 

“நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவம் வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இதற்கு இணையாக, நுவரெலியா மற்றும் பதுளை சாசன பாதுகாப்பு மன்றங்கள் இணைந்து தொடங்கிய தாய்லாந்து மகா சங்கத்தினரின் “சியம் இலங்கை தர்ம யாத்திரை” திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று நுவரெலியா நகரில் நிறைவடையவுள்ளது. 

இந்த யாத்திரை பண்டாரவளையில் இருந்து நுவரெலியா வரை நடைபெற்றது. 

அத்துடன், இந்த காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் இன்னும் முடிவடையாத சில விகாரை அபிவிருத்தி திட்டங்கள் முப்படைகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளன. 

இதற்கிடையில், வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு முழுவதிலுமுள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் இடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும். 

மேலும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பேசும்பொருளாகிய மாணவியின் தற்கொலை!

0

16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இரண்டாம் கட்ட ஏலம் ஆரம்பம்!

0

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இதில் அடங்கும். இந்த வாகனங்களில் இரு BMW வாகனங்கள், 02 போர்ட் எவரெஸ்ட் ஜீப் வண்டிகள், ஒரு ஹூண்டாய் டெரகன் ஜீப், இரு லேண்ட் ரோவர் ஜீப் வண்டிகள், 01 மிட்சுபிஷி மொன்டெரோ, 03 நிசான் பெற்றோல் வகை வண்டிகள், 02 நிசான் கார்கள், ஒரு போர்ஷே (Porsche) கெய்ன் கார், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப் வண்டிகள், 01 லேண்ட் குரூசர் சஹரா ரக ஜீப், 06 வீ 8 ஜீப் மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பஸ் அடங்கும்.

இது தொடர்பான விலைமனு ஆவணங்களை மே 14 ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஜனாதிபதி செயலக செமா கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள நிதிப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

மே 14 ஆம் திகதி வரை, இலக்கம் 93 ,ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள சலுசல நிறுவன வளாகத்தில் இந்த வாகனங்களை பரீட்சிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏலத்தின் முதல் கட்டத்தின் கீழ் முன்னதாக, 14 சொகுசு வாகனங்கள், பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் ஏலம் விடப்பட்டன.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட ஏலத்தில், 9 டிபெண்டர் ரக ஜீப் வண்டிகள் உட்பட பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்கப்பட்டன.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரத்தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அல்ல என்பதோடு அரசியலமைப்பின் 41 (1) வது பிரிவின் கீழ் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களினால் பயன்படுத்தப்பட்டவையாகும்.