Monday, November 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 167

கல்பிட்டியில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் பொருட்கள்!

0

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் டிங்கி மூலம் கொண்டு செல்லப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சுமார் இரண்டாயிரத்து முப்பத்தேழு (2137) ஹேக் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தின் கடற்படையினர், கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) பயணிப்பதை அவதானித்து ஆய்வு செய்தனர்.

அங்கு, குறித்த டிங்கியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட பதினைந்து (15) பைகளில் அடைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட (07 செ.மீ.க்கும் குறைவான சுற்றளவு) சுமார் இரண்டாயிரத்து நூற்று முப்பத்தேழு (2137) கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் (01) மேற்படி டிங்கியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட ஒரு (15) தோள்பட்டை பையில் அடைக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட (சுற்றளவு 07 செ.மீ.க்கும் குறைவான) இரண்டாயிரத்து நூற்று முப்பத்தேழு (2137) கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்பிட்டி மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், ஹக் சங்குகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் மழைவீழ்ச்சி!

0

இன்றுலிருந்து (ஜனவரி 18ஆம் திகதி) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாடு திரும்பும் ஜனாதிபதி-இறுதி சந்திப்பு யாருடன்?

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (17) இரவு நாடு திரும்புகிறார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வேங் சியூஹூயிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

அதன் பின்னர், சீனாவின் சிச்சுவான், வெங்டூவில் உள்ள டெங்பேங் மின்சாரக் கூட்டுத்தாபனத்திற்கு (Dongfang Electric Corporation) ஜனாதிபதி விஜயம் செய்தார்.

சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , அடிமட்ட நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியை நிரூபிக்கும் முன்மாதிரி கிராமமான சென் கி மாதிரி கிராமம் மற்றும் தேசிய விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் விவசாய நிலையத்திற்கும் விஜயம் செய்தார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

காசா-இஸ்ரேல் போர் நிறுத்தத்தில் எழுந்த சிக்கல்!

0

காஸாவில் போரை நிறுத்துவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு நடுவே, காஸாவில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 72 போ் உயிரிழந்தனா்.

முன்னதாக, கத்தாரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு வாய்மொழியாக ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை வரவேற்றன. ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் அமலுக்கு வரும் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதிக் கட்டத்தில் பிரச்னை எழுந்ததாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் அலுவலக தரப்பு கூறுகையில்,

‘மேலும் சில பிரச்னைகளுக்கு தீா்வுகாணப்பட வேண்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பு சில விஷயங்களைக் கைவிட வேண்டும். அதுவரை அமைச்சரவை கூடி போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இஸ்ரேல் தரப்பு ஹமாஸிடம் எதிா்பாா்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து விரிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஹமாஸ் அமைப்பைச் சோ்ந்த மூத்த அதிகாரி இஸாத் அல்-ரிஷாக் இது தொடா்பாக கூறுகையில், ‘இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தவா்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது’ என்றாா்.

ஹமாஸ் அமைப்பினா் பிடித்துச் சென்றவா்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் பிரதமா் நெதன்யாகுவுக்கு உள்ளது. அதே நேரத்தில், ஹமாஸ் அமைப்புடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும், இஸ்ரேல் அரசு முதலில் ஹமாஸின் ஆயுதம், தாக்குதல் திறனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது பிரதமா் நெதன்யாகுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் போர் நிறுத்தத்திற்கு குந்தகமாக அமைந்துள்ளது.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதாக காஸாவில் பாலஸ்தீனா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேல் வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 72 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இது அமைதிக்கான எதிர்பார்ப்பை முற்றிலும் இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் நாசகார செயல் என்றும், இவர்களால் ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படாது என்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புகையிரத திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

0

புகையிரத ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான புகையிரத திணைக்கள அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புகையிரத நிலையத்திற்குள் நுழையும் போதும், புகையிரதத்தில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் போதும், பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, 2025.01.01 ஆம் திகதி முதல், முன்பதிவு செய்யப்பட்ட ஆசன பயணச் சீட்டுக்கான பணத்தை மீளளிப்பு செய்யக் கோரும் போது, பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்ட தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உறுதி செய்ய, பயணியால் தொடர்புடைய தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதியானது புகையிரத நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்படுவது கட்டயமானது என்றும் இவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தால் குறைந்த உயிரிழப்புக்கள்!

0

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக பொலிஸார் முன்னெடுத்துள்ள வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள் ‘ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போக்குவரத்து விபத்துகளால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவித்தார்.

இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் என்றும், வீதி ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் வீதி விபத்துகளால் தினமும் சுமார் 9 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 2 ஆகக் குறைந்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

மேலும், வீதி விபத்துகளால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக ஆவதாகவும், யுத்தத்தின் போது நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு வாகன விபத்துகளும் பதிவாகவில்லை என்றும், இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

0

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பாலியல் சேட்டை செய்த பா.ஊழியர்கள்!

0

பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய கடந்த தினம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இன்றைய மன்னார் துப்பாக்கி சூடு- வெளியான திரில் சம்பவம்!

0

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்தனர்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று காலை 9.20 மணியளவில் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 63 வயதான சப்ரயன் அருள் மற்றும் 42 வயதான செல்வகுமார் ஜூட் என்பவர்களே உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையிலான தலைக்கவசத்தை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார், உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

முதலீடு செய்ய அழைக்கப்பட்ட நிறுவனங்கள் இவைதான்!

0

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc),சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம் ( China Harbour Engineering Company Ltd) , சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட் (China Communications Construction Company Ltd),சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation-SINOPEC Group), மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம்(China Civil Engineering Construction Corporation),சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் (China Energy International Group Company Ltd),குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம்( The Guangzhou Public Transport Group) உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதர் மஜிந்த ஜெயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு