Friday, September 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 24

இஸ்ரேலியர்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு!

0

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். 

சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகிறார். 

இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச DJ ஒருவர் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 

இந்த நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச DJ டொம் மோங்கல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அறுகம்பை பகுதிக்குச் சென்றபோது, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் சென்றது போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். 

அறுகம்பை பகுதி முழுவதும் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறியுள்ளார். 

அறுகம்பை நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இதற்கு முக்கிய காரணம், அறுகம்பை கடல் பகுதி சர்ஃபிங்கிற்கு ஏற்றதாக உள்ளது. 

இவ்வாறு நாட்டுக்கு வருகை தரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலியர்கள் ஆகும். 

ஏனென்றால், பெரும்பாலான சுற்றுலாப் பொருட்கள் இஸ்ரேலியர்களால் வழங்கப்படுகின்றன. 

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்று நடத்திய விசாரணையில், சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலியர்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

இது உள்ளூர் வர்த்தகர்களை கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காமெடி நடிகர் மதன் பாப் காலமானார்!

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர்மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும் துள்ளும், தெனாலி, குஷி, சிங்கம் 2, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் கடைசியாக சாகசம் என்னும் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பிரபல டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்!

0

வாஷிங்டன்: “இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்” என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாள்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

இந்த போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 30 முறை கூறி உள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்திய டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது,

“அதிபர் டிரம்ப் தற்போது தாய்லாந்து – கம்போடியா போர், இஸ்ரேல் – ஈரான் போர், ருவாண்டா – காங்கோ ஜனநாயக குடியரசு மோதல் ஆகியவற்றை பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்தி உள்ளார். இதேபோல் இந்தியா – பாகிஸ்தான், செர்பியா – கொசாவோ, எகிப்து – எத்தியோப்பியா இடையேயான மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற தனது ஆறுமாத பதவிக்காலத்தில் சராசரியாக மாதத்துக்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்த மத்தியஸ்தம் செய்து வருகிறார். அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உலக பணக்காரர்கள் பட்டியலில்!

0

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.

மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.1987ம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

2025ம் ஆண்டு, ஆக.1ம் தேதி நிலவரப்படி உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டாலர் ஆகும்.அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த டாப் 10 பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார். இவரை தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விவரம்; (சொத்து மதிப்பு அடைப்புக்குறிக்குள்)

1. எலோன் மஸ்க் (401 பில்லியன் டாலர்)
2. லாரி எலிசன் (299.6 பில்லியன் டாலர்)
3. மார்க் ஜுக்கர்பெர்க் (266.7 பில்லியன் டாலர்)
4. ஜெஃப் பெசோஸ் (246.4 பில்லியன் டாலர்)
5. லாரி பேஜ் (158 பில்லியன் டாலர்)
6. ஜென்சன் ஹுவாங் (154.8 பில்லியன் டாலர்)
7. செர்ஜி பிரின் (150.8 பில்லியன் டாலர்)
8. ஸ்டீவ் பால்மர் (148.7 பில்லியன் டாலர்)
9. வாரன் பஃபெட் (143.4 பில்லியன் டாலர்)
10. பெர்னார்ட் அர்னால்ட் (142.9 பில்லியன் டாலர்)

பாடசாலை நாட்களில் கனரக வாகனம் செலுத்த தடை!

கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6:40 தொடக்கம் 7:30 மணி வரையும், அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் 2.00 மணி வரையும் கனரக வாகனங்கள் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி போலீஸாரின் மனித நேய செயலாகவும், முன்னுதாரணமான நடவடிக்கையாகவும் இந்த அதிரடி முயற்சிக்கு பொதுமக்கள் நன்னாரி தெரிவித்துள்ளனர்.

நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், கிளிநோச்சி பாடசாலை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, பாடசாலை நாட்களில் தடைசெய்யப்பட்ட பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் கிளிநொச்சி நகர பகுதிகளுக்குல் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ளிநொச்சி நகர பகுதிகளுக்குல் கனரக வாகனங்கள் செலுத்த மட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில், குறித்த கனரக வாகனங்கள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பா.உ சிறீதரன் விடுத்துள்ள மிக முக்கிய வேண்டுகோள்!

செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கொள் காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். 

ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்வரும் 2025.08.05 ஆம் திகதி மாலை 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

மைத்துனரை கொன்ற டிப்பர் வண்டி!

தனது வீட்டு ஒழுங்கையில் நித்திரை கொண்டிருந்த மைத்துனரின் மீது கவனயீனம் காரணமாக டிப்பர் ரக வாகனம் ஒன்றினால் தவறுதலாக ஏற்றப்பட்ட நிலையில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பி வந்துகொண்டிருந்த வேளை இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் தனது மைத்துனர் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் ஏறியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

02.08.2025 இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்து மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

இச்சம்பவும் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெடுங்கனி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

0

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன், படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருந்தார். 

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அவிசாவளை பகுதியில் இன்று காலை கோர விபத்து!

0

கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தின் போது பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் ஆரம்பமான 100 நாள் போராட்டம்!

சமஸ்டிக்கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100 நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்தினை பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இன்று தொடக்கம் கார்த்திகை மாதம் எட்டாம் திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் முதல் நாளான இன்று 01.08.2025 இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.