Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 172

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

0

ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார். 

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார். 

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார். 

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார் செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி 

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். 

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார் 

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார். 

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது. 

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது. 

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

0

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். 

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும். 

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. 

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.

முதல்முறை பரந்த ஸ்ரீலங்கன் விமானம்!

0

ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட எயார் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப் பயணத்தை முன்னெடுத்திருந்தது. 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1.48 மணிக்கு விமானம் புறப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பு தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

இந்த விமானம் இன்று மாலே சர்வதேச விமான நிலையத்திலும் தரையிறங்கியுள்ளது. 

கடந்த 4ஆம் திகதி பிரான்ஸிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச சம்பிரதாயங்களை முடித்த பின்னர், விமானம் அதன் முதல் விமான பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலே நோக்கி புறப்பட்டது.

49 வது தேசிய விளையாட்டு விழா காலியில்!

0

காலி மாவட்ட ஊடகப் பிரிவு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 2025 – 49 வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடாத்தப்படுவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (18) காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, 2025ஆம் ஆண்டின் 49வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடைபெறுவது, காலிக்குக் கிடைத்த விசேட சந்தர்ப்பமாக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.

70 வருடங்களாக திருத்தப்படாத வீதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வீதியை புனரமைக்கும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.

பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் 21.06.2025 தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ் வீதியானது 35 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர தார் வீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கலத்தினர், கண்டாவலைப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாலாவியில் இடம்பெற்ற கோர விபத்து!

0

புத்தளம், பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். 

பாலாவி பகுதியைச் சேர்ந்த அபூதாலிப் பாத்திமா ரிஸானா (வயது 40) எனும் ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தில் குறித்த பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். 

உயிழந்த பெண்ணின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார். 

இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத்தில் சாதிக்கவுள்ள கிளிநொச்சி மாணவர்கள்!

சர்வதேச ரோல் பந்து விளையாட்டில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் கென்யா பயணமாக உள்ளனர்.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ள சர்வதேச ரோல் பந்து போட்டியில் இலங்கை அணியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு இன்று காலை கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச ரோல் பந்து போட்டி கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் 22ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து வெளிநாடு செல்லவுள்ள நிலையில் அவர்கள் பாடசாலை சமூகத்தினால் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய அமைச்சர் இராஜினாமா!

0

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

இந்த ராஜினாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தற்போதைய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார். 

அதன்படி, பிரதி அமைச்சரின் இராஜினாமாவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதற்கிடையில், நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பிரதேச சபை சுயேட்சை குழு1 வசம்!

0

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் ஆட்சியை புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரதிகவின் தலைமையிலான சுயேச்சை குழு1 பிடித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற புத்தளம் பிரதேச சபையின் கன்னி அமர்விலே சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

தவிசாளர் பதவிக்கு ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அகில மற்றும் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக சஞ்சீவ ஆகியோர் போட்டியிட்டனர்.

இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக 13 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அகில 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக 3 வாக்குகளினால் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக சஞ்சீவ புத்தளம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை உப தவிசாளருக்காக பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் லரீப் காசிம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி 13 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் லரீப் காசிம் 11 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக 2 வாக்குகளினால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

புகையிரத நிலைய அதிபர் – தரம் III ஆட்சேர்ப்பு!

0

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவியில் காணப்படும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 2025.07.14 ஆம் திகதியன்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 30 வயதுக்கு மேற்படாத இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. (அதன்படி, 2007.07.14 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ மற்றும் 1995.07.14 ஆம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.)

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.07.14 ஆகும். இப்பரீட்சை 2025 செப்டம்பர் மாதம் நடத்தப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,
நிறுவன பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவு,
த.பெ. 1503, கொழும்பு.

பதவியின் கடமைப் பொறுப்புக்கள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் கீழ் உள்ள புகையிரத நிலையங்களின் பணிகளுடன் தொடர்புடைய வகையில், புகையிரதப் பொது முகாமையாளரின் பிரதிநிதியாகச் செயற்பட்டு, புகையிரதப் பொது முகாமையாளரால் குறிப்பாக ஒதுக்கப்படும் ஆளணி நிர்வாகம், நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள், இயக்கப் பணிகள், பயணச்சீட்டு மற்றும் கணக்குப் பணிகள் உள்ளிட்ட பல்பணித் தன்மை வாய்ந்த கடமைகளையும் மேற்பார்வைப் பணிகளையும் நிறைவேற்றும் உத்தியோகத்தர் குழாம் ஆகும்.

சம்பள அளவுத்திட்டம் (Salary Scale)

புகையிரத நிலைய அதிபர் தரம் III இற்குரிய சம்பள அளவுத்திட்டம் (RA.P.C. 10/2025):

ரூ. 57,810 – 5×890 – 5×1030 – 5×1300 – 10×1340 – ரூ. 93,810/=

கல்வித் தகைமைகள் (Educational Qualifications)

I. க.பொ.த. (சாதாரண தரம்)

சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றுடன் மேலும் இரண்டு பாடங்களில் C சித்திகளுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்;

மற்றும் (AND)

II. க.பொ.த. (உயர் தரம்)

க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் (பொதுப் பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்)

பரீட்சை நடைபெறும் நகரங்கள்

விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் நகரத்திற்குரிய இலக்கத்தைக் குறிப்பிடவும்.

நகரம்நகர இலக்கம்
கொழும்பு01
கம்பஹா02
களுத்துறை03
கண்டி04
மாத்தளை05
நுவரெலியா06
காலி07
மாத்தறை08
ஹம்பாந்தோட்டை09
யாழ்ப்பாணம்10
மன்னார்11
வவுனியா12
முல்லைத்தீவு13
கிளிநொச்சி14
மட்டக்களப்பு15
அம்பாறை16
திருகோணமலை17
குருநாகல்18
புத்தளம்19
அனுராதபுரம்20
பொலன்னறுவை21
பதுளை22
மொனராகலை23
இரத்தினபுரி24
கேகாலை25