Wednesday, September 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 181

பு/எருக்கலம்பிட்டி பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி-தலைவர்

எவ்வித தடையுமின்றி மாதா மாதம் சம்பளமும், பெருநாள் போனஸூம் வழங்கிய நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல்களில் பணிபுரியம் நமது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய உலமாக்கள் ,முஅத்தீன்கள், மற்றும் ஏனைய ஊழியர்கள்அனைவருக்கும் நமது ஊர் ஜமாஅத் உறுப்பினர்களின் அன்பான நிதி நன்கொடை மூலம் பெற்ற பணத்தொகை புனித ரமழான் நன்கொடையாக தாராளமாக- நியாயமான முறையில் இன்று அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசர் நிர்வாக சபைத் தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகருமான இப்ராஹீம் அன்சார் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒன்று௯டல், சமூக இடைவெளி பேணல் என அரசினதும், சுகாதார துறையினதும் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மஸ்ஜித்களும் கட்டுப்பாட்டுடன் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் உலமாக்களின் மாதாந்த ஊதியம் மற்றும் ஏனைய விஷேட கொடுப்பனவுகள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு பூர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அசாதாரண சூழ்நிலையில் மஸ்ஜித்களில் கடமைபுரியும் உலமாக்களுக்கும், முஅத்தின்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குவதில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் நெருக்கடி நிலைமை உறுவாகியுள்ள நிலையில் இன்றைய தினம் பெருநாள் விஷேட நன்கொடையாக 3 பள்ளிவாசல்களிலும் கடமை புரியும் உலமாக்கல், முஅத்தினகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு வழங்ப்பட்டமை மிகுந்த திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மஸ்ஜித்களில் கடமையாற்றும் அனைத்து உலமாக்களுக்கும், முஅத்தின் மற்றும் ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குமாறு வக்பு சபை தலைவரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அஷ்ரப் ( நளீமி) அவர்கள் கடந்த வருடமும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மஸ்ஜித்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த போதிலும் எமது புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆப் மஸ்ஜித் நிர்வாக சபையினர் , தாராளம் மனம் கொண்ட மஹல்லாவாசிகளின் பூரண ஒத்துழைப்புடன் தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் கடமைபுரியும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு உரிய மாதாந்த சம்பளம் மற்றும் பெருநாள் கொடுப்பனவு என்பனவற்றை எவ்வித குறையுமின்றி இம்முறையும் வழங்கியுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக பாடுபட்ட நிர்வாக சபையினருக்கும், மஹல்லாவாசிகளுக்கும், வெளி இடங்களைச்சேர்ந்த பரோபகாரிகளுக்கும் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் சார்பில் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லா நலவுகளையும் வழங்குவதுடன், வாழ்க்கையில் பரக்கத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் செய்வதாக பள்ளிவாசர் நிர்வாக சபைத் தலைவர் தெரிவித்தார்.

எமது எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினருடைய இந்த நடவடிக்கையானது புத்தளம் மாவட்டம் மாத்திரமின்றி, ஏனைய மாவட்டங்களில் உள்ள மஸ்ஜித் நிர்வாக சபையினருக்கும் ஒரு முன்னுதாரணமாகும் என ஊர் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தெரிவித்துள்ளமை ஓர் விஷேட அம்சமாகும்.

பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசலின் மக்களுக்கான விஷேட செய்தி

புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு இதுவரை இல்லாத பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் இம்முறை அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னால் உயர்ஸ்தானிகரும் புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் தலைவருமான இப்ராஹீம் அன்சார் தெரிவித்துள்ளார்.

எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ரமழான் மாதத்தின் மார்க்க கடமைகளை நிறைவுற்றுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாரான ஒரு காலப்பகுதியில் ரமழான் மாதத்தில் நன்மையை நாடி ஊரவர்கள் மற்றும் வெளியூர் தனவந்தர்களும் பேரீத்தம்பழங்களை எமது பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோ கிராமிற்கும் அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை எமது ஊர் மீதும் பள்ளிவாசல் மீதும் வைத்துள்ள அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக பள்ளிவாசல் தலைவர் இப்ராஹீம் அன்சார் தெரிவித்துதார்.

கிடைக்கப்பெற்ற அனைத்து பேரீத்தம்பழங்களையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இரவு பகல் பாராது நீதமான முறையில் மக்களுக்கு பகிர்ந்தளித்ததாகவும், குடும்பம் ஒன்றிற்கு சுமார் 3 கிலோ வரையான பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாடுபட்ட பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அன்பளிப்பு செய்த நல்லுள்ளங்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்களுக்கு நன்றி தெரிவிப்பதாகுவும் அவர் eNews1st ற்கு தெரிவித்தார்.

பெருந்தொகை பேரீத்தம்பழங்கள் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு!

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் மற்றும் நாகவில்லு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களால் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் இன்று 1.05.2021 அன்பளிப்பு செய்யப்பட்டது.

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் மேற்படி பேரீச்சம் பழங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சமார் 1400 கிலோ கிராம் பெறுமதியான பேரீச்சம் பழங்கள் இன்று 1.05.2021 பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத அளவு இம்முறை நோன்பு காலத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பெரும் தொகை பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 4 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பேரீச்சம் பழங்கள் கிடைக்கபெற்று அவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முதற்கட்டமாக 750 கிலோ பேரீச்சம் பழங்களும், அதனை தொடர்ந்து 900 கிலோ பேரீச்சம் பழங்களும், அதனை தொடர்ந்து 1100 கிலோ பேரீச்சம் பழங்களும், பரோபகாரிகளினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கையளிப்பு நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம் றிஜாஜ் மற்றும் நாகவில்லு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நாகவில்லு வைத்தியாசாலைக்கு கான் வசதி!

0

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமையப்பெற்றுள்ள வைத்தியாசாலையின் வடிகானுக்காக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 12.04.2021 இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாகவில்லு கிளையின் வேண்டுகோளுக்கிணங்க, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பிஸ்லியா பூட்டோ அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் குறித்த வடிகான் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மழை காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களை கருத்தில்கொண்டும், வைத்தியசாலைக்கு முன்பாக கானுக்குல் நீர் தேங்கி நிற்கும் நிலையை அவதானித்தும் மேற்படி முன்னெடுப்பு இடம்பெற்றுள்ளது.

65 மீட்டர் வரை நீலமுள்ள குறித்த வடிகான், சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், குறித்த வேளைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பிஸ்லியா பூட்டோ அவர்களுக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாகவில்லு கிளை நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை தலைவர் திரு. அஞ்சன, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பிஸ்லியா பூட்டோ, புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் உப தலைவர், செயலாளர் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டியில் எருக்கலம்பிட்டி FC அணி வெற்றி!

0

2021 ஆம் ஆண்டிற்கான புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டியின் 3வது போட்டியில் புத்தளம் 777 FC அணியை 3.0 என்ற கோள் கணக்கில் வீழ்த்தி எருக்கலம்பிட்டி FC அணி வெற்றி பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடரின் 3வது போட்டி புத்தளம் சாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் 04.04.2021 இடம்பெற்றது.

நாசர் இல்ஹாமின் தலைமையில் கலமிரங்கிய எருக்கலம்பிட்டி FC அணி ஆரம்பம் முதல் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தியிருந்ததுடன் ஆட்டத்தின் முதல் பாதியில் 2 கோல்களை அடித்து முன்னனி வகித்தது.

போட்டியின் இரண்டாம் பாதியின் இருதிக்கட்டத்தில் எருக்கலம்பிட்டி FC அணி சார்பாக 3வது கோல் அடிக்கப்பட்டதுடன் போட்டி 3.0 என்ற கோல் கணக்கில் நிறைவுபெற்றது.

இதனடிப்படையில் எருக்கலம்பிட்டி FC அணி புத்தளம் FA கிண்ண சுற்றுப் போட்டியில் முன்னிலை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்/எருக்கலம்பிட்டி பாடசாலையில் அடிக்கல் நாட்டு வைபவம்!

0

மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய நுலைவாயில் மற்றும் சுவர் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஜனாப் என்.எம். ஷாபி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை நுலைவாயில் உட்பட சுமார் 300 மீற்றர் வரையான சுவர் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

எருக்கலம்பிட்டி ஐடியல் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (72) அமைப்பின் பூரண அணுசரனையில் இடம்பெறும் இவ் வேளைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போது, அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவிருக்கும் குறித்த நுலைவாயில் மற்றும் சுவர் கட்டுமான பணியை பாடசாலையின் அதிபர் வெகுவாக பாராட்டியதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளில் பங்களிப்பு செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், எருக்கலம்பிட்டி ஐடியல் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் உட்பட ஏனைய நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நாகவில் பாடசாலை மைதானம் முழுமையாக செப்பன்!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானம் செப்பனிடும் வேளைத்திட்டம் இன்று 3.4.2021 இடம்பெற்றது.

எருக்கலம்பிட்டி எப்.சீ அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். றிஜாஜ் அவர்களின் ஏற்பாட்டில் மைதானம் முழுமையாக செப்பனிடப்பட்டது.

குன்றும் குழியுமாக காணப்பட்ட மேற்படி மைதானம் நாளைய தினம் இடம்பெறவுள்ள எருக்கலம்பிட்டி எப்.சீ மற்றும் புத்தளம் செவன் ஸ்டார் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிக்காக இன்று காலை தொடக்கம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த மைதானம் மழை காலங்கில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சுற்று மதில் இல்லாத காரணத்தினால் இரவு வேளைகளில் போதை பாவனை விடயங்கள் இடம்பெறுவதாகவும் வாலிபர்கள் விசனம் தெரிவித்தனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டியை மையப்படுத்திய எருக்கலம்பிட்டி எப்.சீ உதைப்பந்தாட்டக் கழகம், புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் விளையாடி வருவதுடன், லீக் போட்டிக்கு தெரிவாகிய முதலாவது சந்தர்ப்பததிலேயே இருதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தமை ஓர் விஷேட அம்சமாகும்.

எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்

0

மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தின் இரண்டாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று திங்கள் 29. 3. 2021 பாடசாலையில் நடைபெற்றது.

60 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக சுமார் 100 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் 3 வாக்களிப்பு நிலையங்களில் 300க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படயிருப்பதுடன் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 6.4.2021 செவ்வாய்க்கிழமை பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக உதவித் தேர்தல் ஆணையாளர் (வவுனியா, மன்னார்) அவர்களும்
மன்னார் கல்வி வலய அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாரான செயற்பாடுகள் மாணவர்களின் உதிர்கால தலைமைத்துவ பண்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சவால்களை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்குமென பாடாசலை அதிபர் ஜனாப் S. அஸ்மி அவர்கள் எமது eNews1st ற்கு தெரிவித்தார்.

இன்றைய இரண்டாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் வாக்களித்த எந்த ஒரு வாக்கும் செல்லுபடியற்ற வாக்காக பதியப்படாமையானது ஓர் விஷேட அம்சமாகும்.

பு/எருக்கலம்பிட்டி பாடசாலை பழைய மாணவர் பொதுக் கூட்டம்

0

பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்க பொதுக் கூட்டம் இன்று ஞாயிரு 21.03.2021 இரவு 7.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

பாடசாலை அதிபர் S.M. ஹுசைமத் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இப் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற உள்ளமை ஓர் முக்கிய விடயமாகும்.

இவ்வருடம் 25 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட இருக்கும் இப் பாடசாலை, புதிய நிர்வாக உறுப்பினர்களின் செயற்பாடுகள் பாடசாலையிலும் வெள்ளி விழா நிகழ்விலும் பாரிய பங்களிப்பை செய்யும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சுமூகமான முறையில் இடம்பெற உள்ள பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக தெரிவிற்கு அனைத்து பழைய மாணவர்களையும் வருகை தருமாறு பாடசாலை அதிபர் அவர்கள் வேண்டிக்கொள்கின்றார்கள்.

அசாதாரண ஒரு சூழலில் இடம்பெறும் இக்கூட்டத்தின் மூலம் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கல்வி வளர்ச்சி என்பன பெரிதும் எதிர்பார்க்கப்படும் விடயமாக அனைவராலும் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பு/எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயம் வெள்ளி விழா காணுகிறது

0

வட மாகாணத்தில்  மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி எனும்  கிராமத்தில்  3 பாடசாலைகளில் பயின்றுவந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வடபுலத்து மாணாக்கர் அனைவரினாலும் கண்ணெனப் போற்றி கருத்தனமாய் வளர்க்கப்பட்ட கல்விச்செல்வம் பறிக்கப்பட்டு இம்மாணவர் அனைவரும் தமது தாயக பூமியிலிருந்து துரத்தப்பட்டு, ‘வன் தரையில் வீழ் பளிங்குகளாய் சிதறிச் சின்னாபின்னமாக்கப்பட்டனர்’.

இந்து சமுத்திர ஆழ்கடல் பரப்புக் கூடாகவும், தரைவழியாகவும், தங்கள் குடும்பங்களுடன் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் மிகக்கூடுதலான மாணவர்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்தனர்.

ஏலவே, பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் விளங்கிய புத்தள மாவட்ட பாடசாலைகள் திடீரென அகதிகளான மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எனினும் பல பாடசாலைகளில் கல்வி கற்பதற்குறிய அனுமதி வழங்கப்பட்டன.

பல பாடசாலைகளில் சம வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் சில பாடசாலைகளில் இடவசதியின்மையால் மாலைநேர வகுப்புக்களே நடாத்தப்பட்டன. இம்மாலை நேரப்பாடசாலைகளால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பூரணமற்றதாகவும், மாணவர்களின் கல்வித்தரத்தை பூர்த்தி செய்ய முடியாததாகவும் அமைந்தன.

இத்தகைய பிற்புலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிதறி வாழ்ந்த சமூக, பாரம்பரிய விழுமியங்களை பேணுவதில் சவால்களை எதிர்கொண்டு திண்டாடிக்கொண்டிருந்த எருக்கலம்பிட்டி மக்களை ஒண்றினைத்து ஓரிடத்தில் குடியேற்றுவதன் மூலம் சமூக, கலாசார, பொருளாதார துறைகளில் குறிப்பாக கல்வித்துறையிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உயர்வு காணலாம், எனும் நோக்கில் எருக்கலம்பிட்டி மாண்புறு பெருமக்களால் (EDA) ‘எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கம்’ புத்தளம் எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக்கிராமம் உருவாக்கப்பட்டது. இப்புதிய கிராமத்தில் அமையப்பெற்றதே
பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயமாகும்.

மறைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அல்ஹாஜ் நூர்தீன் மசூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு, புனரமைப்பு, கப்பல்துறை, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அஷ்ஷஹீத் M.H.M. அஷ்ரப் அவர்களால் தற்காலிக ஓலைக்கொட்டிலில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ந் திகதி சம்பிரதாய பூர்வமாக இம் மகா வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இப்பாசாலையில் இயங்கிவரும் இடத்தில் நிரந்தரக் கட்டிடங்களுக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.

மாணவர்களினதும், பாடசாலையினதும் அலுவலக கோவைகள், உபகரணங்கள் ஒவ்வொரு நாளும் காவிச் செல்லப்பட்டன. இடநெருக்கடியை உணர்ந்து ஓலைக்கொட்டில்களுக்கு அண்மையிலுள்ள நலன் விரும்பிகள் தங்களது வீடுகளில் வகுப்புக்களை நடாத்த உதவி புரிந்தமையை நினைவு கூறுதல் பொருத்தமானது.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பத்துக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இத்தகைய சூழலில் முதன் முதலாக சந்தித்த க.பொ.த. (உயர்) தரப் பரீட்சையில் 32 மாணவர்களில் 29 மாணவர்கள் சித்தியடைந்தனர். இவர்களில் 28 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றனர். 1996 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. (சாதாரண) தரப் பரீட்சையிலும் 25 மாணவர்கள் சித்தி பெற்றனர்.

சிறந்த பரீட்சை பெறுபேறுகளுடன் மட்டுமன்றி புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் எமது கலைக்கூடம் மிளிர்ந்து வருகிறது. மாணவ மன்றங்கள் நடாத்தப்பட்டதுடன் தமிழ் ஆங்கில மொழித் தினப்போட்டிகளிலும், சமூகக் கல்வி, விஞ்ஞான, பொது அறிவு, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கடந்த பத்தாண்டுகளில் எம் கல்லூரி மாணவர்கள், கோட்ட, வலய, மாவட்ட, மாகாண மட்டங்களில் மட்டுமன்றி அகில இலங்கை ரீதியிலும் பங்கு கொண்டு முன்னணி இடங்களைப் பெற்று எமது கல்லூரியின் கீர்த்தியை தேசிய மட்டத்திற்கு உயர்த்தி உள்ளனர்.

விவசாய, சுற்றாடல், வர்த்தக கழகங்கள், முதலுதவி, வீதி ஒழுங்குச் சங்கங்கள், பாடசாலை இசைக்குழு போன்றவை உருவாக்கப்பட்டு மாணவர்ளின் திறன்கள் வளர்க்கப்படுகின்றன. கல்விச் சுற்றுலாக்கள், களப் பயணங்கள் என்பன தவணைக் கால பருவங்களில் மேற்கொள்ளப்படுவதுடன் விஷேட வகுப்புக்கள், இரவு நேர கற்றல்கள், பருவ கால கருத்தரங்குகள் என்பன மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுவதுடன்,
பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பு உருவாக்கப்பட்டு மாணவர் தம் கல்வி மேம்பாட்டுக்கு புத்தாக்கம் அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

எமது கலாசாலையின் பரீட்சை பெறுபேறுகளும், புறக்கிருத்திய செயற்பாடுகளும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றதைத் தொடர்ந்து புத்தளப் பகுதியின்  பல்வேறு இடங்களில் இருந்தும் மாணாக்கர்கள் இக் கல்லூரியில் கல்வி கற்பதற்காக படையெடுத்தனர். இடம்பெயர்ந்த ஆசிரியர்களும், உள்ளூர் ஆசிரியர்களும் விருப்புடன் கடமையாற்ற இடமாற்றம் பெற்று வந்தனர். இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த எமதூர் மக்கள் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்தின் துரித வளர்ச்சியைக் கண்டு தங்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவு படுத்தியமையினால் மாணவர் தொகை 400 இலிருந்து 1450 ற்கும் கூடுதலாக அதிகரிக்கத் தொடங்கியது.

இத்தகைய சுழலினால் பல வகுப்புக்ககள் மர நிழல்களின் கீழ் நடாத்தப்பட்டதுடன், சமாந்தர வகுப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டும் நடாத்தப்பட்டன. அதிகரித்துச் செல்லும் மாணவர் தொகைக்கேற்ப பௌதிக வளம் போதாமை பெரும் குறையாகவும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாகவும் இருந்தமை உணரப்பட்டது.

இந்நிலையினை 1997ம் ஆண்டு ஓரளவேனும் தீர்க்கும் வகையில் பாடசாலையின் அபிவிருத்திச் சபையின் அணுசரணையுடன் எமதூர் நலன் விரும்பிகள் பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பினை உருவாக்கி பாம்பு நடன நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தி பெற்றுக் கொண்ட நிதித் தொகையுடன் அயல் கிராம ரஸூல் நகர் மக்களின் நிதி உதவியுடன் 100 x 20 அடி கட்டிடத்திற்கான அடித்தளம் இடப்பட்டு அதில் தற்காலிக ஓலைக் கொட்டில் கட்டப்பட்டு சில வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.

2000ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் M.H.M. அஷ்ரப் அவர்களால் 125 x 25 அடி அளவான இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டு சமாந்தர வகுப்புக்கள் பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்​கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினால் தரம் 6 அதாடக்கம் 9 வரையிலான மாணவர்கள் பயன்படுத்தத்தக்க விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.

எமது கலாபீடத்தில் அமைந்து பெருமளவிலான பௌதீக வளங்கள் நலன் விரும்பிகளாலும், கொடை வள்ளல்களாலும், பழைய மாணவர்களாலும், வழங்கப்பட்டும், அமைக்கப்பட்டும் மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலை 2007.04.30 ஆம் திகதி ” நவோதயா” செயற்றிட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.

பெளதீக வள அபிவிருத்திக்கேற்ற தேவையும் காணியும் இருந்தும் விவசாய, மனையியல், விஞ்ஞான, சமூகக் கல்வி கூடங்கள், செயற்பாட்டு அறை, காரியாலயம், நூலகம், அதிபர், ஆசிரியர் விடுதிகள், களஞசிய அறைகள், மாணவர் விடுதிகள்,  உட்பட அத்தியாவசிய தேவைகள் பலவும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. தற்போது சுமார் 1200 க்கும் அதிகமான மாணாக்கர் கல்வி பயின்று வரும் நிலையில் ஏறத்தாள 62 ஆசிரியர்களும் பணிபுரிந்தி வருகின்றனர்.

  பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கற்றல், கற்பித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆரம்ப காலப் பகுதிகளில் (EDA) எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கமும், தற்போது பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பும், வர்த்தக தனவந்தர்களும், நலன் விரும்பிகளும், பொதுநல மன்றங்களும், கழகங்களும், பெற்றார்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், மாணவர்களும் முன்னின்று உழைத்து வருகின்றனர்.

பௌதீக வளக் குறைபாடுகளும், ஆசிரியர் ஆளணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு அனைவரினதும் கவனம் எமது மாணவரின் கல்வியின் பால், பூரணமாக திசை திருப்பப்பட்டு மங்கிப் போன எமது மாண்பும், எமது கலாசாலையின் புகழும் இறைவன் அருளோடு வானுயர எழுந்து கொண்டிருக்கின்றது  என்பதில் எவ்வித ஐயமுமில்லை.