Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYபுத்தளம் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி அணி தெரிவு

புத்தளம் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி அணி தெரிவு

மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக நடாத்தப்பட்டுவரும் புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இருதிப்போட்டிக்கு எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினர் தகுதிபெற்றுள்ளனர்.

குறித்த சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியி புத்தளம் அல் அஷ்ரா மற்றும் புத்தளம் லிவர்பூல் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் நியூ ப்ரணட்ஸ் அணிகளுக்கிடையான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எருக்கலம்பிட்டி எப்.சி அணியினர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் முதல் பாதியில் நியூ ப்ரணட்ஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு கோலினை அடித்து வலுவான நிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எருக்கலம்பிட்டி எப்.சி அணியினர் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்றனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி அணி சார்பாக ரக்‌ஷான் மற்றும் பாஸில் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி புத்தளம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளனர்.

இன்றைய தினத் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, புத்தளம் நகரபிதா எஸ்.எம்.ரபீக் மற்றும் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular