Saturday, September 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 37

போதை வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்!

0

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் போதை பார்ட்டி நடத்தியதற்கான பல ஆதாரங்களும் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் ஜாமீன் கோரி சமீபத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது.

ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்கிற கண்டிஷனோடு தான் ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்ஸாஸ் வெள்ளத்தில் இதுவரை 104 பேர் பலி!

0

அமெரிக்கா டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கனமழை காரணமாக, இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகளவில் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நிலைமை மோசமானது.

தலைமன்னாரில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகைக் கைப்பற்றினர். குறித்த நேரத்தில், கடற்படை நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கலால் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக சமூகத்தின் ஆன்மீக அபிவிருத்திக்கு சிறந்த உந்துசக்தி கிடைக்கிறது. 

எனவே, எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவை வழங்குதல் மிகவும் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 2026 ஆண்டு தொடக்கம் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் ஒரு ஆண்டு கால தொடர்ச்சியான சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/- தொகையை ஆண்டுக்கு ஒரு தடவை செலுத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொத்துவில்லை கெளரவப்படுத்திய ஹக்கீம்!

0

பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA).

கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது பல ஊர்களையும்,பல மனிதர்களையும் பாராளுமன்றம் பிரவேசிக்கச்செய்து கௌரவப் படுத்தியிருக்கிறது. இன்னும் பல ஊர்கள், நபர்கள் எதிர்காலத்தில் இக்கட்சியினூடாக கௌரவம் பெறவிருக்கிறார்கள்.

பொத்துவில் மண் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை எனப்பலராலும் வர்ணிக்கப்படும் பிரதேசமாகும். 1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, அக்காலகட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்றை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

கிழக்கைப்பொறுத்தளவில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்க்கட்சி என பெரும்பான்மை இனக்கட்சிகளோடு பயணித்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் தனித்துவத்தை எடுத்துச்சொல்லவும் உலகறியச்செய்யவுமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அஷ்ரப் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு எழுச்சியடைந்த காலப்பகுதியாக இக்காலப்பகுதி இருந்தது.

எனவே, மர்ஹும் தலைவர் அஷ்ரப்பால் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஆறு உள்ளூராட்சி மன்றங்களை இலகுவாகக் கைப்பற்றக்கூடிய சூழ்நிலையில் அஷ்ரப் ஒரு சவாலை விடுத்தார்.

அதாவது, 1994ல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு சபைகளில் ஒன்றையாவது கைப்பற்றத் தவறுவோமாயின், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்துறப்பேன் என்பதாகும். தேசிய ரீதியாக இவ்விடயம் கூர்மையாகப் பார்க்கப்பட்டது.

ஆனாலும், அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு சபைகளில் நான்கு சபைகளையே கைப்பற்ற முடிந்தது. அதன் காரணமாக தான் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு அஷ்ரப் தனது பாராளுமன்றப்பதவியை துறந்து தனது கணவான் அரசியலை வெளிக்காட்டியதனால் தேசியளவில் வியந்து பார்க்கப்பட்டார்.

அவ்வாறு அன்று அஷ்ரப் இழந்த இரு சபைகளுள் ஒன்று பொத்துவில் பிரதேச சபையாகும். அன்றைய தேர்தலில் பொத்துவிலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக எஸ்.எஸ்.பி அப்துல் மஜீத் செயற்பட்டதாலும், அவருக்கு தனிப்பட்ட ரீதியாக மக்கள் செல்வாக்கு இருந்ததாலும் பொத்துவில் மண்ணில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் கடும் போட்டி நிலவி, இறுதியில் குறைந்த வாக்கு வித்தியாசயத்தில் சபையை இழந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப்போட்டியிட்டு வெற்றி பெற்ற கிராம சேவையாளராகக் கடமையாற்றியிருந்த எம்.பீ.அப்துல் அஸீஸ் பொத்துவில் சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

குறித்த தேர்தல் முடிவுகளின் பின்னர் தோல்வியை ஏற்று அஷ்ரப் பதவி துறந்த நிலையில், பெரும் எழுச்சி பொத்துவில் மண்ணில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சில மாதங்களில் ஏற்பட்டு பொத்துவில் மண் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக வர்ணிக்கப்பட்டது.

கட்சியின் வளர்ச்சிக்கு உந்துதலாக குறித்த பிரதேசம் காணப்பட்டது. காலப்போக்கில் தங்கள் பிரதேசமும் முஸ்லிம் காங்கிரஸால் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

குறித்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கு முன்னரே 2000ம் ஆண்டு அஷ்ரப் திடீர் மரணத்தைத்தழுவி மக்களை சோகத்திலாழ்த்தி விட்டுச்சென்றார்.

அடுத்த தலைவர் யார் என்ற குழப்படிகள், இணைத் தலைவர் என்ற நிலையிலிருந்து தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலின் பின்னர் தமது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் தொடர்பாக சிலரது பெயர்களும், எதிர்பார்ப்புகளும் வெளிப்பட்ட நிலையில் பொத்துவில் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்த்தும் பொத்துவில் மக்கள் கட்சிக்காக செய்த தியாகங்களை நினைவுகூர்ந்தும் பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் அதிகார ரீதியாக பாதுகாப்பை வழங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தும் பொத்துவில் மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கோடு பொத்துவில் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கட்சியின் முக்கியஸ்தரான எம்.பீ.அப்துல் அஸீஸை தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் அழைத்துச் சென்றார்.

இதன் பின்னர் நீண்டகாலம் நடைபெறாதிருந்த உள்ளூராட்சித்தேர்தல் 2006ம் ஆண்டு நடைபெற்ற போது பொத்துவில் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது. இதன் தவிசாளராக எம்.எஸ்.எம்.மர்சூக் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத்தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றி எம்.எஸ்.அப்துல் வாஸீத்தை தவிசாளராக நியமித்தார்கள்.

இவர் 2006ம் ஆண்டு உள்ளூராட்சித்தேர்தலில் பொத்துவில் பிரதேசத்தில் சுயேட்சைக்குழு பூட்டு சின்னத்தில் போட்டியிட்டு பொத்துவில் பிரதேச சபைக்கு உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2018ல் நடைபெற்ற புதிய முறையிலான உள்ளூராட்சி தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றி மீண்டும் எம்.எஸ்.அப்துல் வாஸீத்தை தவிசாளராக நியமித்தது.

2020ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எம்.எம் முஷர்ரப் பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்ட பின், முஸ்லிம் காங்கிரஸ் சவால்களை பொத்துவில் மண்ணில் எதிர்கொண்டது.

பொத்துவில் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று உறுப்பினராக இருந்த ரஹிம் என்பவரை தன்னோடு இணைந்துக்கொண்டு இரண்டு வருடங்களின் பின்னரான பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார்.

பொத்துவில் மண்ணுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமான உறவென்பது பலமானதாக இருந்தாலும், சில நபர்களால் பலவீனப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் நீடித்து நிலைப்பதில்லை. அதேநேரம், பொத்துவில் மண்ணுக்கு அதிகாரம் கொடுப்பதிலும் எதிரிகளை நண்பர்களாக்கி பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி அதிகாரம் கொடுத்தவராக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.

அன்று தேசியப்பட்டியலினூடாக அதிகாரம் கொடுக்கப்பட்ட அப்துல் அஸீஸ் 2004ல் கட்சி மாறிப்போனாலும் முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவிலை கைவிடவில்லை

அப்துல் மஜீத் எஸ்.எஸ்.பீ யை கட்சிக்குள் உள்வாங்கி கிழக்கு மாகாண சபை உறுப்பினராக்கி அழகு பார்த்தது. இப்படி மாற்றுக்கட்சிகளிலிருந்தவர்களை உள்வாங்குவதிலும் கட்சி மாறிப்போனவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதிலும் பொத்துவில் மக்களின் நன்மைகருதி தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் பெருமனதுடன் செயற்பட்டு வருகின்றார்.

தான் அதிகாரத்திலிருந்த நிலையிலும், தனது கட்சியின் அதிகாரங்களைப்பயன்படுத்தியும், பொத்துவில் கட்சியின் முக்கியஸ்தர்களூடாகவும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ரவூப் ஹக்கீம் மேற்கொண்டு வந்தார்.

இன்னும் பல முக்கிய விடயங்கள் கவனமெடுத்தும் நல்லாட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவை தொடர்பாக தேர்தல் கால மேடைகளில் மக்களின் வாக்குகளைப்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் எதிர்த்தரப்பு வேட்பாளர் கடுமையாக சாடிப்பேசியதையும் நினைவூட்டிக் கொள்கின்றேன்.

அன்று ரவூப் ஹக்கீமை விமர்சித்து பொத்துவில் மண்ணிலிருந்து பாராளுமன்றம் சென்றவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டாலும், அன்று ரவூப் ஹக்கீமை விமர்சித்த பொத்துவிலுக்கான குடிநீர், கல்வி வலயம் எனப்பல விடயங்களை தன்னாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

பொத்துவில் மண் அரசியலால் பிளவுபட்டு அதிகாரத்தை இழந்து தவித்த நிலையில் உள்ளூராட்சித்தேர்தலின் பின்னர் மீண்டும் ரவூப் ஹக்கீம் பொத்துவில் மண் தொடர்பில் விசேட கவனமெடுத்து பிரிந்து கிடக்கும் பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி இழந்த அரசியலதிகாரத்தை மீட்டுக்கொடுக்கும் நோக்கில் விமர்சனங்களுக்கப்பால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரபை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக்கியதோடு, முன்னாள் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்.அப்துல் வாஸீத்தை தனது கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியலினூடாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளார்.

ஏனைய பிரதேசங்களிலும் தேசியப்பட்டியலுக்கான கோரிக்கையும் தேவையும் இருந்த போதிலும் பொத்துவில் மண்ணிண் தேவைப்பாடுகளை நிறைவைற்றிக்கொடுக்கும் நோக்கில் இவ்வாறான அதிகாரங்கள் ரவூப் ஹக்கீமால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பொத்துவில் மக்கள் இலகுவில் இவ்விடயங்களை மறந்து விட முடியாது. மேலும், பொத்துவில் மக்கள் இனியும் பிரிந்து விடாது மர நிழலில் ஒற்றுமையோடு பயணிப்பது புத்திசாலித்தனமும் கட்டாயமும் என்பதோடு, ஏனைய பிரதேசங்களுக்கு எடுத்துக்காட்டாக கட்சிக்கும், தலைமைக்கும் நன்றியுணர்வோடு திகழ வேண்டுமென்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

பேராயரின் 50ஆவது நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி!

0

பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்த்தையும் ஆன்மீக குணத்தையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் ஆன்மீகத்தை கட்டியெழுப்புவதற்காக பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள அன்னார், பாரிய சேவையாற்றும் ஒரு ராஜதந்திரி , பைபிளை மிக நன்றாக விளக்கி விடயங்களை முன்வைக்கக்கூடிய ஒரு வேத விற்பன்னர், சமூகத்தை எழுச்சியூட்டும் வலுவான ஆளுமை கொண்ட ஒரு பேச்சாளர் போன்ற பாத்திரங்களுக்கு அப்பால் உண்மையான மனிதநேயர் என்றும் ஜனாதிபதி கூறினார்.

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒரு சவால் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தனது 50 வருடகால அனுபவத்தை இதன் போது நினைவு கூர்ந்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை , 75 ஆண்டுகால சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியினால் முடிந்திருப்பது குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.அத்தோடு நாட்டில் பல்வேறு இனக்குழுக்களிடையே வெறுப்பை விதைக்கும் அரசியல் கலாச்சாரத்தை வேரோடு ஒழிக்க முடிந்திருப்பது குறித்தும் அன்னார் தனது நன்றியைத் தெரிவித்தார். நாட்டை ஒரு வளமான தேசத்தை நோக்கி இட்டுச் செல்வதில் ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்க்கையின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு

முத்திரை மற்றும் முதல்நாள் கடித உறை என்பன இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு குருநாகல் பொல்கஹவெலயில் பிறந்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி பரிசுத்தப் பாப்பரசர் ஆறாம் பவுலினால் வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் பெசிலிக்கா பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1978 முதல், அவர் பங்கு உதவித் தந்தையாகவும், பதில் பங்குத் தந்தையாகவும், இறையியலில் கலாநிதியாகவும் பணியாற்றியுள்ளதுடன், அவர் இறையியல் ஸ்தாபனங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இந்தோனேசிய மொழிகள் உட்பட பல மொழிகளில் புலமை பெற்றவர்.

1991 ஆம் ஆண்டு, அப்போதைய பேராயர் நிக்கலஸ் மார்கஸ் பெர்னாண்டோவின் தலைமையில், தேவத்தை லங்கா அன்னையின் பசிலிக்காவில், கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, 2009 ஜூன் 16 ஆம் திகதி, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டதுடன், ஒரு வருடம் கழித்து, 2010 நவம்பர் 20, ஆம் திகதி, இத்தாலியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் பசிலிக்காவில் கர்தினாலாக நியமிக்கப்பட்டார். அதன்படி, கர்தினால் பதவியைப் பெற்ற இரண்டாவது இலங்கை அருட்தந்தை மாண்புமிகு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆவார். அவர் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஏராளமான பதவிகளை வகித்துள்ளதுடன், சர்வதேச கூட்டங்கள் பலவற்றுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள அன்னார், அமெரிக்காவில் உள்ள தோமஸ் அக்வைனாஸ் கல்லூரியில் மத விவகாரக் கல்விக்கான தோமஸ் அக்வைனாஸ் பதக்கம் மற்றும் 2008 ஆம் ஆண்டு கலாசாரத் துறையில் சாதனைகளுக்காக இத்தாலியக் குடியரசின் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட 7 ஆவது Giuseppe Sciacca சர்வதேச விருதையும் பெற்றுள்ளார். ஒரு எழுத்தாளரான அவர் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இந்த நிகழ்வில் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண, நியங்கொட விஜிதசிறி தேரர் மற்றும் கலாநிதி வண, ஓமல்பே சோபித நாயக்க தேரர் ஆகியோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மகா சங்கத்தினர், சர்வமதத் தலைவர்கள், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹெரல்ட் அந்தோணி பெரேரா,இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி மொன்சிக்னோர் ரொபர்டோ லுகினி,கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா, அந்தோனி ஜயக்கொடி உள்ளிட்ட கத்தோலிக்க அருட்தந்தைகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்புக்கா?

0

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார். 

முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. 

இருப்பினும் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாக பாராட்டியுள்ளார். 

இதன்படி அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். 

அத்துடன், தாம் நோபல் பரிசுக் குழுவிற்கு இது தொடர்பில் பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

SLMC பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸித்!

0

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் சாலி நளீம் ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் பலி!

0

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

புகையிரத கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

சடலத்தினை மோதிய புகையிரதத்தில் கொண்டு சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

6 மாத வீதி விபத்துகளில் இத்தனை உயிர் பலியா?

0

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,222 பேர் உயிரிழந்தனர். 

கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம் என காவல்துறை தெரிவித்துள்ளது.