Monday, November 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 170

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ குறித்த திடுக்கிடும் தகவல்!

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என எச்சரித்துள்ள வனத்துறை அதிகாரிகள், மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை தீப்பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.

பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நான்கு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் வணிக கட்டடங்கள், 30 ஆயிரம் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இதுவரை, 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடிகர், நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன. இதேபோல், காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் ஈட்டன் மற்றும் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ இன்னும் சில பகுதிகளுக்கு பரவக்கூடும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 22,600 ஏக்கர் பகுதி எரிந்த நிலையில், 11 சதவீதம் மட்டுமே அணைக்கப்பட்டு உள்ளது. ஈட்டன் மற்றும் அல்டெண்டா பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் எரிந்தது. 15 சதவீதம் பகுதிகளில் மட்டுமே தீ அணைக்கப்பட்டு உள்ளது.

வரும் காலங்களில் பலத்த காற்றானது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாக அமையும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இந்த காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும்புகைமூட்டமாக பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.

பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்த ரிஷாட் எம்.பி!

0

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச். நந்தசேன மற்றும் டியுடர் குணசேகர ஆகியோர் தொடர்பில், இன்று இந்த விவாதம் மும்மொழியப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்கள்.

குறிப்பாக, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவர்களுடன் நீண்ட காலம் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அவர் ஒரு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, இந்த நாட்டுக்கு நிறைய நல்ல பணிகளை செய்த ஒருவர். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத்து துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை செய்தவர். அவருடைய காலத்திலேதான், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, வடக்கு, தெற்குக்கான ரயில் பாதை, யாழ்ப்பாணம், கொழும்பு ரயில் பாதை மற்றும் மன்னார் ரயில் பாதை ஆகியவற்றின் புனரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று, பல இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார். அவர் நேர்மையான, பண்பான ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். களுத்துறை மாவட்டத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, வெல்லக்கூடிய ஒருவராக இருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷவை அந்தக் கட்சி முன்னிறுத்தியபோது, அந்தக் கட்சியிலேயே இருந்துகொண்டு, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக இருந்தவர் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டும், அவரை எதிர்த்துப் பேசியவர். “கோட்டா இந்த நாட்டுக்கு தகுதியானவர் அல்ல, ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட பணியாற்றாதவரிடத்திலே, ஜனாதிபதி பதவியை எவ்வாறு ஒப்படைக்கப் போகின்றீர்கள்?” என்று, தைரியமாக பேசிய ஒருவர்தான் குமார வெல்கம அவர்கள். அவர் எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுகின்ற, பக்குவமுள்ள ஒரு அரசியல்வாதி.

அதுபோன்று, “அரகல” சமயத்தில், ஒரு சில அநியாயக்காரர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி, கஷ்டமான நிலைக்கு ஆளாக்கினர். எனினும், அவர் யாரையும் கடிந்துகொள்ளாமல், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய பணிகளை முன்னெடுத்து வந்தார்.

குமார வெல்கம அவர்களுடைய இழப்பு, இந்த நாட்டுக்கு குறிப்பாக, களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது கட்சி சார்பாக, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று, எச். நந்தசேன அவர்கள், நான் திருமணம் முடித்துள்ள மதவாச்சிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். வட மத்திய மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, பதில் முதலமைச்சராக இருந்து, அந்த மாகாணத்துக்கு நிறைய சேவைகளைச் செய்தவர்.

பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறைதான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எனினும், அந்தக் காலப்பகுதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக, மதவாச்சிய தொகுதிக்கு பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவருடைய இழப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். இத்தருணத்தில், அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனுராதபுர மாவட்டத்தின் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை, கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், டியுடர் குணசேகர அவர்கள் 1977இல், கம்பஹ மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர், போலாந்து நாட்டின் தூதுவராக இருந்து பணியாற்றியவர். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய காலத்தில், ஒரு அரசியல்வாதியாக இருந்து அந்த மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக, பல தியாகங்களை செய்த ஒருவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் எனது கட்சி சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி” என்று குறிப்பிட்டார்.

திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்!

0

நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை மற்றும் மருத்துவ அமைப்பின் இறுதி இலக்காக குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரே ஹோமியோபதி மருத்துவமனையான வெலிசறை ஹோமியோபதி மருத்துவமனையின் கண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

வெலிசர அரச ஹோமியோபதி மருத்துவமனையானது குழந்தைகள் மற்றும் பெண்களின் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக்கோளாறுகள், தோல்நோய்கள், வயிற்றுநோய்கள், நரம்பியல் நோய்கள், நாள்பட்ட தலைவலி, நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு நிலைகள், மூட்டு நோய்களுக்கு தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் நோய்களிலிருந்து விடுபடவும், தடுக்கவும் எளிதான மற்றும் செலவு குறைந்த சிகிச்சை முறையாக ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்துவதற்காக, பல செயல்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலானது, ஹோமியோபதிக்கான ஒரே மருத்துவ அமைப்பாகும். மேலும் இது மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களின் பதிவு, ஹோமியோபதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், மருந்துகளின் உற்பத்தி, இறக்குமதி, களஞ்சியபடுத்தல், விற்பனை மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களை கண்காணிக்கும் பொறிமுறையையும் மேற்கொள்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான வரலாற்றைக்கொண்ட ஒரு மருத்துவமுறையானது மற்றும் மேற்கத்திய மருத்துவத்தைத் தவிர உலகில் மிகவும் பிரபலமான மருத்துவமுறையான ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையின் தற்போதைய நிலைகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இலங்கையில் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சேவைகளின் எதிர்கால இலக்குகள், ஹோமியோபதி மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர்களுக்கான சிகிச்சைபிரிவு, சிகிச்சை முறைகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பக்கவிளைவுகள் ஏதுமின்றி நோய்களை குணப்படுத்தும் திறன்கொண்ட இந்த ஹோமியோபதி மருத்துவசிகிச்சை முறையை இலங்கையில் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் கிளினிக்குகளுக்கு போதிய மருந்து கையிருப்பு வழங்குதல், ஆய்வக சேவைகளை நிறுவுதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல், வெளி நோயாளர் பிரிவில் உள் நோயாளர் பிரிவை 50 படுக்கைகள்கொண்ட பிரிவாக தரம் உயர்த்துதல், துணை மருத்துவ சேவைகள், மருத்துவம் ஆய்வக சேவை, எக்ஸ்ரே மற்றும் பிசியோதெரபி சேவைகள் மற்றும் ஆலோசனை பிரிவுகளை நிறுவுதல், போதனா மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் போன்றவை கவனத்தில் எடுத்து கலந்துரையாட்பட்டது.

ஹோமியோபதி மருத்துவ சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை நிறுவுதல், நாட்டில் ஹோமியோபதி மருந்துகளை உற்பத்தி செய்தல், ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஹோமியோபதி வைத்தியசாலைகளை நிறுவுதல் என்பன எதிர்கால இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டன.
எதிர்காலத்தில், ஹோமியோபதி மருத்துவப்படிப்பை மேம்படுத்த இலங்கையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை இந்தியாவில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர்  கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில், ஹோமியோபதி மருத்துவப்படிப்பை மேம்படுத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இன்று பல இடங்களில் இடியுடன் மழை!

0

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரசவித்த பெண்ணுக்கு ரூ.11.42 கோடி இழப்பீடு!

0

மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு, இரண்டு மருத்துவர்கள் ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க மலேசியா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019 ஜனவரி 9 மலேசியாவை சேர்ந்த புனிதா மோகன், 36, தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு மலேசியா உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் கூறியதாவது:

புனிதாவிற்கு ஜனவரி 9ம் தேதி டாக்டர் ரவியின் மேற்பார்வையில் பிரசவம் நடந்தது. அவர் வலியால் அழத் தொடங்கியபோது நிலைமை மோசமாக மாறியது. அவரது தாயார் பிரசவ அறைக்கு விரைந்தார். புனிதாவுக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதைக் கண்டார்.

மருத்துவர்களில் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்த புனிதா மோகனை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு, சென்று விட்டார்.இதன் விளைவாக பிரசவத்திற்குப் பிறகு அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்ததாகவும் கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் டாக்டர் ரவி, டாக்டர் சண்முகம் மற்றும் பணியில் இருந்த மூன்று செவிலியர்களின் மருத்துவ அலட்சியத்தால் புனிதா இறந்தார். பிரசவத்திற்குப் பிந்தைய வழக்குகளைக் கையாள்வதில் பல வருட அனுபவம் பெற்ற பிறகும், அவர்கள் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செவிலியர்களிடம் விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

புனிதாவின் நிலைமை மோசமானபோது, செவிலியர்கள், டாக்டர்களை தேடினர். அப்போது அவர்களை கண்டறிய முடிவில்லை. அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

கர்ப்பத்திற்குப் பிறகு அதிகப்படியான ரத்த இழப்பு என்பது அறியப்பட்ட பிரச்சினை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தவிர்க்க முடியும். ஆகையால் மருத்துவர்கள் இருவரும் பிரசவித்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

எரிந்து சாம்பலாகும் அமெரிக்கா. இதுவரை 11 பேர் பலி!

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீக்கிரையாகி சாம்பலாக மாறிவருகிறது.

நீரேற்று நிலையங்களிலிருந்து தண்ணீர் எடுத்து பீய்ச்சி அடிக்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் தண்ணீரின்றி வறண்டுபோயிருக்கிறது. விமானம் மூலமும் காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

ஏழை முதல் கோடீஸ்வரர்கள் என அனைவரிடமும் இருந்து அனைத்தையும் பறித்துச் சென்றிருக்கிறது காட்டுத் தீ. வீடு என்றோ, பள்ளி என்றோ, வங்கி என்றோ பார்க்கவில்லை. அதற்கு அனைவரும் அனைத்தும் சமம் என்பது போல சாம்பலாக்கிச் சென்றிருக்கிறது.

காட்டுத் தீக்கு காரணம்?

தெற்கு கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும். இதனால் காடுகளிலும் மரங்கள் செழித்து இருக்கும், காற்றிலும் தேவையான ஈரப்பதம் இருப்பதால் காட்டுத் தீ பரவுவதற்கான அபாயம் குறைவாக இரக்கும்.

ஆனால், இந்த ஆண்டு குறைந்த மழைப்பொழிவும், பலமான காற்றும், காடுகளில் காய்ந்த மரங்களும், காட்டுத் தீ வேகமாகப் பரவக் காரணிகளாக அமைந்துவிட்டாகக் கூறப்படுகிறது.

தெற்கு கலிஃபோர்னியாவில் பற்றிய தீ மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காவு வாங்கிக்கொண்டு, மேலும் தனது ஜூவாலையால் காட்டுப் பகுதிகளையும் குடியிருப்புகளையும் சம்பலாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.

திடீரென இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்!

0

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​ஜனவரி 26 ஆம் திகதி இந்தியாவின் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்குபற்ற பிரதி அமைச்சருக்கு கேப்டன் முகுந்தன் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால, மற்றும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இரு நாட்டு மக்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இந்தியாவின் தொடர்ச்சியான இராணுவ உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை பிரதி அமைச்சர் பாராட்டி, இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் படத்தில் நடிக்க மாட்டேன் – அஜித்

0

நடிகர் அஜித் குமார் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றுள்ளார்.

அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான ஒக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

0

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்,ரோஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதீர்கள்

புதிய ஆண்டில் ஆரம்பமாகியிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.

இந் நாட்டில் சட்டமும்,ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதனூடாக சரியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதோடு,அதற்குச் சாதகமான சூழ்நிலையையும் உருவாகும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

நமது நாட்டில் இந்த சட்டமும்,ஒழுங்கு
ம் பாதுகாக்கப்படுகின்றதா என்று நாங்கள் சிந்திக்கவேண்டும் எனக் கூறிய ரவூப் ஹக்கீம் ,பத்திரிகை செய்தியையும் சுட்டிக்காட்டினார். அதாவது, “சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்களை ஜனாதிபதி
நீதியமைச்சரோடு சந்தித்த ஒரு செய்தியைக் காணக் கிடைத்தது. அவர்களது சந்திப்பில் இந்த வழக்குகள் தாமதித்தல் உள்ளிட்ட பல விடயங்களை கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகின்றது” என்றார்.

ஜனாதிபதி , ஊழல் ஒழிப்பு தினத்தில் ஆற்றிய உரை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதென்றால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள்ள பல சவால்களை முன்வைத்தார், அதன் பலனாகத்தான் இந்த கலந்துரையாடல் நடந்திருக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மேலும் , சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. அதாவது பொலிஸ் திணைக்களத்தில் பல குறைகள் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அவர்கள் சரியாக கோப்புக்களை அனுப்புவதில்லை என்றும், விசாரணைகள் சரியாக முடிக்கப்படாமல் கோப்புக்கள் அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்கள் அறிக்கை ஒன்றையும் வழங்கவிருப்பதோடு, தற்போதைய வழக்குகள் பற்றிய விபரத்தையும் வழங்கவிருக்கிறார்கள்.

இன்று ஜனவரி 8 ஆம் திகதி, இதே போன்றதொரு தினத்தில் 2009 ஆம் ஆண்டில் எமது நாட்டில் இருந்த ஒரு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்திய ரவூப் ஹக்கீம், தானும்,ரவி கருணாநாயக்கவும் கனத்தை மயானத்திற்குச் சென்று அன்னாரை நினைவு கூர்ந்ததை குறிப்பிட்டு, குறித்த படுகொலை இன்னும் ஒரு இரகசிய கொலையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். லசந்த விக்கிரமதுங்க “மிக்” விமான கொடுக்கல்,வாங்கல் பற்றிய தகவல்களை, சர்ச்சைக்குரிய விடயங்களை பத்திரிகைகளில் எழுதி வந்தார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். அது பற்றி ஒரு வழக்கும் இருக்கின்றது. அவருக்கு எதிராகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அவரது வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரித்தால் அவரது படுகொலை தொடர்பான விபரங்களை கண்டறியக்கூடியதாகவிருக்கும்,அந்த குற்றவாளிகள் யார் என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க முடியும்.

நான்கு ஜனாதிபதிகள் வந்து சென்றுவிட்டார்கள் ஆனால் இந்த வழக்கில் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்துவருவதை சுட்டிக்காட்டினார்.

இது பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் மௌனம் சாதிப்பதாகவும்,பொலிஸ் திணைக்களம் என்ன கூறுகிறது என்று பார்த்தால் அதுவும் மௌனமாக இருப்பதாக தெரிவித்தார்.

இவ்விடயங்களில் கடந்த காலங்களில் நேர்மையாக செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், குறித்த விடயங்கள் தொடர்பான எல்லா விடயங்களும் அறிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமுள்ள தகவல்களை உள்ளடக்கி இறுதியாக ஒரு முடிவுக்கு வருவது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகவுள்ளது என்பதை பல விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

அதுமாத்திரமில்லை கீத் நோயர், உபாலி தென்னகோன் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அதில் கீத் நோயர்க்கு நடந்த கொடுமைகள் தொடர்பாகவும் ரவூப் ஹக்கீம் நினைவு படுத்தியதோடு,உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். மேலும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பற்றி இந்த அரசாங்கம் கவனத்தில் வெள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம், ஒடுக்கு முறையை இந்த அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என்பதை பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள் காட்டி உரையாற்றினார். அதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் பேராதனை பல்கலைக்கழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும்,பல்கலைக்கழகங்களில் இப்படியான ஒரு விடயம் இடம்பெறுமாக இருந்தால் அது மிக பாரதூரமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்தின் கல்விசார் சுதந்திரம் ஒரு நாட்டின் முக்கிய விடயமாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கான பொதுமக்களுக்கான உரிமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மியன்மாரில் இருந்து இலங்கை வந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாகவும் சபைக்கு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததோடு, இவ் விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தையும் கண்டித்தார்.

மனித உரிமை ஆணைக்குழு எங்கும் சென்று தங்களுக்கு தேவையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இருந்தும், அவர்களை ரோஹிங்கிய அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளத்திற்கு சென்று சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கிய சிறுபான்மையினர்கள் இலங்கைக்குள் வந்திருப்பது இது முதற்தடவை அல்ல கடந்த காலங்களிலும் வருகை தந்ததை நினைவுபடுத்திய ரவூப் ஹக்கீம், ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷ், மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்வதை குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் ரோஹிங்கிய அகதிகளை மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனக் கூறிய கருத்தை விமர்சித்த ரவூப் ஹக்கீம், “மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று நீங்கள் இவ்வாறு கூற என்ன துணிவு உங்களுக்குள்ளது” என வினா எழுப்பி, 1980 களில் வன்முறைகள் நடைபெற்றபோது இத்தாலி,லெபனான்,பிரான்ஸ்,ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி(JVP) அங்கத்தவர்கள் சென்றார்கள் என்பதை எடுத்துக்காட்டி இன்றைய அரசாங்கத்திற்கு ரோஹிங்கிய மக்களின் நெருக்கடியான நிலையை உணர்த்தினார்.

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாக மியன்மார் அதிகாரிகளோடு அரசாங்கம் பேசுவதை கண்டித்து ,அந்த மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் அதிகாரிகள் சொல்வதை கேட்டு இங்கு வந்து கூறுவதற்கு அமைச்சர்கள் நியமிக்கவில்லை. கிளிப்பிள்ளை போல் பேசவேண்டாம் எனவும் கண்டித்தார்,மேலும், விடயங்களை ஆராய்ந்து பார்த்து தீர்மானங்களை எடுங்கள் என வலியுறுத்தினார். மேலும் ரோஹிங்ய அகதிகளை திரும்பவும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் எடுக்கும் முடிவானது சர்வதேச ரீதியாக நாட்டிற்கு இருக்கும் நற்பெயரை கெடுத்துக்கொள்ளும் செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சமவாயங்களை ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.

மேலும், மனித கடத்தல்காரர்கள் என அவர்களை கூறுவதை தவிர்க்குமாறும், திரும்பவும் அவர்களை மியன்மாருக்கு அனுப்பும் எண்ணத்தை இந்த அரசாங்கம் கைவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதோடு,பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் தனது அக்கறையையும்,கரிசனையையும் தனது உரையினூடாக ரவூப் ஹக்கீம் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) -ஓட்டமாவடி.

சொகுசு பேருந்துக்களுக்கு மாத்திரம் அனுமதி!

0

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார்  6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்தப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.