Thursday, September 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 18

4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒருவர் பலி!

0

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று (10) இரவு 7.00 மணியளவில் 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ். நோக்கி வருகை தந்த காரும், யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சு.முரளிதரன்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05-06-2025 அன்று மாவட்டத்தின் அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக பல பணிகளை ஆற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் மாவட்ட அரசாங்கதிபராக நியமனம் பெற்றதாகி அடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாகவில்லு ACMC கிளையின் பிரம்மாண்ட ஒன்றுகூடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பு/நாகவில்லு கிளையின் மிகப் பிரமாண்டமான ஒன்று கூடல் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் M.J ஷாஹீன் றிஸா தலைமையில்
நேற்று (10-August-2025 ) புத்தளம் ZEINS POOL இல் மதிய விருந்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான ஊர் பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நேற்றைய ஒன்றுகூடலில் நாகவில்லு கிராமத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஆராய்ந்து எவ்வாறு நிவர்த்தி செய்வது போன்ற பல விடயங்கள் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது.

எதிர்காலத்தில் நாகவில்லு கிராமத்தில் பாதைகள், வீதி விளக்குகள், மதகுகள், போன்றவைகளை சீர் செய்வது, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடாத்துவது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு விஷேட மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொடுத்தல், மருத்துவ முகாம்கள் நடாத்துவது, போன்று இன்னும் பல விடயங்கள் பேசப்பட்டன.

புத்தளம் பிரதேச சபையினால் முடியுமான சகல உதவிகளும் பு/நாகவில்லு பகுதிக்கு கிடைக்கும் என நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய த்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நிமல் பமுனு ஆராய்ச்சி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் கௌரவ NTM தாஹீர், புத்தளம் பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ நிமல் பமுனு ஆராய்ச்சி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாகவில்லு கிளை ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த வாரத்தில் மாத்திரம் 5 நீதிபதிகள் பணியிடை நீக்கம்!

0

நாட்டிலுள்ள சுமார் 30 நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவைக் கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்து மாவட்ட நீதிபதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மாவட்ட நீதிபதி திலின கமகே மற்றும் மொனராகலை மாவட்ட மேலதிக நீதிபதி ரஞ்சனி கமகே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பணி நீக்கப்பட்டுள்ள ஏனைய மூன்று நீதிபதிகளும் அண்மையில் நீதிச் சேவையில் இணைக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஆனால், அவர் இந்த சேவையில் நியமிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த விடயத்தைத் தெரிவிக்கவில்லை எனவும் நீதிச் சேவை ஆணைக்குழு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தற்போது பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு அலுவலகம் கூறியுள்ளது.

கிளிநொச்சி, அக்கறையான் பகுதியில் கோர விபத்து!

கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 5வது மைல் கல் அருகில் இன்று 10.08.2025 இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய குடுப்ப பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கலைநாட்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிட முடியாது: 

0

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரையில் பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக காண்பிக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. அதேநேரத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி வாக்காளர் திருத்த பட்டியலை வெளியிடலாம்’ என்றும், ‘வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரத்தில் அதிக வித்தியாசம் இருந்தால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை எச்சரித்து இருந்தது. குறிப்பாக கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்தப்பட்டியலில் விடுபட்ட நபர்கள், சேர்க்கப்பட்ட நபர்கள், எதனால் விடுபட்டார்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட சட்டப்பூர்வ ஆணை இல்லை. எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது. பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத நபர்களின் தனி பட்டியலை வெளியிடுவதற்கு பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் கட்டாயமிலை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் எந்தவொரு தனிநபரையும் சேர்க்காததற்கான காரணங்களை வழங்க விதிகள் கட்டாயப்படுத்தவில்லை. எந்தவொரு காரணத்தாலும் கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படாத நபர்களின் பூத் அளவிலான பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டோம், அந்த நபர்களைத் தொடர்புகொள்வதில் அவர்களின் உதவியை ஆணையம் நாடியது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளுக்கு வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் வழங்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நபர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து நாங்கள்உறுதிசெய்கிறோம்.

குறிப்பாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதேபோன்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கண்டிப்பாக கூற முடியாது. மேலும் வரைவுப் பட்டியலில் விடுபட்ட நபர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் விருப்பம் உள்ளது. அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இனி புத்தகம் பார்த்தே பரீட்சை எழுதலாம்!

0

2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் சிபிஎஸ்இ பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

சிபிஎஸ்இ புதிய நடைமுறையின் கீழ் ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.

2026-27 கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை சிபிஎஸ்இ வாரியத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நிர்வாக குழு அளித்துள்ளது.

இத்திட்டம், திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விஷேட உரை!

0

இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார். 

முன்னாள் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இரு தரப்பினருக்கும் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அமைச்சரிடம் இதன்போது யோசனை முன்வைத்தார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“இலங்கை இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன். 

கிராமத்தின் இளைஞர்களும் ஒன்று கூடும் இடமாக பொழுதுபோக்குகள், கலைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக அந்த இளைஞர் சங்கங்கள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். 

அந்த இலக்கு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர். 

இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன. 

இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர். 

சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர். 

அரசியலமைப்பில் அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது. எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது தேசிய மாநாடு நடைபெறுகிறது. எனது தகவலின்படி, அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 

இது தொடர்ந்தால், இளைஞர் சமூக இயக்கம் குறையும். 

இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். 

அதை மிகைப்படுத்தாமல். இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். 

போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குங்கள். 

இந்த நாட்டில் இளைஞர் சமூக இயக்கம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். 

அது அமைச்சரும் இந்த இரண்டு குழுக்களும் இணைந்து செய்யக்கூடிய ஒரு பணியாகும். 

அந்தப் பணி செய்யப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறும். 

பின்னர் அரசியல் கட்சிகளும் இவற்றில் ஈடுபடலாம். அது நடந்தால், இந்த இளைஞர் சமூக இயக்கம் மறைந்துவிடும். 

இந்த இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த சிறு தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்தேன்.” என்றார்.

கம்பஹா மாவட்டத்தில் நாளை நீர் வெட்டு!

0

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை வரையிலான குழாய் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு ரன்பொகுணகம, பட்டலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய வலயங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. 

இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விஷேட உரை!

0

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிடவுள்ளார். 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் தனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளார்.