Monday, March 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 174

இலஞ்ச ஊழல் விசாரணைக்கு வந்த ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் சிக்கிய கஞ்சா!

0

இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 23 அன்று கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது,

இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 முதல் 25 வயதுக்குட்பட்ட தலைமன்னார் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டதுன், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஜனாதிபதி தெரிவித்த பளிச் பதில்!

அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

நேற்று (26-04-2025) கிளிநொச்சி விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனைத்து மக்களும் சமனான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது.

இந்தப் பகுதிகளில் முப்பது வருடமாக யுத்தம் இடம்பெற்றது, இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள், பல கிராமங்கள் இழக்கப்பட்டன, பலர் குழந்தைகளை இழந்தார்கள், தங்களுடைய உறவுகளை இழந்தார்கள், வீடுகளை சொத்துக்களை இழந்தார்கள்,

நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். கடந்த காலங்களிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக எடுத்திருக்கின்றார்கள். நாங்கள் இப்போது அந்த காணிகள் தொடர்பில் இராணுவ தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றோம். விடுவிக்க கூடிய அனைத்து இடங்களையும் மீண்டும் மக்களுக்காக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

அது மட்டுமல்ல பாரம்பரியமாக பயிர் செய்து வந்த நிலங்கள் கூகுள் வரைபடத்தின்படி வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் மக்களுடைய நிலங்கள் அவற்றை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ஆகவே இன்னும் சில பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. கொழும்பிலே மூடி இருந்த பாதைகளை திறந்து இருக்கின்றோம். குறிப்பாக அலரி மாளிகைக்கு முன்பாக இருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும்? அனைத்து பாதைகளையும் இந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலே நாங்கள் திறந்து விடுவோம்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மூடிய பாதைகளை திறந்து விட்டிருக்கின்றோம். நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க இருக்கின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு நிதிகளை விடுவிக்க இருக்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாகவில்லு வேட்பாளர் அதிரடியாக கைது!

0

உள்ளூராட்சிமன்ற தேர்தல், புத்தளம் பிரதேசபக்கான பொத்துவில்லு வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீத் இன்று புத்தளம் பொலிஸாரினால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

119 போலீஸ் அவரச பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீத் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

இன்றைய தேர்தல் பிரச்சாரங்களுக்காக வாகனத்தில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்தமையினால், மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தினார் என்ற அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே குறித்த வேட்பாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் வாகனங்களில் ஒலிபெருக்கியினை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது சட்டத்திற்கு முரணான நிலையிலேயே, குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட புத்தளம் போலீசார், மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த வேட்பாளர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெப்பநிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

0

பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (27) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்று (26) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளியாகியது உயர் தரப் பரீட்சை முடிவுகள்!

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. 

இந்த பரீட்சைக்கு மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பாடசாலை பரீட்சாத்திகளும் அடங்குவர்.

அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இதில் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 27,624 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

அதேநேரம் 456 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன், பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை மே மாதம் முதலாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

மில்கோ நிறுவனத்தின் 500 அவுட்லெட்கள்!

0

நாட்டு மக்களின் பால் தேவையை பூர்த்தி செயும் நோக்கிலும், புதிய உற்பத்திகள் பலவற்றை நுகரும் மக்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் 500 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி மில்கோ உற்பத்திக்கான 500 விற்பனை நிலையங்களை (அவுட்லெட்) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய திட்டத்திற்கு இணங்க முதல் 50 விற்பனை நிலையங்கள் மே மாதத்தில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி வாங்கி (RDB) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் போது புதிய தொழில் முயற்சியாளர்களுக்காக அவசியமான கடன் வசதிகளை வழங்குவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB) முன்வந்துள்ளது.

இன்று தேசிய துக்க தினம்!

0

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே  நடத்தவுள்ளார்.

இந் நிலையில் நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று (26) இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

கட்டுநாயக்கவில் அதிகாலையிலே துப்பாக்கி சூடு!

0

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உலக மலேரியா தினம் இன்று!

0

உலக மலேரியா தினம் இன்று (25) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மலேரியாவைத் தவிர்க்கவும்” என்ற தலைப்பில் மலேரியா கட்டுப்பாட்டு அணிவகுப்பு இன்று (25) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி கொழும்பில் உள்ள விஹாரமகாதேவி பூங்கா வரை சென்றது.

2025 ஆம் ஆண்டு உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, இலங்கையில் மலேரியா ஒழிப்பின் 12 ஆண்டுகால தொடர்ச்சியான நிறைவை நினைவுகூரும் வகையிலும், மலேரியா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைப்பயணம் நடத்தப்பட்டது.

இலங்கை மலேரியாவை வெற்றிகரமாக ஒழித்திருந்தாலும், மலேரியா பரவும் நாடுகளுக்குச் செல்லும் மக்கள் இன்னும் ஆபத்தில் உள்ளனர், மேலும் இந்த பேரணியின் முக்கிய நோக்கங்கள், அந்தப் பயணிகளுக்கு தடுப்பு சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் திரும்பியதும் பரிசோதனையின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.

இந்த அணிவகுப்பைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, கடந்த காலத்திலிருந்து இன்றுவரை மலேரியா பரவுவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அடக்கவும் சுகாதார அமைச்சகம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கினார். நோய் பரப்பும் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டும் மலேரியாவை ஒழிக்க முடியாது என்றும், ஒட்டுண்ணிகளை அழிப்பதும் மிக முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது மனித உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்கக்கூடும் என்றும், இதனால் இந்த இரண்டு முறைகளும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான படிகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட நோயாளிகளை இன்று அடையாளம் காண்பது ஒரு பயங்கரவாதியை அடையாளம் காண்பது போல கடினம் என்றும், மாற்றங்களுக்கு கவனம் செலுத்தி, அறிவியல் அறிவுடன் முன்கூட்டியே செயல்படுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும் செயலாளர் கூறினார். மலேரியா நோய் கண்டறியப்படாத நோயாளிகளிடமிருந்து பரவக்கூடும் என்பதால், இறக்குமதி செய்யப்படும் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று செயலாளர் மேலும் கூறினார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் இயக்குநர் டாக்டர் பிரசங்க சேரசிங்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொடிய தொற்றுநோயாக இருந்த மலேரியாவை முற்றிலுமாக ஒழித்த நாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கையை அறிவித்த போதிலும், 2016 ஆம் ஆண்டில், பல்வேறு பகுதிகளில் மலேரியா நோயாளிகள் அவ்வப்போது கண்டறியப்பட்டனர். மலேரியா தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பரவலாக உள்ளது மற்றும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நோயாகும். 2023 ஆம் ஆண்டில் நாட்டில் 62 மலேரியா வழக்குகள் கண்டறியப்பட்டன, மேலும் 2024 ஆம் ஆண்டில் 38 வழக்குகள் கண்டறியப்பட்டன.

இந்த நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு திரும்பியவர்கள். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 14 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், யாத்ரீகர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அடங்குவதாகவும் மலேரியா ஒழிப்பு பிரச்சாரம் கூறுகிறது. மலேரியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் சில சந்தர்ப்பங்களில், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.