Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 95

சிக்கிய பெருந்தொகை ஐஸ் போதைப்பொருள்!

0

இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் இன்று நேற்று (2025 நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருந்தமை உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் குறித்த போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, ஏனைய படையினர்,பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உள்ளிட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து முழு நாட்டையும் உள்ளடக்கி போதைப்பொருள் கைப்பற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கையின் மேற்கு கடலில் கடற்படை நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பலால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு போதைப்பொருள் அடங்கிய பதினாறு (16) பொதிகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு, ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை உள்ளிட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு!

0

ஜனாதிபதி நிதியத்தால் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த

பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் இன்று (02) காலை பதுளை நூலக கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரை நிகழ்த்தியதோடு நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாகவும், ஒரு நாட்டில் கல்வியில் முதலீடு செய்வது போன்ற முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முதலீடு எதுவும் இல்லை என்றும் கூறினார். குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் .

கல்வி மூலம் கல்வி ஞானமுள்ளவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.ஒரு புத்திசாலி ஒருபோதும் அணுகுண்டை உருவாக்க மாட்டார்.கல்வி கற்றவனாகி இருந்து ஏமாற்றினால், அந்தக் கல்வியில் எந்த மதிப்பும் இல்லை.அந்த இடத்தில் ஞானம் இல்லை,கல்வி மட்டுமே உள்ளது. எனவே, உங்கள் கல்வி நாட்டிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டால், உங்கள் பெற்றோர் உங்களை வளர்க்க வழங்கிய போசாக்கான சாப்பாட்டிற்கு நியாயம் கிடைக்கும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, புதிய அரசாங்க எண்ணக்கருவின் படி பிள்ளைகளின் வாழ்க்கையை வலுப்படுத்த இதுபோன்ற பங்களிப்பைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய ஜனாதிபதி நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இந்த நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை நெறிப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்திற்கு கொண்டு

சென்றுள்ளது. எனவே, தகுதியான பயனாளிகள் தற்போது நிதியத்தின் நன்மைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது குறித்த விசேட ஒரு நாள் செயலமர்வு நேற்று (01) பதுளையில் நடைபெற்றது. இதில் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திறகுப் பொறுப்பான அலுவலர்கள் பங்கேற்றனர்.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் பலகல்ல, சட்டத்தரணி சரத் குமார, பதுளை மேயர் பந்துல ஹபுகொட, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேரத்ன, மொனராகலை மாவட்ட செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, அரசு அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மகளிர் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

0

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் மும்பையில் இடம்பெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 299 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 45.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவி laura wolvaardt அதிகட்பசமாக 101 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Deepti Sharma 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நாகவில்லுவில் இடம்பெற்ற பிரமாண்ட பரிசளிப்பு விழா!

கடந்த 2024-2025 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் பிரமாண்ட நிகழ்வு இன்று 02.11.2025 பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கான கெளரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் கலந்துகொண்டார்.

புத்தளம்-நாகவில்லு கிராமம் உருவாகுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கித்தந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் MHM அஷ்ரப் அவர்களின் 25 வருட சிரார்த்த தினத்தை முன்னிட்டு குறித்த பரிசளிப்பு வைபவம் எருக்கலம்பிட்டி கல்வி வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2024-2025 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.சா/த பரீட்சை மற்றும் க.பொ. உ/த பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் இதன்போது நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட ஆசிரியர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.

நாகவில்லு கிராமத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் MHM அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறித்து நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் நினைவுபடுத்தினார்.

மேலும் நாகவில்லு கிராமத்தின் தற்போதைய அத்தியாவசிய தேவைப்பாடுகள் குறித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாகவில்லு கிராமத்தின் பெண்கள் அதிகளவில் தமக்கு வாக்களித்ததாகவும், நாகவில்லு கிராமத்தின் அபிவிருத்திக்கு தாம் முடியுமான பங்களிப்பை வழங்குவதாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தெரிவித்தார்.

நாகவில்லு கிராமத்தின் வைத்தியசாலை வீதியை புனரமைக்க தாம் முயற்சி செய்வதாகவும், நாகவில்லு வைத்தியசாலையில் பல் வைத்திய பிரிவை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில், புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் திருமதி அஸ்கா, புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுஸைமத் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் கலாநிதி நிஹ்மத்துல்லாஹ் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் உற்பட பாடசாலை சமூகம், உலமாக்கள், கல்விமான்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மேயராக மாநாட்டில் பங்கேற்ற இஷாம் மரிக்கார்?

0

புத்தளம் மாநகரசபை மேயர் பதவியின் பெயரை தவறாக பயன்படுத்தி சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட மாநகரசபை உறுப்பினர்

புத்தளம் மாநகர சபையின் உறுப்பினராக செயற்பட்டு வரும் இஷாம் மரிக்கார் , சமீபத்தில் துபாயில் இடம்பெற்ற ASIA PACIFIC CITIES SUMMIT & MAYOR’S FORUM எனும் சர்வதேச மாநாட்டில், புத்தளம் மேயராக தன்னை பொய்யாக அறிமுகப்படுத்தி கலந்துகொண்டுள்ளார் என புத்தளம் மாநகரசபை கண்டனம் தெரிவித்துள்ளது.

Eng.ரினாஸ் அஹமட் அவர்கள் ,மாத்திரமே தற்போது புத்தளம் மாநகர சபையின் மேயர் எனவும், அவர் தவிர யாருக்கும் மாநகர சபையின் சார்பில் மேயராகவும் அல்லது சர்வதேச ரீதியில் பிரதிநிதியாகவும் இருப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் குறித்த மாநகரசபை தெரிவித்துளளது.

புத்தளம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறித்த விடயம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான தவறான அறிமுகம் ஒரு மோசமான பொது நம்பிக்கைக்கேடு மட்டுமல்லாது, அரசியல் மற்றும் நிர்வாக ஒழுங்குகளுக்கு முற்றிலும் முரணானது. இச்செயல், எமது நகராட்சியின் நற்செயல்களையும், நம்பிக்கையும் பாதிக்கக்கூடியதாகும்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்சி என குறித்த முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாநகர சபை எப்போதும் தெளிவான நிர்வாகம், பொறுப்புணர்வு மற்றும் நேர்மையை முன்னேற்றுவதாக உறுதி செய்வதாகவும், எதிர்காலத்தில் இத்தகைய தவறான நடவடிக்கைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுது.

இதேவேளை கல்வி, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளையும் சேர்ந்த Chamber of Commerce அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை கனடா வர்த்தக கவுன்சிலினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கை குழாமில் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர் விஷம் மரிக்கார் அவர்களின் சகோதரர் இல்ஹாம் மரிக்கார் இணைந்து கனடா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வீரரின் உயிரை பறித்த 1XBET சூதாட்ட விளையாட்டு!

0

ஜூட் சமந்த

திருகோணமலையில் உள்ள ஒர்ஹில் இராணுவ முகாமில் பணியாற்றும் ஒரு சிப்பாய் தனது சேவை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தற்கொலை சம்பவம் நேற்று 1 ஆம் தேதி இரவு இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் பிரசன்ன கருணாரத்ன (வயது 28), 22 வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வந்த குருநாகல், தோடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இறந்த சிப்பாய் 1XBET எனப்படும் சர்வதேச சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையானதால் கடனில் மூழ்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரங்குலிய பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான ஈன செயல்!

0

ஜூட் சமந்த

தனது இளைய மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் தந்தை ஒருவர் சந்தேகத்தின்பேரில் மதுரங்குளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி, முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரையே இவ்வாறு போலீசார கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு மீனவர் என்றும், அவரது மனைவிக்கு மல்லிகை பூ தோட்டத்தில் உதவி செய்து வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது கணவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையிலே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நேற்று 1 ஆம் தேதி மதியம், அவரது மனைவி மல்லிகை பூ பறிக்கச் சென்றிருந்தபோது, சந்தேக நபர் தனது வீட்டிற்குள் தனது இளைய மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் 11 வயது மற்றும் 11 மாத வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி, சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மதுரங்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தில் பெண் பலி!

0

ஜூட் சமந்த

ஒரே திசையில் பயணித்த இரண்டு பொலரோ ரக கெப் வண்டிகள் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் மூன்று பெண்கள் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் உள்ள சிரம்பியாடிய பகுதியில் நேற்று 2 ஆம் தேதி இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் மன்னார், எருக்கலம்பிடியைச் சேர்ந்த நஸ்ருல்லா நஜீபா (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

35, 46 மற்றும் 80 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

80 வயதுடைய பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய இரண்டு கெப் வண்டிகளில் முன்னாள் சென்றுகொண்டிருந்த வண்டியின் பின்புறத்தில் இறந்த பெண்ணும் காயமடைந்த மூன்று பெண்களும் பயணித்தனர்.

மற்ற வண்டியில் தேங்காய் ஏற்றப்பட்டு சென்றுகொண்டிருந்த நிலையில், இரண்டு வண்டிகளும் மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் ஒரு பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த பெண் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் தொடர்புடைய இரண்டு கெப் ரக பொலரோ வண்டிகளையும் போலீசார் தங்கள் காவலில் எடுத்து, வாகனங்களை ஓட்டி வந்த இரண்டு ஓட்டுநர்களையும் கைது செய்துள்ளனர்.

புத்தளம் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கெஹெல்பத்தர பத்மே குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!

0

கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது. 

அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் நேரடி மேற்பார்வையிலும், தலைமை பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வாவின் வழிகாட்டலிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் பலனாக, மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று (நவம்பர் 1) காலை ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரான வர்த்தகர் பொலிஸாரிடம், ஹினட்டியன மஹேஷ் என்ற குற்றவாளியால் தனக்கு மிரட்டல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அவர் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக, பாதுகாப்புக்காக கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து முதலில் 5 இலட்சம் கோரப்பட்ட 13 தோட்டாக்கள் அடங்கிய கைத்துப்பாக்கியை தாம் மூன்றரை இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, கெஹெல்பத்தர பத்மேவுடன் டுபாயில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. 

கெஹெல்பத்தர பத்மே அந்த நடிகைகளுக்குப் பணம் வழங்கினாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த நடிகைகள் பத்மேவின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினார்களா என்பது தொடர்பாகவும் விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அந்தப் பணம், குறித்த நடிகைகளால் பல்வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை!

0

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.