Friday, February 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 18

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0

ஜப்பானின் கியூஷுவில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (இ.எம்.எஸ்.சி)தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 37 கி.மீ., (23 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக இ.எம்.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜப்பான் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் கட்டிடங்கள் குலுங்கும் காட்சியைக் காணமுடிகிறது.

ஜப்பானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, இது தென்மேற்கு தீவுகளான கியூஷு மற்றும் ஷிகோகுவை உலுக்கியது.

அதிகாரிகள் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர், ஆனால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

நாடு திரும்பிய இலங்கை அணி-கவலையில் ஜயசூரிய!

0

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த இலங்கை அணி இன்று (13) காலை தாயகம் திரும்பியது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, போட்டித் தொடரில் தோல்வியடைந்தமை குறித்து தாம் வருந்துவதாக தெரிவித்தார்.

மேலும், போட்டித்தொடரின் போது இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்றும், தவறுகளை சரிசெய்து எதிர்கால போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

“ரி20 தொடரை இழந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஒரு போட்டியை மட்டுமல்ல, இரண்டு போட்டிகளையும் நாங்கள் எளிதாக வென்றிருக்கலாம். போட்டிகளில் தோல்வியடைந்ததில் அணியும் மிகவும் வருத்ததுடன் உள்ளது என நான் நினைக்கிறேன்.

ஒருநாள் தொடரில், கடந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம். முதல் இரண்டு போட்டிகளில், எமது துடுப்பாட்ட வீரர்கள் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பிரகாசிக்க வில்லை. 4 அல்லது 5 விக்கெட்டுகள் விழும்போது அது கடினம்.

மூன்றாவது போட்டியில், அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்து போட்டியிட்டனர். இந்தத் தவறுகள் தொடர அனுமதிக்க முடியாது. நீங்கள் அதை முடிந்தவரை குறைத்து, நாட்டை விட்டு வெளியே செல்லும் அதை சரிசெய்ய வேண்டும்.

பெத்துமின் காலில் ஏற்பட்ட காயம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளன.  உள்ள வீரர்கள் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.” என்றார்.

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலி!

0

லாஸ் ஏஞ்சலசில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. காற்றுத்தீ பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ‘வரும் நாட்களில் நிலைமை மோசமடையும். மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காற்று அதி வேகமாக இருப்பதால் தீப்பிழம்புகள் விரைவில் பரவுகின்றன. இதனால் தீயை அணைக்கும் பணியை கடினமாக உள்ளது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 23,700 ஏக்கர் (9,500 ஹெக்டேர்) எரிந்துவிட்டது. மேலும் 11 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.மிகவும் தீவிரமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணியில், மோப்ப நாய்கள் உதவியுடன் நடந்து வருகிறது.

வீடுகளில் இருந்து திருட தீயணைப்பு வீரராக உடையணிந்த ஒரு திருடன் உட்பட, கொள்ளையர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் நகரம் மீண்டும் கட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும்புகைமூட்டமாக பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.

மீற்கப்பட்ட மாணவி. வெளியான அதிர்ச்சி தகவல்!

0

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேவேளை கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், 

“நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன” என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை குறித்த மாணவி கடத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.

ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்வி கற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளையே கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமண விவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி குறித்து கடும் விமர்சனம்!

0

எதிர்வரும், பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி கொள்கைகளை அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அதன் நன்மைகள் வாகன விற்பனையாளர்களால் அநீதியான முறையில் பெற்றுக் கொள்ளப்படும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஐந்து வருடமாக காணப்பட்ட வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி மாதம் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது புதிய வரி கொள்கைகளுக்குக்கு மேலாக வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான முழு வரியானது 500 சதவீதமாக அதிரிக்ககூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வருடத்திற்குள் 50,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அரசாங்கம் அறிவிக்கும் வரி விகிதங்களால் நுகர்வோர் பயனடையமாட்டார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள வரி கொள்கைக்கும் முன்னர் இருந்த வரிக் கொள்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகள் சாதாரணமாக 300 சதவீதத்திற்கும் 400 சதவீதத்திற்கும் இடையில் உள்ளது.

இந்தநிலையில், வாகன விற்பனையாளர்கள் வாகன சந்தையில் பாரிய மாஃப்பியாவை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான விலை முகாமைத்துவத்தை பேணி வருகின்றனர்.

இதன் காரணமாக நுகர்வோர் பயனடையமாட்டார்கள்.

ஆகையால் தற்போதுள்ள வரி கொள்கைக்கு அமைய, வர்த்தகர்களும் இடைத்தரகர்களுமே பயனடைவார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ குறித்த திடுக்கிடும் தகவல்!

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என எச்சரித்துள்ள வனத்துறை அதிகாரிகள், மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை தீப்பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.

பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நான்கு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் வணிக கட்டடங்கள், 30 ஆயிரம் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இதுவரை, 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடிகர், நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன. இதேபோல், காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் ஈட்டன் மற்றும் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ இன்னும் சில பகுதிகளுக்கு பரவக்கூடும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 22,600 ஏக்கர் பகுதி எரிந்த நிலையில், 11 சதவீதம் மட்டுமே அணைக்கப்பட்டு உள்ளது. ஈட்டன் மற்றும் அல்டெண்டா பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் எரிந்தது. 15 சதவீதம் பகுதிகளில் மட்டுமே தீ அணைக்கப்பட்டு உள்ளது.

வரும் காலங்களில் பலத்த காற்றானது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாக அமையும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இந்த காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும்புகைமூட்டமாக பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.

பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்த ரிஷாட் எம்.பி!

0

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச். நந்தசேன மற்றும் டியுடர் குணசேகர ஆகியோர் தொடர்பில், இன்று இந்த விவாதம் மும்மொழியப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்கள்.

குறிப்பாக, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவர்களுடன் நீண்ட காலம் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அவர் ஒரு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, இந்த நாட்டுக்கு நிறைய நல்ல பணிகளை செய்த ஒருவர். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத்து துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை செய்தவர். அவருடைய காலத்திலேதான், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, வடக்கு, தெற்குக்கான ரயில் பாதை, யாழ்ப்பாணம், கொழும்பு ரயில் பாதை மற்றும் மன்னார் ரயில் பாதை ஆகியவற்றின் புனரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று, பல இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார். அவர் நேர்மையான, பண்பான ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். களுத்துறை மாவட்டத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, வெல்லக்கூடிய ஒருவராக இருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷவை அந்தக் கட்சி முன்னிறுத்தியபோது, அந்தக் கட்சியிலேயே இருந்துகொண்டு, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக இருந்தவர் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டும், அவரை எதிர்த்துப் பேசியவர். “கோட்டா இந்த நாட்டுக்கு தகுதியானவர் அல்ல, ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட பணியாற்றாதவரிடத்திலே, ஜனாதிபதி பதவியை எவ்வாறு ஒப்படைக்கப் போகின்றீர்கள்?” என்று, தைரியமாக பேசிய ஒருவர்தான் குமார வெல்கம அவர்கள். அவர் எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுகின்ற, பக்குவமுள்ள ஒரு அரசியல்வாதி.

அதுபோன்று, “அரகல” சமயத்தில், ஒரு சில அநியாயக்காரர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி, கஷ்டமான நிலைக்கு ஆளாக்கினர். எனினும், அவர் யாரையும் கடிந்துகொள்ளாமல், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய பணிகளை முன்னெடுத்து வந்தார்.

குமார வெல்கம அவர்களுடைய இழப்பு, இந்த நாட்டுக்கு குறிப்பாக, களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது கட்சி சார்பாக, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று, எச். நந்தசேன அவர்கள், நான் திருமணம் முடித்துள்ள மதவாச்சிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். வட மத்திய மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, பதில் முதலமைச்சராக இருந்து, அந்த மாகாணத்துக்கு நிறைய சேவைகளைச் செய்தவர்.

பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறைதான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எனினும், அந்தக் காலப்பகுதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக, மதவாச்சிய தொகுதிக்கு பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவருடைய இழப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். இத்தருணத்தில், அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனுராதபுர மாவட்டத்தின் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை, கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், டியுடர் குணசேகர அவர்கள் 1977இல், கம்பஹ மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர், போலாந்து நாட்டின் தூதுவராக இருந்து பணியாற்றியவர். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய காலத்தில், ஒரு அரசியல்வாதியாக இருந்து அந்த மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக, பல தியாகங்களை செய்த ஒருவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் எனது கட்சி சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி” என்று குறிப்பிட்டார்.

திடீர் விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்!

0

நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை மற்றும் மருத்துவ அமைப்பின் இறுதி இலக்காக குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரே ஹோமியோபதி மருத்துவமனையான வெலிசறை ஹோமியோபதி மருத்துவமனையின் கண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

வெலிசர அரச ஹோமியோபதி மருத்துவமனையானது குழந்தைகள் மற்றும் பெண்களின் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக்கோளாறுகள், தோல்நோய்கள், வயிற்றுநோய்கள், நரம்பியல் நோய்கள், நாள்பட்ட தலைவலி, நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு நிலைகள், மூட்டு நோய்களுக்கு தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் நோய்களிலிருந்து விடுபடவும், தடுக்கவும் எளிதான மற்றும் செலவு குறைந்த சிகிச்சை முறையாக ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்துவதற்காக, பல செயல்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலானது, ஹோமியோபதிக்கான ஒரே மருத்துவ அமைப்பாகும். மேலும் இது மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களின் பதிவு, ஹோமியோபதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், மருந்துகளின் உற்பத்தி, இறக்குமதி, களஞ்சியபடுத்தல், விற்பனை மற்றும் ஹோமியோபதி நிறுவனங்களை கண்காணிக்கும் பொறிமுறையையும் மேற்கொள்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான வரலாற்றைக்கொண்ட ஒரு மருத்துவமுறையானது மற்றும் மேற்கத்திய மருத்துவத்தைத் தவிர உலகில் மிகவும் பிரபலமான மருத்துவமுறையான ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையின் தற்போதைய நிலைகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இலங்கையில் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை சேவைகளின் எதிர்கால இலக்குகள், ஹோமியோபதி மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர்களுக்கான சிகிச்சைபிரிவு, சிகிச்சை முறைகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பக்கவிளைவுகள் ஏதுமின்றி நோய்களை குணப்படுத்தும் திறன்கொண்ட இந்த ஹோமியோபதி மருத்துவசிகிச்சை முறையை இலங்கையில் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் கிளினிக்குகளுக்கு போதிய மருந்து கையிருப்பு வழங்குதல், ஆய்வக சேவைகளை நிறுவுதல், சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துதல், வெளி நோயாளர் பிரிவில் உள் நோயாளர் பிரிவை 50 படுக்கைகள்கொண்ட பிரிவாக தரம் உயர்த்துதல், துணை மருத்துவ சேவைகள், மருத்துவம் ஆய்வக சேவை, எக்ஸ்ரே மற்றும் பிசியோதெரபி சேவைகள் மற்றும் ஆலோசனை பிரிவுகளை நிறுவுதல், போதனா மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் போன்றவை கவனத்தில் எடுத்து கலந்துரையாட்பட்டது.

ஹோமியோபதி மருத்துவ சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை நிறுவுதல், நாட்டில் ஹோமியோபதி மருந்துகளை உற்பத்தி செய்தல், ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஹோமியோபதி வைத்தியசாலைகளை நிறுவுதல் என்பன எதிர்கால இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டன.
எதிர்காலத்தில், ஹோமியோபதி மருத்துவப்படிப்பை மேம்படுத்த இலங்கையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை இந்தியாவில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர்  கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில், ஹோமியோபதி மருத்துவப்படிப்பை மேம்படுத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இன்று பல இடங்களில் இடியுடன் மழை!

0

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரசவித்த பெண்ணுக்கு ரூ.11.42 கோடி இழப்பீடு!

0

மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு, இரண்டு மருத்துவர்கள் ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க மலேசியா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019 ஜனவரி 9 மலேசியாவை சேர்ந்த புனிதா மோகன், 36, தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு மலேசியா உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் கூறியதாவது:

புனிதாவிற்கு ஜனவரி 9ம் தேதி டாக்டர் ரவியின் மேற்பார்வையில் பிரசவம் நடந்தது. அவர் வலியால் அழத் தொடங்கியபோது நிலைமை மோசமாக மாறியது. அவரது தாயார் பிரசவ அறைக்கு விரைந்தார். புனிதாவுக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதைக் கண்டார்.

மருத்துவர்களில் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்த புனிதா மோகனை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு, சென்று விட்டார்.இதன் விளைவாக பிரசவத்திற்குப் பிறகு அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்ததாகவும் கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் டாக்டர் ரவி, டாக்டர் சண்முகம் மற்றும் பணியில் இருந்த மூன்று செவிலியர்களின் மருத்துவ அலட்சியத்தால் புனிதா இறந்தார். பிரசவத்திற்குப் பிந்தைய வழக்குகளைக் கையாள்வதில் பல வருட அனுபவம் பெற்ற பிறகும், அவர்கள் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செவிலியர்களிடம் விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

புனிதாவின் நிலைமை மோசமானபோது, செவிலியர்கள், டாக்டர்களை தேடினர். அப்போது அவர்களை கண்டறிய முடிவில்லை. அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

கர்ப்பத்திற்குப் பிறகு அதிகப்படியான ரத்த இழப்பு என்பது அறியப்பட்ட பிரச்சினை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தவிர்க்க முடியும். ஆகையால் மருத்துவர்கள் இருவரும் பிரசவித்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.