Thursday, March 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 118

கஞ்சா அனுமதிக்கு டயனா கமகே பாராட்டு!

0

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை தான் வரவேற்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தின் போது, கஞ்சாவை சட்ட ரீதியாகப் பயிரிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என டயனா கமகே யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

எனினும் அந்த விடயம் நாட்டில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது கஞ்சா பயிரிடுவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 07 பேருக்கு அனுமதிவழங்கி, தான் அன்று முன்வைத்த கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளமை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் டயனா கமகே தெரிவித்தார்.

அத்துடன், முன்னதாக இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த விஜித ஹேரத் உள்ளிட்டோர் தற்போது அமைச்சரவையில் இதற்கு அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக நாடுகளில் இவ்வாறான விடயங்கள் நடைமுறையில் இருப்பதால் அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன. ஆகவே இலங்கையிலும் அவற்றை முன்னெடுக்கும் போதே பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டினார்.

இதனை தற்போதாவது புரிந்துகொண்டு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கசினோவுக்கும் தற்போது இலங்கையில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் டயனா கமகே கூறினார்.

இந்த நிலையில் தான் முன்வைத்த கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கான தூங்கா நகரத் திட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்தினால் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிறந்த முதலீட்டாளரைக் கொண்டு ஜனாதிபதி மாளிகையை அபிவிருத்தி செய்து ஜனாதிபதி ஹோட்டல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, வத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா!

0

கொழும்பு, வத்தளை, பங்களாவத்தை பகுதியில் நேற்று 2025.08.15 மாலை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 309 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

வத்தளை, பங்களாவத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டை சோதனை செய்தபோதே 309 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பணிப்புறக்கணிப்புக்கு வைக்கப்பட்ட அதிரடி ஆப்பு!

0

நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.

அந்த வகையில் குறித்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்யும் வகையில் நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 வருடத்தில் ஊருக்குள் முதல்முறை வந்த குப்பை வண்டி!

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள ரசூல் நகர் கிராமத்திற்கு முதல் முறையாக நேற்றைய தினம் குப்பை வண்டி குப்பைகளை சேகரித்து சென்றுள்ளது.

ரசூல் நகர் கிராமம் உருவாகி சுமார் 20 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், ஊருக்குள் முதல் முறையாக குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்த விடயம் அப்பகுதி மக்களை பெரும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசூல் நகர் கிராம பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரசூல் நகர் இணைப்பாளர் ஜனாப் அலி அஸீம் ஆகியோர், புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினரும், புத்தள பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவருமான ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, ரசூல் நகர் கிராமத்துக்கு நேற்று (15.08.2025) குப்பை வண்டி அனுப்பிவைக்கப்பட்டு குப்பைகளை சேகரித்துச் சென்றுள்ளது.

ஊரின் நீண்ட கால பிரச்சினையாக இருந்த குப்பை கழிவு விடயத்திற்கு நேற்றைய தினம் உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும், இதனை மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் பெற்றுத்தந்த பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களுக்கு தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புத்தள பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த குப்பை வண்டி சுழட்சி முறையில் ரசூல் நகர் கிராமத்துக்கு தொடர்ச்சியாக வருகை தரும் எனவும், ரசூல் நகர் கிராம மக்களினால் ஊரின் ஏனைய அத்தியாவசிய குறைபாடுகள் குறித்து தம்மிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள் படிப்படியாக பூர்த்திசெய்யப்படும் எனவும் புத்தள பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவர் ஜனாப் ஷாஹீன் ரீஸா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரசூல் நகர் கிராமத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த குப்பை வண்டி, ஜனாப் அலி அஸீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு,கிழக்கில் நாளை மறுதினம் கடையடைப்பா?

கடந்த வாரம் முத்தையங்கட்டு பகுதியில் அப்பாவி இளைஞன் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு, இளைஞனுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 18.08.2025 அன்றைய தினம் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எமது பகுதியில் அநியாயமாக கொல்லப்பட்ட முத்தையங்கட்டு இளைஞனுக்கு நீதிவேண்டி அன்றைய தினம் 18.08.2025 தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க உதவுமாறு வேண்டியுள்ளார்.

குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என தெரிவித்து இன்றைய தினம்16.08.2025 ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு சண்முகம் ஜீவராசா இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்!

0

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு புதிய பொலிஸ்மாஅதிபர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்றுள்ளதுடன், இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் படிப்படியாகக் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வானில் இன்று ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிர்ச்சியுடன் விடிந்தது இன்றைய காலைப்பொழுது!

0

மொணராகலை, வெலியாய பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ் ஒன்றின் சாரதி மரணமடைந்துள்ளார்.

பொத்துவில் – வெல்லவாய வீதியில் 255km மைல்கல் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் (SLTB) ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இ.போ.ச. பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, இரு பஸ்களிலும் பயணித்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்பகல திசையிலிருந்து மொணராகலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்று எதிர்த் திசையில் யாத்திரிகர்களுடன் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிறிகல, மற்றும் மொணராகலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் காற்றாலை பிரச்சினை ஆராய புதிய குழு!

0

மன்னார் உத்தேசித்த காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படுமா?

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மின் சக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில்  வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டின் ஊடாக 70 சதவீத மின் உற்பத்தியை மேற்கொள்வதே எமது இலக்காகும். அதனடிப்படையில் 5 வருடங்களுக்குள் அதாவது 2030ஆம் ஆண்டாகும் போது மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இந்த இலக்கை அடைவதற்கு மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ஸ்திரத்தன்மை ஆகியவையே அந்த மூன்று பிரதான காரணிகள் ஆகும். இவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை கிடைத்த பின்னரே வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் சுற்றாடல் அமைச்சன் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அதிகார சபை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவி சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவுக்கு ஒரு வாரம் காலம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இக்குழுவுடனான முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளது. ஒரு வாரத்துக்குள் பிரச்சனைகளை இனங்ண்டு அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் அதற்கு எடுக்கும் காலம் என்பவற்றை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார். 

காத்தான்குடிக்கு கிடைத்த பச்சை சமிக்ஞை!

காத்தான்குடி பிரதான வீதியில் வீதி சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 02.07.2025 அன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பெருந்தெருக்கள் அமைச்சர் கெளரவ பிமல் ரத்னாயக்க அவர்களிடம் நாடாளுமன்ற உருப்பினர் கலாநிதி எம.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக காத்தான்குடி பிரதான வீதியில் ஒளிராமல் பயண்பாடின்றி காணப்படும் வீதி சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கலாநிதி எம.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டதற்கிணங்க, குறித்த விடயத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் மற்றும் உத்தியேகத்தர்கள் அடங்கிய குழு இன்று (15.08.2025) காத்தான்குடிக்கு விஜயம் செய்து, குறித்த இடம் மற்றும் அதனை சூழவுள்ள இடம் தொடர்பான கள மதிப்பீட்டை மேற்கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகரசபை உருப்பினர் இ.எம். றுஸ்வின் LL.B மற்றும் நகர சபை உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இச்சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.