Thursday, June 11, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் சகோதரி முபீதா அப்துல்லாஹ் காலமானார்!

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் சகோதரி முபீதா அப்துல்லாஹ் காலமானார்!

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் சகோதரி முபீதா அப்துல்லாஹ் காலமானார்: ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த இரங்கல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் அன்புச் சகோதரியான முபீதா அப்துல்லாஹ் அவர்கள் காலமான செய்தி சமூகத்தின் பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துயரச் செய்தியை அறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, மறைந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான முபீதா அப்துல்லாஹ் அவர்கள், நீண்டகாலம் கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, எண்ணற்ற மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளராகப் போற்றப்பட்டவர்.

அத்துடன், சமூக, சமய மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் காலத்திலிருந்தே அக்கறையுடன் செயற்பட்டு வந்த அவர், சமூக சேவையிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தில், அவரது கணவரும் மறைந்த சட்டத்தரணியுமான அப்துல்லாஹ் அவர்கள் உறுதியான துணையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேதனையான தருணத்தில், அல்லாஹ் தஆலா அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னத சுவனப்பதவியை அருள்வானாக என பிரார்த்திப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த முபீதா அப்துல்லாஹ் அவர்களின் அன்பு புதல்வர்கள் மூவருக்கும், புதல்விக்கும், மருமக்களுக்கும் மற்றும் அனைத்து உறவினர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் தனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு அர்ப்பணிப்புமிக்க ஆசிரியராகவும், சமூக அக்கறை கொண்ட பண்புமிக்க பெண்ணாகவும் வாழ்ந்து பலரது மனங்களில் அழியாத நினைவுகளைப் பதித்த முபீதா அப்துல்லாஹ் அவர்களின் மறைவு, குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது கல்வி மற்றும் சமூகத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் சகோதரி முபீதா அப்துல்லாஹ் காலமானார்!

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் சகோதரி முபீதா அப்துல்லாஹ் காலமானார்: ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த இரங்கல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் அன்புச் சகோதரியான முபீதா அப்துல்லாஹ் அவர்கள் காலமான செய்தி சமூகத்தின் பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துயரச் செய்தியை அறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, மறைந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான முபீதா அப்துல்லாஹ் அவர்கள், நீண்டகாலம் கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, எண்ணற்ற மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளராகப் போற்றப்பட்டவர்.

அத்துடன், சமூக, சமய மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் காலத்திலிருந்தே அக்கறையுடன் செயற்பட்டு வந்த அவர், சமூக சேவையிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தில், அவரது கணவரும் மறைந்த சட்டத்தரணியுமான அப்துல்லாஹ் அவர்கள் உறுதியான துணையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேதனையான தருணத்தில், அல்லாஹ் தஆலா அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னத சுவனப்பதவியை அருள்வானாக என பிரார்த்திப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த முபீதா அப்துல்லாஹ் அவர்களின் அன்பு புதல்வர்கள் மூவருக்கும், புதல்விக்கும், மருமக்களுக்கும் மற்றும் அனைத்து உறவினர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும் தனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு அர்ப்பணிப்புமிக்க ஆசிரியராகவும், சமூக அக்கறை கொண்ட பண்புமிக்க பெண்ணாகவும் வாழ்ந்து பலரது மனங்களில் அழியாத நினைவுகளைப் பதித்த முபீதா அப்துல்லாஹ் அவர்களின் மறைவு, குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது கல்வி மற்றும் சமூகத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular