Sunday, June 8, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 9

வீதி பாதுகாப்பு தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் அவர்களின் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,போக்குவரத்து பொலிசார், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும், உயிர் ஆபத்துக்களை குறைக்கும் நோக்கிலும் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை அண்மையில் கொத்மலை, கெரண்டியிஎல்ல பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான பஸ் விபத்து முழு நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை!

0

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. 

அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 245,000 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த புதன்கிழமை, இதன் விலை 240,500 ரூபாயாக காணப்பட்டது. 

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 260,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 265,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு!

0

வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில் மின்சார இணைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்தது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அறிமுகமாகவுள்ள புதிய வீதி பாதுகாப்புத் திட்டம்!

0

“Take Care வீதிகளைப் பாதுகாப்போம்’ திட்டம் அறிமுகம்”

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுத்து, வீதிகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்ட “Take Care வீதிகளைப் பாதுகாப்போம்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேற்குறித்த திட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அமுல்படுத்தவதற்கு வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு திட்டமிட்டுள்ளது.

பாடசாலை வாகன ஒழுங்குபடுத்தல் அணிகள் மற்றும் மாணவ தலைவர்களை இணைத்து, 100 கல்வி வலயங்களில் உத்தேச திட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கல்வி வலயத்திலிருந்து தலா 500 மாணவர்கள் என்ற ரீதியில் 50,000 மாணவர்களை நேரடியாக நிகழ்ச்சித்திட்டத்தில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையில் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மூலம் உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    தொழிற்கல்விப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்ப்பு!

    0

    க.பொ.த(சா/த) பரீட்சையில் தோல்வி நிலையைப் பொருட்படுத்தாமல், உயர்தர தொழிற்கல்விப் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவின் (13 ஆண்டு சான்றளிக்கப்பட்ட கல்வித் திட்டம்) கீழ், பாடசாலைகளில் 12 ஆம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    அதன்படி, தொழிற்கல்விப் பிரிவுக்கு 12 ஆம் தரத்தில் மாணவர்களைச் சேர்க்கும்போது, ​​க.பொ.த (சா/த) பரீட்சையில் தேர்ச்சி/தோல்வி நிலை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    பாடசாலைகள் விபரம் கீழே,
    https://moe.gov.lk/wp-content/uploads/2025/05/16/Annex2ALVSSchoolList2025.pdf

    விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்.
    https://moe.gov.lk/wp-content/uploads/2025/05/16/Annex3ALVS13YearsSchoolApplicationTam.pdf

    காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!

    0

    வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இச்சம்பவத்தில், கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    நைஜீரியா பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் பலி!

    0

    நைஜீரியாவில் வட கிழக்கு பகுதியில் 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.

    மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. போகோ ஹாரம் என்ற கும்பல் போர்னோ மாகாணம் மாளம் கராண்தி கிராமத்தில் திடீரனெ தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள், சிறுமிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொள்ளை கும்பலால் கடத்திச் சென்றனர். அதேபோல் மற்றொரு கிராமத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை கும்பலிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இணைந்தது ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி!

    0

    2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. 

    நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இன்று (19) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

    இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த விடயத்தை தெரிவித்தனர்.

    தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற அவசர கூட்டம்!

    0

    நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலை மையப்படுத்தி வன்னி,கம்பஹா, கொழும்பு, களுத்துறை,பதுளை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு , ஆட்சி அமைப்பில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்றது.

    தற்போதைய அரசியல் கள நிலைவரம் தொடர்பில் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அடங்கலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கட்சியின் தலைமையகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

    குறிப்பாக மன்னார் பிரதேச சபைக்கான கட்சியின் போனஸ் ஆசனம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன், எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சரித்திர வெற்றிபெற்ற மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயீல் இஸ்ஸதீன் கட்சியின் தலைமையினால் வெகுவாக பாராட்டப்பட்டார்.

    இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.எஸ்.எம்.அஸ்லம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத் நிஸாம்தீன், ஷாபி ரஹீம் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

    மின்சார கட்டணம் குறித்து அதிர்ச்சி தகவல்!

    0

    இந்த ஆண்டின் பிற்பகுதிக்கான மின்சார கட்டண திருத்தத்தின்படி மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மின்சாரக் கட்டணங்களை விட அது குறைவாக இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

    முன்மொழியப்பட்ட திருத்தத்துக்கமைய, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்ததை விட மின்சார கட்டணம் சுமார் 5.4 சதவீதம் குறைவடையும் என இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

    இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக மின்சாரக் கட்டணங்களில் 20 சதவீதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் விளைவாக, ஒரு அலகு மின்சாரத்தின் சராசரி கட்டணம் 24 ரூபாய் வரை குறைவடைந்தது.

    எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிந்திருந்தது. 

    கடந்த ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டணக் குறைப்பின் தாக்கம் உட்பட, ஆணைக்குழுவுக்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. 

    அத்துடன், அண்மையில் சர்வதேச நாணய நிதியம், செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்களை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 

    இந்தப் பின்னணியில்தான், மின்சாரக் கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.