Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 31

பாரத குடியரசு தினச்சிறப்பும்: இலங்கை – இந்திய உறவுகளும்!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

நவீன பாரதத்தின் உதயம்

பாரத தேசத்தின் வரலாறு என்பது படிப்பினைகள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒரு காவியமாகும். ஜனவரி 26, 1950 அன்று இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மலர்ந்தது.

இது வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிகத்தின் மீளுருவாக்கமாகும்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான குழுவினால் செதுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச்சட்டம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அச்சாணியாக இன்றும் திகழ்கிறது.

வறுமையிலிருந்து விண்வெளி வரை

அன்று வறுமையிலும் பஞ்சத்திலும் தவித்த ஒரு தேசம், இன்று செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலம் அனுப்புமளவிற்கும் (Mangalyaan), உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் உயர்ந்து நிற்பது ஒரு வரலாற்று அதிசயம்.

குறிப்பாக, 2047ம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிப்பது அதன் வல்லரசு கனவின் உச்சமாகும். டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI), பசுமை எரிசக்தி மற்றும் தொழிநுட்பத்துறையில் இந்தியா இன்று உலகளாவிய தலைமைத்துவத்தை வழங்கி வருகிறது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: ஒரு மனிதாபிமானப்பார்வை
இந்தியாவின் இந்த எழுச்சி அதன் அண்டை நாடான இலங்கையுடனான உறவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒரு முக்கிய மைற்கல்லாகும்.

‘டித்வா’ புயல்: சோதனைக் காலத்தில் இலங்கைக்கு கைகொடுத்த தோழன்

2025ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையின் வட, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை நிலைகுலையச்செய்த ‘டித்வா’ (Dithwa) புயலின் போது, இந்தியா காட்டிய வேகம் அதன் உண்மையான நட்புறவை வெளிப்படுத்தியது.
புயல் கரையைஒகடந்த சில மணி நேரங்களிலேயே, ‘ஆபரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இந்தியா மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

கடற்படை உதவி:
இந்தியக்கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ என் எஸ் விக்ராந்த் (INS Vikrant), ஐ என் எஸ் உதயகிரி மற்றும் ஐ என் எஸ் சுகன்யா ஆகியவை கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களுக்கு விரைந்து வந்து 1,100 டன் நிவாரணப்பொருட்களைக் கையளித்தன.

விமானப்படை உதவி:
சி-130ஜே மற்றும் ஐஎல்-76 விமானங்கள் மூலம் 14.5 டன் உயிர்மருந்துகள் வழங்கப்பட்டன.

மருத்துவ சேவை:
கண்டி மற்றும் மஹியங்கனை பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கள மருத்துவமனைகள் (Field Hospitals) மூலம் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு: கிளிநொச்சி மற்றும் சிலாபம் பகுதிகளில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்தைச்சீரமைக்க வான்வழியாகக் கொண்டு வரப்பட்ட ‘பெய்லி’ (Bailey) பாலங்கள் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தின.

பொருளாதார மீள்கட்டுமாணம்:
இந்த இக்கட்டான சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீள்கட்டுமானப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 4,032 கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான நிதித்தொகுப்பை அறிவித்தார்.

இதில் 100 மில்லியன் டொலர் மானிய உதவியாகவும், 350 மில்லியன் டாலர் சலுகைக்கடனாகவும் வழங்கப்பட்டது. இதனை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் “இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் புதிய அத்தியாயம்” எனப்பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வல்லரசாக உருவெடுப்பது என்பது வெறும் இராணுவ பலத்தினால் மட்டுமல்ல, தனது அண்டை நாடுகளின் வளர்ச்சியிலும் பங்கெடுத்து, தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தான் அடங்கியுள்ளது. தரைவழி மற்றும் கடல்வழி இணைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றிணைவது, ஆசிய நூற்றாண்டின் (Asian Century) எழுச்சிக்கு வலுசேர்க்கும் சான்றாகும்.

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும் ஒரு வல்லரசாக பாரதம் திகழட்டும்.

இந்திய மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் எமது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்!

“இலவச சுகாதார சேவையைப் பலிகொடுக்காதீர்கள்!”

0

இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க ஐந்து அம்ச தொழிற்சங்கப் போராட்டம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிரடித் தீர்மானம்

இலங்கையின் அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், முறையான பணிச்சூழலை வலியுறுத்தியும் இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையானது ஐந்து பிரதான வழிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து அம்ச நடவடிக்கைகள்:

1. மருந்துப் பரிந்துரைகளை நிறுத்துதல்: கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) மருந்துகள் இல்லாத பட்சத்தில், நோயாளர்கள் அவற்றை வெளியில் உள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை (Prescription) வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2. ஆய்வுகூடப் பரிசோதனைகளைத் தடுத்தல்: வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ள முடியாத ஆய்வுகூடப் பரிசோதனைகளை, தனியார் வைத்தியசாலைகள் அல்லது வெளி ஆய்வுகூடங்களில் செய்து கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்காமை.

3. புதிய பிரிவுகளுக்கு முட்டுக்கட்டை: அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை முறையாக வழங்கப்படாத பட்சத்தில், வைத்தியசாலைகளில் புதிய சிகிச்சை பிரிவுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்காமை.

4. அரசியல் முகாம்களைப் புறக்கணித்தல்: அரசியல் நோக்கங்களுக்காக மற்றும் அரசியல் தேவைகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் அல்லது கிளினிக்குகளில் கலந்துகொள்ளாமை.

5. பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை: கிளினிக் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளிகளைப் பரிசோதிக்கும் போது, வைத்தியருக்கு உதவியாக உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்கத் தவறினால், வைத்தியர்கள் அந்த இடத்திலிருந்து கடமையிலிருந்து விலகிச் செல்வார்கள்.

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து விளக்கமளித்த வைத்தியர் சமில் விஜேசிங்க, “நாங்கள் வேலை செய்யாமல் இருப்பதற்காக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை; வேலை செய்யக்கூடிய முறையான சூழலை வழங்குமாறு கோரியே இதனை முன்னெடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தேவையான மருத்துவ வசதிகளை வழங்காமல் இலவச சுகாதார சேவையைச் சீர்குலைக்கும் பொறுப்பைச் சுகாதார அமைச்சும், அரசாங்கமுமே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுகாதாரக் கட்டமைப்பு அல்லது நோயாளர் பராமரிப்பு சேவைகள் இதனால் பாதிப்படைந்தால் அதற்கு அமைச்சும் அமைச்சருமே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தொடர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடி நிலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை!

0

கத்தோலிக்க தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை: பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2024 (2025) ஆம் ஆண்டிற்கான கத்தோலிக்க தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது,.

விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று “Exam Information Center” என்பதைத் தெரிவு செய்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைப்பு ஊடாகவோ விண்ணப்பிக்க முடியும்,.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி 2026.02.13 ஆகும்,.

ஒரு பாடத்தை மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 250/- ஆகும்,. இந்தக் கட்டணத்தை கடனட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) அல்லது தபால் அலுவலகங்கள் ஊடாகச் செலுத்த முடியும்.

இணையவழியில் கட்டணம் செலுத்திய பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும். அந்தப் பிரதி தர்மப் பாடசாலை அதிபர் அல்லது நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் ‘பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனப் பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்,.

சரியான பாடங்களை உள்வாங்கி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும் என்பதுடன், மீளாய்வுக் கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-2785105 அல்லது 011-2786235 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்,.

தகவல்: அ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆணையாளர் நாயகம்

மக்களுக்காக வாழ்ந்த தலைவனுக்கு மக்களின் இரத்த தானம்!

0

ஜூட் சமந்த

மக்கள் சேவையுடன் நினைவுகூரப்பட்ட சனத் நிஷாந்த: இரண்டாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு சமய மற்றும் சமூக நலன்புரித் திட்டங்கள் கடந்த 25 ஆம் திகதி நாள் முழுவதும் ஆராச்சிக்கட்டுவ, வென்னப்புவ மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

மறைந்த அமைச்சரின் மக்கள் பணிகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகளில், அவரது பாரியார் சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா கலந்துகொண்டு தேவையுடைய பொதுமக்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தார். அத்துடன், அமைச்சரின் நினைவாக அப்பகுதி மக்கள் பெருமளவில் ஒன்றிணைந்து இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தமது அன்புக்குரிய மக்கள் பிரதிநிதியின் பிரிவை நினைவுகூரும் வகையில், ஆன்மீக வழிபாடுகளுடன் மாத்திரமன்றி, உயிர்காக்கும் இரத்த தானம் மற்றும் வாழ்வுக்கு ஒளியூட்டும் கண்ணாடி வழங்கல் போன்ற மனிதாபிமானப் பணிகளுக்கூடாக அவரது நினைவுகள் மீண்டும் ஒருமுறை மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீதி விபத்துக்களில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள்!

0

ஜூட் சமந்த

மாதம்பை மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று 25 ஆம் திகதி இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நிகழ்ந்துள்ளன.

நேற்று 25 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் மாதம்பை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர் பிங்கிரிய – தலுப்பத்த பகுதியைச் சேர்ந்த லொகுபாலசூரியகே இந்துனில் கெலும் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஆகப் பணியாற்றுபவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் தற்போது சிகிச்சைக்காக மாதம்பை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நாள் அதிகாலை 1.00 மணியளவில் கொஸ்வத்தை ஜய மாவத்தை பகுதியில் மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கான்கிரீட் தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த லுனுவில – ஹால்தடுவன பகுதியைச் சேர்ந்த கருணாசாரிகே அமித் அசங்க என்பவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பொலிஸ் விசேட பணியகத்தின் தலைமையகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றுபவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

இந்த விபத்துக்கள் குறித்து மாதம்பை மற்றும் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!

0

ஜூட் சமந்த

மாரவில – மோதர வெல்ல பகுதியில் ஒரு குழுவினர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் ஒரு ஆண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு பெண் மாரவில ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து நேற்று 25 ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் குருணாகல் – வேவ வீதியைச் சேர்ந்த அனுருத்த மென்டிஸ் (வயது 35) ஆவார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர் கொஸ்கொட, கட்டுபிட்டியவைச் சேர்ந்த மகேஷி சதுராணி (வயது 29) என்ற பெண் என காவல்துறை தெரிவித்துள்ளது.

குருணாகலில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவொன்று நேற்று 25 ஆம் தேதி மாரவில பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் மாரவில – மோதர வெல்ல பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் (Current) சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மாரவில ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மரண பரிசோதனை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் பெருமளவான போதைப்பொருளுடன் 11 பேர் கைது!

0

“ஒன்றிணைந்த தேசம்” (A Nation United) என்ற தேசிய திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்,.

இன்று ஜனவரி 25 ஆம் தேதி திக்கோவிட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளையும் பரிசோதித்த போது, அவற்றில் 14 சாக்குகளில் பொதி செய்யப்பட்டிருந்த 184 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 112 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ (crystal methamphetamine) போதைப்பொருள் கண்டறியப்பட்டது.

கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு படகில் 5 சந்தேகநபர்களும், மற்றைய படகில் 6 சந்தேகநபர்களும் தொடர்பாடல் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டிலும் இந்த கூட்டு முயற்சி தொடர்கிறது என அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் என்பது ஒரு தேசிய நெருக்கடி என விபரித்த அமைச்சர், மீன்பிடி நடவடிக்கைகளின் மறைவில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க முடியாது என எச்சரித்தார். மேலும், சந்தேகத்திற்கிடமான கடத்தல்கள் குறித்து 1818 அல்லது 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது சர்வதேச கண் சிகிச்சை மாநாடு!

0

இலங்கையின் முதலாவது சர்வதேச கண் சிகிச்சை மற்றும் ஒளியியல் மாநாடு (DIYATARIPPU- EYE CARE 2026) இன்று (25) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆரம்பமானது.

இந்த மாநாடு கொழும்பு மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் (Monarch Imperial Hotel) இன்று முதல் நாளை (26) வரை இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

“எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பார்வை – உலகளாவிய கண் சிகிச்சையை மேம்படுத்துதல்” (Vision Beyond Borders – Advancing Global Eye Care) என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

தடுக்கக்கூடிய கண் நோய்களால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அனைவருக்கும் சமமான கண் சிகிச்சையை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

‘தியதரிப்பு’ என்ற பெயர் இலங்கையின் 700 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையை பறைசாற்றுவதாகவும், இது இலங்கையின் கண் சிகிச்சைத் துறையுடன் நீண்டகாலமாகத் தொடர்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண் என்பது மனிதனின் மிகவும் பெறுமதியான உறுப்பு என்பதால், பார்வையைப் பாதுகாப்பது என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.

கண் ஆரோக்கியத்தை உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் (Universal Health Coverage) ஒரு அங்கமாக அரசாங்கம் கருதுகிறது.

பாடசாலை கண் பரிசோதனை திட்டங்கள், முதியோர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒளியியல் சேவைகளை இணைத்தல் போன்றவற்றில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் கண் சிகிச்சைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஒதுக்கீடு செய்தல், கண் மருத்துவர்கள் மற்றும் தாதிகளுக்கு முறையான பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது.

இந்த மாநாட்டில் மருத்துவ ஒளியியல், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான கண் சிகிச்சை, பொதுச் சுகாதாரக் கண் சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் குறித்துக் கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெறவுள்ளன.

இந்த மாநாட்டை கண் சிகிச்சை நிறுவனம் (Eye Care Institute) மற்றும் இலங்கை கண் சிகிச்சை ஒளியியல் சங்கம் (Ceylon Eye Care Optometric Association) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதில் கொழும்பு மேயர் வ்ராய் கலி பல்தாசர், உலக ஒளியியல் சபையின் தலைவர் கலாநிதி ரஜீவ் பிரசாத் உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

சட்டத்தை மீறிய மாரவில மற்றும் கற்பிட்டி மீனவர்கள் கைது!

0

ஜூட் சமந்த

ஆழ்கடலில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘தோகை இறகு சுறாக்கள்’ (Thresher Sharks/පොල් කොළ මෝරු) ஒரு தொகுதியை பலநாள் படகு ஒன்றின் மூலம் நாட்டிற்கு கொண்டு வந்த 7 மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை கடந்த 24 ஆம் திகதி வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து 826 கிலோ கிராம் மற்றும் 200 கிராம் எடையுள்ள தோகை இறகு சுறாக்களை கடலோர பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாரவில மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசேட மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, தோகை இறகு சுறாக்களை வேட்டையாடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களும் கைப்பற்றப்பட்ட சுறாக்களும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வெல்லமங்கர மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 கோடி ரூபா பெறுமதியான குஷ், ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்பு!

0

ஜூட் சமந்த

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 21 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தப்பட்ட சுமார் 21 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் (Kush) மற்றும் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,.

13 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று பயணிகள் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, பத்து பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் 394 கிராம் குஷ் மற்றும் 1 கிலோகிராம் 912 கிராம் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு வர்த்தகர் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு வர்த்தகர் ஆவார். இவர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

8 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் மீட்பு இதற்கு முன்னதாக, இன்றைய தினமே (25) அதிகாலை மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கிய மற்றுமொரு பயணி 8 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

37 வயதுடைய இந்த சந்தேகநபர், இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிபவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த கைது நடவடிக்கைகள், சர்வதேச ரீதியான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.