Friday, February 7, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 19

எரிந்து சாம்பலாகும் அமெரிக்கா. இதுவரை 11 பேர் பலி!

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீக்கிரையாகி சாம்பலாக மாறிவருகிறது.

நீரேற்று நிலையங்களிலிருந்து தண்ணீர் எடுத்து பீய்ச்சி அடிக்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் தண்ணீரின்றி வறண்டுபோயிருக்கிறது. விமானம் மூலமும் காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

ஏழை முதல் கோடீஸ்வரர்கள் என அனைவரிடமும் இருந்து அனைத்தையும் பறித்துச் சென்றிருக்கிறது காட்டுத் தீ. வீடு என்றோ, பள்ளி என்றோ, வங்கி என்றோ பார்க்கவில்லை. அதற்கு அனைவரும் அனைத்தும் சமம் என்பது போல சாம்பலாக்கிச் சென்றிருக்கிறது.

காட்டுத் தீக்கு காரணம்?

தெற்கு கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும். இதனால் காடுகளிலும் மரங்கள் செழித்து இருக்கும், காற்றிலும் தேவையான ஈரப்பதம் இருப்பதால் காட்டுத் தீ பரவுவதற்கான அபாயம் குறைவாக இரக்கும்.

ஆனால், இந்த ஆண்டு குறைந்த மழைப்பொழிவும், பலமான காற்றும், காடுகளில் காய்ந்த மரங்களும், காட்டுத் தீ வேகமாகப் பரவக் காரணிகளாக அமைந்துவிட்டாகக் கூறப்படுகிறது.

தெற்கு கலிஃபோர்னியாவில் பற்றிய தீ மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காவு வாங்கிக்கொண்டு, மேலும் தனது ஜூவாலையால் காட்டுப் பகுதிகளையும் குடியிருப்புகளையும் சம்பலாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.

திடீரென இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்!

0

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​ஜனவரி 26 ஆம் திகதி இந்தியாவின் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்குபற்ற பிரதி அமைச்சருக்கு கேப்டன் முகுந்தன் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால, மற்றும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இரு நாட்டு மக்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இந்தியாவின் தொடர்ச்சியான இராணுவ உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை பிரதி அமைச்சர் பாராட்டி, இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் படத்தில் நடிக்க மாட்டேன் – அஜித்

0

நடிகர் அஜித் குமார் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றுள்ளார்.

அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான ஒக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

0

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்,ரோஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதீர்கள்

புதிய ஆண்டில் ஆரம்பமாகியிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.

இந் நாட்டில் சட்டமும்,ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதனூடாக சரியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதோடு,அதற்குச் சாதகமான சூழ்நிலையையும் உருவாகும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

நமது நாட்டில் இந்த சட்டமும்,ஒழுங்கு
ம் பாதுகாக்கப்படுகின்றதா என்று நாங்கள் சிந்திக்கவேண்டும் எனக் கூறிய ரவூப் ஹக்கீம் ,பத்திரிகை செய்தியையும் சுட்டிக்காட்டினார். அதாவது, “சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்களை ஜனாதிபதி
நீதியமைச்சரோடு சந்தித்த ஒரு செய்தியைக் காணக் கிடைத்தது. அவர்களது சந்திப்பில் இந்த வழக்குகள் தாமதித்தல் உள்ளிட்ட பல விடயங்களை கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகின்றது” என்றார்.

ஜனாதிபதி , ஊழல் ஒழிப்பு தினத்தில் ஆற்றிய உரை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதென்றால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள்ள பல சவால்களை முன்வைத்தார், அதன் பலனாகத்தான் இந்த கலந்துரையாடல் நடந்திருக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மேலும் , சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. அதாவது பொலிஸ் திணைக்களத்தில் பல குறைகள் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அவர்கள் சரியாக கோப்புக்களை அனுப்புவதில்லை என்றும், விசாரணைகள் சரியாக முடிக்கப்படாமல் கோப்புக்கள் அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்கள் அறிக்கை ஒன்றையும் வழங்கவிருப்பதோடு, தற்போதைய வழக்குகள் பற்றிய விபரத்தையும் வழங்கவிருக்கிறார்கள்.

இன்று ஜனவரி 8 ஆம் திகதி, இதே போன்றதொரு தினத்தில் 2009 ஆம் ஆண்டில் எமது நாட்டில் இருந்த ஒரு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்திய ரவூப் ஹக்கீம், தானும்,ரவி கருணாநாயக்கவும் கனத்தை மயானத்திற்குச் சென்று அன்னாரை நினைவு கூர்ந்ததை குறிப்பிட்டு, குறித்த படுகொலை இன்னும் ஒரு இரகசிய கொலையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். லசந்த விக்கிரமதுங்க “மிக்” விமான கொடுக்கல்,வாங்கல் பற்றிய தகவல்களை, சர்ச்சைக்குரிய விடயங்களை பத்திரிகைகளில் எழுதி வந்தார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். அது பற்றி ஒரு வழக்கும் இருக்கின்றது. அவருக்கு எதிராகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அவரது வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரித்தால் அவரது படுகொலை தொடர்பான விபரங்களை கண்டறியக்கூடியதாகவிருக்கும்,அந்த குற்றவாளிகள் யார் என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க முடியும்.

நான்கு ஜனாதிபதிகள் வந்து சென்றுவிட்டார்கள் ஆனால் இந்த வழக்கில் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்துவருவதை சுட்டிக்காட்டினார்.

இது பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் மௌனம் சாதிப்பதாகவும்,பொலிஸ் திணைக்களம் என்ன கூறுகிறது என்று பார்த்தால் அதுவும் மௌனமாக இருப்பதாக தெரிவித்தார்.

இவ்விடயங்களில் கடந்த காலங்களில் நேர்மையாக செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், குறித்த விடயங்கள் தொடர்பான எல்லா விடயங்களும் அறிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமுள்ள தகவல்களை உள்ளடக்கி இறுதியாக ஒரு முடிவுக்கு வருவது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகவுள்ளது என்பதை பல விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

அதுமாத்திரமில்லை கீத் நோயர், உபாலி தென்னகோன் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அதில் கீத் நோயர்க்கு நடந்த கொடுமைகள் தொடர்பாகவும் ரவூப் ஹக்கீம் நினைவு படுத்தியதோடு,உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். மேலும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பற்றி இந்த அரசாங்கம் கவனத்தில் வெள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம், ஒடுக்கு முறையை இந்த அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என்பதை பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள் காட்டி உரையாற்றினார். அதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் பேராதனை பல்கலைக்கழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும்,பல்கலைக்கழகங்களில் இப்படியான ஒரு விடயம் இடம்பெறுமாக இருந்தால் அது மிக பாரதூரமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்தின் கல்விசார் சுதந்திரம் ஒரு நாட்டின் முக்கிய விடயமாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கான பொதுமக்களுக்கான உரிமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மியன்மாரில் இருந்து இலங்கை வந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாகவும் சபைக்கு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததோடு, இவ் விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தையும் கண்டித்தார்.

மனித உரிமை ஆணைக்குழு எங்கும் சென்று தங்களுக்கு தேவையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இருந்தும், அவர்களை ரோஹிங்கிய அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளத்திற்கு சென்று சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கிய சிறுபான்மையினர்கள் இலங்கைக்குள் வந்திருப்பது இது முதற்தடவை அல்ல கடந்த காலங்களிலும் வருகை தந்ததை நினைவுபடுத்திய ரவூப் ஹக்கீம், ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷ், மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்வதை குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் ரோஹிங்கிய அகதிகளை மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனக் கூறிய கருத்தை விமர்சித்த ரவூப் ஹக்கீம், “மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று நீங்கள் இவ்வாறு கூற என்ன துணிவு உங்களுக்குள்ளது” என வினா எழுப்பி, 1980 களில் வன்முறைகள் நடைபெற்றபோது இத்தாலி,லெபனான்,பிரான்ஸ்,ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி(JVP) அங்கத்தவர்கள் சென்றார்கள் என்பதை எடுத்துக்காட்டி இன்றைய அரசாங்கத்திற்கு ரோஹிங்கிய மக்களின் நெருக்கடியான நிலையை உணர்த்தினார்.

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாக மியன்மார் அதிகாரிகளோடு அரசாங்கம் பேசுவதை கண்டித்து ,அந்த மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் அதிகாரிகள் சொல்வதை கேட்டு இங்கு வந்து கூறுவதற்கு அமைச்சர்கள் நியமிக்கவில்லை. கிளிப்பிள்ளை போல் பேசவேண்டாம் எனவும் கண்டித்தார்,மேலும், விடயங்களை ஆராய்ந்து பார்த்து தீர்மானங்களை எடுங்கள் என வலியுறுத்தினார். மேலும் ரோஹிங்ய அகதிகளை திரும்பவும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் எடுக்கும் முடிவானது சர்வதேச ரீதியாக நாட்டிற்கு இருக்கும் நற்பெயரை கெடுத்துக்கொள்ளும் செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சமவாயங்களை ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.

மேலும், மனித கடத்தல்காரர்கள் என அவர்களை கூறுவதை தவிர்க்குமாறும், திரும்பவும் அவர்களை மியன்மாருக்கு அனுப்பும் எண்ணத்தை இந்த அரசாங்கம் கைவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதோடு,பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் தனது அக்கறையையும்,கரிசனையையும் தனது உரையினூடாக ரவூப் ஹக்கீம் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) -ஓட்டமாவடி.

சொகுசு பேருந்துக்களுக்கு மாத்திரம் அனுமதி!

0

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார்  6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்தப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்!

0

மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் கிரீன்லாந்து நாட்டிற்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அந்நாடு தக்க பதிலடி கொடுத்தது.

தற்போது கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் ஆக்குங்கள் என கூறியிருந்தார். இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைத்திருக்கும், அகண்ட அமெரிக்கா வரைப்படத்தை வெளியிட்டு டிரம்ப் பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்நிலையில், அவர், மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், அவர், ‘இது அழகான பெயர். பொருத்தமானது என்று கூறியிருந்தார். இதற்கு, பதில் அளித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது: மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்த பகுதிகளை, மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்; அதுவும் நன்றாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர் 17ம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

62 வயதான மெக்சிகோவில் அதிபர் கிளாடியா ஷீன்பாம் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வரி விதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக டிரம்ப் மெக்சிகோவுடன் பலமுறை மோதிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி!

0

அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் குழு தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த போது, பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பாஸ்மதி அரிசியாக சந்தைப்படுத்தப்படுவது தெரியவந்ததுள்ளதாக தெரன ஊடகம் தெரிவித்துள்ளது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்பதோடு,  ஒரு கிலோ அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் ரூ.220 முதல் 250 வரை விற்கக்கூடிய பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி, ஒரு கிலோவுக்கு ரூ.65 வரி செலுத்தி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்த விடயம், தொடர்பாக ‘அத தெரண’ சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோடவிடம் வினவியது.

நாட்டிற்கு வரும் அரிசி இருப்புகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பப்பட்டால் மாத்திரமே அவை பாஸ்மதி அரிசியா இல்லை என்பது தொடர்பில் அடையாளம் காணமுடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க சுங்கத் துறைக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமே உள்ளது என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Clean Sri Lanka வலுக்கட்டாயமான திட்டமல்ல!

0

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

முன்மாதிரியை வழங்குதல், ஊக்குவித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றத்தின் தேவையை உணரச் செய்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும். இதன்மூலம் இலங்கை சமூகத்திற்குள் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அபிவிருத்தியடைந்த தேசமாக இலங்கையை மீள ஸ்தாபிப்பதற்கென சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் பூரணத்துவம் என்பவற்றுடன் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபடுத்தி அதற்கான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று நல்லதொரு ஆட்சி நிர்வாக எண்ணக்கருவை உறுதிப்படுத்தி, இலங்கை மக்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த உள்ளார்ந்த செயற்பாடுகள் மற்றும் மனித தொடர்புகளுக்கென அடையாளம் காணப்பட்ட விழுமியம் மற்றும் நெறிமுறைகளை ஸ்தாபிப்பதன் ஊடாக புன்னகை நிறைந்த மக்கள் வாழும் நாட்டை உருவாக்குவதே நோக்கமாகும்.

அதற்கென Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைக்கென தேசிய மட்டத்திலான எண்ணக்கரு மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல்யமானோர் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்களுடன் கூடிய 19 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணுதல், மக்களை தெளிவுபடுத்துதல், வளங்கள் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு, முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உரிய நோக்கத்தை அடையும் வகையில் இடம்பெறுகின்றதா என பின்தொடர்தல் மற்றும் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் உரிய நிறுவனங்களை தெளிவுபடுத்தல், வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேறியுள்ளதா என ஆராய்ந்து பார்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னர் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படவில்லை. ஏதாவதொரு செயற்பாட்டை சட்டரீதியாக மாத்திரம் நடைமுறைப்படுத்த அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கவே எமது நிறுவனங்களும், அதிகாரிகளும் பழக்கப்பட்டுள்ளனர். தனிநபரின் அகத்திலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த வேலைத்திட்டமாகும். இது சற்று உணர்வுபூர்வமானது. இதனை நடைமுறைப்படுத்தும் போது சில குறைபாடுகள் நிகழக்கூடும். சிலர் தவறான நோக்கத்தில் இதனை சீர்குலைக்க முயற்சிக்கலாம். வேலைத்திட்டத்தின் எண்ணக்கருவை புரிந்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாம் வழக்கம் போன்று பணிகளை மேற்கொள்ளும் போது சில சில விடயங்கள் இடம்பெறக்கூடும். எனினும் நாம் எதிர்பார்க்கும் பரிணாமத்தை கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்படுத்த முடியாது. அனைவரினதும் ஒத்துழைப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள முடியுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

மு.பா.உ டயான கமகேவுக்கு கடும் சிக்கல்!

0

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கொழும்பு மேல்ர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரிகை  வாசிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதிவாதியான டயானா கமகே, தான் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்று கூறினார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷனக ரணசிங்க, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பி, இந்த வழக்கு அடிப்படையாகக் கொண்ட ஆவணம் 2003 இல் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.

இருப்பினும், இந்த வழக்கு 2024 இல் தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், குறித்த ஆவணம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று வாதிட்டார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இது குறித்த வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, வழக்கை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

எனக்கே இந்த நிலை. மிகவும் வேதனையாக இருக்கிறது!

0

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. எனவே, ஏனையவர்களைப் போன்று, நீங்களும் பொடுபோக்குத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதில், மக்கள் உன்னிப்பாக இருக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றது. இன்னும் நாட்டில் சாதகமான சூழல் ஏற்படவில்லை. அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியமான சில பொருட்களின் விலைகளையாவது, குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி விலையில் கூட மக்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. 

அன்றாட வயிற்றுப் பசிக்கான உணவைக் கூட சாதாரண விலைக்கு வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உப்புப் பிரச்சினை உட்பட சில துரிதமாக தீர்க்கக் கூடிய விடயங்கள்  இருப்பினும், அவற்றை ஏன் காலதாமதப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

அதேபோன்று, தலைமன்னார் பங்குத் தந்தை டெனி கலிஸ்ரஸ் எமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். பிரதமருக்கு முகவரியிட்ட கடிதத்தின் பிரதியே அது. அதாவது, மன்னாரில் 18,990 ஹெக்டெயர் நிலப்பரப்பானது, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனவிலங்கு திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல்யமான மன்னார் தீவில் இவ்வாறான வர்த்தமானி பிரகடனங்கள் மூலம், சுற்றுலாத்துறை மற்றும் இன்னோரன்னை துறைகளை கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகின்றேன்.

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், 2009 – 2010 ஆண்டு பயிற்சிகளை நிறைவு செய்த 237 ஆசிரியர்களுக்கு, இதுவரையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. கல்வி அமைச்சர் ஹரினி அவர்கள், இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, அவசரமாக அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

அதேபோன்று, இலங்கையிலே 400 இற்கு மேற்பட்ட நூலக உதவியாளர்கள் பணியாற்றுகின்றார்கள். அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக உதவியாளர்கள் உட்பட பலர் சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 2012 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு, பல்கலைக்கழக நூலக உதவியாளர்களை, சிற்றூழியர்களின் தரத்துக்கு பதவி இறக்கம் செய்ததன் மூலம், நூலக உதவியாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர். 

எனவே, 2012 இற்கு முன்னர் இருந்த அதே பதவி நிலையில், அவர்களது நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், மன்னார் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள பாதைகளை சீரமைப்பதுடன், முறையான வடிகான் அமைப்பு உள்ளிட்ட இன்னோரன்ன உள்கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் எந்தவொரு நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்த விடயத்தையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, வவுனியா, சாளம்பைக்குளத்தில் குப்பைகூளங்களைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள். அந்தப் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியில், வைத்தியசாலை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனது அருகில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத் அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்தவரே. கடந்த கால கோட்டாவின் அரசாங்கம், இவற்றையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே, இந்த அரசாங்கத்திலாவது மேற்படி பிரச்சினைக்கு, மாற்றுவழி ஒன்றை கண்டறிந்து, விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும், அண்மையில் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவில் கரையொதுங்கி, திருமலையில் வைக்கப்பட்டிருந்தபோது, நான் அவர்களை பார்வையிட சென்றிருந்தேன். அவர்களுடன் கலந்துரையாடுவதை பொலிஸார் தடுத்து, எமக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது. 3 இலட்ச அகதிகளுக்கு, அரசாங்கத்தின் உதவியுடன், பல மாதங்கள் மூன்றுவேளை உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டேன். 

எனவே, ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை மன வருத்தத்தை தோற்றுவித்தது. படுப்பதற்கு பாய், தலையணை கூட அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நான் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்தேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எங்களுடன் இரண்டு தசாப்தகாலமாக இந்த பாராளுமன்றில் இருந்தவர் என்ற வகையில், அவரது நற்பண்புகளை கண்டிருக்கின்றோம். அவரது பேச்சு மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டுதான், மூவின மக்களும் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இவ்வாறு எமது நாட்டுக்கு அகதிகள் வருகின்றபோது, சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அந்தவகையில், இந்த மியன்மார் அகதிகள் விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுங்கள். 

மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.  

அதுபோலவே,  எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.

 எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில்  மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர். எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள். 

மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்தார்.