Wednesday, July 30, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsசீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி!

சீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி!

சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 80,000 பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.

மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர்.

தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேரை காணவில்லை. மியுன் மாகாண அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக மழை,வெள்ளத்திற்கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புபணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular