Friday, February 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 17

நாகவில்லுவில் சிறப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

0

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடந்த மூன்று திங்களாக இடம்பெற்ற (12,13,14) கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி திகா53 அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

நீண்ட விடுமுறையை முன்னிட்டு மின்னொளியில் இரவு நேர போட்டிகளாக மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சுமார் 20யிற்கும் அதிகமான அணிகள் பங்குபற்றின.

இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவிவரும் போதை பாவனையிலிருந்து விடுபடச் செய்யவும், கரப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவித்து விளையாட்டின் பக்கம் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கிலும் ஜனாப் BM ஹிலாலி மற்றும் நாசர் இன்ஸார் ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த சுற்றிப்போட்டி நடைபெற்றது.

ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் பல அணிகளை துவம்சம் செய்து ரக்கிட்ட மற்றும் திகா53 அணியினர் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.

மிகவும் சூடாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரக்கிட அணியை வீழ்த்தி திகா53 அணியினர் வெற்றி வாகை சூடினர்.

சாம்பியன் கிண்ணத்துக்கான அனுசரணையை அல்ஹாஜ் CM அஸீஸ் அவர்களும் இரண்டாம் இடத்தை பிடித்த அணிக்கான வெற்றிக்கிண்ணத்திற்கு ஜனாப் ஹனீபா சஜித் அவர்களும் அனுசரணை வழங்கி இருந்தனர். மேலும் ஏனைய பரிசில்களுக்கு ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதுளை மாவட்டத்திற்கு கடும் எச்சரிக்கை!

0

உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுகின்றன

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர் மட்டத்தை கண்காணிக்கும் பொறியியலாளரின் ஆலோசனைப்படி, உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக வெளியேற்றும் வாயில்கள் ஏழும் 0.5 மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

இதன் காரணமாக ரத்கிந்தையிலிருந்து கிராந்துருக்கோட்டை வரையிலான வழியில் “ரத்கிந்த கோசுவ” உட்பட தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கும் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு

இன்றைய திடீர் காலநிலை மாற்றம்!

0

இன்றையதினம் (15) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்பதோடு, அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை , மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது . நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரையில் வடகிழக்கு திசையாக வீசக்கூடும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45- 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் .

பேஸ்புக் ஊழியர்களுக்கு ஆப்படித்த Ai

இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை (ஏஐ) பணியில் சேர்க்க பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. வேலைச் சந்தையில் ஏஐ-யின் தாக்கம், அதன் இன்றியமையாமை சிந்திக்கத்தக்கதே. அந்த வகையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

பலஸ்தீனில் போர் நிறுத்தம்!

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தத்துக்கான இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் இன்று (ஜன.14) தெரிவித்துள்ளனர்.

போர்நிறுத்தத்துக்கான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இனி வரும் நாள்களில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரமாரியாக கொல்லப்பட்ட 40 விவசாயிகள்!

0

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், போக்கோ ஹராம் அமைப்பு 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் அந்த அமைப்பினர், அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியரை கடத்துவதையும் அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இங்கு, போர்னோ மாகாணத்தில் உள்ள கிராமத்தில் நேற்று புகுந்த போக்கோ ஹராம் தீவிரவாதிகள், கண்ணில் படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், போர்னோ டம்பா சமூகத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அந்த மாகாண கவர்னர் பாபாகானா உமாரா சுளும் உறுதிப்படுத்தினார்.

குறித்த பகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடிக்க ஆயுதப் படைகளால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பை மீறி அவர்கள் செயற்பட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 35,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுதாப செய்தி!

0

புத்தளம் ,மறைந்த மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் மறக்க முடியாத ஆளுமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலானநல்லிணக்கத்திற்கு அதிக பங்களிப்புச் செய்த மறக்க முடியாத ஆளுமையென அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புத்தளம் காஸிமிய்யா அரபிக் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா முன்னாள் தலைவரும் , நாடறிந்த மூத்த இஸ்லாமிய சன்மார்க்க அறிஞர்களில் ஒருவருமான ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் இவ்வுலகை விட்டுப் பிரிந்த செய்தியறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன் .

நாட்டில் ஏராளமான உலமாக்களை உருவாக்கிய புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சங்கைக்குரிய மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் அவர்களின் அருமைப் புதல்வர் என்ற வகையில், அன்னார் விட்டுச் சென்ற மகத்தான பணியை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொட்டுத் தொடர்ந்த மறைந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸரத்,முக்கியமான ஏனைய விடயங்களைப் போலவே, முஸ்லிம்களின் சமூக, சமயப் பின்னணியுடனான கல்வி மேம்பாட்டிலும் அதிக அக்கறை செலுத்திவந்திருக்கின்றார்.

அவரது மறைவு புத்தளம் மாவட்டத்து மக்களுக்கு மட்டுமல்லாது, முழு நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்.

சமய ரீதியாகவும், சமூக ரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் அவ்வப்போது தலை தூக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகி, அனுபவம் வாய்ந்த ஏனைய உலமாக்களையும்,அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசியலில் ஈடுபட்டுவரும் எங்களையும் தொடர்பு கொண்டு,உயரிய இஸ்லாத்தின் வழிநின்று அல் குர்ஆன்,அல் ஹதீஸ் முதலான மூலாதாரங்களை மையப்படுத்தி மஷூராவின் அடிப்படையில் அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் காண்பதில் அவர் பெருமளவு பங்களிப்புச் செய்திருக்கின்றார் ; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நிலவுவதற்கு அவர் அயராது பாடுபட்டிருக்கின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை அருள்வானாக.அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும்,புத்தளம் மக்களுக்கும் தனிப்பட்ட முறையிலும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன ஜனாதிபதி!

0

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய  ஒரு  திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச்  செல்லும் ‘உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய  ஒரு  திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்க முடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சார வாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில் உருவாகியுள்ள புதிய உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும், “அழகான வாழ்க்கை” என்ற நம்பிக்கையை நம் இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்லும்  வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல்   முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை  இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான  கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.

நாட்டிற்கும்   மக்களுக்கும் பல நல்ல விடயங்களை  நிறைவேற்ற உறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள்,  அந்த வாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காத துணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும்  நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்த செயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும் பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும் மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பசுவுடன் உறவு வைக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

0

இந்த உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது பெண்கள் மட்டுமின்றி விலங்குகள் மீதான வன்முறையும் கூட அதிகரித்துவிட்டது.

குறிப்பாக விலங்குகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பசுவிடம் ஒருவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்துள்ளது.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் தான் இது நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பண்ணையில் இருந்து போலீாருக்கு அழைப்பு வந்துள்ளது.

பண்ணையில் வேலை செய்து வந்த நபர் பசுக்கள் உள்ள இடத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவர்களும், போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த தொழிலாளி வேலை செய்து வந்த பண்ணையில் இருந்த மாட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார்.

அப்போது அந்த பசு உதைத்ததில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். மாடு உதைத்ததில் மாரடைப்பு ஏற்பட்டு, 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர். பசுவிடம் அத்துமீற முயன்ற அந்த நபருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.