Sunday, November 2, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 5

அருங்காட்சியகத்தில் நகைகள் கொள்ளை!

0

பிரான்சில் உள்ள பாரிஸ் லூவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிசில் பிரபலமான லூவ் அருங்காட்சியகம் உள்ளது. தினமும், 30,000க்கும் மேற்பட்டோர் பார்வையிடும் இந்த அருங்காட்சியகத்தில் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம், நெப்போலியன் கால நகைகள் பழமையான சிற்பங்கள் என ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சியகத்தில் உள்ள, ‘அப்பல்லோ கேலரி’யில் பிரான்ஸ் அரசர்கள் மற்றும் அரசிகளின் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இருசக்கர வாகனத்தில் கடந்த 19 ம் தேதியன்று வந்த மர்ம நபர்கள் பக்கத்து கட்டடத்தில் இருந்து, ‘ஹைட்ராலிக்’ ஏணி உதவியுடன் அருங்காட்சியகம் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கண்ணாடியை இயந்திரத்தால் உடைத்து கேலரிக்குள் புகுந்துள்ளனர். அங்கிருந்த மாவீரன் நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த அரசன் மற்றும் அரசியின் விலைமதிப்பற்ற ஒன்பது நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இதனை வைத்து கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசினர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் பாரிசில் இருந்து தப்பிச் செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் பாரிஸ் நகரில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் பிடிபட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. அவர்களிடம் நடக்கும் விசாரணைக்கு பிறகு கொள்ளை போன நகைகள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ‘மோன்தா’புயல் உருவாகும் – இந்திய வானிலை மையம்!

0

நாளை தான் உருவாகும் என சொல்லப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகவிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை ‘மோன்தா’புயல் உருவாகும் எனவும், அது தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது.

ஆனால் தற்போது புயல் முன்கூட்டியே உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவியஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்காக நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறியது.

இந்த தாழ்வுமண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை காலைக்குள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடலில் ‘மோன்தா’ புயலாக மாறும் எனவும், பின்னர் காக்கிநாடா அருகே வரும் 28ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.

ஆனால் தற்போதைய அப்டேட்டின் படி, நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த மோன்தா புயல் முன்கூட்டியே உருவாகவிருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் எனவும், நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று, அன்றே மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மோன்தா புயல் சின்னம் சென்னையிலிருந்து 780 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது உண்மையான செவ்வந்தியா? சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில!

0

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என்பதில் தனக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் விசாரணை அதிகாரிகள் செயற்படும் விதம் தனக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது.செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன.

பியூமி ஹன்சமாலியின் க்ரீமை பாவித்தால் கூட 8 மாதங்களில் இவ்வாறான தோற்றத்தை பெற வாய்ப்பில்லை. அத்துடன், உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து பார்த்தவுடன் அவரிடம் ‘நலமா?’ என வினவுகின்றார்.

செவ்வந்தியை போன்ற உருவ அமைப்பை உடைய மற்றொரு பெண்ணும் அங்கு இருக்கின்றார். இவ்வாறிருக்க, அவர் செவ்வந்தியை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?

வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை செய்துவிட்டு காவல்துறையினரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலைக் குற்றம் புரிந்த செவ்வந்தி, காவல்துறையிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது.

சாதாரணமாக ஒரு குற்றவாளியை மற்றுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். எனினும், செவ்வந்தி இலங்கைக்கு அழைத்து வரப்படும் போது அவர் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.

இந்நிலையில், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செல்கின்றனர். முழு நாடே செவ்வந்தியின் முகத்தை பார்த்த பின்னர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார்.அவர் காவல்துறையிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறான நிலையில், செவ்வந்தி ஏன் நேபாளத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார். 

வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி அறிவித்தல்!

0

சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 2013ஆம் ஆண்டு இல. 02 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகளை மீறி குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் சிக்கியுள்ளன 

இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டைத் தவிர வேறு ஒரு நாட்டில் திறக்கப்பட்ட கடனுறுதி ஆவணங்கள் (cross-border LC) தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த வாகனங்களை விடுவிப்பதற்கும் பதிவு செய்வதற்கும் பல நிபந்தனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்!

0

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது. 

இதனால் கப்பலில் செல்ல இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிக்கினார் துப்பாக்கிதாரி!

0

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தெற்காசியாவின் வேகமான மனிதர் சாமோத் யோதாசிங்க!

0

புதிய போட்டி சாதனையுடன் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற யோதாசிங்கே…..!

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாமோத் யோதாசிங்க தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த ஓட்டப்பந்தய போட்டியை 10.30 வினாடிகளில் முடித்து வெற்றிபெற்றதன் மூலம் புதிய போட்டி சாதனை அவர் படைத்துள்ளார்.

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாமோத் யோதாசிங்கே, வேகமான மனிதர் பட்டத்தை வென்றார்.

அவரது அற்புதமான செயல்திறன் இதற்கு முன் இருந்த சாம்பியன்ஷிப் போட்டி சாதனையையும் முறியடித்தது!

உலக சாதனை படைத்த கிங் கோலி!

0

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று (25) நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அதிகபட்சமாக ரென்ஷா 56 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பின்னர் 237 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. 

வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா 121 ஓட்டங்களுடனும், விராட் கோலி 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த ஆட்டத்தில் பெற்ற 74 ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 18,436 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

அந்த பட்டியல்: 

1. விராட் கோலி – 18,443 ஓட்டங்கள் 
2. சச்சின் டெண்டுல்கர் – 18,436 ஓட்டங்கள் 
3. குமார் சங்கக்கார – 15,616 ஓட்டங்கள் 
4. ரோஹித் சர்மா – 15,589 ஓட்டங்கள் 
5. மஹேல ஜயவர்தன – 14,143 ஓட்டங்கள்

மத்திய மலைநாட்டின் பல இடங்களில் மண்சரிவு அபாயம்!

0

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. 

இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுவதால், வளைவுகள் நிறைந்த மலைநாட்டு வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகப் பயணிப்பதன் மூலம் வீதி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது. 

மேலும், இவ்வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், மண்சரிவு அபாயமும் நிலவுகிறது. 

எனவே, இந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

விமலசுரேந்திர, காசல்ரி, லக்ஸபான, நவலக்ஸபான, கெனியோன், மவுசாக்கலை, மேல்கொத்மலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 

மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால், நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொறுப்பு பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்து!

0

ஜூட் சமந்த

வீதியில் பயணித்த மோட்டார் கார் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பெல்ஜியத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – சிலாபம் சாலையில் மதுரங்குளிய – செம்பெட்டே பகுதியில் நேற்று 24 ஆம் தேதி மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார் கார், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்றவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் தூங்கிவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரங்குளிய காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.