Home Blog Page 300

கடற்படைக்கு 16 அதிகாரிகள் நியமனம்!

கடற்படைக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 16 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்

இலங்கை கடற்படைக்கு 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பதினாறு (16) அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 பெப்ரவரி 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, நிறைவேற்றுப் பிரிவுக்கு நான்கு (04) அதிகாரிகளும், வழங்கல் பிரிவுக்கு நான்கு (04) அதிகாரிகளும், மின்சாரம் மற்றும் மின்னணுப் பிரிவுக்கு ஒரு (01) அதிகாரியும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு ஒரு (01) அதிகாரியும், தன்னார்வ நிர்வாகப் பிரிவுக்கு ஆறு (06) அதிகாரிகள் உட்பட இரண்டு (02) பெண் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி நேரடி ஆட்சேர்ப்பில் இருந்து கடற்படையின் முதல் ஆட்களாக இணைந்து கொண்ட புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கு, மேலும் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, கடற்படையினரின் பெற்றோர்கள் மற்றும் அன்புக்குரியவர்களினால் கடற்படை அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றியதாகவும் கடற்படையில் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கையை வாழ அவர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

கடற்படை சேவை என்பது வெறும் வேலையல்ல, நாட்டிற்கான உன்னத சேவை, அதையும் தாண்டி, பலவிதமான அனுபவங்களையும், தொடர்ந்து மாறிவரும் அனுபவங்களையும் பெறக்கூடிய ஒரு தொழில்முறை துறையாகும், மேலும் புதிய அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் அதிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தங்கள் கடமையை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும். கடற்படை வாழ்வின் நான்கு முக்கிய தூண்களாக நேர்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியவற்றைக் கருதுவதன் மூலம், புதிய அதிகாரிகளின் தொழில் வாழ்க்கை வெற்றியடைவது மட்டுமல்லாமல், பெருமை வாய்ந்த இலங்கை கடற்படையின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும், 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை நிர்வாகக் குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை ‍கட்டளை தளபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் பல அன்புக்குரியவர்களும் கலந்துகொண்டனர்.

சாரணர் இயக்கத்தின் தந்தைக்கு மரியாதை!

பேடன் பவல் அவர்களின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் நடைபெற்றது.

22.02.1857 ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் பேடன் பவல், பிரிடிஷ் நாட்டின் முன்னாள் இராணுவ வீரராக கடமையாற்றியதுடன், ஆண்கள் சாரணர் இயக்கத்தை உருவாக்கி தனது 83ஆவது வயதில் 1941ஆம் ஜனவரி மாதம் எட்டாம் திகதி இறந்தார்.

அவரின் 168 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டமானது நாடளாவிய ரீதியில், புகையிரத நிலைய இலங்கை சாரணர் அணியினருடன் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டுள்ளனர்.

இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்

எக்ரி டெக் 2025 விவசாய மாநாடு யாழில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஒரு முற்சியாக விவசாயிகளையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் விவசாய மாநாடு இன்று இடம்பெற்றது.

எக்ரி டெக் 2025 (Agri tech 2025) விவசாய மாநாடு எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக விவசாயம் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வடமாகாண விவசாயப்பணிப்பாளர் ,விவசாய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய துறைசார்ந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் புத்தாக்க கண்காட்சியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

இலங்கையும் ஒரு போட்டியாளராக மாறும்!

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற The Innovation Island Summit – 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் Innovation Island Summit – 2025 மாநாட்டை நடத்துவதால், இந்த நாட்டில் புதிய தொழில்முனைவோரின் புத்தாக்க ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தின் பல்வேறு நிலைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்றும், அந்த மனித நாகரிகத்தின் ஒவ்வொரு புதிய அத்தியாயமும் புத்தாக்கத்தின் மூலம் எழுதப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளதாக ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளதாக அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழுக்கு விரைந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு விசேட மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டார்.

இவ்விசேட மேற்பார்வையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் ஊர்காவற்துறை ஆதார பைத்தியசாலை, வேலனை பிரதேச வைத்தியசாலை, வேலனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் மாங்குளம் ஆதார வைத்தியசாலை, ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள ஆளணி மற்றும் பௌதீக வளங்களில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அப்பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில், நடுத்தர மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களைப் பாதிக்கும் தொற்று மற்றும் தொற்றா நோய்க் கட்டுப்பாடு, சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் தற்போதைய போசனை மட்டம், எதிர்கால போஷாக்கு திட்டங்கள், திரிபோஷா கிடைத்தல், கள உத்தாயோகத்தர்களின் போக்குவரத்து சிக்கல் மற்றும் சகல ஊழியர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பணியாளர் குழுவிற்கு ஏற்படும் நடைமுறை சிக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதுடன் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அதே சந்தர்ப்பத்தில் தீர்வு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரணிலின் பாதையிலே அரசாங்கம் செல்கிறது!

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமூக செலவீனங்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தலையில் எல்லையற்ற சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.

மக்கள் ஆணையை முற்றுமுழுதாக அரசாங்கம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வரலாற்று ரீதியான மற்றுமொரு தவறு நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிப்பதாக சுட்டிக்காட்டினார்.

2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவோம் எனப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அதற்காகத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவது என்றால் பொருளாதார வளர்ச்சி உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

1975 ஆண்டு முதல் இதுவரை ஐ.எம்.எப் 75 நாடுகளில் செயற்படுத்திய திட்டங்களில் 59 சதவீதமானவை 2 ஆம் 3 ஆம் 4 ஆம் கடன்மறுசீரமைப்புக்கு செல்ல நேரிட்டதாகக் கூறினார்.

இது பாரதூரமான அழிவாக அமையும் என்றும் இதனை யாரும் வெளியில் சொல்வதில்லை எனவும் தெரிவித்தார்.

Click here to join our whatsApp group

பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடனை திருப்பிச் செலுத்தவும் முயற்சிக்கும் அரசாங்கம் எவ்வாறு அரச வருமானத்தை அதிகரிப்பது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவில்லை எனக் கூறினார்.

இது தொடர்பில் தற்போது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்கள் வெறுமனே கற்பனை விடயங்களாகவே தம்மால் பாரக்க முடியும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

எனவே அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேநேரம் மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர் கடந்த நாட்களில் வழங்கப்படாமல் இருக்கும் அந்த தொகையை வழங்குமாறு வலியுறுத்தினார்.

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ ஆரம்பம்!

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட நீர் மின் சேமிப்பு திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மொத்தம் 600 மெகாவோட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின் கட்டமைப்பிற்குள் வழங்கும்.

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் இலக்கை அடைவதில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் இணைக்கும் பாரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நாட்டின் பயணத்தில் எரிவாயு வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் என்ற இலக்கை அடையும் என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.  

அதேபோல் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு திட்டத்தின் நிதி வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு குறைந்த விலையை உறுதி செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நீண்டகால நிதியைப் பெறுவதே இதன் நோக்கம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த திட்டத்தின் ஊடாக எரிசக்தி சுதந்திரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உறிஞ்சுவதற்கான அமைப்பு ஆதரவு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join our whatsApp group

மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றம் செல்வார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவருடன் இணைந்துகொள்ள உள்ளதாக தெற்கு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில், அவரின் பாருமன்ற பிரவேசம் ஒரு அரசியல் சூறாவளியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் எந்த வகையிலும் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

சிலவத்துறை குறித்து ஆதங்கம் வெளியிட்ட ஹக்கீம்!

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள்.

ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்..

மன்னார், சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளையும், அவர்களது உடைமைகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை(20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜானதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரஸ்தாப, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்த சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பாரிய நிலப்பிரதேசம் யுத்தம் நிகழ்ந்து வந்த1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பழைய சிலாவத்துறை கிராமம் பெரும்பாலும் அரசாங்கத்தினால் கடற்படைக்கு கையகப்படுத்தப்பட்டு, இன்னும் தொடர்ந்து பல்லாண்டுகளாக நாங்கள் விடுத்து வருகின்ற வேண்டுகோள்களை முற்றாகப் புறக்கணித்து அரசாங்கத்தினால் கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருவதனால், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட இந்தப் பாரிய நிலப்பரப்பு எதிர்கால சந்ததிகளுக்கு இல்லாமல் போகக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானோர் பின்னர் மீளக் குடியேறியுள்ள போதிலும் , அவர்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளை விவசாயச் செய்கை பண்ணவோ, அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவோ, அங்கு முன்னர் போன்று வழமையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதுள்ளனர். வேலி கட்டியும், அரண் அமைத்தும் மிகப் பெறுமதி வாய்ந்த இந்த நிலப்பரப்பை தொடர்ந்தும் அரசாங்கம் கடற் படை முகாமாக விஸ்தரித்திருப்பது அநீதியானது.

இந்தப் பாரதூரமான விஷயத்தைப் பற்றி நாங்கள் முறையிடுகின்ற நான்காவது ஜனாதிபதியாக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே இதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக, உரிய சிலாபத்துறை கடற்படை முகாமிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பையும், அங்கு வசித்து வந்தவர்களுக்குரிய உடைமைகளையும் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விடுமாறு உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றார்”.

அதனைத் தொடர்ந்து, இவ்வாறே திருகோணமலையிலும் மாபல் பீச், வெள்ளை மணல், குடாக் கரை கடலோரம் மிகவும் வனப்புமிக்கவை. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை உல்லாச பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பயனுள்ளதாக முதலீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதற்கு முடியாமல் இருப்பதாகவும், அத்துடன், பிரதேச மக்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைககள் பாதிக்கப்படுவதாகவும் மு.கா தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு பொதுமக்கள் செல்வது கட்டுப்படுத்தப்படுத்தப்படுவது பற்றி கூறியபோது, அது தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். தகர்க்கப்பட்ட பள்ளிவாசலின் அமைவிடம் உட்பட்ட கருமலையூற்று (Deadsman Cove) கடலோரப் பிரதேசத்தின் நிலைமையையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த பிரச்சினைகள் பற்றியும் உரிய கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அனர்த்த முகாமைத்துவ சபை கடந்த மூன்று வருடங்களாக கூட்டப்படாமல் இருப்பது பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கொண்டு வந்தபோது, அதற்குரிய புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டு, அதன் பின்னர் அதனை மீண்டும் இயங்க வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள்ளார்.

M.N.M. யசீர் அரபாத் (BA) ஓட்டமாவடி