Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 175

கொழும்பு மாநகரசபை பறிபோனது இவ்வாறுதான்!

0

இன்று காலை கொழும்புக்கு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பின் போது, ​​மேல் மாகாண உள்ளூராட்சித் துறை ஆணையர் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தோல்வியடைந்த மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் குற்றம் சாட்டினார்.

ஆணையர் சாரங்கிகா ஜெயசுந்தர ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, ரகசிய வாக்கெடுப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆளும் கட்சிக்கு ஒரு நன்மையை அளித்ததாக சாரூக் குற்றம் சுமத்தியுள்ளார்.

“ஆளும் கட்சியின் செல்வாக்கின் கீழ், அவர்கள் ரகசிய வாக்கெடுப்பைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், ரகசிய அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஆணையர் ஆரம்பத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்,” என்று சாரூக் கூறினார்.

“வாக்களிக்கும் அந்த முறையும் பெரும்பான்மையான கவுன்சிலர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த முடிவு ரகசிய வாக்கெடுப்பு மூலமாகவும் எடுக்கப்படும் என்று ஆணையர் சர்வாதிகார முறையில் அறிவித்தார். இதன் விளைவாக, நாங்கள் ரகசிய வாக்கெடுப்பைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி பெலவத்தையில் உள்ள தங்கள் கட்சி தலைமையகத்தில் பல நாட்கள் இந்த விஷயத்தில் விவாதித்ததால், ரகசிய வாக்கெடுப்பு குறித்த முடிவு கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் வ்ரே காலி பால்தாசரை வாழ்த்திய ஜாரூக், நகரத்திற்கு சாதகமாக இருக்கும் திட்டங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று கூறினார். “எதிர்காலத்தில் மேயரின் நடத்தையை நாங்கள் கவனமாகக் கவனிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

SJB 6 பிரதேச சபை உறுப்பினர்கள் இடைநிறுத்தம்!

0

தேசிய மக்கள் சக்தி இன்று (16) மற்றுமொரு மாநகர சபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. 

அதன்படி, இரத்தினபுரி மாநகர சபையின் அதிகாரத்தையே இவ்வாறு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. 

இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ. கட்டுகம்பல 14 வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

எதிர்க்கட்சி மேயர் வேட்பாளர் 12 வாக்குகளை மட்டுமே பெற்றார். 

அதேபோல், தம்புள்ளை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைகளின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது. 

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் கட்சியின் டபிள்யூ.எம். திலகரத்ன இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் 15 வாக்குகளைப் பெற்றார். 

எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், அதில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் 6 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். 

கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் இன்று நியமிக்கப்பட்டார். 

இன்று காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 16 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் ஆசிக் 15 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தம்புள்ளை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்க செயல்படத் தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

01. ஹேரத் முதியன்சலே சுசில் ஹேரத் 
02. அதிகாரீனாயக முதியன்சேலாகே பெனபொடே கெதர அனில் இந்ரஜித் தசநாயக்க 
03. கரதகொல்லே வலவ்வே தனஞ்சய சம்பத் கரதகொல்ல 
04. அலுத் கெதர பிரியரஞ்சன குமார ரத்நாயக்க 
05. ஹேரத் முதியன்சேலாகே குசுமா குமாரி 
06. கிரிஷாந்தி தில்ருக்ஷி பிரேமரத்ன 

மேற்படி, நபர்களின் கட்சி உறுப்பினர் பதவி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒத்த கனவும் மண்ணா போச்சு!

0

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். 

இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது. 

அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கங்காரு கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15) கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிரின்சஸ் ரோஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 26 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

எலான் மஸ்க் செயலால் ஈரான் அதிர்ச்சி!

இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரானில் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்கின் இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 3வது நாளாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், தங்களின் முழு ராணுவ பலத்தின் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஈரான் அரசு குறித்து சமூக வலதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, அந்நாட்டில் இன்டர்நெட் சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் போது, மீண்டும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று ஈரான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானில் அரசின் தடையை மீறி இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமாக, தொழிலதிபர் எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சாட்டிலைட் மூலம் வழங்கப்படும் இந்த இன்டர்நெட் சேவையை அரசின் தடையை மீறி ஈரான் நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும். எலான் மஸ்க்கின் இந்த செயலால் ஈரான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

வவுனியா மாநகர சபை இவர்கள் வசம்!

0

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று (15) காலை இடம்பெற்றது. 

கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரநிதிகளுக்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

அந்த வகையில், வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசிய கூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், தமிழரசுக் கட்சிக்கு அடுத்த இரு வருடங்களுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக் கட்சிக்கும், உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சிக்கு தவிசாளர் பதவியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக் கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், முத்து முகமது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இஸ்ரேல் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் ஹைஃபா மற்றும் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வீசியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரான் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளை குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது. இது தெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் ஆலை தாக்கியுள்ளதுடன் “ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய” இடங்களை குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாகவும், 800 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 20 குழந்தைகள் அடங்குவர்.

“ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் காசாவிலும் உள்ள பாலஸ்தீனியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் தங்குமிடங்கள் இல்லை, அவசர சேவைகள் இல்லை. அவர்கள் துண்டிக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில் உள்ளனர், மேலும் பொருட்கள் தீர்ந்து போகின்றன. எனவே ஈரானிய மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமல்ல, இங்கு வேறு நிறைய ஆபத்து உள்ளதாக” ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காசாவில் உணவுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது.

மேலும் ஈரானின் இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் ஆதரவு நிறுவனங்களைச் சுற்றி தற்போது வசிக்கும் அனைத்து மக்களும் உடனடியாக இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது” என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனைவியை சுட்டுப்பொசுக்கிய கணவன்!

0

குடும்ப தகராறு காரணமாக கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். 

மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது நாட்டுக்கு பெரும் வெட்கக்கேடு!

0

காசா மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிக்கென கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்காதது, வெட்கக்கேடான விஷயம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ஒரு மொத்த நாட்டையும் நெதன்யாகு அழித்துக் கொண்டிருப்பதை, அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி, ஈரானை தாக்குவதையும் ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். நீதியைக் கோருவதற்கான வீரத்தை கொண்டிருப்பதுதான் உண்மையான தலைமை பண்பு என்றும் சீறியுள்ளார்.

உலகம் துண்டாடப்படும் காலத்தில், மனிதத்துக்கு குரல் கொடுத்து, நீதியின் பக்கம் தைரியத்துடன் நாம் நிற்க வேண்டும் என்றும் காசா மக்களுக்காக பிரியங்கா காந்தி குரல் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு!

பாகிஸ்தான் ஈரானுக்கு முழு ஆதரவையும் தெரிவித்ததுடன், தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பிறகு “இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஒற்றுமைக்கு” அழைப்பு விடுத்தது.

“நாங்கள் ஈரானுடன் நிற்கிறோம், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொரு சர்வதேச மன்றத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் தனது உரையின் போது கூறினார்.

இஸ்ரேல் ஈரான், ஏமன் மற்றும் பாலஸ்தீனத்தை குறிவைத்துள்ளது. முஸ்லிம் நாடுகள் இப்போது ஒன்றுபடவில்லை என்றால் அவை ஒவ்வொன்றும் ஒரே விதியை எதிர்கொள்ளும்.

அனைத்து முஸ்லிம் நாடுகளும் “இஸ்ரேலுடனான உறவுகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஒரு கூட்டு உத்தியை வகுக்க அவசர அமர்வைக் கூட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.