Thursday, September 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 17

மன்னாரில் மாபெரும் போராட்டம்!

0

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். 

‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக மன்னாரில் இன்று காலை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2 ஆம் கட்ட காற்றாலை கோபுரம் அமைக்கும் திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் பசார் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வடக்கு, கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். 

எனவே கட்சி பேதங்களின்றி, மக்கள் நலன் நலனுக்காக அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பூதாகரமாக மாறியுள்ள புத்தளம் இல்மனைட் விவகாரம்!

0

வில்பட்டு தேசிய பூங்காவின் எல்லைக்குற்பட்ட, அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில், முறையான அனுமதியின்றி இல்மனைட் கழுவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு இடத்தை வாலனா பிராந்தியத்தின் மத்திய வேலைநிறுத்தப் படை சோதனை செய்ததில், ரூ.200 மில்லியனுக்கும் அதி மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றபட்டுள்ளது.

செயல்பாட்டு காவல் ஆய்வாளர் பிரியந்த விஜேசூரியவின் தலைமையில், மத்திய தாக்குதல் படையின் இயக்குநர், காவல் கண்காணிப்பாளர் கே.ஏ. உதய குமாரவின் மேற்பார்வையின் கீழ், பிரிவின் OIC இந்திக வீரசிங்க, காவல் ஆய்வாளர் ஜனிதா மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது.

முந்தைய அரசாங்கத்தின் போது இந்த இடம் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சரின் பாதுகாப்பின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது ஒரு பாரிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட இல்மனைட் திட்டத்திற்காக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான களுவாரா, புருதா, வீரா உள்ளிட்ட மரங்களை அழித்து 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறித்த இடத்தினை முதற்கட்ட சுற்றுச்சூழல் மதிப்பீடு (EIA) கூட மேற்கொள்ளப்படவில்லை எனவும், பல அரசு நிறுவனங்களிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டிருந்தாலும், அது சட்டப்பூர்வமானது அல்ல என்பது தொடர்புடைய விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த இடம் வில்பத்து தேசிய பூங்காவின் பெரகா மண்டலத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்றும், அந்த இடத்திற்கான நீர், வில்பத்து பெரகா மண்டலத்திற்குள் அமைந்துள்ள லுனு ஓயாவிலிருந்து பம்ப் செய்யப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த இடம் தொல்பொருள் ரீதியாக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழலாக இருந்தபோதிலும், தொல்பொருள் துறை தலையிட்டு ஒரு நீர்த்தேக்கத்தை கட்ட அனுமதி வழங்கியுள்ளபோதிலும், அகழ்வாராய்ச்சிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இருப்பினும், தொல்பொருள் பரிந்துரைகளைக் கூட கருத்தில் கொள்ளாமல், இந்த இடத்தில் 20 அடிக்கும் அதிகமான ஆழமும் இரண்டு ஏக்கருக்கும் அதி பரப்புள்ள நிலத்தில் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளதுடன், லுனு ஓயாவிலிருந்து பம்ப் செய்யப்பட்ட நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளமை சோதனையின்போது உறுதிப்படுத்தியுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியா!

0

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே காசாவில் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கப் போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார். காசா தாக்குதலை நடத்த உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஒரு நாள் இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. அங்கிருந்த அப்பாவி மக்களைச் சுட்டுத்தள்ளிய ஹமாஸ் படை, பல இஸ்ரேல் நாட்டினரைப் பணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதன் பிறகு காசாவில் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே ஹமாஸ் தலைவர் சின்வார் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், மோதலை முடிவுக்குக் கொண்டு வர மறுக்கும் நெதன்யாகு, காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரேல் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா அறிவிப்பு அதேநேரம் இஸ்ரேல் மோதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக இஸ்ரேல் மீது உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தும் வருகிறது. இதற்கிடையே முக்கிய நகர்வாகக் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்தாலும் கூட இதுவரை பல நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்காமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன. குறிப்பாக பிரான்ஸ் கூட சமீபத்தில் தான் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்தது. மேற்குலக நாடுகளில் முக்கிய நாடாக இருக்கும் பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க எடுத்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

இதுவரை இப்படி சுமார் 140+ நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தச் சூழலில் தான் அல்பானீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “செப்டம்பரில் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்பதை இன்று என்னால் உறுதிப்படுத்த முடியும்.

பாலஸ்தீனிய அதிகாரசபையிடமிருந்து ஆஸ்திரேலியா பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தனி நாடு இருப்பதற்கான உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும். மத்தியக் கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் காசாவில் நடக்கும் மோதல், துன்பம் மற்றும் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த இரு நாடுகள் முடிவே சிறந்த தீர்வு” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் தான் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் அல்பானீஸ் தெரிவித்தார். காசாவில் நிலைமை மோசமாகிவிட்டதாகவும் அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன என்றும் பிரதமர் நெதன்யாகுவிடம் நான் நேரடியாகக் கூறியதாக அல்பானீஸ் தெரிவித்தார்.

140+ நாடுகள் ஆதரவு

இதுவரை சுமார் 140+ நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. குறிப்பாகச் சமீப காலத்தில் அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஆர்மீனியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. பிரான்ஸ், மால்டா, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவைப் போலவே அடுத்த மாதம் நடக்கும் ஐநா கூட்டத்தில் அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜெண்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதேநேரம் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட மேஜர் நாடுகள் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Protesters gather during a pro-Palestinian rally in Sydney, Australia, Saturday, Nov. 4, 2023, in support of Palestinians caught up in the war between Israel and Hamas. (AP Photo/Mark Baker)

மூன்று மணி நேரம் பயணிகளை வச்சு செய்த இரவு நேர ரயில்!

மூன்று மணித்தியாலங்களுக்கு பின்பு நள்ளிரவை தாண்டி பயணித்த புகையிரதம், பயணிகள் அசெளகரியம்!

நேற்றிரவு 10.08.2025 காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் இயந்திரக்கோளாறு காரணமாக கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் தரித்து நின்றமையால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் தரித்திருந்து காத்திருந்த ரயில், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து பிறிதொரு இயந்திரம் வருகை தந்ததைத்தொடர்ந்து ரயில் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது.

இரவு 9.45 மணிக்கு இயந்திரக்கேளாறு ஏற்பட்ட நிலையில் அதிகாலை 1.15 இற்கே குறித்த ரயில் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் பலி!

0

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று (10) இரவு 7.00 மணியளவில் 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ். நோக்கி வருகை தந்த காரும், யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சு.முரளிதரன்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05-06-2025 அன்று மாவட்டத்தின் அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக பல பணிகளை ஆற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் மாவட்ட அரசாங்கதிபராக நியமனம் பெற்றதாகி அடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாகவில்லு ACMC கிளையின் பிரம்மாண்ட ஒன்றுகூடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பு/நாகவில்லு கிளையின் மிகப் பிரமாண்டமான ஒன்று கூடல் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் M.J ஷாஹீன் றிஸா தலைமையில்
நேற்று (10-August-2025 ) புத்தளம் ZEINS POOL இல் மதிய விருந்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான ஊர் பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நேற்றைய ஒன்றுகூடலில் நாகவில்லு கிராமத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஆராய்ந்து எவ்வாறு நிவர்த்தி செய்வது போன்ற பல விடயங்கள் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது.

எதிர்காலத்தில் நாகவில்லு கிராமத்தில் பாதைகள், வீதி விளக்குகள், மதகுகள், போன்றவைகளை சீர் செய்வது, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடாத்துவது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு விஷேட மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொடுத்தல், மருத்துவ முகாம்கள் நடாத்துவது, போன்று இன்னும் பல விடயங்கள் பேசப்பட்டன.

புத்தளம் பிரதேச சபையினால் முடியுமான சகல உதவிகளும் பு/நாகவில்லு பகுதிக்கு கிடைக்கும் என நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய த்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நிமல் பமுனு ஆராய்ச்சி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் கௌரவ NTM தாஹீர், புத்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நிமல் பமுனு ஆராய்ச்சி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாகவில்லு கிளை ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த வாரத்தில் மாத்திரம் 5 நீதிபதிகள் பணியிடை நீக்கம்!

0

நாட்டிலுள்ள சுமார் 30 நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவைக் கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்து மாவட்ட நீதிபதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மாவட்ட நீதிபதி திலின கமகே மற்றும் மொனராகலை மாவட்ட மேலதிக நீதிபதி ரஞ்சனி கமகே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பணி நீக்கப்பட்டுள்ள ஏனைய மூன்று நீதிபதிகளும் அண்மையில் நீதிச் சேவையில் இணைக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஆனால், அவர் இந்த சேவையில் நியமிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த விடயத்தைத் தெரிவிக்கவில்லை எனவும் நீதிச் சேவை ஆணைக்குழு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தற்போது பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு அலுவலகம் கூறியுள்ளது.

கிளிநொச்சி, அக்கறையான் பகுதியில் கோர விபத்து!

கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 5வது மைல் கல் அருகில் இன்று 10.08.2025 இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய குடுப்ப பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கலைநாட்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிட முடியாது: 

0

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரையில் பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக காண்பிக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. அதேநேரத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி வாக்காளர் திருத்த பட்டியலை வெளியிடலாம்’ என்றும், ‘வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரத்தில் அதிக வித்தியாசம் இருந்தால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை எச்சரித்து இருந்தது. குறிப்பாக கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்தப்பட்டியலில் விடுபட்ட நபர்கள், சேர்க்கப்பட்ட நபர்கள், எதனால் விடுபட்டார்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட சட்டப்பூர்வ ஆணை இல்லை. எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது. பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத நபர்களின் தனி பட்டியலை வெளியிடுவதற்கு பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் கட்டாயமிலை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் எந்தவொரு தனிநபரையும் சேர்க்காததற்கான காரணங்களை வழங்க விதிகள் கட்டாயப்படுத்தவில்லை. எந்தவொரு காரணத்தாலும் கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படாத நபர்களின் பூத் அளவிலான பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டோம், அந்த நபர்களைத் தொடர்புகொள்வதில் அவர்களின் உதவியை ஆணையம் நாடியது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளுக்கு வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் வழங்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நபர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து நாங்கள்உறுதிசெய்கிறோம்.

குறிப்பாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதேபோன்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கண்டிப்பாக கூற முடியாது. மேலும் வரைவுப் பட்டியலில் விடுபட்ட நபர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் விருப்பம் உள்ளது. அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.