Sunday, June 21, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 97

அபாயத்துடன் பாலத்தை கடக்கும் வடக்கு மக்கள்!

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்குனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வருவதை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்குனை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்குனை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்துள்ளதுடன், இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புத்தளம் -நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை!

0

ஜூட் சமந்த

தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம், மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த சிரில் ஜெயசீலன் (38) மற்றும் நடராஜா சசிகலா (35) ஆகிய தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று 3ஆம் தேதி மதியம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளை திருமணம் செய்தவர் என தெரிவியவந்துள்ளது.

சந்தேக நபரின் கொடூரமான தாக்குதலால் காயமடைந்த அவரது மனைவி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர், தனது மாமனார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தையைக் கேட்டுள்ளார்.

குழந்தையை தங்கள் மருமகனிடம் ஒப்படைக்க மாமனாரும் மாமியாரும் மறுத்த நிலையில், ​​இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கூர்மையான ஆயுதம் கொண்டு வந்த மருமகன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த தம்பதியினரை அப்பகுதி மக்கள் புத்தளம் பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று 3ஆம் தேதி இரவு நுரைச்சோலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லு குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி தீவிரம்!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட நாகவில்லு கிராமம் முழுமையாக இந்த வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பிவரும் நிலையில் நாகவில்லு கிராமத்தில் சுமார் 5 தினங்கள் மூன்று வேலைகளிலும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டதுடன், இரண்டு தினங்களுக்கு இலவச தண்ணீர் விநியோகமும் இடம்பெற்றது.

வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமத்தின் குறுக்கு வீதிகளை செப்பனிடும் பணிகள் நேற்றைய தினமும் இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை கெளரவ உறுப்பினருமான ஜனாப் லரீப் காஸிம் அவர்களின் வழிகாட்டுதலில் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊர் தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நாகவில்லு கிராமத்தில் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களின் வீடுகளுக்கு அரச அதிகாரிகள் தற்போது கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3.25 மில்லியன் நிதி உதவி செய்த தேர்ஸ்டன் கல்லூரி!

0


தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 32 லட்சத்து 50ஆயிரம் நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நன்கொடையை தேர்ஸ்டன் கல்லூரி நம்பிக்கை நிதியத்தின் (Thurstan College Trust Fund) தலைவர் திரு. நோயல் ஜோசப் அவர்கள் வழங்கினார்.

இந்த மொத்த பங்களிப்பில் கல்லூரியின் நம்பிக்கை நிதியத்திலிருந்து ரூ. 22 லட்சத்து 50ஆயிரம் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தேர்ஸ்டன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரிடம் இருந்து ரூ.10 லட்சம் என்பன உள்ளடங்குகின்றன.

இது தேசிய நலன் மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கான தேர்ஸ்டன் சமூகத்தின் வலுவான கூட்டு ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்கள், நாட்டின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத் திறன்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சரியான நேரத்திலான மற்றும் அர்த்தமுள்ள ஆதரவுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

அத்துடன், நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மை மற்றும் தேசிய உணர்வையும் பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களின் விபரங்கள் திரட்டு!

0

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்க தொழில்துறை அமைச்சு ஒரு பொறிமுறையைத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் இந்தத் தரவு அமைப்பிற்கு விரைவாக தகவல்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்தத் தரவு அமைப்பிற்கு தேவையான தகவல்களைச் சேகரிப்பது டிசம்பர் 16, 2025 அன்று பிற்பகல் 2 மணிக்குள் நிறைவுபெறும்.

www.industry.gov.lk மூலம் தகவல்களை உள்ளிடலாம். உங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகத்திலும் மாவட்ட செயலக மட்டத்திலும் அமைந்துள்ள தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சக அதிகாரியிடமிருந்து தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் புதிய இரும்பு பாலம்!

0

ஜூட் சமந்த

புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் 9ஆவது மைல்கல்லில் இடிந்து விழுந்த கான்கிரீட் பாலத்திற்கு பதிலாக புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வீதி மேம்பாட்டு அதிகாரசபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக பாலம் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக, புத்தளம்-அனுராதபுரம் வீதியில் அனைத்து போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

புதிய பாலத்தின் விரைவான கட்டுமானத்திற்காக இராணுவ வீரர்கள், கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் ஆகியவை வீதி மேம்பாட்டு அதிகாரசபைக்கு உதவி செய்தன.

இதன்மூலம் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு போக்குவரத்து பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக த்தளம் வீதி மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு!

0

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதுடன், 350 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 455,405 குடும்பங்களைச் சேர்ந்த 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,347 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இம்முகாம்களில் 51,765 குடும்பங்களைச் சேர்ந்த 188,974 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 1289 வீடுகள் முழுமையாகவும், 44,556 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகவில்லு பாடசாலையை துப்பரவு செய்த “சிவப்பு சகோதரர்கள்” அணி!

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் நாகவில்லு கிராமத்தின் பாடசாலையில் இன்று சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து புத்தளத்திற்கு வருகை தந்த “சிவப்பு சகோதரர்கள்” தன்னார்வ தொண்டர்கள் கொண்ட குழுவினால் குறித்த சிரமதானப்பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை அடுத்து நாடு தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகின்ற நிலையில், ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 250 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கொண்ட குழு ஒன்று இன்று புத்தளத்தை வந்தடைந்தது.

புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு சுமார் ஐந்து நாட்களை வரை இங்கு தங்கி இருந்து, குறித்த சிரமதானப்பணியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தன்னார்வ தொண்டர்கள் குழுவின் புத்தளம் மாவட்டத்திற்கான ஏற்பாட்டாளர் தோழர் சிவா எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

அந்த வகையில் முதல் நாளான இன்று, நாகவில்லு கிராமத்தில் உள்ள பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறைகள், அதிபர் காரியாலயம் உள்ளிட்ட பாடசாலை வளாகம் குறித்த தன்னார்வ தொண்டர்கள் குழுவினரால் மின்னல் வேகத்தில் துப்பரவு செய்யப்பட்டது.

குறித்த பணியை நேர்த்தியாக முன்னெடுக்க உதவிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் மற்றும் பிரதேச அமைப்பாளர் தோழர் சிராஜ் ஆகியோருக்கும், ஹம்பாந்தோட்டையில் இருந்து புத்தளத்திற்கு வருகை தந்த “சிவப்பு சகோதரர்கள்” தன்னார்வ தொண்டர்களுக்கும் கல்லூரியின் அதிபர் ஜனாப் SM. ஹுஸைமத் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டையில் இருந்து புத்தளத்திற்கு வருகை தந்த “சிவப்பு சகோதரர்கள்” தன்னார்வ தொண்டர்கள் குழுவின் மற்றுமொரு அணி இன்றைய தினம் மாதம்பை பகுதியிலும் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற மற்றுமொரு தன்னார்வ தொண்டர்கள் கொண்ட அணி ஒன்றும், மாத்தறையில் இருந்து பதுள்ளைக்கு சுமார் 850 பேருடன் துப்பரவு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக சென்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை முற்றாக பாதிப்பு!

0

ஜூட் சமந்த

நிலவும் மோசமான வானிலை காரணமாக கொழும்பு – சிலாபம் ரயில் பாதையில் உள்ள பல ரயில் நிலையங்களும் ரயில் தண்டவாளங்களும் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

நாத்தாண்டியா மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள பாதைகளே குறித்த வெள்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நாத்தாண்டியா மற்றும் வலஹாபிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ஒரு ரயில் நிலையம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.

மேலும் குடாவெவ மற்றும் நெலும்பொகுன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் உள்ள பல ரயில் நிலையங்களும் இவ்வாறு அதிகளவில் சேதமடைந்துள்ளன.

அந்த ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள கடுபிட்டி ஓயாவின் பாலமும் குறித்த வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் புத்தளம் – கொழும்பு ரயில் பாதையில் பல பகுதிகள் தாழிறங்கி உள்ளத்துடன், நீரில் மூழ்கியும் உள்ளது.

இந்த நிலைமை காரணமாக, கொழும்பு – சிலாபம் பாதையில் உள்ள ரயில் சேவைகள் சில நாட்களுக்கு நாத்தாண்டியா ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NTM தாஹிர் அவர்களுக்கு நாகவில்லு பிராந்திய கிளை வாழ்த்து!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
புத்தளம் – நாகவில்லு பிராந்திய கிளை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு, நாகவில்லு பிராந்திய கிளை சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக புத்தளம் பிரதேசயின் முன்னாள் உறுப்பினர் SM. ரிஜாஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தால் தோல்வியுற்ற என்.டி.எம். தாஹிர் அவர்களை, புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக நியமித்திருப்பது எங்கள் பிராந்திய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு வழங்கிய செய்தியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில், புத்தளம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய திறமைமிக்க தலைவரின் பாராளுமன்றப் பொறுப்பேற்பு அவசியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம்.
என்.டி.எம். தாஹிர் அவர்கள் புத்தளம் மாவட்ட மக்களின் நலனையும், நாகவில்லு பிராந்தியத்தின் அபிவிருத்தி தேவைகளையும் முன்னிலைப்படுத்தி செயல்படுவார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாகவில்லு பிராந்திய கிளை சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.