நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு:
அநுராதபுரம்: அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. அம்பாறை: 9 இல் 3 நீர்த்தேக்கங்கள். பதுளை: 7 இல் 3 நீர்த்தேக்கங்கள். மட்டக்களப்பு: 4 இல் 3 நீர்த்தேக்கங்கள். ஹம்பாந்தோட்டை: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள். கண்டி: 3 இல் 2 நீர்த்தேக்கங்கள். குருநாகல்: 10 இல் 4 நீர்த்தேக்கங்கள். மொனராகலை: 3 இல் 1 நீர்த்தேக்கம். பொலன்னறுவை: 4 இல் 2 நீர்த்தேக்கங்கள். திருகோணமலை: 5 இல் 3 நீர்த்தேக்கங்கள். மன்னார்: 4 இல் 1 நீர்த்தேக்கம்.
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்ச மட்டத்திலேயே காணப்படுவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான் கதவுகளைத் திறக்கும் அளவு மாறுபடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வெளியேற்றப்படும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயமோ அல்லது நீர் மட்டம் அதிகரிப்பதோ அவதானிக்கப்படவில்லை என்றாலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்துத் தீவிர அவதானத்துடன் இருப்பது மிக முக்கியம் என எச்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிலாபம் கடல்பகுதியில் 1740 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
சிலாபம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை (10) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (10) மாலை சிலாபம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஐம்பத்தைந்து (55) பைகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேற்படி நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
புத்தளம் மாவட்டத்தின் இயல்பு நிலையை மீளக் கட்டியெழுப்ப தேவையான அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான விஷேட கூட்டம் இன்று 13.12.2025 புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட செயலாளர் திரு.Y.I.M. சில்வா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், அதிமேதகு ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
சேதமடைந்த மாவட்டத்தின் வீதிகளை மீளமைப்பது, மின்சாரம், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்புவது மற்றும் விவசாயம், கால்நடைத் துறை, மீன்பிடி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது தனித்தானியாக கேட்டறிந்ததோடு இந்த அனைத்துப் பணிகளிலும் முப்படை, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புகள் பற்றியும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி முடிந்தவரை திட்டங்களை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இந்த அவசரகால நிலைமையில் சிரமங்களைப் பொருட்படுத்தாமல், அனைத்து நிறுவனங்களும் தங்கள் பொறுப்புகளை நன்கு ஒருங்கிணைந்து நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜானதிபதி சுட்டிக்காட்டினார்.
வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக, அவர்கள் விரும்பினால் வீடொன்றை வாங்குவதற்கு ஒரே தடவையில் 50 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்க முடியும் எனவும், இருக்கும் காணியில் புதிய வீடொன்றை கட்டுவதற்கும், அல்லது காணி இல்லாதவர்கள் அரச காணிகளில் குறித்த வீடுகளை கட்டுவதற்கும் குறித்த நிதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
மேலும் கல்பிட்டி பகுதியில் அதிகளவான மரக்கறி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், ஆராச்சிகட்டுவ மற்றும் வணாதவில்லு பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பகுதிகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை சிலாபம் மாவட்ட வைத்தியசாலை வெள்ள அனர்த்தத்தினால் முற்றாக ஸ்தம்பித்துள்ளதுடன், அங்கிருந்த நோயாளர்கள், புத்தளம், மாறவில மற்றும் அண்டிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபயின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
குறித்த வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் – எழுவன்குளம் வீதியின் பாலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டமைக்கு, இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதற்கு உற்பட்ட வகையிலே செயற்பட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் – எழுவன்குளம் ஊடாக பொதுப்போக்குவரது இடம்பெற்றதாகவும், தற்போது அதற்கான சாதகமான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தின்போது அர்ப்பணிப்புடன் பங்காற்றிய அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததுடன், மக்கள் இயல்புநிலைக்கு செல்ல தேவையான அணைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கெளரவ வடமேல் மாகாண ஆளுநர், பாதுகாப்பு செயலாளர், கெளரவ அமைச்சர் மற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
குளியலறை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கல்பிட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்பிட்டி, முசல்பிட்டி பகுதியில் குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
பெற்றோர்கள் வீட்டில் இருந்த சமயம் குழந்தை குளிக்கும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் முகம் குப்புற தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் உடல் தற்போது கல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயகர பகுதிகளாக இருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% பகுதி மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34% மக்கள் வசிப்பதாகவும், குறித்த நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீற்றர் வரை பரந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களைப் பரிசோதிக்குமாறு 2,710 கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் 589 இடங்கள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
குறித்த ஆய்வில், 10 மீற்றருக்கும் அதிகமாக மண்சரிவு ஏற்பட்ட 1,241 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் வீடுகளுக்குப் பாதிப்பில்லாத 919 இடங்களும், வீடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய 322 மண்சரிவுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்களின் அடிப்படையில், அபாயகரமான நிலையில் உள்ள 15,000 இற்கும் மேற்பட்டோரை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகங்கள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, அனுமதி பெறாத கட்டிடங்கள் அல்லது ஏனைய வகை வீடுகளில் வசிப்பவர்கள் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என வசந்த சேனாதீர தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, மண் மேடுகள் சரிந்து விழுந்தமையாலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், அது குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களுக்கான மற்றுமொரு நிவாரண உணவுப்பொருட்கள் அடங்கிய ஒருதொகை உணவுப்பொதிகளை புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீசா அவர்கள் இன்று புத்தளம் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொண்டார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களுக்கு மேலும் நிவாரணப் பொருட்கள் தேவை என புத்தளம் பிரதேச செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் S.P. வீரசேகர அவர்களிடம் கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஷாஹின் ரீசா அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறித்த நிவாரண உணவுப்பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.
இதில் 1300 கிலோ கிராம் சீனி, 1300 கிலோ கிராம் பருப்பு மற்றும் 1300 பக்கட் நூடில்ஸ் (கொத்து மீ) அடங்கிய உணவுப்பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.
மேலும் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் நாகவில்லு பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுளளதாக உதவி அரசாங்க அதிபர் அவர்களிடம் தெரிவித்த ஷாஹின் ரீசா, இதற்கு மேலதிகமாக அரிசி பொதிகளும் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கைக்கு இணங்கிய உதவி அரசாங்க அதிபர், வெகு விரைவில் நாகவில்லு பகுதிக்கு அரிசி பொதிகளும் வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பொத்துவில் வட்டாரத்துக்கான பிரஜாசக்தி தலைவர் MJM. சிராஜ் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிலாபம் பொலிஸ் மைதானத்தில் ஜப்பான் பேரிடர் நிவாரணக் குழுவினரால் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று ஆய்வு செய்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க ஜப்பான் முன்வந்ததற்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
சிலாபம் பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜப்பான் பேரிடர் நிவாரணக் குழுவினரால் (JDR) நிறுவப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தற்போது வழங்கப்படும் சுகாதார சேவைகள் எதிர்வரும் (15) வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று (12) காலை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் வழங்கப்பட்ட சுகாதார சேவைகளுக்காக ஜப்பான் பேரிடர் நிவாரணக் குழுவினருக்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தனது நன்றியைத் தெரிவித்தார்.
சிலாபம் பொலிஸ் மைதானத்தில் நிறுவப்பட்ட ஜப்பான் சிறப்பு கள மருத்துவ முகாமை அவர் ஆய்வு செய்தார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதர் திரு. அகியோ இசோமாடா மற்றும் உலக சுகாதார அமைப்பின் நாட்டு பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சாம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால பேரிடர் சூழ்நிலையை, குறிப்பாக சிலாபம் ஆதார மருத்துவமனையின் செயலிழப்பை எதிர்கொண்டு, அவசரகால சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக சிலாபம் ஆதார மருத்துவமனையின் செயலிழப்பை, அவசரகால சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், நாடு வந்த ஜப்பானிய அவசரகால பேரிடர் நிவாரண நிபுணர் குழு, சிலாபம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை சேவைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு சிலாபம் தலைமையக காவல் மைதானத்தில் ஒரு சிறப்பு கள மருத்துவமனையை நிறுவியது.
நடமாடும் மருத்துவமனை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சிகிச்சை சேவைகளைத் தொடங்கியது, மேலும் சிறப்பு கள மருத்துவமனை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை தொடர்ச்சியாக சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.
இங்கு வழங்கப்படும் தினசரி நிவாரண சுகாதார சேவையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு பரிசோதனை பிரிவையும் பார்வையிட்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இந்த கள மருத்துவமனை அனைத்து வசதிகளையும் (வகை 1) கொண்ட முதல் கட்ட மருத்துவமனை என்றும், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை சேவைகளை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
ஜப்பான் இலங்கையின் மிகவும் நட்பு நாடு என்பதையும், பல்வேறு பேரிடர்களால் நாடு பாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் ஜப்பான் ஆதரவளிக்க முன் வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த குழுவை நாட்டிற்கு வரும் முதல் குழுவாக விவரிக்க முடியும் என்றும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் திறமையான சிகிச்சை சேவைகளைப் பாராட்டுவதாகவும், ஜப்பானிய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
அவர்கள் அடுத்த சில நாட்களுக்கு சிலாபம் பகுதியில் தங்கி சிகிச்சை சேவைகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். மருத்துவமனை அமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் குறித்த அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன, மேலும் இதுபோன்ற பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் பல மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மற்ற இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் தற்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ஜப்பானிய அவசர பேரிடர் நிவாரண நிபுணர் குழுவிற்கு ஒரு சிறப்பு கள மருத்துவமனையை நிறுவ சிலாபம் மிகவும் பொருத்தமான இடம் என்பதால், மக்களுக்கு அனைத்து சிகிச்சை சேவைகளையும் வழங்க முடியாத இந்த நேரத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கள மருத்துவமனை இங்கு நிறுவப்பட்டது.
அவசரகால பேரிடர் நிவாரண நிபுணர் குழுவில் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள், சப்ளையர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உட்பட 31 சுகாதார நிபுணர்கள் உள்ளனர், மேலும் இந்த நடவடிக்கைகளில் உதவி செய்யும் சுமார் 15 பேர் கொண்ட ஆதரவு குழுவும் இதில் அடங்கும்.
இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஜித் கிஹான் பெர்னாண்டோ, கயான் ஜனக, ஹருணி விஜேசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன மற்றும் அவசரகால பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவின் தலைவர் IWASE KIICHIRO ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருவலகஸ்வெவ – பொரலுகந்த வனப்பகுதிக்குள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று 12 ஆம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ – முரியகுளம் பகுதியைச் சேர்ந்த வாசலா முதியன்செலாகே சாமிலகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவரின் உடலுக்கு அருகில், எண் அழிக்கப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சமய வழிபாட்டுத் தளத்தில் பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்ய விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஆனமடுவ போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் ஆனமடுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்கும் 15 வயது சிறுமி என்பதுடன், அதே பாடசாலையைச் சேர்ந்த ஒரு மாணவரால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர் நவகத்தேகம – அந்தரவேவா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சிறுமிக்கும் காதலில் ஈடுபட்ட சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு தொடங்கியது. அந்த உறவின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாள், தான் பள்ளிக்குச் செல்வதாக தனது தாயிடம் சிறுமி கூறிவிட்டு, ஆனமடுவ நகரத்திற்கு வருகை தந்துள்ளார்.
பின்னர், ஆனமடுவ நகரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில், சிறுமி தனது பள்ளி சீருடையைக் கழற்றிவிட்டு, வேறு உடையை அணிந்து, காதலித்த சந்தேக நபருடன் ஆனமடுவ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு பிரபலமான மத இடத்திற்குச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் அந்த மத இடத்தில் உள்ள ஒரு கல் மேடையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, சிறுமி தான் சந்தித்த அனுபவத்தைப் பற்றி தனது தாயிடம் கூறினார்.
பின்னர் தாய் தனது மகளுடன் ஆனமடுவ காவல்துறைக்கு சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் நவகத்தேகம காவல் பிரிவில் வசிப்பவர் என்பதால், அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு ஆனமடுவ காவல்துறையினர் நவகத்தேகம காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனமடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வயதில் குறைந்த சிறுவன் ஒருவனை கடத்திய குற்றச்சாட்டில் 19 வயது யுவதி ஒருவரை புத்தளம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரையே போலீசார் கைது செய்துள்ளனர்.
15 வயதுடைய சிறுவன் ஒருவனையே குறித்த இளம் பெண் கடத்திய குற்றச்சாட்டில் குறித்த இளம் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை தனது மனைவி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டதாகவும், தாய் பின்னர் மறுமணம் செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் சந்தேக நபருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 3 ஆம் தேதி, தாய், தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து, தனது முந்தைய திருமணத்திலிருந்து குழந்தையை வீட்டை விட்டு விரட்டிவிட்டாள். அந்த நேரத்தில், வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை, தனது காதலியான சந்தேக நபரிடம் இதைத் தெரிவித்திருந்தது. சந்தேக நபர் அதே நாளில் மாலை 5.00 மணியளவில் சிறுவனை அழைத்துச் சென்று அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த மாதம் 10 ஆம் தேதி, சந்தேக நபர் தனது காதலன் சிறுவனுடன் கிராமத்திற்குத் திரும்பினார், மேலும் 11 ஆம் தேதி, அவர் சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸாரிடம் புகார் அளித்தார்.
அப்போது குழந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து ஒரு மைனர் குழந்தையை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடத்தப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு அவரது தாயாரின் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.