Saturday, September 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 32

கடற்றொழிலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

0

மோசமான காலநிலை: மூன்று மீனவர்கள் மாயம், இருவர் மீட்பு; கடற்றொழிலாளர்களுக்கு அவசர கடும் எச்சரிக்கை!

தற்போதைய மோசமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் அலைகள் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திரு. கஹவத்த வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

காணாமல் போன மீனவர்கள்:

  1. சிலாபம்: கடந்த 18ஆம் திகதி சிலாபம் பகுதியிலிருந்து ஒருநாள் தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற “OFRP-A-2925CHW” படகில் பயணித்த நிஹால் ரஞ்சன் பெர்னாண்டோ மற்றும் ஜூட் லக்ஷ்மன் பெர்னாண்டோ ஆகிய இரண்டு மீனவர்களும் இதுவரை கரை திரும்பவில்லை.

    இலங்கை விமானப்படை வானூர்தி மூலம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், அவர்களைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. கடலின் கொந்தளிப்பான தன்மை காரணமாக கடற்படை கப்பல்களை ஈடுபடுத்த முடியவில்லை. காலநிலை சீரானவுடன் இலங்கை கடற்படை தேடுதல் பணிகளை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது.
  2. பேருவளை: பேருவளை துறைமுகத்திலிருந்து கடந்த 15ஆம் திகதி புறப்பட்ட “சுப பெத்தும்” (KLT 919) என்ற மீன்பிடிக் கப்பல், மோசமான காலநிலை காரணமாக 19ஆம் திகதி மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எஸ். எம். சில்வா என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

இவ்வாறான விபத்துக்களைத் தவிர்க்க உயிர் காக்கும் கவசங்களை அணிவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார். நீர்கொழும்பு பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான போதிலும், அதில் பயணித்த இரண்டு மீனவர்களும் உயிர் காக்கும் கவசங்களை முறையாக அணிந்திருந்ததால் நீந்திக் கரைசேர்ந்து உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம், உயிர் காக்கும் உபகரணங்களின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து கவலை தெரிவித்த பணிப்பாளர் நாயகம், “கடற்றொழில் தடையால் மீனவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், உங்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பளிப்பதே எமது முன்னுரிமை” என்று குறிப்பிட்டார்.

எனவே, மறு அறிவித்தல் வரும் வரை இந்த அபாயகரமான பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏனைய பகுதிகளில் உள்ள மீனவர்களும் காலநிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி!

0

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 

நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் 38 வயதான சாரதியுமே இவ்வாறு உயிரிழந்ததுடன், இவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற மீமுரே விபத்தில், வேனில் பயணித்த 6 பேரில் நால்வர் இதுவரை மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்து!

0

மீமுரே கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விபத்தில் ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த நிலையிலேயே இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவடைந்த வடக்கு நீலங்களின் 14வது சமர்!

வடக்கின் நீலங்களின் 14வது சமர் கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் அமோக வெற்றி பெற்றது.

வடக்கு நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்குமிடையிலான 14வது நீலங்களின் சமர் கிரிக்கெட் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது.

நேற்றைய முதல் நாள் போட்டியில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 134 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி முதல் இனிங்சில் 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இரண்டாவது நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 169 ஓட்டங்களை பெற்று, கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கு வெற்றி இலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 48.3 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.

இது வரை நடைபெற்ற 14 வடக்கின் நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 போட்டிகளிலும், கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 04 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 05போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

14வது வடக்கின் நீலங்களின் சமர் தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக இந்துக்கல்லூரி அணியின் வீரர் கே.கரிசாந்தன் தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரி அணியின் வீரர் ஜெ.மதுஷன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி அணி வீரர் என். சாருஜன் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் ஆட்டநாயகனாக மத்திய கல்லூரி அணி வீரர் ஜீ.கெளசிகன் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

புத்தளம், கரிக்கட்டையில் எசல பெரஹெர!

0

புத்தளம், கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற குறித்த எசல பெரஹெர நிகழ்வில், சமகி ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் ஐந்தாவது முறையாகவும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற குறித்த எசல பெரஹெர நிகழ்வு, கரிக்கட்டையில் ஆரம்பாகி, நாகவில்லு வரை சென்று, மீண்டும் கரிக்கட்டை சமகி ஆரம்பப் பாடசாலையை வந்தடைந்தது.

குறித்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன், சமகி ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமகி ஆரம்பப் பாடசாலை பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மரக்கிளை வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

0

மஸ்கெலியாவில் மரத்தின் கிளை முறிந்து தலையில் வீழ்ந்ததில் இன்று (19) காலை அப்பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் தேயிலைத் தோட்டத்தில் விறகு சேகரிக்கச் சென்றிருந்தபோதே இந்த அதிர்ச்சிகர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் மஸ்கெலியா – பிரவுன்சிக் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உடலம் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் கடலில் மூழ்கிய இளைஞர்கள்!

0

பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொத்துவில் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இருவரையும் அதிரடியாக காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இவர்களின் இந்த செயல் சினிமா காட்சி போல் இருந்ததாகவும், பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதானி திட்டத்துக்குள் சிக்கிய அரசாங்கம்!

0

அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. 

அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. 

எரிசக்தி அனுமதிக்கு அதானி செலுத்திய தொகையை எந்த சூழ்நிலையிலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை உறுதியாகக் கூறுகிறது. 

இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, திருப்பிச் செலுத்தும் தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும். 

இந்த நிறுவனம் வட மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டங்களை நிர்மாணிப்பதற்கு 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமெனவும் இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கழுதைகளை திருடும் இஸ்ரேல் ராணுவம்!

0

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை குறிவைத்து திருடி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்துக்கு அனுப்பி வருகிறதாம். போருக்கு நடுவே காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் கழுதைகளை திருடுவதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் மொத்த காசா நகரமும் உருக்குலைந்துவிட்டது. காசாவில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது இஸ்ரேல் ராணுவம் காசாவில் முகாமிட்டு தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் இஸ்ரேல் சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஐநா மட்டுமின்றி பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கண்டித்துள்ளன.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். காசாவில் போர் புரியும் இஸ்ரேல் ஏன் திடீரென்று கழுதைகளை குறிவைத்துள்ளது என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எழலாம். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

Palestinians transport aid supplies on an animal-drawn cart, amid a ceasefire between Hamas and Israel, in Gaza City, February 3, 2025. REUTERS/Dawoud Abu Alkas REFILE – QUALITY REPEAT

அதாவது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்களுக்கு உதவும் மக்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று தான் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போரின் காரணமாக காசாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் காசா மக்கள் தங்களின் போக்குவரத்து மற்றும் சுமைகளை சுமக்கவும், இடம்பெயரவும் கழுதைகளை தான் பயன்படுத்தி வருகி்னறன.

தண்ணீர், உணவு மற்றும் இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இஸ்ரேலின் கண்களை உறுத்தியது. இதனால் தான் கழுதைகளை திருடி வெளிநாடுகளுக்கு இஸ்ரேல் ராணுவம் அனுப்பி வருகிறது. இதன்மூலம் காசாவில் தற்போது உள்ள மக்கள் இன்னும் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதனால் நாளடைவில் அவர்கள் காசாவை விட்டு மொத்தமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படலாம் என இஸ்ரேல் நினைக்கிறது.

பறவைகள் ஏன் ‘V’ வடிவில் பறக்கிறது தெரியுமா?

நீங்கள் வானத்தில் பறவைகள் எப்போதுமே ‘V’ வடிவில் சீறிப் பாய்ந்து செல்வதைப் பார்க்கலாம். இயற்கையின் வசீகரமான காட்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் பறவைகள் காரணம் இல்லாமல் இதுபோல பறப்பது இல்லை. இதற்குப் பிறகு ஒரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கூட்டமாகப் பறக்கும் எந்தவொரு பறவையாக இருந்தாலும் அவை பெரும்பாலும் இந்த ‘V’ வடிவ அமைப்பில் தான் பறக்கும். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் போது இப்படித் தான் பறக்கும்.

பறவைகள் இதுபோல பறப்பது வெறும் அழகு மட்டும் இல்லை. அதற்குப் பின்னால் ஒரு முக்கியமான அறிவியலும் இருக்கவே செய்கிறது. பறவைகள் ஏன் இதுபோல பறக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானதாகவே இருக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் மட்டுமின்றி நாசா விஞ்ஞானிகள் கூட தங்கள் மிஷன்களுக்காக பறவைகள் இப்படி ‘V’ வடிவில் பறப்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் நீண்ட தூரம் பறக்கும் போது இப்படி ‘V’ வடிவில் பறப்பது ஆற்றலைச் சேமிக்க உதவுகிறது என்பதைக் கண்டறிந்தனர்.. முன்னால் உள்ள பறவை காற்றின் எதிர்ப்பை அதிகமாக எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் அதன் பின்னால் உள்ள பறவைகளுக்கு இது எளிதாகிறது. அதாவது முன்னால் இருக்கும் பறவையின் இறக்கைகளால் உருவாகும் சுழல் காற்றின் மேல்நோக்கிய இழுவிசையில் பக்கவாட்டில் வரும் பறவைகள் ஈஸியாக பறக்க முடிகிறது.

மேலும், இத்தோடு V’ வடிவத்தில் பறப்பது பறவைகள் ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் பறவைக் கூட்டங்கள் பல ஆயிரம் கிமீ தூரம் பயணம் செய்யும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ‘V’ வடிவம் ஒவ்வொரு பறவையும் அதன் அருகிலுள்ள பறவையைப் பார்த்துக் கொள்ளவும், ஒன்றுடன் ஒன்று மோதுவதையும் தவிர்க்க உதவுகிறது. பறவைகள் பறப்பதை அடிப்படையாக வைத்த விமானத்தில் பல பாகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.