Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 174

திரிபோஷா நிறுவனத்திற்கு புதிய தலைவர்!

0

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் திரு. அமல் நிரோஷன அத்தநாயக்க நேற்று (16) காலை கந்தானையில் உள்ள இலங்கை திரிபோஷா லிமிடெட் வளாகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் நடவடிக்கை எடுத்தார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவத்தைக் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்க, கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் வடிவமைப்பாளரான திரு. அத்தநாயக்க, தெற்காசியாவிலும் இலங்கையிலும் பல சர்வதேச கண்காட்சிகளை இயக்கி நிர்வகித்துள்ளார். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவதில் அவருக்கு விரிவான அனுபவமும் உள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, திரிபோஷா லிமிடெட்டின் செயல்பாட்டு மேலாளர் சம்பிகா சல்காடு, தர உத்தரவாத மேலாளர் அஜித் திசாநாயக்க, மனிதவளம் மற்றும் சட்ட மேலாளர் தனுஜா அல்விஸ், தரக் கட்டுப்பாட்டாளர் நெலம் மெண்டிஸ், உற்பத்தி மேலாளர் தசநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எரிபொருள் பெறுவதற்காக மக்கள நீண்ட வரிசை!

0

குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர். 

இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் கூறுகையில், “வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார். 

இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர். 

இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் கூறுகையில், “வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார். 

இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2,433 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய 78,725 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் 76,292 பேர் தங்கள் அறிக்கைகளை உரிய தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இருப்பினும், 2,433 பேர் உரிய காலக்கெடுவிற்குள் இவற்றை சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து, அவர்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் மீது வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

மறுக்கப்பட்டதால் வெளியேறிய எதிர்க்கட்சிகள்!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று (17) நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்..

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்

புத்தளம் மாநகர சபை NPP வசம்!

0

புத்தளம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளரான முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நுஸ்கி நிசார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் வாழ் பொதுமக்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் மாநகர சபைக்கான முதலாவது கன்னி அமர்வு மாநகர சபையின் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள மாநகர சபையின் சபா மண்டபத்தில், இன்று (16) இடம்பெற்றது.

சபைக்கு தெரிவாகியுள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 01 உறுப்பினர் மற்றும் பந்து சின்னம் சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் என மொத்தமாக 19 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.

பிரதி மேயருக்கு விஜித பிரசன்ன மற்றும் நுஸ்கி நிசார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்களிப்பில் நுஸ்கி நிசார் 10 வாக்குகளையும், விஜித பிரசன்ன 6 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதுடன் நுஸ்கி நிசார் வெற்றி பெற்று பிரதி மேயராக தெரிவானார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வாய்க்காலிள் மிதந்து வந்த சடலம்!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இனந்தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபர் கல் மடோ நகர் சம்பு குளம் பகுதியை பதிவிடமாகவும், ஆறுமுகம் வீதி வட்டக் கட்சியை தற்காலிக வதிவிடமாக கொண்ட தனபால சிங்கம் குமாரதாஸ் (54) என்ற குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு இனம் காணப்பட்டுள்ளது.

இறந்தவரின் சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியாகியது பெயர்ப்பட்டியல்!

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சொத்துக்களில் காணி, வாகனங்கள், வீடுகள், வங்கிக் கணக்குகள், கடைகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன. 

குறித்த பட்டியலை கீழே காணலாம்

தமிழ் மக்களுக்காக எதிரும் புதிரும் இணைந்தது!

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்லாண்டு கால பகைமையை மறந்து ஜீ ஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா இணைந்தே தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினர். தமிழ் மக்களின் நலன் கருதி எதிரும் புதிருமாக இருந்த தலைவர்கள் காலத்தின் தேவையை உணர்ந்து ஒன்றாகியே இக்கட்சியை உருவாக்கினர்.

அந்த பெரியார்களின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் செயலாளர் நாயகமாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு இருந்தது. தந்தை செல்வா தனது மரணத்துக்கு முன்னர் என்னுடன் பயணித்தார்.

அவருக்கு விழுந்த மாலையிலிருந்து பூக்களை பிடுங்கி எனது தலையில் எறிந்து ஆசீர்வதித்ததை நான் நன்கு உணருகின்றேன். அந்த பயணத்தின் பின்னர் ஒரு சில நாட்களில் அவர் உயிர் பிரந்தார். அவரது ஆசீர்வாதம் மட்டுமல்ல, ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்களின் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்தது.

அந்த பெரியார்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இணைந்து ஒற்றுமையாக செயற்படுமாறே நான் அழைக்கின்றேன். மக்களின் இன்றைய அரசியல் நிலைமையில் ஒருமைப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களை பெற முடியும்.

இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வையே நான் வலியுறுத்தி வருகின்றேன். சிங்கள, இஸ்லாமிய மக்களும் அதனை வரவேற்றனர். அந்த தீர்வுத் திட்டத்திற்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வெற்றி பெற முடியும். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது. அதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்று பதவிக்காக அலைகின்றனர். பதவிகளுக்காக கூட்டுச் சேருகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. பதிவிக்காக அலைந்தது இல்லை. அவ்வாறு பதவிக்கு அலைந்திருந்தால் இன்று 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் இருந்திருப்பேன்.

இன்றைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட முன்வர வேணடும் என அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர் யார்?

0

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. 

இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. 

அந்தவகையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாகப் போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. 

இதனடிப்படையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் வவுனியா மாநகரசபையின் புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். 

இதனையடுத்து பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் 11 வாக்குகளையும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். 

இதனையடுத்து ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினரான பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

கொழும்பு மாநகரசபை பறிபோனது இவ்வாறுதான்!

0

இன்று காலை கொழும்புக்கு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பின் போது, ​​மேல் மாகாண உள்ளூராட்சித் துறை ஆணையர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தோல்வியடைந்த மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் குற்றம் சாட்டினார்.

ஆணையர் சாரங்கிகா ஜெயசுந்தர ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, ரகசிய வாக்கெடுப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆளும் கட்சிக்கு ஒரு நன்மையை அளித்ததாக சாரூக் குற்றம் சுமத்தியுள்ளார்.

“ஆளும் கட்சியின் செல்வாக்கின் கீழ், அவர்கள் ரகசிய வாக்கெடுப்பைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், ரகசிய அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஆணையர் ஆரம்பத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்,” என்று சாரூக் கூறினார்.

“வாக்களிக்கும் அந்த முறையும் பெரும்பான்மையான கவுன்சிலர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த முடிவு ரகசிய வாக்கெடுப்பு மூலமாகவும் எடுக்கப்படும் என்று ஆணையர் சர்வாதிகார முறையில் அறிவித்தார். இதன் விளைவாக, நாங்கள் ரகசிய வாக்கெடுப்பைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி பெலவத்தையில் உள்ள தங்கள் கட்சி தலைமையகத்தில் பல நாட்கள் இந்த விஷயத்தில் விவாதித்ததால், ரகசிய வாக்கெடுப்பு குறித்த முடிவு கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் வ்ரே காலி பால்தாசரை வாழ்த்திய ஜாரூக், நகரத்திற்கு சாதகமாக இருக்கும் திட்டங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று கூறினார். “எதிர்காலத்தில் மேயரின் நடத்தையை நாங்கள் கவனமாகக் கவனிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.