Monday, November 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 169

பேஸ்புக் ஊழியர்களுக்கு ஆப்படித்த Ai

இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை (ஏஐ) பணியில் சேர்க்க பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. வேலைச் சந்தையில் ஏஐ-யின் தாக்கம், அதன் இன்றியமையாமை சிந்திக்கத்தக்கதே. அந்த வகையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

பலஸ்தீனில் போர் நிறுத்தம்!

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தத்துக்கான இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் இன்று (ஜன.14) தெரிவித்துள்ளனர்.

போர்நிறுத்தத்துக்கான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இனி வரும் நாள்களில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரமாரியாக கொல்லப்பட்ட 40 விவசாயிகள்!

0

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், போக்கோ ஹராம் அமைப்பு 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் அந்த அமைப்பினர், அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியரை கடத்துவதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இங்கு, போர்னோ மாகாணத்தில் உள்ள கிராமத்தில் நேற்று புகுந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள், கண்ணில் படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், போர்னோ டம்பா சமூகத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அந்த மாகாண கவர்னர் பாபாகானா உமாரா சுளும் உறுதிப்படுத்தினார்.

குறித்த பகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடிக்க ஆயுதப் படைகளால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பை மீறி அவர்கள் செயற்பட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 35,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுதாப செய்தி!

0

புத்தளம் ,மறைந்த மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் மறக்க முடியாத ஆளுமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலானநல்லிணக்கத்திற்கு அதிக பங்களிப்புச் செய்த மறக்க முடியாத ஆளுமையென அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புத்தளம் காஸிமிய்யா அரபிக் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா முன்னாள் தலைவரும் , நாடறிந்த மூத்த இஸ்லாமிய சன்மார்க்க அறிஞர்களில் ஒருவருமான ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் இவ்வுலகை விட்டுப் பிரிந்த செய்தியறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன் .

நாட்டில் ஏராளமான உலமாக்களை உருவாக்கிய புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சங்கைக்குரிய மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் அவர்களின் அருமைப் புதல்வர் என்ற வகையில், அன்னார் விட்டுச் சென்ற மகத்தான பணியை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொட்டுத் தொடர்ந்த மறைந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸரத்,முக்கியமான ஏனைய விடயங்களைப் போலவே, முஸ்லிம்களின் சமூக, சமயப் பின்னணியுடனான கல்வி மேம்பாட்டிலும் அதிக அக்கறை செலுத்திவந்திருக்கின்றார்.

அவரது மறைவு புத்தளம் மாவட்டத்து மக்களுக்கு மட்டுமல்லாது, முழு நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்.

சமய ரீதியாகவும், சமூக ரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் அவ்வப்போது தலை தூக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகி, அனுபவம் வாய்ந்த ஏனைய உலமாக்களையும்,அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசியலில் ஈடுபட்டுவரும் எங்களையும் தொடர்பு கொண்டு,உயரிய இஸ்லாத்தின் வழிநின்று அல் குர்ஆன்,அல் ஹதீஸ் முதலான மூலாதாரங்களை மையப்படுத்தி மஷூராவின் அடிப்படையில் அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் காண்பதில் அவர் பெருமளவு பங்களிப்புச் செய்திருக்கின்றார் ; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நிலவுவதற்கு அவர் அயராது பாடுபட்டிருக்கின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை அருள்வானாக.அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும்,புத்தளம் மக்களுக்கும் தனிப்பட்ட முறையிலும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன ஜனாதிபதி!

0

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய  ஒரு  திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச்  செல்லும் ‘உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய  ஒரு  திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்க முடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சார வாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில் உருவாகியுள்ள புதிய உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும், “அழகான வாழ்க்கை” என்ற நம்பிக்கையை நம் இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்லும்  வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல்   முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை  இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான  கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.

நாட்டிற்கும்   மக்களுக்கும் பல நல்ல விடயங்களை  நிறைவேற்ற உறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள்,  அந்த வாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காத துணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும்  நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும் பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும் மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பசுவுடன் உறவு வைக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

0

இந்த உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது பெண்கள் மட்டுமின்றி விலங்குகள் மீதான வன்முறையும் கூட அதிகரித்துவிட்டது.

குறிப்பாக விலங்குகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பசுவிடம் ஒருவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்துள்ளது.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் தான் இது நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பண்ணையில் இருந்து போலீாருக்கு அழைப்பு வந்துள்ளது.

பண்ணையில் வேலை செய்து வந்த நபர் பசுக்கள் உள்ள இடத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவர்களும், போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த தொழிலாளி வேலை செய்து வந்த பண்ணையில் இருந்த மாட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார்.

அப்போது அந்த பசு உதைத்ததில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். மாடு உதைத்ததில் மாரடைப்பு ஏற்பட்டு, 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர். பசுவிடம் அத்துமீற முயன்ற அந்த நபருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0

ஜப்பானின் கியூஷுவில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (இ.எம்.எஸ்.சி)தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 37 கி.மீ., (23 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக இ.எம்.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜப்பான் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் கட்டிடங்கள் குலுங்கும் காட்சியைக் காணமுடிகிறது.

ஜப்பானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, இது தென்மேற்கு தீவுகளான கியூஷு மற்றும் ஷிகோகுவை உலுக்கியது.

அதிகாரிகள் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர், ஆனால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

நாடு திரும்பிய இலங்கை அணி-கவலையில் ஜயசூரிய!

0

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த இலங்கை அணி இன்று (13) காலை தாயகம் திரும்பியது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, போட்டித் தொடரில் தோல்வியடைந்தமை குறித்து தாம் வருந்துவதாக தெரிவித்தார்.

மேலும், போட்டித்தொடரின் போது இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்றும், தவறுகளை சரிசெய்து எதிர்கால போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

“ரி20 தொடரை இழந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஒரு போட்டியை மட்டுமல்ல, இரண்டு போட்டிகளையும் நாங்கள் எளிதாக வென்றிருக்கலாம். போட்டிகளில் தோல்வியடைந்ததில் அணியும் மிகவும் வருத்ததுடன் உள்ளது என நான் நினைக்கிறேன்.

ஒருநாள் தொடரில், கடந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம். முதல் இரண்டு போட்டிகளில், எமது துடுப்பாட்ட வீரர்கள் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பிரகாசிக்க வில்லை. 4 அல்லது 5 விக்கெட்டுகள் விழும்போது அது கடினம்.

மூன்றாவது போட்டியில், அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்து போட்டியிட்டனர். இந்தத் தவறுகள் தொடர அனுமதிக்க முடியாது. நீங்கள் அதை முடிந்தவரை குறைத்து, நாட்டை விட்டு வெளியே செல்லும் அதை சரிசெய்ய வேண்டும்.

பெத்துமின் காலில் ஏற்பட்ட காயம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளன.  உள்ள வீரர்கள் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.” என்றார்.

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலி!

0

லாஸ் ஏஞ்சலசில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. காற்றுத்தீ பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ‘வரும் நாட்களில் நிலைமை மோசமடையும். மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காற்று அதி வேகமாக இருப்பதால் தீப்பிழம்புகள் விரைவில் பரவுகின்றன. இதனால் தீயை அணைக்கும் பணியை கடினமாக உள்ளது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 23,700 ஏக்கர் (9,500 ஹெக்டேர்) எரிந்துவிட்டது. மேலும் 11 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.மிகவும் தீவிரமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணியில், மோப்ப நாய்கள் உதவியுடன் நடந்து வருகிறது.

வீடுகளில் இருந்து திருட தீயணைப்பு வீரராக உடையணிந்த ஒரு திருடன் உட்பட, கொள்ளையர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் நகரம் மீண்டும் கட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும்புகைமூட்டமாக பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.

மீற்கப்பட்ட மாணவி. வெளியான அதிர்ச்சி தகவல்!

0

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேவேளை கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், 

“நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன” என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை குறித்த மாணவி கடத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.

ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்வி கற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளையே கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமண விவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.