சீனாவில் (China) பரவி வரும் ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று தற்போது முதன் முறையாக இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இன்று இந்தியாவில் சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு முதலில் வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்றொரு 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் எச்.எம்.பி.வி., பாதிப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரகளது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ல உயிர்களை காவு கொண்ட கோவிட் தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது.
தற்போது, பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் அதிகரிப்பைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால், உண்மையான உண்மைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
காய்ச்சல், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) போன்ற பொதுவான வைரஸ்களால் இந்த வழக்குகள் ஏற்படுகின்றன என்பதை சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். முக்கியமாக, புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த நிலைமை எதிர்பாராதது அல்ல என்றும், மற்ற நாடுகளில் காணப்பட்ட முறைகளைப் போன்றது என்றும் WHO கூறியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட தற்போதைய அலை தீவிரமானது என்றும் மருத்துவமனைகள் நோயாளிகளின் சுமையை திறம்பட நிர்வகித்து வருவதாகவும் சீன அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
இலங்கையில், இந்த நிலை குறித்து கவலை கொள்ள எந்த காரணமும் இல்லை. எங்கள் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர் மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகளாவிய சுகாதார முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முக்கிய குறிப்புக்கள்:-
சீனாவில் சுவாச நோய்களின் அதிகரிப்பு அறியப்பட்ட வைரஸ்கள் காரணமாகும்.
புதிய அல்லது அசாதாரண நோய்க்கிருமிகள் அடையாளம் காணப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலை நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை மற்றும் இந்த கட்டத்தில் இலங்கையில் பொது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்.
இதை யார் செய்தார்கள், எந்த நோக்கத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கையில் கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள சில பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.
“இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது” என்று ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த நோயாளிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன.
சீனாவில் பரவி வரும் இந்த புதிய வைரஸ் மக்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக கவலைகள் எழுந்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரொனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
சீனாவின் அரசுசார் செய்தித் தளமான குளோபல் டைம்ஸ் கூற்றுப்படி, வட சீனா, பெய்ஜிங், தென்மேற்கு நகரமான சோங்கிங் மற்றும் தென் சீனாவிலுள்ள குவாங்டாங் மாகாணம் போன்ற பகுதிகளில் இந்த HMPV வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், குளிர்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சீனாவின் சுகாதார நிறுவனங்கள் புதிதாக ஒரு நோய் கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டன.
இந்த கண்காணிப்பு முறை குறித்துப் பேசிய சீனாவின் தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் தலைவர் லி ஜென்லாங், இதன் மூலம் அறியப்படாத காரணங்களால் ஏற்படும் நிமோனியா பாதிப்புகள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.
சீனாவில் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மிகவும் அதிகரித்து இருப்பதாக சீன அரசு அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கைப்படி, ரைனோவைரஸ் மற்றும் இந்த HMPV வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவின் வடக்குப் பகுதியில்தான் பெரும்பாலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எங்கிருந்து உருவாகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கு முன்பு, சீனாவில் பரவி வந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பிற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் குறித்து இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
“மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று இந்தோனீசியாவின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வித்யாவதி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் என்று இந்தோனீசியாவின் செய்தி நிறுவனமான அந்தாரா தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளில் தோன்றியது என்றும், அதன் பிறகு இந்த வைரஸ் சூழலுக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னைத் தகவமைத்துக் கொண்டதாகவும் இப்போது இந்த வைரஸ் பறவைகளைப் பாதிக்காது என்றும் சயின்ஸ் டைரக்ட் என்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த 2001ஆம் ஆண்டு மனிதர்கள் மத்தியில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதுதான் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் என்று கண்டறியப்பட்டது” என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிட்டுள்ளது.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
இந்த வைரஸ் பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம்.
விவசாயத் துறையுடன் தொடர்புடைய அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, விவசாயிகள் உட்பட விவசாயத் துறை தொழில்முனைவோருக்கு உயரிய சேவை வழங்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.
விசேடமாக அரசாங்கத்துடன் தொடர்புடைய, கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றதனால், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற விவசாயத் துறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்..
விவசாயிகளைப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். அதற்காக அரசாங்கம் எப்போதும் பாடுபடும். அத்துடன், இலங்கையின் விவசாயத் துறை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
காலத்துக்குக் காலம் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தாலும் இந்நாட்டு மக்கள் பட்டினியில் வாடாமல் இருக்க விவசாயிகள் பாடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், குறைபாடுகள் காணப்பட்டாலும் விவசாயத்துறை அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், விவசாயத் துறையுடன் தொடர்புடைய இந்த வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும், நெல் சந்தைப்படுத்தல் சபை போன்ற நிறுவனங்கள் மீண்டும் செயற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வு
பயன்பாடின்றி சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த பொருளாதார மத்திய நிலையத்தை இங்கு ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து, மதவாச்சி பிரதேச செயலாளர் சந்திரிகா மலேவியாராச்சி அமைச்சருக்கு விளக்கமளித்தார்
இதில் மதவாச்சி பாரளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவத்தன்ன அவர்களும் கலந்துகொண்டார்.
வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து இந்தியா சென்று தஞ்சமடைந்தார்.
அதன்பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார்.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியை கவிழ்த்தனர். அதன்பிறகு மாணவர்கள் தான் புதிய ஆட்சியை அமைப்பதாக கூறினர். ஆனால் அனுபவசாலி வேண்டும் என்ற நிலையில் முகமது யூனுஷ் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால் அவரது அரசில் இடம்பெற்றுள்ள போராட்டக்குழுவினரின் தலையாய நோக்கம் என்பது வங்கதேசத்தின் அரசியலமைப்பை மாற்றம் செய்வதுதான். அதாவது வங்கதேசத்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு அதற்கு பதில் Revolutinary government அமைப்பதாகும். இதனை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது யூனுஷ்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதோடு கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் முகமது யூனுஷ் இதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து மீண்டும் 15 நாட்கள் அதாவது ஜனவரி 15ம் தேதிக்குள் தற்போதைய அரசியலமைப்பை நீக்கி புதிய விதிகளுடன் ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளனர்.
ஆனால் முகமது யூனுஷ் அதனை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் வெடிக்கலாம். அதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா போல் முகமது யூனுஷ் நாட்டில் இருந்து விரட்டப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசு பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு 20ஆயிரம் டாலர் சுமார் ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஜில் பைடன் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றதிலேயே பிரதமர் மோடி வழங்கியது தான் அதிக விலை உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தூதர் 4510 டாலர் ( ரூ.3.8லட்சம்) மதிப்புள்ள பிரேஸ்லெட், ப்ரூச், புகைப்பட ஆல்பத்தை அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வழங்கியுள்ளார்.
அதிபர் ஜோ பைடனும் விலைமதிப்பு மிக்க பல்வேறு பரிசு பொருட்களை வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றுள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபரின் யூன் சுக் இயோலிடம் இருந்து 7100 டாலர் மதிப்புள்ள நினைவு புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமரிடம் இருந்து 3,495டாலர் மதிப்புள்ள மங்கோலிய வீரர்களின் சிலை, வெள்ளிக் கிண்ணம் உட்பட பல்வேறு விலையுயர்ந்த பரிசு பொருட்களை அதிபர் பெற்றுள்ளார்.
சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்பு
சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இன்று முதல் (06) திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.