நேபாளம் தலைநகர், காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கோதத்தார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகள், மோசமடைந்து வரும் விமானப் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றுடன், மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்திற்கு பாதுகாப்பை வழங்க நேபாள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.