Saturday, March 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 219

அரசாங்கம் இதை செய்யவே செய்யாது!

0

அரிசிக்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் எவ்வித தயார்படுத்தல்களும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர், வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

அண்ணளவாக இரண்டு வாரங்களுக்குள் சிவப்பு அரிசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், பெரும்போகத்தில் கிடைக்கப்பெறும் அறுவடையுடன் சிவப்பு அரிசிக்கான அறுவடை ஏழு இலட்சம் மெற்ரிக் தொன் அளவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 

“எவ்வளவுதான் வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அந்த அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தயார் இல்லை. அரிசியில் பிரச்சினை காணப்படுவது சிவப்பு அரிசியில் தான். எனவே சிவப்பு அரிசி பிரச்சினை தீர்விற்கு இந்தப் போகத்தில் விவசாயம் செய்து அதனை அறுவடை செய்யும் வரை காத்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வாரங்களுக்குள் இந்த சிவப்பு அரிசிப் பிரச்சினை முற்றாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்”.

நாட்டரசிக்கான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டதைப் போலவே, இந்த பிரச்சினைக்கும் முறையான தீர்வு ஒன்றை வழங்கி உள்ளதாகவும், இதன் போது சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி  நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட  முயற்சித்தால் அதற்கு எதிராக பாவனையாளர்கள் அதிகார சபை மற்றும் அதனுடன் இணைந்து தலையிட்டு நெல் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்” அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

பலாங்கொடை நகரில் சுற்றுலா வலயம்!

0

பலாங்கொடை நகரில் சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயம்

பலாங்கொடை நகரின் மத்தியில் அமைந்துள்ள அதிக மதிப்புள்ள இரண்டு ஏக்கர் கொண்ட நிலப்பரப்பை சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பிகா ஜானகி ராஜரத்ன தெரிpவித்துள்ளார்.

அந்த நிலப்பரப்பு உள்ளடங்கிய பிரதேச கண்காணிப்பு விஜயத்தின்போnது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பலாங்கொடை தொரவல கங்கையை அண்மித்து மிகவும் ரம்மியமாக அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில், உணவு, சுகாதார வசதிகள், வாகன தரிப்பிட வசதிகள், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரத்திணபுரி மாவட்ட ஊடகப்பிரிவு

நாகவில்லு பாடசாலையில் 9 மாணவர்கள் சித்தி!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 9 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் கெளரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

தமது மாணவர்களை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தயார்படுத்தி சித்திபெறவைத்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும், அதிபருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல வரிய மாணவர்களும் திறமை சித்தி பெற்றுள்ளதுடன், இதற்காக அயராது பாடுபட்ட பெற்றோர்களின் அற்பணிப்பையும் முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ் வியந்து பாராட்டியுள்ளார்.

மேலும் குறித்த பாடசாலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் விஞ்ஞான பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பல மாணவர்கள் குறித்த பிரிவில் கல்வி கற்று வரும் நிலையில், ஊரின் தனவந்தர்கள் சிலரின் அனுசரணையில் விஞ்ஞான பிரிவு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தின் மூத்த தலைவர் மறைந்தார்!

0

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (29) காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டதால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா தனது உறவுமுறை ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பிரவேசம்…

மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

பாராளுமன்றில் சாதித்துக்காட்டிய ஹக்கீம்!

0

விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறை, அரச அதிகாரிகளின் போக்கு உட்பட கொரோனா தொற்றைக் காரணங்காட்டி முடக்கப்பட்டு அநீதி செய்யப்பட்ட பிரதேச மக்களுக்காக என, பல தடவைகள் கடந்த அரசாங்கத்திடமும் தற்போதைய அரசாங்கத்திடமும் பாராளுமன்றத்தில் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பல கேள்விகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் தொடுத்திருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறானதொரு மோசமான சூழ்நிலை எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படாமல் இருக்கவும் தற்போது இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவும் தொடராக ரவூப் ஹக்கீம் போராடி வருகிறார்.

அந்த வகையில், பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டு வர முயற்சித்திருந்தார். குறித்த பிரேரணை விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாது (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற செயற்பாடுகளில் மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹக்கீம் அவர்களால் கொண்டு வரப்படும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனஞ்செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மீது விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA,JP) – ஓட்டமாவடி.

இணையவுள்ள பலமான புதிய கூட்டணி!

0

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு எம்.பிக்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் (27) கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர் சர்வ ஜன பலய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்றார்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது, மேலும் இந்த பிரதிநிதிகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் விவாதங்களை நடத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

அனுராதபுர பகுதிகளில் 21 மணி நேர நீர் வெட்டு!

0

நீர் விநியோகம் துண்டிப்பு குறித்த அறிவித்தல் – அனுராதபுரம்

அத்தியவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று (29) இரவு 9.00 மணி முதல் நாளை (30) மாலை 06.00 மணி வரையில்அனுராதபுரத்தின் குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் 21 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் | அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக அமைப்பு

கலத்தேவ, நெலும்கன்னியா, தரியங்குளம், கல்குளம், கவரெக்குளம், வண்ணம்மடுவ, குஞ்சிக்குளம், குருந்தன்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, தன்னயன்குளம், யாழ்ப்பாண சந்தி, பண்டாரபுளியங்குளம், தெப்பன்குளம், ஜெயந்திகிராமம், சாலியபுர, மங்கடவல, லிங்கலபார, கட்டமான்குளம்.

அனுராதபுரம் புதிய நகர நீர் வழங்கல் அமைப்பு – அனுராதபுரம் கட்டம் 1

மிஹிந்தலை நீர் விநியோக அமைப்பு

கந்துவட்டபார, ருவங்கம, வெல்லமொரண, தரியங்குளம், பலுகஸ்வௌ, சட்டம்பிகுளம், அம்பதலாகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரிந்தேகம, கன்னட்டிய மற்றும் குருதன்குளம்.

வெளியாகிய அத்தியாவசிய பொருட்களின் விலை!

0

பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோகிராம் கோதுமை மா 155-163 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228-245 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 275-293 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160-180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210-220 ரூபாவாகவும், உள்ளூர் அரிசி 220-230 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210-220 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிகளுக்கு தடை!

0

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,

“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.”

“இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.”

“அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.” என்றார்.

சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்!

0

தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக எம்.என்.எம்.யஸீர் அறபாத் சத்தியப்பிரமாணம்

மாவடிச்சேனை, பஸீர் வீதியைச்சேர்ந்த முஹம்மது நஸீர் முஹம்மது யஸீர் அறபாத் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக இன்று (28) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஷீல் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியும், மாவடிச்சேனை மஸ்ஜித் மஸீத் ஸாலிஹ் அல் மஸீத் பள்ளிவாயலின் செயலாளரும், பத்தி எழுத்தாளரும், இளம் சமூகச்செயற்பாட்டாளருமாவார்.

மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பவற்றின் பழைய மாணவரான இவர் முஹம்மது நஸீர், மர்ஹுமா பாத்திமா தம்பதிகளின் புதல்வருமாவார்.