Home Blog Page 23

உங்கள் பணத்துக்கு ஆபத்து: 26 பிரமிட் செயலிகளை முடக்கியது மத்திய வங்கி!

உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு வரும் ஒரு குறுஞ்செய்தியோ அல்லது சமூக வலைத்தள விளம்பரமோ, உங்கள் வாழ்நாள் சேமிப்பையே சுருட்டி எறியக்கூடும் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா? அதிக வட்டி மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி இலங்கை மக்களைக் கவரும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களுக்கு எதிராக, இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவை இணைந்து இப்போது மிகத் தீவிரமான வேட்டையை ஆரம்பித்துள்ளன.

இந்த மோசடி வலையின் பின்னணியைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பாதுகாக்குமாறு கொழும்பு தலைமை நீதவான், மத்திய வங்கிக்கும் CIDக்கும் கடுமையான உத்தர பிறப்பித்துள்ளார். இதுவரை 25 ஆக இருந்த தடைசெய்யப்பட்ட பிரமிட் அமைப்புகளின் பட்டியல், அண்மையில் கண்டறியப்பட்ட ‘TM App’ என்ற புதிய செயலியின் வருகையோடு தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் நிதி பாதுகாப்பு தொடர்பான அச்சம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து, எதிர்வரும் 3 மாத கால அவகாசத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (C) பிரிவின் கீழ், மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் இந்த விசாரணைகளை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில், இந்த மோசடி செயலிகளின் ஊடுருவல் நேற்று இன்று ஆரம்பித்தது அல்ல. 2024-2025 காலப்பகுதியில் Beecoin, Fast Win, Pro Care போன்ற பல செயலிகள் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 24 ஆகவும், ஜூலை மாதத்தில் “Infinity Rover (Pvt) Ltd” சேர்க்கப்பட்டு 25 ஆகவும் விரிவடைந்தது. இதன் உச்சகட்டமாகவே தற்போது ‘TM App’ பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களின் பணத்தைச் சூறையாடிய OnmaxDT, MTFE App, Qnet/Questnet போன்ற மிகப்பெரிய நெட்வொர்க்குகள், தொடர்ச்சியான விசாரணைகளின் மூலமே முற்றாக முடக்கப்பட்டு அவற்றின் கணக்குகள் முடக்கப்பட்டன. இருப்பினும், புதிய பெயர்களில் புதுப்புது செயலிகள் உருவெடுத்துக் கொண்டே இருப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை அறிவிப்பின்படி, இத்தகைய பிரமிட் திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை சமூக வலைத்தளங்களில் ஊக்குவிப்பது, விளம்பரப்படுத்துவது அல்லது அதற்கு நிதியுதவி செய்வதும் கடுமையான குற்றமாகும். இதில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பாரிய அபராதங்களும் சிறைத்தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாறான கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு, 

Tiens Lanka Health Care (Pvt) Ltd 
Best Life International (Pvt) Ltd 
Mark – Wo International (Pvt) Ltd 
V M L International (Pvt) Ltd 
Global Lifestyle Lanka (Pvt) Ltd 
Fast3Cycle International (Pvt) Ltd 
Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka 
OnmaxDT 
MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group 
Fastwin (Pvt) Ltd 
Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd 
Ride to Three Freedom (Pvt) Ltd 
Qnet / Questnet 
Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 
Ledger Block 
Isimaga International (Pvt) Ltd 
Beecoin App and Sunbird Foundation 
Windex Trading 
The Enrich Life (Pvt) Ltd 
Smart Win Entrepreneur (Pvt) Ltd 
Net Fore International (Pvt) Ltd / Netrrix 
Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd 
SGO / sgomine.com 
I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms 
Infinity Rover (Pvt) Ltd TM App

பார்ளிமென்ட் ப்ரீமியர் லீக்: ஆண்கள் பிரிவில் ‘றோயல் றிசீவர்ஸ்’ அபார வெற்றி!

இலங்கை பாராளுமன்றத்தின் அத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில், கோட்டே ஆனந்த சாஸ்த்ராலயா விளையாட்டு மைதானம் திடீரென ஒரு சர்வதேச கிரிக்கெட் அரங்கம் போல அதிரத் தொடங்கியது. பாராளுமன்ற பணியாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வருடாந்தம் நடத்தப்படும் ‘பார்ளிமென்ட் ப்ரீமியர் லீக் 2026’ (PPL) மென்பந்து கிரிக்கெட் தொடர், இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உச்சகட்ட விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது.

மைதானத்தில் தூசி பறக்க நடைபெற்ற இந்த அசாத்தியமான கிரிக்கெட் போரில், ஆண்களுக்கான பிரிவில் கயான் பெரேரா தலைமையிலான ‘றோயல் றிசீவர்ஸ்’ அணி தங்களின் அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை வீழ்த்தி, மகுடத்தை தன்வசப்படுத்தியது. அதேநேரம், களத்தில் தங்களுக்கு ஈடுஇணையே இல்லை என்பதை நிருபிக்கும் வகையில், பெண்கள் பிரிவில் கீதானி விதானபத்திரண தலைமையிலான ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணி தொடர்ந்து 3வது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கி வரலாற்று சாதனை படைத்தது!

இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடிய பிரதீப் ரணதுங்க தலைமையிலான ‘தியவன்னா ரைடர்ஸ்’ அணி ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மினோலி மதுஷிலா தலைமையிலான ‘ஒன் டு ஒன் கேர்ள்ஸ்’ அணி பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றன. போட்டிகள் அனைத்திலும் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு விக்கெட்டும் அரங்கத்தையே அதிரவைக்கும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தன.

இந்த பிரம்மாண்டமான தொடரின் நிறைவு விழா மற்றும் வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கான கிண்ணம் வழங்கும் நிகழ்வு, கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதி குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன, சணச நிறுவனத் தலைவர் கலாநிதி பி.ஏ. கிறிவந்தெனிய உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இத்தொடரில் தனிநபர் திறமையால் மைதானத்தை தங்களின் வசமாக்கிய நாயகர்களும் உருவெடுத்தனர்! ‘றோயல் றிசீவர்ஸ்’ அணியின் சுரங்க விக்ரமஆரச்சி இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், பவந்த ஷாமிக் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும், ஜனித் ஆரியதிலக போட்டித் தொடரின் நாயகனாகவும் விருதை தட்டிச்சென்றனர். தியவன்னா ரைடர்ஸ் அணியின் ஏ.ஜி. சுரேஷ் சதுரங்க குமாரஜீவ சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜொலித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, PPL வரலாற்றிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொடரின் ‘சிறந்த வீராங்கனை’ என்ற வரலாற்றுப் பெருமைமிக்க விருதை ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணியின் ருவங்கா கமகே தனது வசம் ஈர்த்துக் கொண்டார்!

மாகாண சபை தேர்தலை உடனே நடத்துங்கள்! – இலங்கைக்கு இந்தியா அழுத்தம்!

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் பெருத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிமுக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கையில் நீண்டகாலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின்படி, தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்த விக்ரம் மிஸ்ரி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய அரசியலமைப்பு திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்துடன் இந்திய அழுத்தங்கள் நிற்கவில்லை; பெருந்தோட்டத் துறை மக்களுக்கு இந்திய நிதியுதவியின் 4ஆம் கட்டத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறும், எல்லை தாண்டி கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்குமாறும் அவர் இலங்கை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மையமாகக் கொண்டு 2024 டிசம்பர் மாத கூட்டு அறிக்கையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அளித்த “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கை நிலப்பரப்பு பயன்படுத்தப்பட மாட்டாது” என்ற வாக்குறுதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மிஸ்ரி, இது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு பங்காளித்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வலுவான அஸ்திவாரமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார மற்றும் இந்திய பிரதமர் மோடியின் விஜயங்களின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை தடையின்றி முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து இலங்கை வீரர்!

உலக விளையாட்டு அரங்கில் இலங்கை என்ற குட்டித் தீவின் பெயர் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஈட்டி எறிதல் களத்தில் இதுவரை எவருமே எட்டாத உச்சத்தை எட்டி, அகில உலகத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இலங்கையின் வளர்ந்து வரும் நட்சத்திர நாயகன் ரூமேஷ் தரங்க!

அண்மையில் கிளாஸ்கோவில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இதற்கு பிள்ளையார் சுழி போட்டன. மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மூச்சை அடக்க வைத்த அந்த நொடியில், ரூமேஷ் தரங்கவின் கைகளில் இருந்து புறப்பட்ட ஈட்டி காற்றைப் பிளந்து கொண்டு 89.75 மீற்றர் தூரத்தை எட்டி வீழ்ந்தது. அந்த ஒற்றை எறிதல், அவருக்குத் தங்கப் பதக்கத்தை மட்டுமல்ல, உலக சாதனைக்கான நுழைவுச் சீட்டையும் பெற்றுத் தந்தது.

இந்தத் தங்கப் பதக்க வெற்றியின் தொடர்ச்சியாக, சர்வதேச விளையாட்டு உலகம் தற்போது வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரூமேஷ் தரங்க தற்பொழுது 1,354 புள்ளிகளைப் பெற்று, ஆடவருக்கான ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார்!

இது வெறும் ஒரு போட்டியின் வெற்றியோ அல்லது ஒரு பதக்கத்தின் பெருமையோ மட்டுமல்ல; ஈட்டி எறிதல் விளையாட்டு வரலாற்றிலேயே உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ‘முதல் இலங்கையர்’ என்ற மகத்தான சரித்திர சாதனையை அவர் தாய்நாட்டிற்கு எழுதித் தந்துள்ளார். இமாலய திறமையாலும் விடாமுயற்சியாலும் உலகின் உச்சத்தைத் தொட்டுள்ள ரூமேஷ் தரங்கவிற்கு தற்போது உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் தந்தையார் ஹரிஸ் டி சில்வா காலமானார்!

இலங்கையின் வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாத்த பெருஞ்சுமடு சரிந்தது: ஹர்ஷ டி சில்வாவின் தந்தையார் ஹரிஸ் டி சில்வா காலமானார்!

இலங்கையின் முன்னணி அரசியல்வாதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் புகழ்பெற்ற மூத்த பொது நிர்வாக அதிகாரியும், கலாநிதி ஹர்ஷவின் அன்புக்குரிய தந்தையாருமான ஹரிஸ் டி சில்வா (Haris de Silva), ஆகஸ்ட் 5, 2026 இன்று தனது 93ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான ஹரிஸ் டி சில்வா, சாதாரண அரச அதிகாரியாக தனது பயணத்தைத் தொடங்கி, நாட்டின் மிக உயரிய அமைச்சுச் செயலாளர் பதவி வரை உயர்ந்தவர். குறிப்பாக, இலங்கையின் தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் (Department of National Archives) பணிப்பாளராக அவர் ஆற்றிய பணிகள், நாட்டின் வரலாற்றைப் பாதுகாப்பதில் பெரும் திருப்புமுனையாக அமைந்தன.

இலங்கையின் பழமையான அரச ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகள் மற்றும் காப்பக முறைகளை நவீனமயமாக்கி, அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்ததில் இவருக்கே பெரும் பங்குண்டு. இவரது இந்த தன்னிகரற்ற சேவையைக் கெளரவிக்கும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற “சர்வதேச காப்பகங்கள் கவுன்சில்” (International Council on Archives in Paris) இவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கிச் சிறப்பித்திருந்தது.

அன்னாரின் மறைவுச் செய்தி வெளியானதும் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரின் உடல் இல. 43/91, பூர்வாராம வீதி, கொழும்பு 05 இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரியைகள் நாளை (06) மாலை 5. 30 மணிக்கு கிருளப்பனை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிரடி கைது!

சுடச்சுடக் கிடைத்த அதிரடித் திருப்பம்: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கம்பிகளுக்கு பின்னால்!

இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (05) முற்பகல் வாக்குமூலம் ஒன்ற வழங்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்தபோதே, அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கைதின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், தனது அலுவலகப் பணிகளுக்காக எனக்கூறி 4 ஊழியர்களை அவர் நியமித்துள்ளார். ஆனால், அதில் மூன்று ஊழியர்களை தனது சொந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைக்கு அமர்த்தியுள்ளார் என்பதுதான் இதில் வெளிவந்துள்ள பிரதான குற்றச்சாட்டாகும். எஞ்சிய ஒரு ஊழியரும் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு, தனிப்பட்ட வியாபாரத்தை கவனித்து வந்த இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறித்த 4 ஊழியர்களுக்காகவும் அரசாங்கத்தினால் ரூபா 27 லட்சத்து 68 ஆயிரத்து 836 ரூபாய் 14 சதம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு சொத்துக்களையும் ஊழியர்களையும் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரின் இந்த விவகாரம், அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ளது.

அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்குமிடையே உச்சக்கட்டப் போர்!

டெய்லி மிரர்: இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தைச் சுற்றி மீண்டும் ஒரு பாரிய நிர்வாகப் புயல் மையம் கொண்டுள்ளது. இம்முறை நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனத்திற்குள் மாத்திரமல்லாமல், அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சுக்குள்ளேயே அதிகாரப் போட்டி வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்குவிற்கும் இடையிலான முரண்பாடு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடைக்கால முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஒருவரை நியமிப்பது தொடர்பிலேயே இந்த உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளதாக விமான சேவை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த மோதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பில் பிரதி அமைச்சர் முறையான விசாரணை ஒன்றை நடத்தியுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் பிரதி அமைச்சரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும், அமைச்சர் அனுர கருணாதிலக்க அதில் நேரடியாகத் தலையிட்டு விசாரணையை காலையிலிருந்து மாலை வரை தாமதப்படுத்தி, இறுதியில் பாதியிலேயே முடித்து வைத்துள்ளார்.

மறுபுறம், கடந்த 16 மாதங்களாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிரந்தர CEO ஒருவரை நியமிக்கத் தவறியமை குறித்து நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரு கட்ட நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தபோதிலும், தகுதியான ஒருவரைக் கண்டறிய முடியாமல் போனது பெரும் சோகம் என மேற்பார்வைக் குழுவின் தலைவர் எம்பி எஸ்.எம். மரிக்கார் சாடியிருந்தார்.

இந்த தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப நிறுவனத்தின் உள்நாட்டிலிருந்தே இரு அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், பிரதி அமைச்சரைக் கலந்தாலோசிக்காமல் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) பிரதானி சமர பெரேராவை இடைக்கால CEO ஆக நியமிக்க அமைச்சர் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், குறித்த அதிகாரிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெடித்த பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளும், விசாரணைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்ட ஜே.வி.பி (JVP) சார்பு தொழிற்சங்கத்தின் கொந்தளிப்பும் இந்த நியமனத்தைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. தற்போது தொழிற்சங்கங்கள் அந்த அதிகாரிக்கு எதிராகப் போராடத் தயாராகி வருவதால் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விவகாரம் அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பாதுகாப்புத் துறையில் அதிரடி மாற்றம்! முப்படைகளின் உயர் பதவி ரத்தாகிறது?

இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவ மாற்றத்திற்கு வித்திடும் அதிரடி நடவடிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாக நாட்டின் முப்படைகளையும் ஒருங்கிணைத்து வந்த மிக உயரிய பதவியொன்றை முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திடீர் நகர்வு நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ளது.

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அவர்களால் இந்த விசேட சட்டமூலம் நேற்று (04) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புத் தலைமை அதிகாரி சட்டத்தை ரத்து செய்வதையும், அதற்கு இணைந்த ஏனைய முக்கிய விடயங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான தீவிர விவாதங்கள் நடைபெற்று, சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த புதிய சட்டம் அமுலுக்கு வரும் தருணத்திலிருந்து, பாதுகாப்பு தலைமை அதிகாரி (CDS) என்ற பதவியே முற்றாக இல்லாது போகும் என்பதுதான் இதில் உள்ள மிக முக்கிய அம்சமாகும். அதேவேளை, குறித்த பதவியை வகிக்கும் நபர் உடனடியாக தனது தாய் படைப்பிரிவான இராணுவம், கடற்படை அல்லது விமானப்படைக்கே மீண்டும் இணைக்கப்படுவார். அத்துடன், அப்பதவிக்காக இயங்கி வந்த அலுவலகத்தின் அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களும் உடனடியாக பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்படவுள்ளன.

இராணுவ அதிகாரப் பரவலாக்கலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இந்த சட்டமூலத்தின் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன? நாட்டின் பாதுகாப்பு நிர்வாகத்தில் இனி வரப்போகும் மாற்றங்கள் எத்தகையவை? என்ற கேள்விகளுடன் நாடு முழுவதிலும் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இலங்கையில் 2.5 லட்சம் பேரை சூழும் எல் நினோ காலநிலை ஆபத்து?

இலங்கையின் வான்பரப்பில் மெல்ல மெல்ல உருவாகிவரும் காலநிலை மாற்றம், நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்கள், வரவிருக்கும் நாட்களை எண்ணி மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. எல் நினோ (El Niño) தாக்கத்துடன் இணைந்து தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டில் சுமார் 2,50,000 மக்கள் கடுமையான இயற்கை அபாயத்திற்கு முகங்கொடுக்கக்கூடும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ள செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அபாயத்தின் வீரியம் இத்துடன் முடிந்துவிடவில்லை. அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழையின் நேரடித் தாக்கத்தினால் மட்டும் 1,50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரழிவிற்குள்ளாகும் பேராபத்து காத்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த காலநிலை மாற்றம், எப்போது வேண்டுமானாலும் நாட்டின் பெரும் பகுதியை ஸ்தம்பிக்க வைக்கும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் நாட்டின் வாசற்படியில் வந்து நிற்கும் நிலையிலும், நிலைமையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஏற்படப்போகும் பாதிப்புகளை எதிர்கொள்ளவோ இதுவரை எந்தவொரு சர்வதேச உதவியும் கோரப்படவில்லை என்ற விசித்திரமான உண்மை வெளிவந்துள்ளது. அரசாங்கமோ அல்லது வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ தரப்போ இதுவரை சர்வதேச சமூகத்தின் உதவியை நாடவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை, வரவிருக்கும் பேரழிவை நாடு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

காலநிலை முன்கணிப்புகளின்படி இம்முறை வழக்கமான அல்லது சற்று குறைவான மழையே பதிவாகும் எனக் கூறப்பட்டாலும், அதை நம்பி ஏமாந்துவிட முடியாது என்பதே தற்போதைய கள யதார்த்தம். ஏனெனில், இந்த மழைவீழ்ச்சியானது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும், பிரதேசத்திற்குப் பிரதேசம் மழையின் அளவு திடீரென மாறுபட்டு கடுமையான அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இயற்கை கொடுக்கப்போகும் இந்த திடீர் அதிர்ச்சிக்கு நாம் ஆயத்தமாகிவிட்டோமா என்ற கேள்வியே இப்போது அனைவர் மத்தியிலும் தொக்கி நிற்கிறது.

மாதம்பே கூட்டுறவில் பெரும் அதிர்ச்சி! நிறைவேறிய நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

ஜுட் சமந்த

மாதம்பே பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பம் தற்போது நிகழ்ந்துள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மாற்றமொன்று பொதுச்சபைக் கூட்டத்தில் அரங்கேறியுள்ளது. சங்கத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பரபரப்பான சம்பவம் மாதம்பே கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான ரங்கசாலையில் (அரங்கில்) அண்மையில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. கூட்டத்தின் ஆரம்பம் முதலே இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய இழுபறி நிலை, வாக்கெடுப்பின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட அந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த அரங்கமும் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. காரணம், வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே இந்த மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 43 வாக்குகள் கிடைத்த அதேவேளை, தலைவரைக் காப்பாற்றுவதற்காக எதிராக 41 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டன. மொத்தம் 86 காரியசபை பிரதிநிதிகளைக் கொண்ட இந்தப் பொதுச்சபையில், அன்றைய தினம் 84 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தனர். சமூகமளிக்காத அந்த இரண்டு உறுப்பினர்கள் யார்? அவர்கள் வந்திருந்தால் முடிவு மாறியிருக்குமா? என்ற கேள்விகளுடன் இந்த நூலிழை வெற்றி தற்போது மாதம்பே மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.