Wednesday, September 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 169

ஐ.பி.எல். வரலாற்றில் யஷஸ்வி ஜய்ஸ்வால் சாதனை

0

கொல்கத்தா, ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் 50 ஓட்டங்களை பூர்த்தி செய்த ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால், ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைச் சதத்தைப் பெற்று சாதனை நிலைநாட்டினார்.

அப்போட்டியில் 41 பந்துகள் மீதம் இருக்க, ராஜஸ்தான் றோயல்ஸ் மிக இலகுவாக 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜய்ஸ்வாலின் சாதனைமிகு முதல் 50 ஓட்டங்களில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கின.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்துகளில் அரைச் சதம் குவித்த கே.எல். ராகுல், பெட் கமின்ஸ் ஆகியோரின் அதிவேக இணை சாதனையை ஜய்ஸ்வால் முறியடித்தார்.

சிறு பிராயத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கும் பொருட்டு மும்பைக்கு சென்று பசி, பட்டினியுடன் ஒரு கூடாரத்தில் வாழ்ந்து சிறுக சிறுக கிரிக்கெட்டில் முன்னேறிய ஜய்ஸ்வால், கொல்கத்தா அணித் தலைவர் நிட்டிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 2007இல் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ணத்தில் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் குவித்த 50 ஓட்ட உலக சாதனையை ஜய்ஸ்வால் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை சமப்படுத்த ஒரு பந்தினால் அவர் தவறினார்.

21 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான ஜய்ஸ்வால் இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தை 2 ஓட்டங்களால் பெறத் தவறினார். நிகர ஓட்ட வேகத்தை குறியாகக் கொண்டு மறு பக்கத்தில் அணித் தலைவர் சஞ்சு செம்சன் சிக்ஸ்கள் மூலம் ஓட்டங்களைக் குவித்ததால் சதம் குவிக்கும் வாய்ப்பு ஜய்ஸ்வாலுக்கு கிடைக்கவில்லை.

அவர் 94 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வெற்றிக்கு 3 ஓட்டங்களே தேவைப்பட்டது. ஆனால், வெற்றி ஓட்டங்களை பவுண்டறி மூலம் பெற்றதால் ஜய்ஸ்வால் 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 47 பந்துகளில் பெறப்பட்ட அந்த ஓட்டங்களில் 12 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன.

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஜொஸ் பட்லர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஜய்ஸ்வாலும் சஞ்சு செம்சனும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 69 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

சஞ்சு செம்சன் 29 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

“நான் எப்போதும் சிறப்பாக தயார்ப்படுத்திக்கொண்டு விளையாடுவேன். எனது அடிகளை கச்சிதமாக செயற்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். சாதகமான முடிவு வரும் என்பதை அறிந்திருந்தேன். போட்டியை வெற்றியுடன் முடிக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ராஜஸ்தானின் நிகர ஓட்ட வேகத்தை மாத்திரமே நான் சிந்தித்தேன். எனது சதத்தை அல்ல” என போட்டி முடிவில் ஜய்ஸ்வால் கூறினார்.

அவர் கூறியது போல் இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் சிறந்த நிகர ஓட்ட வேக அடிப்படையில் ராஜஸ்தான் றோயல்ஸ் 3ஆம் இடத்தை அடைந்துள்ளது.

முன்னதாக அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் முதல் 6 பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்ற போதிலும், இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

வெங்கடேஷ் ஐயர் 57 ஓட்டங்களையும், நிட்டிஷ் ராணா 22 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணையில்

0
கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் முன்னிலையாக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதையடுத்து, இரவு முழுவதும் இரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்.ஏ.பி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவரை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால்மா விலை குறைப்பு!

0
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் எனவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக, சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

0

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 308.66 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 322.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 310.90 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 324.80 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அத்துடன், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட்ஸ், சுவிஸ் ப்ரேங்க் உள்ளிட்ட நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் இன்றைய தினம் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

No description available.

1200 புத்தளம் மாணவர்களுக்கு இலவச மூக்குக்கு கண்ணாடி

0

புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 1200 பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட புத்தளம் பிரதேச செயலகம்  மற்றும் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 44 பாடசலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் முதல் கட்டமாக 1200 மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட்டு, அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16.05.2023 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இரண்டாம் கட்டமாக வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளில் கல்வி கற்கும் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட உள்ளத்துடன், அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் என புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் தலைமை அதிகாரி திரு. சுரேஷ் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு இது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மோதல்களால் 8 பேர் பலி

0

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த மோதல்களால், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான், லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்  290 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சுமார் 1900 பேர் கைது செய்யப்பட்டுள்னர்;.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் லாகூர் இல்லமும் பிரிஐ கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரிஐ கட்சியின் உபதலைவர் பவாத் சௌத்தி, செயலாளர் நாயகம் அசாத் உமர் ஆகியோரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்ஸ்எப்பில் மோசடி அழைப்புகள்!

0
“வட்ஸ்எப் மெசேஞ்சர்” தளத்தை மீண்டும் குறி வைத்து மோசடியாளர்கள் பயனர்களின் தரவுகளை களவாடுவதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

மோசடியாளர்கள் ‘+84, +62, +60, +234’ மற்றும் பல நாடுகளின் இலக்கங்களில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை மேற்கொண்டு பயனர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதிலிருந்து பயனர்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஊடக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் இதே போன்று மோசடிகளுக்கு வட்ஸ் எப் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த தளத்தின் மூலம் பயனர்களை தொடர்பு கொள்வது எளிது என்பதாகும்.

அதன் ஊடாக தங்கள் கைவரிசையை மோசடியாளர்கள் இலகுவாக காண்பிக்க முடியும்.

இந்த நிலையில் மாதந்தோறும் சுமார் 2 பில்லியன் செயற்படு பயனர்களை கொண்டுள்ள வட்ஸ் எப் தள பயனர்கள் மீண்டும் மோசடி அழைப்புகளை பெற்று வருகின்றனர்.

இப்போதைக்கு மலேசியா, வியட்நாம், நைஜீரியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் இலக்கங்களில் இருந்து இந்த அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அழைப்புகள் ஏன் வருகின்றன என்பது தெரியவில்லை. சிலருக்கு வேலைவாயப்பு சார்ந்த செய்திகளும் வருகின்றன. அதனால் பயனர்கள் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

0
சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து  வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெற்றோர் மூலமாக களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

33 இலட்சம் பேருக்கு நலன்புரிக் கொடுப்பனவு

0

நாட்டிலுள்ள 33 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஜூலை 1 முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய மிக வறியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பயளானிகளுக்கு எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு 15 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும்,  பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும்72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சி

0

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர், சந்தை வட்டிவீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பணவீக்கமானது இவ்வாண்டின் பின்னரைப்பகுதியில் தாம் ஏற்கனவே எதிர்வுகூறிய மட்டத்தை அடையுமெனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது வங்கிக்கட்டமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், பொதுமக்களின் வைப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.