Tuesday, November 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 157

அமெரிக்க அதிபரிடம் மண்டியிட்ட மெட்டா!

0

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டொனால்டு டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

மேலும், தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பைடன் அதிபராக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபரான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வக்கீல், கலிபோர்னியா கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம், ‘எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பாக எந்த விபரமும் குறிப்பிடவில்லை

பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிரம்ப்புக்கு இது வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பொங்கி எழுந்த மேல் மாகாண ஆளுநர்!

0

துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆளுநர், ஆளுநர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சமீப நாட்களாக என் மீது தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது, எனவே இன்று நான் CIDயிடம் சென்று இது குறித்து முறைப்பாடு அளித்தேன்.

தோற்கடிக்கப்பட்ட குழுக்கள் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்போது நான் அமைதியாக இருக்க முடியாது. மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது அதனை சகித்துக்கொள்ள முடியாது.”

இலங்கை கடற்படைக்கு சர்வதேச அங்கீகாரம்!

0

இலங்கை கடற்படை, ஒருங்கிணைந்த கடல் படைகளின் 154 வது பணிக்குழுவின் கட்டளையை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த 26 ஜனவரி 2025 அன்று பஹரேனில் உள்ள மனாமா கூட்டு கடல்சார் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, முன்னர் 154 ஆவது அதிரடிப்படையின் தளபதியாக இருந்த எகிப்திய கடற்படையின் கொமடோர் ஹைதம் கலீல் Haytham Khalil 154 ஆவது அதிரடிப்படையின் கட்டளையை இலங்கை கடற்படையின் கொமடோர் மஞ்சுல ஹேவா பெட்டகேவிடம் ஒப்படைத்தார்.

மேலும், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடல்சார் கூட்டணியாக கருதப்படும் இந்த கூட்டு கடல் படை, கடல்சார் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கும், கடல்சார் மண்டலங்களில் எழும் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிப்பதற்கும், பாதுகாப்பை வழங்குவதற்கும், கடலின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையைப் பாதுகாப்பதன் மூலம் உலகின் முக்கியமான சர்வதேச கப்பல் பாதைகளின் பாதுகாப்பிற்கு இது ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்குகிறது.

46 நாடுகளில் இருந்து கடற்படை மற்றும் கடல்சார் உறுப்பினர்களை உள்ளடக்கிய இவ் அமைப்பு பஹரேன் இராச்சியத்தை தலைமையிடமாகக் கொண்டது;

பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் கடலில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பிராந்திய ஒத்துழைப்புக்கான உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாக கருதப்படும் இக் கூட்டு கடல் படையின் 39வது உறுப்பினராக 2023 நவம்பர் இல் இலங்கை இணைந்தது.

அத்தகைய கூட்டணியில் 154 வது பணிக்குழுவின் கட்டளையை இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளமையானது 74 வருட இலங்கை கடற்படையின் நீண்ட பயணத்தில் ஒரு தனித்துவமான மைல்கல் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை மேம்படுத்தவும், அங்கத்துவ கடற்படைகளின் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக 154ஆவது பணிக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றும் வாய்ப்பினைப் பெற்றதன் மூலம் இலங்கை கடற்படை சர்வதேச ரீதியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று தாய்நாட்டிற்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளது.

154 வது பணிக்குழு மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிப்பது மட்டுமன்றி, கடல்சார் பாதுகாப்பு பயிற்சியை மற்ற கூட்டு கடல் படை பங்குதாரர்களுக்கு வழங்குவதும், கடல்சார் விழிப்புணர்வு, கடல்சார் சட்டம், கடல்சார் கைதுகள், கடல்சார் மீட்பு, உதவி மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றிலும் பங்களிப்பு செய்கிறது.

கனடா, எகிப்து, ஜோர்டான், சீஷெல்ஸ், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சி ஊழியர்கள், அடிப்படை பயிற்சி முதல் மேம்பட்ட பயிற்சி வரை இந்த பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர்.

வைஸ் அட்மிரல் ஜோர்ஜ் எம். விக்கொஃப், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் தளபதி, அமெரிக்க கடற்படை வைஸ் அட்மிரல் ஜோர்ஜ் எம். விக்கொஃப், பஹ்ரைனில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியான திருமதி மதுகா சில்வா மற்றும் உறுப்பு நாடுகள் மற்றும் கடற்படைகள் 154 வது பணிக்குழுவின் கட்டளையை ஏற்றுக்கொள்வதற்கான ஒருங்கிணைந்த கடல் படைகள் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலில் தொழில்புரிபவர்கள் குறித்த அறிவித்தல்!

0

இஸ்ரேல் நாட்டில் தொழில் புரிபவர்களை வாரத்திற்கு ஒரு தடவை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி தொழில் வாய்ப்பிற்காக பொருத்தமானவர்களை மட்டும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வாரத்திற்கு ஒரு தடவை கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் அரசாங்கத்தின் விவசாயத் துறையிலான தொழில் வாய்ப்புக்கள் பாரிய அளவில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள போதும், அதற்கு பொருத்தமற்ற நபர்கள் கடந்த காலங்களில் அரசியல் வாதிகளால் அனுப்பப்பட்டதனால் அது பாதிக்கப்பட்டதுடன் பணத்திற்கு அடிமையாகி, நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய பல மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை அவர்கள் இழந்துவிட்டதாகவும், இஸ்ரேல் விவசாயத் துறையின் வேலை வாய்ப்பிற்காக செல்லும் நபர்களுக்காக பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே தலைவர் இதனை குறிப்பிட்டார்.

இஸ்ரேலினால் நிறுத்தப்பட்டிருந்த விவசாயத் துறை வேலைவாய்ப்புகளை மீண்டும் ஆரம்பித்த பின்னர் செல்லும் 14 பேர் கொண்ட முதல் குழுவினர் இதில் உள்ளடங்குவர்.

அரசியல் செல்வாக்குகள் இன்றி பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என தலைவர் இதன்போது வலியுறுத்தினார். கடந்த காலங்களில் விவசாயத் துறையின் தொழில் வாய்ப்புக்காக சென்ற 80 வீதமானவர்கள் தொழில் செய்யும் இடங்களில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், அவர்கள் தகைமை அடிப்படையில் அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக சென்றவர்கள் என்பதனால் தான் பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 5000 பேரளவில் விவசாயத்துறை தொழில் வாய்ப்புக்காக எதிர்பார்த்துள்ளதாகவும், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதாயின், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களை விட்டு செல்லாதிருத்தல், போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாதவர்களாக இருத்தல் வேண்டும் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தொழில் தேடுபவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும் இஸ்ரேல் விவசாய தொழில் வாய்ப்புகளை சரியாக முகாமைத்துவம் செய்வதாகவும், அதன்படி ஒரு வருடத்திற்கு சுமார் 10,000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெளிவு படுத்தினார்.

தகைமை இன்றி சென்ற நபர்கள் விவசாய நிலங்களில் தமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்ய முடியாமையினால் பணியிடங்களை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் தொழில் புரிவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தால் வேலை ஒப்பந்தத்தை மீறுவதுடன் அது சட்ட விரோதமானது என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்

அரசாங்கம் இதை செய்யவே செய்யாது!

0

அரிசிக்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் எவ்வித தயார்படுத்தல்களும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர், வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

அண்ணளவாக இரண்டு வாரங்களுக்குள் சிவப்பு அரிசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், பெரும்போகத்தில் கிடைக்கப்பெறும் அறுவடையுடன் சிவப்பு அரிசிக்கான அறுவடை ஏழு இலட்சம் மெற்ரிக் தொன் அளவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 

“எவ்வளவுதான் வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அந்த அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தயார் இல்லை. அரிசியில் பிரச்சினை காணப்படுவது சிவப்பு அரிசியில் தான். எனவே சிவப்பு அரிசி பிரச்சினை தீர்விற்கு இந்தப் போகத்தில் விவசாயம் செய்து அதனை அறுவடை செய்யும் வரை காத்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வாரங்களுக்குள் இந்த சிவப்பு அரிசிப் பிரச்சினை முற்றாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்”.

நாட்டரசிக்கான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டதைப் போலவே, இந்த பிரச்சினைக்கும் முறையான தீர்வு ஒன்றை வழங்கி உள்ளதாகவும், இதன் போது சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி  நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட  முயற்சித்தால் அதற்கு எதிராக பாவனையாளர்கள் அதிகார சபை மற்றும் அதனுடன் இணைந்து தலையிட்டு நெல் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்” அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

பலாங்கொடை நகரில் சுற்றுலா வலயம்!

0

பலாங்கொடை நகரில் சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயம்

பலாங்கொடை நகரின் மத்தியில் அமைந்துள்ள அதிக மதிப்புள்ள இரண்டு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பை சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பிகா ஜானகி ராஜரத்ன தெரிpவித்துள்ளார்.

அந்த நிலப்பரப்பு உள்ளடங்கிய பிரதேச கண்காணிப்பு விஜயத்தின்போnது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பலாங்கொடை தொரவல கங்கையை அண்மித்து மிகவும் ரம்மியமாக அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில், உணவு, சுகாதார வசதிகள், வாகன தரிப்பிட வசதிகள், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரத்திணபுரி மாவட்ட ஊடகப்பிரிவு

நாகவில்லு பாடசாலையில் 9 மாணவர்கள் சித்தி!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 9 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

தமது மாணவர்களை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தயார்படுத்தி சித்திபெறவைத்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும், அதிபருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல வரிய மாணவர்களும் திறமை சித்தி பெற்றுள்ளதுடன், இதற்காக அயராது பாடுபட்ட பெற்றோர்களின் அற்பணிப்பையும் முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ் வியந்து பாராட்டியுள்ளார்.

மேலும் குறித்த பாடசாலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் விஞ்ஞான பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பல மாணவர்கள் குறித்த பிரிவில் கல்வி கற்று வரும் நிலையில், ஊரின் தனவந்தர்கள் சிலரின் அனுசரணையில் விஞ்ஞான பிரிவு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தின் மூத்த தலைவர் மறைந்தார்!

0

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டதால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா தனது உறவுமுறை ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பிரவேசம்…

மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

பாராளுமன்றில் சாதித்துக்காட்டிய ஹக்கீம்!

0

விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறை, அரச அதிகாரிகளின் போக்கு உட்பட கொரோனா தொற்றைக் காரணங்காட்டி முடக்கப்பட்டு அநீதி செய்யப்பட்ட பிரதேச மக்களுக்காக என, பல தடவைகள் கடந்த அரசாங்கத்திடமும் தற்போதைய அரசாங்கத்திடமும் பாராளுமன்றத்தில் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பல கேள்விகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் தொடுத்திருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறானதொரு மோசமான சூழ்நிலை எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படாமல் இருக்கவும் தற்போது இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவும் தொடராக ரவூப் ஹக்கீம் போராடி வருகிறார்.

அந்த வகையில், பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டு வர முயற்சித்திருந்தார். குறித்த பிரேரணை விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாது (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற செயற்பாடுகளில் மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹக்கீம் அவர்களால் கொண்டு வரப்படும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனஞ்செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மீது விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA,JP) – ஓட்டமாவடி.

இணையவுள்ள பலமான புதிய கூட்டணி!

0

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு எம்.பிக்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் (27) கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர் சர்வ ஜன பலய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்றார்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது, மேலும் இந்த பிரதிநிதிகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் விவாதங்களை நடத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.