Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 3

படுதோல்வியடைந்த இலங்கை அணி!

0

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 

போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்னிங்ஸை இடைநிறுத்தியது. 

இந்தநிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தமையினால் பளோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. 

அதற்கமைய, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

மீண்டும் இணையும் இரு இமயங்கள்!

0

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தலைமைத்துவம் மற்றும் சின்னம் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கான உடன்பாட்டை எட்டுவதே விவாதங்களின் முதன்மை நோக்கம் என்று தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பான பிரச்சினைகளை பின்னர் போசிக்கொள்ளலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த பல உறுப்பினர்கள் உள்ளனர். வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மிக முக்கியமான தேர்தல். அதற்கு முன் ஒரு உடன்பாட்டை எட்டுவதே எங்கள் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தில், மற்ற கட்சிகளும் எங்களுடன் சேரலாம். சில சமயங்களில் நாம் உள்ளூராட்சித் தேர்தல்களில் பொதுவான சின்னத்துடன் போட்டியிடலாம்.

இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கருத்துடைய கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அதற்காக நாங்கள் ஒரு தொடக்கத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

மஹிந்தவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல இதனைத் தெரிவித்தார்.

“30,000 சதுர அடி…ஐந்து ஆண்டுகள். முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால்,… இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே சென்று விட்டால் கௌரமாக இருக்கும். இனி அவரே யோசிக்க வேண்டும்” என்றார்.

ஜனாதிபதியின் முன்னே வெடித்த சர்ச்சை!

0

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், குறித்த விகாரை தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

பாதுகாப்பு அல்லது அபிவிருத்தி நோக்கங்களின்றி குறித்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், விகாரை கட்டப்பட்ட காணியின் உரிமையாளர்கள் மற்றுமொரு காணியைப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

குறித்த கூற்றை மறுத்துக் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார். 

இதேவேளை அவர்களைத் தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தையிட்டி விகாரை விடயத்தை வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 

மாறாக விகாரை கட்டப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

மகளை தனது கையாலே கொன்ற தாய்!

0

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையல், அவரது 36 வயது மூத்த சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று (31) அதிகாலை 3.30 மணியளவில் 33 வயது திருமணமாகாத பாடசாலை ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸாருக்கு எழுதியதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கடிதத்தைக் கண்டுபிடித்தனர்.

அதில் அவர் தனது மகளைக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக 14 ஆண்டுகளாக சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலை இடம்பெற்ற நாளில் தனது கழுத்தை நெரிக்க மகள் வந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், பொலிசார் அந்த வீட்டிற்குச் சென்றபோது, ​​76 வயதான தாயாரும் அதிகப்படியான மருந்தை உட்கொண்டு நாற்காலியில் மயங்கிக் கிடந்தார்.

அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதன் காரணமாக, அவர் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்புறுபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானத்தில் வந்த மிக மோசமான பொருள்!

0

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இந்நாட்டிற்கு வந்த  சந்தேக நபர் ஒருவரும் மற்றும் குறித்த கடத்தலுக்கு உதவிய மற்றும் துணை போன சந்தேக நபர் ஒருவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து  2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த சந்தேகநபரும் அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 36 வயதுடைய ஹங்வெல்ல மற்றும் உடுகம்பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மொட்டுக்கட்சி எடுத்த அதிரடி தீர்மானம்!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு இன்று (31) கூடியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விஜேராமவில் உள்ள இல்லத்தில் இன்று பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமானது என்று அரசியல் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அள்ளி வீசிய வாக்குறுதிகள்!

0

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
• பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.
• பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தப்படும்
.
• மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறை ஒத்துழைக்க வேண்டும்
.

மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டில் எங்கும் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ள போதிலும், காணி வழங்கியவர்களிற்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு மிகவும் பயனுறுதியான் திட்டமாக முழுமையாக மீளமைக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இம்முயற்சிக்கு உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு, அரச நிறுவனங்களில் சுமார் 30,000 வெற்றிடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு ஏற்ப இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும், பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவித்த ஜனாதிபதி அவர்களை ஆட்சேர்ப்புக்கு முன்வருமாறும் ஊக்குவித்தார்.

வடமாகாணத்தில் போக்குவரத்து முறையை வலுப்படுத்துவதற்கான விரிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (ளுடுவுடீ) மற்றும் தனியார் போக்குவரத்துசபை இணைந்து பேரூந்து இயக்கத் திட்டத்தை ஆரம்பிப்பதும் இதில் அடங்கும். மேலும், இப்பகுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கம் அதன் அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, பிராந்தியத்திற்கான இலக்கு முன்முயற்சிகளை உறுதிசெய்து வருவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் புதிய சுற்றுலா இடங்களை அரசாங்கம் அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வடமாகாணத்தில் அரச துறைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் அரசியல் தலையீடுகள் இன்றி மேற்கொள்ளப்படும் என்றும், பிரதேசத்தில் அரச சேவையை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்தப் பிரதேசத்தில் நிலவும் கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டில் ஈடுபடும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலேயே மிகக்குறைந்த குழாய்க் குடிநீரைப் பயன்படுத்தும் பிரதேசமாக வடக்கு மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அவர், அப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மாகாணத்தில் சுத்தமான குடிநீரை மேம்படுத்தும் வகையில் புதிய நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் எண்ணற்ற சவால்களை அங்கீகரித்ததோடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறைகள் இரண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தனியார் வாகன இறக்குமதி குறித்த முக்கிய தகவல்!

0

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

எனினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய இதில் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளமைக்கு இணங்க Toyota corolla cross ரக வாகனத்தை வரி இல்லாமல், 55 தொடக்கம் 60 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toyota corolla cross ரக வாகனத்தை வரி இன்றி 60- 65 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Toyota yaris ரக வாகனத்தை 27- 30 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.Toyota yaris cross ரக வாகனத்தை வரி இல்லாமல் 55 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், Suzuki wagon R ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு, சிறப்பான நிலையில் இருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது என்றும் வாகன இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ பழைய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ ஒரே விதமான வரியே விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள குறித்த சங்கம், பாரியளவில் செலவு செய்து புதிய வாகனத்தை இறக்குமதி செய்வதைவிட 5 அல்லது 7 வருடங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை இறக்குமதி செய்வதானது, அரசாங்கத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கத்திற்கு தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகிய முக்கிய அதிகாரி!

0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் அந்தப் பதவியில் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கி ஒரு நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த 29 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.