Saturday, November 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 193

உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவு!

0
  • 6,000 உயர்தர மாணவர்களுக்கும் தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம் ஆரம்பமானது.
  • அடையாளமாக 5108 மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
  • உடனடியாக நிலுவைத் தவணையுடன் புலமைப்பரிசில் உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.
  • ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்விப் புலமைப்பரிசில் வழங்குவதற்காக இவ்வருடத்தில் 04 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நாட்டின் பிள்ளைகளுக்கு இன்னும் 05-10 வருடங்களில் சிறந்த நாடு உருவாக்கப்படும்.

ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வருமானம் வழங்குவதற்காக ‘அஸ்வெசும’ வேலைத்திட்டமும் காணி உரிமையை வழங்க உறுமய வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகளுக்கு கல்விஅறிவை வழங்குவதற்காக ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து 100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6 000 ரூபா வீதம் 6000 மாணவர்களுக்கு 02 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடசாலைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச புலமைப்பரிசில் 04 என்பதோடு அதிகபட்ச புலமைப்பரிசில் 22 ஆகும். ஏப்ரல் 2024 முதல் 12 மாதங்கள் வரை, ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3000/- வீதம் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இன்று 5108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு அடையாளமாக புலமைப் பரிசில்களை வழங்கினார்.

புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்தார்.

அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு ஆப்பு!

0

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (18) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், உத்தேச வாடகை வருமான வரி குறித்தும் இந்த சபைக்கு கருத்தை தெரிவிக்க வேண்டும். நாம் செல்வ வரியொன்றை அறிமுகப்படுத்துகிறோம். மேலும் அதன் வரையறை மிக அதிகமாக இருக்கும். எனவே, நாட்டின் 90% வீடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தரவரிசையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் வாடகை வருமான வரி விதிக்கிறோம். அதன் பிறகு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த மதிப்பீடுகள் மாகாண சபைகளுக்கு சொந்தமானது. தரவரிசைப் பட்டியலின்படி இந்த வரி விதிக்கப்பட்டால், பெறப்படும் பணம் மாகாண சபைக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் கூறலாம். எனவே, அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற வேண்டும். எனவே வாடகை வருமான வரி என்ற வித்தியாசமான சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த வருமான வரி மத்திய அரசுக்குச் சொந்தமானது.

நாங்கள் பொதுவாக இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். தற்போதுள்ள சட்டச் சிக்கலைத் தீர்க்கவே இதைச் செய்தோம். ஆனால் வரி வரையறை மிக அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டி ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நாம் செல்வ வரி விதிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கும் வரி விதிக்கப்படுமோ என்று மிகவும் கவலைப்படுவதையும் நான் அறிவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எழுவாங்குளம் – மன்னார் பஸ் போக்குவரத்து ஆரம்பம்

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் காதர் மஸ்தான் ஆகியோரின் பாரிய முயற்சியினால் புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி (கலாஓயா பாலம்) வரையான பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி வரையான பஸ் சேவைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை மரிச்சிக் கட்டி (கலாஓயா பாலம்) தொடக்கம் மன்னார் வரையான பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மன்னார் முதல் மடிச்சிக்கட்டி வரைக்குமான பஸ் சேவைக்கு போக்குவரத்து சபையின் அனுமதி மிக விரைவில் கிடைக்கப்பெற்று பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் நம்பிக்கை தெரிவித்தார்.

பல வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்ட குறித்த போக்குவரத்து வீதியானது, மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பாரிய முயசியின் பின்னணியில் மீண்டும் குறித்த வீதி திறக்கப்படுவதினால் பல மணி நேர விரயம் இல்லாமல் போவதுடன், குறுகிய நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி திறக்கப்படுவதன் மூலம் புத்தளத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தி அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவலைப்பதன் மூலம் புத்தளத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகுடம் சூடியது எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை

மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றது.

பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் தலைமையில் நேற்றைய தினம் தலைமன்னார் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்றது.

16,18 மற்றும் 20 வயது பிரிவினர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் யாவும் நேற்றைய தினம் இடம்பெற்றது.

16 வயது பிரிவினருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை மற்றும் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேண்ட்) ஆகியன இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேண்ட்) கல்லூரியை எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை தோற்கடித்து சாம்பியன் ஆனது.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திவந்த எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை முதல் முதலாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் ஆகி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

பல சிரமங்களுக்கு மத்தியில் வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை வீராங்கனைகளுக்கு ஊரில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் துப்பாக்கிக் கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு கைத்துப்பாக்கியொன்றைக் கொள்வனவு செய்யும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹண்டர் பைடன் பொய்யுரைத்ததாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் பாவனை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே துப்பாக்கிக் கொள்வனவிற்கான விண்ணப்பப்படிவத்தில் தாம் உண்மையையே கூறியுள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.

எனினும் 3 மணித்தியால வாதப்பிரதிவாதங்களின் பின்னர் ஹண்டர் பைடன் குற்றவாளியென 12 ஜூரிகள் அடங்கிய குழாம் தீர்ப்பளித்துள்ளது.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியொருவரின் மகன் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பை அடுத்து ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூரி குழாமின் தீர்ப்பை மதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் கட்டிட தீவிபத்தில் 41 பேர் பலி

0

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இந்திய பிரஜைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டின் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய அடையாளமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது!

0

தனித்துவ அடையாளங்களை விட தேசிய அடையாளமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது!

ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

தனித்துவ அடையாளங்களுடன் ஒதுங்கி இருப்பதை விட தேசிய அடையாளங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது என்று வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (12) குருநாகல் ப்ளூ ஸ்கை ஹோட்டலில் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்போது ஆளுனர் கௌரவ நஸீர் அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவர்களாக மதிக்கப்படும் டீ.பி.ஜாயா, சேர் ராசிக் பரீத், பதியூதீன் மஹ்மூத், எம்.எச்.எம். அஷ்ரப் போன்றவர்கள் தேசிய அரசியலுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டதன் காரணமாகவே இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். அந்த வகையில் தனித்துவ அரசியலை விட தேசிய அடையாளங்களுடனான அரசியலே எமக்குப் பாதுகாப்பானது. பலன் தரக்கூடியது.

கடந்த காலங்களில் நாங்கள் ஏராளமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். ஆனாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் குருநாகல் போன்ற இடங்களில் ஏனைய சமூகங்களுடனான நல்லுறவு காரணமாக பாதிப்புகள் குறைவாக இருந்தது. அதன் மூலம் நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை நான் என்றைக்கும் இனரீதியான சிந்தனை, இனரீதியான செயற்பாடுகள் கிடையாது. என்னைச் சந்திக்க வரும் எந்தவொரு நபரின் இன, மத அடையாளங்களையும் நான் கவனிப்பது கிடையாது. என்னை நாடிவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை மட்டுமே என் கடமையாகக் கருதுகின்றேன்.

ஆகவே தேவையுள்ள எந்தவொரு நபரும் என்னை எந்தநேரத்திலும் தேடி வரலாம். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை என் சந்தோசமாக நான் கருதுகின்றேன்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை சுய திருப்தியை விட இறை திருப்தியை முன்னிட்டு செயற்பட வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் போது எமது செயற்பாடுகள் அனைத்தும் இறை திருப்தியை முன்னிட்டதாக அமையும். நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படும்போது வர்த்தகமும் கூட ஒரு இறை திருப்தியைத் தரும் செயற்பாடாக அமையும்.

குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரை எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மாவட்டமாகும். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் சுற்றுலாத் துறை ஊடாக பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள முடியும். சுற்றுலாத்துறை ஊடாக பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க முடியும். வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இன்வெஸ்டிங் வயம்ப என்றொரு திட்டத்தை அதற்காக முன்மொழிந்துள்ளோம்.

குருநாகல் நகரை ஒரு ஹெல்த் சிட்டியாக மாற்றும் எண்ணக்கரு ஒன்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம். குளியாப்பிட்டிய நகரை ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவாக மாற்றி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக வடமேல் மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

இவற்றின் ஊடாக உரிய பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டியது இப்பிரதேச மக்களின் பொறுப்பாகும். புதிய முதலீட்டுத் திட்டங்களில் உரிய பங்களிப்பைச்செய்ய வேண்டியது இங்குள்ள வர்த்தகர்களின் பொறுப்பாகும். அதிலும் தனி வர்த்தக முயற்சிகளை விட காலமாற்றத்துக்கு இசைவாக கூட்டு வர்த்தக முயற்சிகளாக மாற்றி அமைக்கும் போது அதன் வெற்றியும், பலமும் அதிகமாக இருக்கும்

அதேபோன்று குருநாகல் மாவட்ட மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்தவேண்டும் . அதற்கான அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏனைய விடயங்களால் சாதிக்க முடியாத பல விடயங்களை அரசியல் பிரதிநிதித்துவம் மூலமாக சாதித்துக் கொள்ள முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குருநாகல் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸார்தீன், வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமந்த அபேவிக்கிரம, குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் தலைவர் எம்.வை.எம். கியாஸ் ஜே.பி., செயலாளர் எம்.எல்.எம். மிதிலாஜ், பொருளாளர் ஏ.எம். இர்பான், அமைப்பின் போசகர் ரயீஸ் மீரா, பிரபல வர்த்தகர் நவாஸ் ஹாஜி, குருநாகல் சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.எம். சித்தீக், சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சபருல்லாஹ் ஹாஜியார், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் ஷாபி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று!

0

உறுதிமொழிகளில் செயற்படுவோம், குழந்தைத் தொழிலாளர்களை முடிவிற்கு கொண்டு வருவோம்

நாட்டின் நாளைய தலைவர்களை இன்றே பாதுகாப்போம்!

குழந்தைத் தொழிலாளர்களாக 16 கோடி பேர்

கடந்த ஆண்டில் இலங்கையில் 181 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம்

நாட்டின் எதிர்காலத் தூண்களான குழந்தைகளை இளம் வயதில் வேலைக்கு அனுப்புவதைத் தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் ஜூன்12ஆம் திகதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

“நமது உறுதிமொழிகளில் செயற்படுவோம், குழந்தைத் தொழிலாளர்களை முடிவிற்கு கொண்டு வருவோம்” என்பதே இந்த வருடத்திற்கான குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும்.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.

குழந்தைத் தொழிலாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் வயது வித்தியாசம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகின்றது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி 16 வயது நிறைவடைவதற்கு முன்பாக குழந்தைகளை பணிக்கு அமர்த்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில் சோமாலியா தவிர உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு குழந்தைத் தொழில் முறைக்கு எதிரான ஒரு இயக்கம் உருவெடுத்த நிலையில், அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

சோமாலியாவை வழிநடத்துவதற்கு முறையான அரசாங்கம் இன்மையினால் தாமதமாக 2002ஆம் ஆண்டு அந்த உடன்படிக்கையில் சோமாலியா கையெழுத்திட்டது.

இதனைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குழந்தைத் தொழிலாளர் வரலாற்றில் இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொண்டதற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப் பெரிய காரணமாகும்.

இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்பன உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காகக் கொண்டு 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

உலகெங்கிலுமுள்ள 10 குழந்தைகளில் ஒரு குழந்தை, தொழிலாளியாக வஞ்சிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அத்துடன் 16 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 6.3 கோடி பேர் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தினால் 1998ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

அத்துடன் மகளிர், சிறுவர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் 1929 எனும் அவரச இலக்கத்திற்கு அறிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு காரணம் அவர்களின் சூழ்நிலையா, பெற்றோரா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்.

கொரோனா பெருந்தொற்று காலம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னரே சிறுவர்களின் பாதுகாப்பு குறைவடைந்துள்ளதாகவும் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ் எமது சூரியன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 181 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதல் இன்றும் ஓயவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

ஒவ்வொரு நாட்டிலும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளி உருவாகும் நேரத்திலும் நாட்டின் எதிர்காலம் இருள்கின்றது என்பதை யாவரும் நினைவில் வைத்து செயற்பட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் முறைமையை ஒழிப்போம்! நாட்டின் நாளைய தலைவர்களை இன்றே பாதுகாப்போம்!

மக்களின் உணர்வுகளை வென்ற அலிசப்றி ரஹீம் எம்.பி

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமான சந்திப்பு நேற்று (10) ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களுக்கான அவசர நிவாரண உதவிகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மேலும் புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக முகம்கொடுததுவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் பெற்றுக் கொடுத்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் புத்தளம் பிரதேசத்தின் பல கிராமங்களின் வீதிகள், பாலங்கள் என வீடுகளும் பாரிய அளவில் பாதிக்கட்ட விடயங்களை முன்வைத்த அலி சப்ரி ரஹீம், இவற்றை துரித கதியில் நிவர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமிடையான பலதரப்பட்ட சந்திப்பின் மூலம் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.