Tuesday, September 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 9

கொழும்பில் இடம்பெற்ற உலமா சபையின் பிரம்மாண்ட கூட்டம்!

0

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்தின் நெறிப்படுத்தலில் தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 164 மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆலிம்கள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷெய்க் சீ.எம். அப்துல் முக்ஸித் நிகழ்விற்கு வருகை தந்த பதவி தாங்குனர்களை வரவேற்கும் முகமாக வரவேற்புரையினை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 2022 தொடக்கம் 2025 வரைக்குமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயற்பாட்டறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார். 

அதனையடுத்து ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் 2022 தொடக்கம் 2025 வரையிலான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 03 வருடங்களுக்கான கணக்கறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அடுத்து பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை குறித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரகடனமானது நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

சுமார் 500 க்கும் மேற்பட்ட கிளைப் பதவிதாங்குனர்கள் முன்னிலையில் குறித்த பிரகடனமானது வாசிக்கப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனையடுத்து தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் பற்றி சபையில் தெளிவுபடுத்தியதுடன் இப்பணிக்காக சகல விதத்திலும் பங்களிப்பாற்றிய நலன் விரும்பிகள் தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி செலுத்தி பிரார்த்தித்தார். நிகழ்வின் இறுதியாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி நன்றியுரையினை நிகழ்த்தினார்.

தேசபந்து தென்னகோன் அதிரடியாக கைது!

0

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.

எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் இன்று நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

173 நாடுகளில் 7,983 க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்கிய சவூதி!

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மனிதநேய தினம், மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் பெறுமானங்களை வெளிக்கொண்டுவருவதற்கும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எடுத்துரைப்பதற்கும் ஒரு முக்கியமான சர்வதேச மைல்கல்லாக அமைகிறது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா மனிதநேயப் பணியில் தன்னை முன்னணி மாதிரியாக உலகளாவிய மட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இது அதன் மத கொள்கைகள் மற்றும் வேரூன்றிய பெறுமானங்களில் இருந்து உருவாகி மனிதனை வளர்ச்சியின் மையமாகவும் அமைதியின் இலக்காகவும் ஆக்குகின்றது எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் குறிப்பிடுகையில்;

இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் அவர்கள், சவூதி அரேபியாவின் வளர்ச்சிக் கொள்கை மனிதனை மையமாகக் கொண்ட ஒரு விரிவான மற்றும் நிலையான மறுமலர்ச்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்ற கொள்கையை நிறுவினார். அதே வேளையில், பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான கெளரவ இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்கள், மனித வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி மற்றும் அமைதியின் அடித்தளம் என்று வலியுறுத்தினார். இந்த அறிவார்ந்த தலைமைத்துவ பார்வை, சவூதி அரேபிய இராச்சியத்தை உலகின் மிகப்பெரிய நன்கொடை அளிக்கும் நாடுகளில் உயர் நிலையை அடைந்துகொள்ள வழிவகுத்தது.

கடந்த பல தசாப்தங்களாக, சவூதி அரேபிய இராச்சியம் அதன் மனிதநேய நிறுவனங்கள் வழியாக, குறிப்பாக மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதநேய வேலைகள் மையத்தினூடாக, 530 பில்லியன் சவூதி ரியால்களுக்கும் மேற்பட்ட மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், உலகம் முழுவதிலும் 173 நாடுகளில் 7983 க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது, இதில் வளர்ச்சி, நிவாரணம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 47 வேறுபட்ட துறைகள் அடங்கும்.

ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவதில் முக்கிய கருவியாக மாறிய மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதநேய வேலைகள் மையம் நிறுவப்பட்டதில் இருந்து, அம்மையம் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைக் குறைப்பதில் பங்களித்துள்ளன, இதில் பல நாடுகளில் ஏற்பட்ட பெரிய மனிதநேய நெருக்கடிகளும் உள்ளடங்கும்.

உலக மனிதநேய தினத்தை, சவூதி அரேபிய இராச்சியம் கொண்டாடுவது அதன் மனிதநேயப் பொறுப்புகளுக்கான நிரந்தர அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் சர்வதேச அரங்கில் அதன் முன்னணி பாத்திரத்தை தொடர்வதற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. சவூதி அரேபிய இராச்சியம் மனிதநேய வேலையை இரண்டாம் நிலை விருப்பமாக பார்க்கவில்லை, மாறாக அதை ஒரு நிலையான அணுகுமுறையாகவும் அதன் வெளியுறவுக் கொள்கையின் உண்மையான பண்பாகவும் கருதுகிறது, மேலும் முழு மனிதகுலத்தின் மீதான உண்மையான அக்கறையுடன் நிறைவேற்றும் ஒரு உயர்ந்த பணியாகக் கருதுகிறது. சவூதி அரேபியா இராச்சியம் அதன் வேரூன்றிய மதிப்புகள் மற்றும் லட்சியமான பார்வையை அடிப்படையாகக் கொண்டு தனது தொடர்ச்சியான அறிவார்ந்த பங்களிப்பில் தொடர்ந்து முன்னேறும், மனிதனுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளின்பட்டியலில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்று சாதனை படைத்த எருக்கலம்பிட்டி பாடசாலை!

யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் இதுவரை காலமும் காணப்பட்ட சாதனையை மேற்படி கல்லூரி மாணவன் 14 வயதிற்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் புதிய சாதனையை படைத்து முதலாமிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோல் 18 வயதிற்குட்பட்ட 800M, 1500M, 3000M ஓட்டப்போட்டியில் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன் N.M. நப்ரின் முதலாமிடங்கள் பிடித்து மாகாணத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் 20 வயதிற்குட்பட்ட 1500M, 3000M ஓட்டப்போட்டியில் மேற்படி கல்லூரி மாணவன் A.M. அதீக் இரண்டாமிடங்கள் பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் தடகளப்போட்டியில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான 5000M ஓட்டப் போட்டியிலும் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன்
A.M. அதீக் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டு தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 20 வயதிற்குட்பட்ட முப்பாய்தல் போட்டிலும் மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன் N.M. அன்சப் முறையே இரண்டாமிடம் மற்றும் நான்காமிடங்கள் பிடித்து பிடித்து தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

விளையாட்டின் மூலம் பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த இம்மாணவர்களை வாழ்த்துவதோடு, இவர்கள் தேசிய மட்ட போட்டிகளிலும் வெற்றிபெற பாடசாலை சமூகம் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க எமது eNews1st ஊடக அமைப்பு சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாகவில்லு பாடசாலைக்கு “EWARDS 87” அமைப்பின் நன்கொடை!

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திற்கு “EWARDS 87” அமைப்பினால் ஒரு தொகை பணம் இன்று 19.8.2025 நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் அவர்களிடம் குறித்த நன்கொடைப் பணம் இவ்வாறு கையளிக்கப்பட்டது.

பாடசாலை சுற்று மதிலின் ஒரு பகுதி கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது இடிந்து வீழ்ந்தமையால், அதன் புனர் நிர்மாணப் பணிக்காக “EWARDS 87” அமைப்பினால் சுமார் 82000/- ரூபாய் பணம் நன்கொடையாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வருட ஆரம்பத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டியில் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்தத்தினால் முழுக்கிராமமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை வளாகமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் பாடசாலையின் மைதான பக்கம் உள்ள சுமார் 50 அடி நீளமுள்ள சுவர் இடிந்து வீழ்ந்ததுடன், அதன் தொடர்ச்சியாக உள்ள ஏனைய சுவர்களும் இடியும் தருவாயில் காணப்பட்டதை அடுத்து, அதனை மீண்டும் கட்டுவதற்கான அனுமதியை புத்தளம் வலயக்கல்வி பணிமனையிடம் பாடசாலை வேண்டியிருந்தது.

எனவே பாடசாலையின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் வலயக்கல்வி பணிமனையினால் குறித்த பகுதி ஆய்வு செய்யப்பட்டதுடன், மைதான பக்கம் எஞ்சியுள்ள சுவர்களும் இடிக்கப்பட்டு புதிதாக மீண்டும் சுவர் கட்டப்பட வேண்டும் என திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் மைதான பக்கமுள்ள சுமார் 280 அடி நீளமுள்ள சுவர்களை கட்டுவதற்கான மதிப்பீடு தொழிநுட்ப உத்தியோகத்தரினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த 280 அடி நீளமுள்ள சுவர்களை கட்டுவதற்காக சுமார் 35 லட்சம் செலவாகும் என தொழிநுட்ப உத்தியோகத்தரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டுமானப்பணியை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் புத்தளம் வலயக்கல்வி பணிமனை வழங்கியுள்ளது.

அந்த வகையில் குறித்த சுவரின் கட்டுமானப் பணிக்கு முதன் முதலாக”EWARDS 87″ அமைப்பினால் சுமார் 82000/- ரூபாய் பணம் பாடசாலைக்கு நன்கொடையாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் குறித்த கட்டுமானப் பணிக்கு ஊரின் தனவந்தர்கள், கழகங்கள், அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே பாடசாலையின் தற்போதைய மிக முக்கிய தேவையாக உள்ள குறித்த கட்டுமானப்பணிக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பூரண ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்கி பாடசாலையின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் கை கோர்க்குமாறு பாடசாலை அதிபர் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் EWARDS 87 அமைப்பின் தலைவர் சியாத், பொருளாளர் நிஸ்பான் மற்றும் கழக உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சீதா பற்றி உண்மையை கூறிய நடிகர் பார்த்திபன்.

0

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பார்த்திபன், நடிகராகவும் பல படங்களில் நடித்தும் பிரபலமானர்.

    இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின், புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகினார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை பார்த்த இயக்குனர் பார்த்திபன், இரவின் நிழல் படத்திற்கு பின் டீன்ஸ் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். 1990ல் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்த பார்த்திபன், மூன்று குழந்தைகளை பெற்றார்.

    11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சீதாவும் – பார்த்திபனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்று பிரிந்தாலும் இருவரும் பிள்ளைகளின் எதிர்காலத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீதாவை விவாகரத்து செய்ய என்ன காரணம் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

    அதில், நான் காதலை முதன்முதலில் உணர்ந்தது சீதாவிடம் தான். இந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், ”நான் இப்போது எந்த காரணத்தையும் கூறி எந்த உண்மையையும் மறைக்க அவசியம் இல்லை, காதலையும் கடந்துவிட்டோம், பொய்யையும் கடந்துவிட்டோம். நான் ரொம்ப சாதாரண ஆளாக இருக்கும் போது நீ ரொம்ப பெரிய ஆளாக வருவாய். முதல் படத்திலேயே வீடு, பங்க்ளான்னு வாங்குவ என்று ஒரு ஜோசியம் சொன்னது அந்த காதல். அது கொடுத்த உத்வேகம் யாரும் கொடுத்ததில்லை.

    இப்போது விவாகரத்து என்று எல்லோரும் சொல்லும் போது, அது வேண்டாம் என்று நானே புரியாமல் அதை (விவாகரத்து) விரட்டிட்டு இருந்தேன். விவாகரத்து எல்லாம் வேண்டாம் எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று என் மனைவியிடம் கேட்டுட்டு இருந்தேன். இப்போது அப்படியெல்லாம் இருக்கக்கூடாது. முதலில் சீதாவை எப்படி புடிக்கும் என்றால், அவர்களை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது, பெரிய ஸ்டாராக வேண்டும் என்பதுதான்.

    பின் அவர்களுக்கு நடிக்க பிடிக்கவில்லை, அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதன்பின் அவங்க நடிக்க விருப்பப்படும் போது எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது, ஏனென்றால் இந்த குடும்பம் பிரிந்துவிடுமோ என்று தான். அப்போது நான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். இப்போது இருந்திருந்தால் யம்மா தாயே நீ ஷூட்டிங் போய்ட்டுவான்னு சொல்லியிருப்பேன். என் மனைவி என்மீது வைத்த காதல் உயிருக்கு மேலான காதல் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.

    வசூல் வேட்டையில் கூலி திரைப்படம்!

    0

    கடந்த வாரம் திரைக்கு வந்த கூலி திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

    கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட உலகளவில் ரூ. 418 கோடிக்கும் மேல் ஐந்து நாட்களில் வசூலை செய்துள்ளது.

    ஒவ்வொரு நாளும் கூலி திரைப்படம் எந்தந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்படம் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    வசூல்

    இதுவரை கூலி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    வடக்கு விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கிவைப்பு!

    கழிவுகளை தரம் பிரித்து தருமாறு உள்ளூராட்சி மன்றங்கள் கோரினாலும் எங்கள் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகவே போடுகின்றார்கள். நீங்கள் போடுகின்றன கழிவுகளை தரம்பிரிப்பதும் மனிதர்களே என்பதை எங்கள் மக்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

    தரம் பிரித்து கழிவுகளை தராவிட்டால் அதை எடுக்கமாட்டோம் என்று உள்ளூராட்சி மன்றங்கள் சொன்னால், அந்தக் கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டி, வீதியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். மக்கள் தாங்களாக உணர்வதன் ஊடாகவே இதைச் சீர் செய்ய முடியும் என ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

    வடக்கு மாகாண விவசாய கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், அறுவடை சஞ்சிகை வெளியீடும், உலக சுற்றாடல் தின நிகழ்வும் திருநெல்வேலியிலுள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19.08.2025) அமைச்சின் செயலர் ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோதே வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

    விவசாயிகளை நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏழை விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம். அவர்களையும் பணக்கார விவசாயிகளாக நாம் மாற்றவேண்டாமா? புதிதாகச் சிந்திக்க வேண்டும். 1970 ஆம் ஆண்டுகளில் எமது பிரதேச விவசாயிகளின் வீடுகள் கல் வீடுகளாக மாறின. தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் விவசாயிகளின் வாழ்க்கையில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கெளரவ ஆளுநர்;

    விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதே இங்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் அவர்கள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது. இதற்காகத்தான் விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றுவதற்கும், ஏற்றுமதிக்குமான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். அதன் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு எப்போதும் நிலையான விலையை வழங்க முடியும்.

    விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதென்றால் அதற்குரிய தொழிற்சாலைகள் முதலீட்டாளர்களால் இங்கு வரவேண்டும். எதிர்காலத்தில் அவை இங்கு வரும் என நம்புகின்றேன்.

    முன்னைய காலங்களில் அரசாங்க வேலைகளைவிட்டு விவசாயத்துக்குச் சென்றவர்களை எனக்குத் தெரியும். அரசாங்க வேலையை விட விவசாயத்தில் அதிகம் உழைக்க முடியும் என்ற சூழல் இருந்தது. அத்தகைய சூழலை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்.

    அதேபோல சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரவேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவர்கள் வருவதற்குரிய வகையில் எங்கள் நகரத்தின் தூய்மை இருக்கின்றதா? எங்கள் நகரம் இலங்கையிலேயே தூய்மையான நகரமாக 1970 ஆம் ஆண்டுகளில் இருந்தது. ஆனால் இன்று அதை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டோம். இதற்கு நாம் ஒவ்வொருவரும்தான் பொறுப்பு. ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதன் விளைவை நாங்கள் அனுபவிக்கின்றோம். இப்போதிருந்தாவது இதை எல்லோரும் இணைந்து மாற்றுவோம், என்றார் ஆளுநர்.

    மேலும் பாடசாலை சுற்றாடல் கழகங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு மேலங்கிகளை வழங்கி வைத்ததுடன், பாடசாலை மாணவர்களிடையே சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி, யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் ஆகியோரும், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள மேலதிக மாகாணப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பிரதிப் பணிப்பாளர், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்வைத் தொடர்ந்து மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் (PSDG) கீழ் விவசாயிகளுக்கு விதை நெல்லும், நீர்ப்பாசன இயந்திரமும், வரிசையில் விதையிடும் கருவியும், வெங்காய சேமிப்பு கொட்டகையும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் விவசாய கிணறுகள் புனரமைப்புக்கான காசோலையும் விவசாயிகளுக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

    இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!

    0

    தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

    30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், முதல் தொகுதி விரைவில் இலங்கையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்ராங்கிட் (Pongkawin Jungrungruangkit) தெரிவித்தார்.

    வயதானோர் சனத்தொகை மற்றும் சுருங்கி வரும் தொழிலாளர் சக்தி காரணமாக, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுமதிக்கவும் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.

    சமீபத்திய எல்லை மோதல் காரணமாக 300,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததுடன், தாய்லாந்தை விட்டு சுமார் 400,000 கம்போடியர்கள் வெளியேறியுள்ளனர்.

    இந்தநிலையில்,விவசாயம், நிர்மாணம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் சுமார் 3 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும்!

    0

    ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன. 

    ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, தபால் தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. 

    19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (18) பிற்பகல் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. 

    இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

    இந்த விடயம் தொடர்பில், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், இ.ஜி.சி. நிரோஷன் தெரிவிக்கையில், 

    “உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம். அதுவரை தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பை தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.