Wednesday, November 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 146

கோப் குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0

🔸 ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் ஆஜர்

🔸 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை தெளிவாகின்றது – கோப் குழு

🔸 இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளருக்கு அப்பதவிக்கான நியமனத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி இல்லையென்பதும் உறுதியானது

🔸 முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு நிதி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது – குழு உறுப்பினர்கள்

🔸 முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது கடமையை மேற்கொண்ட விதம் குறித்து திருப்தியடைய முடியாது – கோப் குழு

🔸 அரசாங்க அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – கோப் குழுவின் தலைவர் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு கோப் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றைய முன்தினம் (20) கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 18ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கோப் குழு கூடியதுடன், இதில் பல்வேறு முறைபாடுகள் பற்றிய விபரங்கள் வெளிப்பட்டிருந்தன. இதற்கு அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்களைக் கோப் குழு முன்நிலையில் அழைத்து விசாரணைகளைத் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் தேவையான அதிகாரிகளை் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடியான செயற்பாடுகள் பல வெளிப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக கோப் உபகுழுவொன்றை நியமிக்க குழுவின் தலைவர் தீர்மானித்தார். இதற்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ன, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரைக் கொண்டதாக கோப் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த உபகுழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் முதல்நாள் உறுதிப்படுத்தப்பட்ட விடயம் குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் தலைவர் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமையால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்காக இந்தக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் விடயம் பற்றி ஆச்சரியமடைவதாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட தினத்தில் பி.ப 2 மணி முதல் பி.ப 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இந்தக் காசோலையை உறுதிப்படுத்தித் தருமான முன்னாள் தலைவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய முன்னாள் தலைவர் அழுத்தத்தைப் பிரயோகித்திருப்பது தெளிவாகப் புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவருக்கு ஆகக் குறைந்த அடிப்படைத் தகுதியும் இல்லையென்பதும் குழுவில் புலப்பட்டது. குறித்த பதவிக்கான நியமனத்தைப் பெற பட்டம் பெற்றிருப்பது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், குறித்த தனிப்பட்ட செயலாளரிடம் தகுதியை உறுதிப்படுத்துமாறு கோரியபோதும் அதனை அவர் உறுதிப்படுத்தவில்லையென்றும், அதனால் குறித்த பதவியை அவர் இராஜினாமாச் செய்தார் என்பதும் குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் குழுவில் ஆஜராகியிருந்ததுடன், அவரிடம் குழு விசாரணைகளை நடத்தியது. அப்போது தான் பட்டக்கல்வியைப் பயின்று வந்ததால் பட்டத்தைப் பூர்த்திசெய்திருக்கவில்லையென்றும் பதிலளித்தார். அத்துடன், அவர் அந்தப் பதவியிலிருந்து விலகி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியதாகவும் இங்கு தெரியவந்தது. இந்த நபர் பல்வேறு விடயங்களில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர் சேவைகள் மன்றத்தினால ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சரியான நடைமுறையைப் பின்பற்றாது இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டமை இங்கு தெரியவந்ததுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருடைய தேவைக்காக இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாவதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், விநியோகஸ்தர்களை இணைத்துக்கொண்டமை குறித்து குழு வினவியதுடன், இதற்குப் பதிலளித்த முன்னாள் தலைவர் தனக்கு ஏராளமான கடிதங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆற்றுப்படுத்தியதாகவும் கூறினார். இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்த செயல்முறை ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பிரசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை புலனாவதாக கோப் குழு, இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரிடம் சுட்டிக்காட்டியது. எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதுவரை முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து விளையாட்டை மாத்திரம் நோக்காகக் கொண்டு ஸ்மார்ட் ஃபியஸ்டா திட்டம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் ஃபியஸ்டா நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சித் தயாரிப்புக்காக 43 இலட்சம் ரூபா செலவுசெய்யப்பட்டபோதும் தயாரிப்பின் வீடியோ இளைஞர் சேவைகள் மன்றத்திற்குக் கிடைக்கவில்லையென்பதும் குழுவில் தெரியவந்தது. எனினும், இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு குறித்த வீடியோ கிடைத்ததாக முன்னாள் தலைவர் தெரிவித்தார். இது பற்றி ஆராயுமாறு குழு அறிவுறுத்தியது.

மேலும், தேசிய இளைஞர் பொசன் வலயம் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் இளைஞர் சந்திப்பு நிகழ்வை நடத்தியமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளுக்காக டபிள்யூ.டி.வீரசிங்க அறக்கட்டளையின் தொடர்பு குறித்து குழு ஆராய்ந்தது. அத்துடன், பெல்வுட் நுண்கலைக் கல்லூரியை புனரமைத்தல் மற்றும் புதிய கட்டடம் அமைப்பது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு கூடிய கோப் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் குறித்து நீண்ட நேரம் குழு கலந்துரையாடியதுடன், முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது பதவியில் நடந்துகொண்ட விதம் குறித்து திருப்தியடையவில்லையெனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்க அதிகாரிகள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.

சிறிய,நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு!

0

தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் வழிவகைகள் பற்றிய குழுவின் கவனத்திற்கு.

வர்த்தகர்களை பதிவு செய்யும் போது வெளிநாட்டுச் சந்தை தொடர்பில் அறிவுறுத்துவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது

ஏற்றுமதி தொடர்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அறிவூட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது

தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களால் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது குறித்து பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு வருவதால், தேவையான விழிப்புணர்வு ஏற்கனவே அங்கு வழங்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அதற்கு அப்பாலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வர்த்தகங்களைப் பதிவு செய்யும் போதே இது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். அதற்கு அரச அதிகாரிகள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் பணியாற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஏற்றுமதியை ஊக்குவிப்பது தொடர்பில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். விசேடமாக தேவையான அளவு அந்நியச் செலாவணியை அடைவதற்கு இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது என்றும் அதிகாரிகளுக்குக் குழு தெரிவித்தது. அத்துடன், கிராமப்புற மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன மற்றும் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அர்கம் இல்யாஸ், சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் பியன்வில, ருவன் மாபலகம, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், நிதி, திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

திரிபோலி ஆயுதப் படை செய்த கொலைகள்!

0

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்ட சாணக்கியன் மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.

அதன் அடிப்படையில்,

மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார்.

அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

0

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகங்கள் இடையிலான இந்திய, இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது. 

இதன்படி இன்று (22) காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. 

83 பயணிகள் குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததுள்ளதுடன், 83 பேர் இலங்கையிலிருந்து அங்கு செல்லவுள்ளனர். 

பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் போக்குவரத்து கப்பல் நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது. 

இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட பகீர் தகவல்!

0

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். 

ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

இதற்கிடையில், இந்த ஊடக சந்திப்பின் போது, ​​சேவையில் உள்ள இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார். 

அதன்படி, எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கடற்படைக்கு 16 அதிகாரிகள் நியமனம்!

0
கடற்படைக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 16 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்

இலங்கை கடற்படைக்கு 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பதினாறு (16) அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 பெப்ரவரி 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, நிறைவேற்றுப் பிரிவுக்கு நான்கு (04) அதிகாரிகளும், வழங்கல் பிரிவுக்கு நான்கு (04) அதிகாரிகளும், மின்சாரம் மற்றும் மின்னணுப் பிரிவுக்கு ஒரு (01) அதிகாரியும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு ஒரு (01) அதிகாரியும், தன்னார்வ நிர்வாகப் பிரிவுக்கு ஆறு (06) அதிகாரிகள் உட்பட இரண்டு (02) பெண் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி நேரடி ஆட்சேர்ப்பில் இருந்து கடற்படையின் முதல் ஆட்களாக இணைந்து கொண்ட புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கு, மேலும் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, கடற்படையினரின் பெற்றோர்கள் மற்றும் அன்புக்குரியவர்களினால் கடற்படை அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றியதாகவும் கடற்படையில் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கையை வாழ அவர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

கடற்படை சேவை என்பது வெறும் வேலையல்ல, நாட்டிற்கான உன்னத சேவை, அதையும் தாண்டி, பலவிதமான அனுபவங்களையும், தொடர்ந்து மாறிவரும் அனுபவங்களையும் பெறக்கூடிய ஒரு தொழில்முறை துறையாகும், மேலும் புதிய அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் அதிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தங்கள் கடமையை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும். கடற்படை வாழ்வின் நான்கு முக்கிய தூண்களாக நேர்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியவற்றைக் கருதுவதன் மூலம், புதிய அதிகாரிகளின் தொழில் வாழ்க்கை வெற்றியடைவது மட்டுமல்லாமல், பெருமை வாய்ந்த இலங்கை கடற்படையின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும், 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை நிர்வாகக் குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை ‍கட்டளை தளபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் பல அன்புக்குரியவர்களும் கலந்துகொண்டனர்.

சாரணர் இயக்கத்தின் தந்தைக்கு மரியாதை!

0

பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் நடைபெற்றது.

22.02.1857 ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் பேடன் பவல், பிரிடிஷ் நாட்டின் முன்னாள் இராணுவ வீரராக கடமையாற்றியதுடன், ஆண்கள் சாரணர் இயக்கத்தை உருவாக்கி தனது 83ஆவது வயதில் 1941ஆம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி இறந்தார்.

அவரின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில், புகையிரத நிலைய இலங்கை சாரணர் அணியினருடன் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டுள்ளனர்.

இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்

எக்ரி டெக் 2025 விவசாய மாநாடு யாழில்!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஒரு முற்சியாக விவசாயிகளையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் விவசாய மாநாடு இன்று இடம்பெற்றது.

எக்ரி டெக் 2025 (Agri tech 2025) விவசாய மாநாடு எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக விவசாயம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வடமாகாண விவசாயப்பணிப்பாளர் ,விவசாய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய துறைசார்ந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் புத்தாக்க கண்காட்சியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

இலங்கையும் ஒரு போட்டியாளராக மாறும்!

0

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற The Innovation Island Summit – 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் Innovation Island Summit – 2025 மாநாட்டை நடத்துவதால், இந்த நாட்டில் புதிய தொழில்முனைவோரின் புத்தாக்க ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தின் பல்வேறு நிலைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்றும், அந்த மனித நாகரிகத்தின் ஒவ்வொரு புதிய அத்தியாயமும் புத்தாக்கத்தின் மூலம் எழுதப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

0

மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளதாக ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளதாக அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.