Tuesday, June 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 23

உலகை விட்டு பிரிந்தார் பாப்பரசர் பிரான்சிஸ்!

0

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார். 

88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார். 

நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உள்ளே சென்ற சாமர சம்பத் எம்.பி!

0

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10ஜி சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!

10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது.

இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சில நிமிடங்கள் இணைய சேவை தடைபட்டாலே வேலைகள் அனைத்தும் நின்று போகும் அளவுக்கு, இணையம் உலகை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளுமே இணைய சேவையை நம்பியே இருக்கிறது.இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் இப்போது 5ஜி சேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மூலை முடுக்கெல்லாம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில்,ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பகுதி தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த 10ஜி இணைய சேவையில், பதிவிறக்க வேகம் 9834 Mbps, பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் – வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தொடர்பாக அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு….

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் சிஐடிக்கு கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும் புதிய திசையிலும் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

இந்தக் குற்றத்தை கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-04-20

வெப்பநிலை குறித்து முக்கிய தகவல்!

0

மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில் நாளை (21) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் இயன்றளவு நிழல் பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

டிரம்பை கதறவிடவுள்ள அமெரிக்க போராட்டம்!

0

அதிபராக பொறுப்பேற்ற டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது.

அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் டிரம்ப்.

அதிபர் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2,00,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை துவக்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

நேற்று சனிக்கிழமை முதல் துவங்கிய போராட்டம் 50 மாகாணங்களில் 400 க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பலரும் டிரம்ப்பிற்கு எதிராக பதாகைகள் ஏந்து போராரடி வருகின்றனர். டவுண்டவுன், சான்பிரான்சிஸ்கோ, ஒரு கோடிக்கும் மேல் போராட்டக்காரர்கள் திரள இருப்பதாக ஒருங்கிணைப்பு கமிட்டியினர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலகட்ட போராட்டங்கள் நடக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் அதிர்ந்து போய் உள்ளது.

வாஷிங்டன் டிசியில் உள்ள துணை அதிபர் மாளிகையை முற்றுகையிடும் பேரணி துவங்கி உள்ளாதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

ஜமிய்யதுல் உலமா வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

0

2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறோம். இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்களின் செயல்கள் எமது நம்பிக்கைக் கொள்கைகளையும், நாம் நிலைநிறுத்தும் விழுமியங்களையும் முற்றிலுமாக மீறுவதாகும். ஆரம்பத்திலிருந்தே, மத அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் முஸ்லிம் சமூகம் குற்றவாளிகளை நிராகரித்து கண்டனம் செய்தது, எங்கள் வெறுப்பின் உறுதியான அறிக்கையாக இஸ்லாமிய இறுதிச் சடங்குகளை மறுத்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்கள் இந்த மண்ணில் விசுவாசமான, அமைதியான மற்றும் தொழில்முனைவோர்களாகவும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் குடிமக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் சுமூகமான மற்றும் குழப்பமான எல்லாக் காலங்களிலும் சகவாழ்வு, விசுவாசமான சேவை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற வரலாற்றைக் கொண்டுள்ளதோடு குறிப்பிடத்தக்கவிதமாக அநீதிகள், பாகுபாடு மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட போதிலும், நாங்கள் எப்போதும் பொறுமை மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஒருபோதும் தீவிரவாதம் அல்லது வன்முறையை பதிலாக நாங்கள் பயன்படுத்தவில்லை.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது தெளிவாகிறது. முழு உண்மையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதில் பலிக்கடாவாக உள்ளவர்களை விடுத்து உண்மையிலேயே பொறுப்பானவர்கள் – தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்;, தாக்குதல் நடந்து; ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், தாக்குதல்களைச் சுற்றியுள்ள முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமலும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முஸ்லிம் தனிநபர்கள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் அல்லது தீர்ப்புகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் மேலும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். இத்தகைய நடைமுறைகள் அவநம்பிக்கையையும் பயத்தையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளன. மேலும் தாமதமின்றி அனைத்து விசாரணைகளையும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதும் தண்டனைகளின்றி விடுபடுவதும் மீண்டும் மீண்டும் வேரூன்ற காரணமாக உள்ள நிறுவனங்கள், கட்டமைப்புகள் மற்றும் அரசியல் கலாசாரம் என்பவற்றில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துமாறு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் துயருற்றிருக்கும் நீண்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1971, 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மற்றும் அழுத்கம, ஜின்தோட்டை, திகன, மினுவாங்கொட போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அத்துடன் கோவிட்-19 காலத்தில் கட்டாய தகனம் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என எல்லாம் சமூகங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இதில் முழுமையான கரிசனை இல்லையெனில், நம்பிக்கையுடனும் முன்னோக்கியும் செல்லும் ஒரு தேசியத் தரமான கூட்டு முன்னேற்றப் பாதை என்றும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும்.

கூட்டு தண்டனைக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து வந்த குழப்பமான காலங்களில் நீதிக்காக போராடிய கௌரவ கர்தினால் மால்கம் ரஞ்சித், கத்தோலிக்க திருச்சபை மற்றும் அனைத்து மத மற்றும் இனக் குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது துணிச்சலும் ஒற்றுமையும் ஒருபோதும் மறக்கப்படக்கூடாதவை.

ஓரங்கட்டப்பட்ட குழுவாக அல்லாமல் இந்த நாட்டின் சமமான அந்தஸ்துடன் அறிவொளி பெற்ற சமூகமாக நாம் முன்னேற உறுதிபூண்டுள்ளோம். அனைத்து இலங்கையர்களும் பிரிவினை மற்றும் சந்தேகத்தையும், அவற்றை உருவாக்கும் வெளிப்புற மற்றும் உள் கூறுகளையும் நிராகரிக்கவும், சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும், அமைதி, இரக்கம் மற்றும் உண்மையான தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கவும் முன்வருமாரு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகள் அதிக வெறுப்பு மற்றும் அநீதியால் மதிக்கப்படக்கூடாது, மாறாக உண்மை மேலோங்கி நிற்கும், நீதி நிலைநாட்டப்படும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் – இன மத பேதமின்றி – கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு நாடாக இலங்கை மாறுவதை உறுதி செய்வதன் மூலம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

கொரிய மொழிப் பரீட்சை திகதியில் மாற்றம்!

0

கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக, கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது,

அதற்கமைய, 2025 மே மாதம் 06ஆம் தககதி இடம்பெறவிருந்த பரீட்சை – 2025 மே மாதம் 10ஆம் திகதியும், 2005 மே மாதம் 07ஆம் திகதி இடம் பெறவிருந்த பரீட்சை 2025 மே மாதம் 17ஆம் திகதியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நான்கு அமர்வுகளின் கீழ் இடம்பெறவிருக்கும் இந்தக் கொரிய மொழிப் பரீட்சையானது, முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு காலை 10.30 மணிக்கு, மூன்றாவது அமர்வு மதியம் 12.00 மணிக்கும், நான்காவது அமர்வு பிற்பகல் 2:00 மணிக்கு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சை நடைபெறுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு வருகை தரும்படியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அன்னைபூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட விடுதலைத் தீயின்
வீரியம் ஒருபோதும் ஓயாது – சிறீதரன் எம்.பி…!!!

தியாகத்தாய் அன்னைபூபதியினதும், தியாகதீபம் திலிபன் அவர்களினதும் அகிம்சைப் போராட்டங்களாலும், அதன் பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் நிகழ்த்தப்பட்ட உயிர்த்தியாகங்களின் உந்துதலால் உருப்பெற்ற, விடுதலைக்கனலின் வீரியம் குறைந்துவிட்டதாக, எமது மக்களின் விடுதலை தாகத்தை மலினப்படுத்துவோர் மார்தட்டிக் கொண்டாலும், இனவிடுதலை என்ற இறுதி இலக்கை அடையும் வரை திகாயகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப்போரின் வீரியம் ஒருபோதும் ஓயப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையில் நேற்றையதினம் (19) உணர்வெழுச்சியோடு நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தலில் நினைவுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக்கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்ச்செல்வி கனகராசா நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், போராளிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர் செல்வரட்ணம் தனுபன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்!

0

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. 

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தீனில் வாழ்ந்து இறையாட்சி பற்றி மக்களுக்கு போதித்து, சிறையில் அறையுண்டு இறந்த இயேசு கிறிஸ்து 3 நாட்களின் பின் கல்லரையிலிருந்து உயிர்த்தெழுந்தார். 

நியாயமும் சத்தியமும் என்றும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுவின் உயிர்த்தெழுல் நிகழ்வு அமைந்துள்ளது. 

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மனிதர்களுக்கு புதுவாழ்வு கிடைத்ததுடன், பேரின்பத்திற்கான வழியும் திறக்கப்பட்டதாக கிறிஸ்தவ மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

இந்நாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூருவதுடன், 40 நாள் தவக்காலம், உயிர்த்த ஞாயிறான இன்று முடிவடைகிறது. 

இன்றைய நன்நாளில் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று, விசேட வழிபாடுகளில் ஈடுபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்படும் மரபு ரீதியான செயற்பாடாகும். 

இதற்கிடையில், நேற்று (19) இரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. 

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட விசேட ஆராதனை நேற்று இரவு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்றது. 

அத்துடன் இன்றும் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. 

இதற்கிடையில், கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு நாளையுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திதகி நடந்த இந்த தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதற்கிடையில், புனித வெள்ளியான கடந்த 18 ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.