உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை மூலம் நிறைய கொண்டாட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவது வழக்கமாகும்.
அந்த வகையில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் இன்றைய தினம் புத்தளம் நாகவில்லு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொத்துவில்லு சிவில் அமைப்புடன் எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகமும் இணைந்து எமது சூழலை பாதுகாக்கும் நோக்கில் கருத்தாளமுள்ள வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய இந்த விழிப்புணர்வு ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் ஆரம்பமாகிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொத்துவில்லு விகாரை வரை சென்றது. இதில் பொத்துவில்லு சிவில் அமைப்பு மற்றும் நாகவில்லு சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் SM ஹுஸைமத் அவர்களின் தலைமையில் இன்று புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வெளியாகிய சுமார் 23 வகுப்பாண்டுகளுக்கிடையான சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கிடையிலான நோக்கவுட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் 2004 ஆம் ஆண்டு அணியினர் சாம்பியன் கிண்ணம் வென்றனர்.
மிகவும் திறமையான பல அணிகள் பங்குபற்றிய குறித்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், 2004 ஆம் ஆண்டு வகுப்பு அணி மற்றும் 2011 ஆம் ஆண்டு வகுப்பு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2004 ஆம் ஆண்டு வகுப்பு அணி 7 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 2004 ஆம் ஆண்டு வகுப்பு அணி சார்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் தலைவர் A. அன்சபினால் அதிகப்படியான ஓட்டங்கள் எதுவும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது.
28 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2011 ஆம் ஆண்டு வகுப்பு அணி 7 ஓவர்கள் நிறைவில் வெறும் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஓட்ட எண்ணிக்கையை சமன் செய்தது.
இதில் அதி சிறப்பாக பந்து வீசிய J. சப்ரின் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றி போட்டியை சம நிலைக்கு இட்டுச்சென்றார்.
இரு அணிகளும் ஒரே ஓட்ட எண்ணிக்கையை பெற்றதால் சூப்பர் ஓவர் வீசப்பட்ட தீர்மானிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2011 ஆம் ஆண்டு வகுப்பு அணி 2004 ஆண்டு வகுப்பு அணி பந்து வீச்சாளர் J. சப்ரினின் துல்லியமான பந்து வீச்சில் 1 விக்கட் இழப்பிற்கு 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
4 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய 2004 ஆண்டு வகுப்பு அணி முதல் பந்திலே சிக்ஸர் அடித்து வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.
வெற்றிபெற்ற அணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் NM ஷாபி மற்றும் தற்போதைய அதிபர் SM ஹுஸைமத் ஆகியோரினால் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.
தொடரின் அதி சிறந்த வீரராக 2 அரைச்சதங்கள் பெற்ற 2004 அணியின் தலைவர் A. அன்சப் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் தொடருக்கான சகல நினைவுச்சின்னங்களும் சுங்கத்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் அல்ஹாஜ் லுக்மான் சகாப்தீன் அவர்களினால் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சசமாகும்.
இலங்கையில் தற்போது 111 ஓளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த விடயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது.
தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஔடதங்களை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரம்புக்வெல்ல, கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் நிதியை விடுவிப்பதில் பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்ட 14 துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்தவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2023 டிசம்பர் 31ம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 8 வயதை அடையும் சகலரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) 12 மணி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லிட்டருக்கு ரூ.15 வால் குறைக்கப்படும்.
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும்.
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 இன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும்.
இதன்படி, இலங்கையின் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 385 ரூபாய்களாகும்.
லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் புதிய விலை 340 ரூபாய்களாகும்.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபாயாகும். இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் (Industrial Kerosene) ஒரு லீற்றர் 60 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாயாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
புத்தளம் – அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல் மற்றும் சேமித்து வைக்கும் வசதி ஆகியவற்றின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுறுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண, சுகாதாரமான குப்பை கிடங்கு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குப்பை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் அருவக்காலு குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1,200 மெற்றிக் டன் குப்பைகளை களனி, வனவாசலையில் இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள புத்தளம், அருவக்காலு குப்பைத் தளத்திற்கு தொடருந்து மூலம் கொண்டு செல்வது இந்தத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
அருவாக்கலு குப்பை மேடு மற்றும் களனி, வனவாசலை கழிவுப் பரிமாற்ற நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனமும், சீனாவின் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிஸேச் இன்ஸ்டிடியூட் ஓப் சைனா நிறுவனமும் அதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தக்கழிவுகள் அருவாக்கலு கழிவுநீர் மையத்தில் கொட்டப்பட்டு, அதன்பின் அருகில் உள்ள சுகாதாரக் குப்பை கிடங்கில் அப்புறப்படுத்தப்படுகிறது.
நாளொன்றுக்கு அதிகபட்சமாக இரண்டு தொடருந்து பயணங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை புத்தளம் அருவக்காடு குப்பை விவகாரம் புத்தளம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளத்துடன் அதற்கு எதிராக தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டார்.
திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குறித்த, அவனுடைய தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து சிறுவனின் வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அம்பலாங்கொட தர்மசோக பாடசாலையின் பிரதி அதிபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நேற்று (26) பெந்தர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த இரத்தக் கறைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரதி அதிபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.
அடுத்த மாதம் (ஜுன்-01) முதல், பொதுமக்கள் தமக்கான கடவுச் சீட்டை (Passport) பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வர வேண்டியதில்லை என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை, ஒன்லைன் ஊடாக அனுப்பி வைக்க முடியும்.
அத்துடன் அதற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதுடன், உங்கள் பிரதேசத்திலுள்ள பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களையும் பதிவு செய்யலாம் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 03 நாட்களின் பின், பதிவுத் தபால் (Registered Post) மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.