Tuesday, June 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 24

நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்!

0

புத்தளம் நாகவில்லு பகுதியில் அழுகிய நிலையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (19.04.2025) பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம், நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள டயலொக் மாவத்தை பகுதியில், பூர்த்தி செய்யப்படாத தனியார் கடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் குறித்த சடலம் இன்று பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று காலை அழுகிய துர்வாடை வீச ஆரம்பித்த பிறகே குறித்த கடைக்குள் அழுகிய நிலையில் சடலம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், உயிரிழந்த குறித்த நபர் சுமார் 3 நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் நாகவில்லு பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபராக இருக்குமென மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/enews1st.lk/videos/1705928660007583

தந்தையை அடித்துக்கொன்ற மகன்!

0

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தைச் செய்த 20 வயதுடைய உயிரிழந்தவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களைகட்டிய ஸ்ரீ தலதா யாத்திரை!

0

16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நேற்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட புகையிரதத்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது.

இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெறும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் சென்றதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பியது.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசரசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” நேற்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான நேற்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மன்னாரில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குல் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப் பிரிவினால், மன்னாருக்கு வடக்கே உள்ள கிரன்சி கடல் பகுதியில் 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மேற்கொண்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துக் கொண்டிருந்த, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) பொதிகள் பரிசோதிக்கப்பட்டன.

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குல் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து இருநூறு (3200) ஷம்போ பக்கெட்டுகள், முந்நூற்று எழுபத்தாறு (376) அழகுசாதனப் பொருட்கள் மற்றும் எழுபத்தைந்து (75) அழகுசாதன சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

விமான நிலையத்தில் சிக்கிய மூன்று பெண்கள்!

0

பெங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோ 248 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 50 வயதான மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை செலுத்திய டிப்பரில் சிக்கி குழந்தை பலி!

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில், தந்தை செலுத்திய டிப்பர் வாகன பின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (18-04-2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகன் தந்தை பின்புறம் கவனிக்காத டிப்பர் வாகனத்தை பின்புறம் செலுத்தியபொழுது டிப்பரின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது டிப்பர் வாகன மோதியதன் காரணமாக சிறுவர் உடல் நசுங்கி பலியானார்.

சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் – 38 பேர் பலி!

0

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தனர். 102 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், ஏமனில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தனர். 102 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருள் சப்ளையை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்!

0

புத்தளம் – வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலா ஓயா ஆற்றில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (17) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

மதுரங்குளி – கணமூலையைச் சேர்ந்த அபுதாஹிர் முஹம்மது அப்ராஜ் (அப்ரான்) எனும் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கலாஓயா ஆற்றில் நீராடுவதற்காக குறித்த இளைஞன் உட்பட நான்கு பேர் முச்சக்கர வண்டியொன்றில் சென்று தனது சக நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் 8 அடி ஆழமுள்ள குழி ஒன்றுக்குள் சிக்குண்டு, காணாமல் போயுள்ள நிலையிலேயே குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் முப்பது நிமிடங்களின் பின்னரே குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனையின் பின்னர் இளைஞனின் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த இளைஞனின் திடீர் மரணம் மதுரங்குளி – கணமூலை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

0

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (18) காலை ஏமனில் ஹவுத்தி பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால், ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (19) முதல் 26 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

66 பேரை தெரிவிற்காக 659 பேர் போட்டி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டி – மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தெரிவிப்பு.

இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 102387பேர் இந்த உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.கரைச்சி பிரதேச சபையில் 35உறுப்பினர்களளை தெரிவு செய்வதற்காக 342பேர் போட்டியிடுவதாகவும் பச்சிலைபள்ளி பிரததேச சபையில் 13பேரை தெரிவு செய்வதற்காக 128.பேர் போட்டியிடுவதாகவும் பூநகரி பிரதேச சபையில் 18பேரை தெரிவு செய்வதற்காக 189பேர் போட்டியிடுவதாக தெரிவித்தார்.