சுமார் 08 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகரொருவர் பரந்தன் பிதேசத்தில் கைது.
இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருபது (20.150) கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொரி (01) மற்றும் ஒரு சந்தேக நபர் நேற்று 2025 மார்ச் 26 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
அதன்படி, கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகேணி கடற்படை நிறுவனத்தால் பரந்தன் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதி வழியாகச் சென்ற சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று சோதனை செய்யப்பட்டது.
அந்த நேரத்தில், ஒரு (01) சந்தேக நபரும் லொரியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இருபது (20.150) கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (01) லொரியும் கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 08 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
யுனெஸ்கோ அறிவியல் இராஜதந்திரம் குறித்த உலகளாவிய அமைச்சர்கள் உரையாடலில் இலங்கை சார்பாக அமைச்சர் கிருஷாந்த அபேசேன கலந்துகொண்டார்.
யுனெஸ்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல் இராஜதந்திரம் குறித்த உலகளாவிய அமைச்சர்கள் உரையாடல் கடந்த மார்ச் 25-26 தேதிகளில் பிரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்றது.
“வேகமாக மாறிவரும் உலகில் அறிவியல் இராஜதந்திரம்: ஆண்கள் மற்றும் பெண்களின் மனதில் அமைதியைக் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த உலகளாவிய உரையாடல் நடைபெற்றது.
தற்போதைய சிக்கலான உலகளாவிய சூழலில் புதுமையான அறிவியல் ராஜதந்திர கட்டமைப்புகள் மற்றும் அணுகுமுறைகளை ஆராய்ந்து மதிப்பிடுவதற்காக நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ராஜதந்திரிகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
புவிசார் அரசியல் சிக்கல்களும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பின்னிப் பிணைந்துள்ளன, இது தொற்றுநோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அறிவியல் இராஜதந்திரத்தை ஒரு முக்கிய காரணியாக ஆக்குகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் மனித உரிமைகளை அடைய உதவுகின்றன என்பதை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.
நாடுகள் அறிவியல் முன்னேற்றத்தை ராஜதந்திரத்துடன் இணைப்பதால், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு கூட்டு அணுகுமுறை மிக முக்கியமானது.
அறிவியல் மற்றும் கல்வி மூலம் அமைதியைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் யுனெஸ்கோ, அறிவியல் ராஜதந்திரத்தில் தனது பங்கை விரிவுபடுத்துகிறது. உலகளாவிய அதிகாரப் போராட்டங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கையை எதிர்கொள்ளும் வகையில், உரையாடல் மற்றும் புரிதலை வளர்ப்பதற்கு புதுமையான மற்றும் விரிவான கட்டமைப்புகள் தேவை. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல, சமகால சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு புதிய கட்டமைப்பை நிறுவும் நோக்கத்துடன், யுனெஸ்கோ, அறிவியல் இராஜதந்திரம் குறித்த உலகளாவிய அமைச்சர்கள் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
அறிவியல் இராஜதந்திர முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும், நிலையான ஒத்துழைப்புகளை உருவாக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும், அறிவியல் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது. மாநாட்டின் முடிவில், மேற்கண்ட கருப்பொருள் குறித்த ஒரு கூட்டு அமைச்சரவை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (27) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான அவர் கைதானார். கைதானவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
ஏற்கனவே கடமையாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த டீ சில்வா பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து. ஜெ.ஏ சந்திரசேன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஜெ.ஏ சந்திரசேன இதற்கு முன்பு கழுத்துறை பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேவேளை பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது.
விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
மேலும் பூநகரி பிரதேச சபைக்கான பதினொரு வட்டாரத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம் எனவும், கடந்த தேர்தல்களிலும் பதினொரு வட்டாரங்களில் வெற்றி பெற்றதை போன்று இம்முறையும் வெற்றி பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம் என தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் தபால் முத்திரை சேகரிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு தபால் முத்திரை கண்காட்சி 2025 நாளை மார்ச் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தை தபால் நிலைய தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் பழைய முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், நினைவுப் பொருட்கள், மற்றும் தபால் முத்திரை சேகரிப்பு பொழுதுபோக்கு தொடர்பான அம்சங்கள், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உட்பட பல பொருட்களை கொழும்பு முத்திரை கண்காட்சியில் பெற்றுக்கொள்ள முடியும்.
“காலத்தின் தேவைக்கான உணவுப் பொதி” வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்”
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000/- பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய “காலத்தின் தேவைக்கான உணவுப் பொதியொன்று” 2,500/- ரூபாவுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, 2025.04.01 தொடக்கம் 2025.04.13 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களிலும், COOPFED விற்பனை நிலையங்கள் மூலமும் உணவுப் பொதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு விசாகா கல்லூரி மாணவிகள் பழைய பாராளுமன்றத்திற்கு வருகை
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறித்த தெளிவு பெறவும் வாய்ப்பு கிடைத்தது.
மாணவர் பாராளுமன்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட “விஷன்” சஞ்சிகையின் பிரதியை, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிறைவேற்றுப் பொறுப்பு தொடர்பான உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல பிரதமரிடம் வழங்கினார்.
இதன் போது விசாகா கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்னவினால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
உலகில் அறிவைப் பெறுவதற்கு மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவது என்பன அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வேலைவாய்ப்புச் சந்தைக்கு மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தக் கூடிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியுமான திறமையான இளைஞர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கிடையே வளங்களைப் பகிர்ந்து செல்வதில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதோடு இதற்கு பிரஜைகளின் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
‘தலைமைத்துவம் ஆணவத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஆணவமில்லாத தலைவர்கள் நாட்டையும் மக்களையும் நல்ல திசையில் வழிநடத்துவார்கள். அதற்கு, நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை வரலாற்றிலிருந்து அல்லது உலக வரலாற்றிலிருந்து திறமையான தலைவர்களைப் பற்றிய தெளிவைப் பெற முடியும். சண்டசோக எப்படி தர்மசோக ஆனார் என்பதையும் ஹிட்லரின் சர்வாதிகாரம் எப்படி உலகை அழிவுக்கு இட்டுச் சென்றது என்பதையும் மாணவர்கள் என்றவகையில் படிக்க வேண்டும். குறைந்தபட்ச நுகர்வு கொண்ட, நாட்டைப் பற்றி சிந்திக்கும் தலைவர்களின் தோற்றம் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை எளிதாக்கும். எனவே, நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். பொதுநலத்தை இறுதி இலக்காகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) இந்த விபத்துகள் கட்டுபொத்த, அவிசாவளை மற்றும் அத்திமலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
அத்திமலை, கொட்டியாகல 05 ஆம் தூண் கிளை வீதியின் வத்தேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொட்டியாகல பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கட்டுபொத்த, பொத்துஹெர, தம்பிடிய கிளை வீதியில் தம்பிடிய சந்திக்கு அருகில், வீதியை கடக்கும் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 79 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், அவிசாவளை பொலிஸ் பிரிவின் கொழும்பு-ஹட்டன் வீதியின் தல்துவ பகுதியில், வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி மீது பேருந்து ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.