Tuesday, June 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 21

இன்று தேசிய துக்க தினம்!

0

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே  நடத்தவுள்ளார்.

இந் நிலையில் நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று (26) இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

கட்டுநாயக்கவில் அதிகாலையிலே துப்பாக்கி சூடு!

0

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உலக மலேரியா தினம் இன்று!

0

உலக மலேரியா தினம் இன்று (25) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மலேரியாவைத் தவிர்க்கவும்” என்ற தலைப்பில் மலேரியா கட்டுப்பாட்டு அணிவகுப்பு இன்று (25) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி கொழும்பில் உள்ள விஹாரமகாதேவி பூங்கா வரை சென்றது.

2025 ஆம் ஆண்டு உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, இலங்கையில் மலேரியா ஒழிப்பின் 12 ஆண்டுகால தொடர்ச்சியான நிறைவை நினைவுகூரும் வகையிலும், மலேரியா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைப்பயணம் நடத்தப்பட்டது.

இலங்கை மலேரியாவை வெற்றிகரமாக ஒழித்திருந்தாலும், மலேரியா பரவும் நாடுகளுக்குச் செல்லும் மக்கள் இன்னும் ஆபத்தில் உள்ளனர், மேலும் இந்த பேரணியின் முக்கிய நோக்கங்கள், அந்தப் பயணிகளுக்கு தடுப்பு சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் திரும்பியதும் பரிசோதனையின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.

இந்த அணிவகுப்பைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, கடந்த காலத்திலிருந்து இன்றுவரை மலேரியா பரவுவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அடக்கவும் சுகாதார அமைச்சகம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கினார். நோய் பரப்பும் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டும் மலேரியாவை ஒழிக்க முடியாது என்றும், ஒட்டுண்ணிகளை அழிப்பதும் மிக முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது மனித உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்கக்கூடும் என்றும், இதனால் இந்த இரண்டு முறைகளும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான படிகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட நோயாளிகளை இன்று அடையாளம் காண்பது ஒரு பயங்கரவாதியை அடையாளம் காண்பது போல கடினம் என்றும், மாற்றங்களுக்கு கவனம் செலுத்தி, அறிவியல் அறிவுடன் முன்கூட்டியே செயல்படுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும் செயலாளர் கூறினார். மலேரியா நோய் கண்டறியப்படாத நோயாளிகளிடமிருந்து பரவக்கூடும் என்பதால், இறக்குமதி செய்யப்படும் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று செயலாளர் மேலும் கூறினார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்த மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் இயக்குநர் டாக்டர் பிரசங்க சேரசிங்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொடிய தொற்றுநோயாக இருந்த மலேரியாவை முற்றிலுமாக ஒழித்த நாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கையை அறிவித்த போதிலும், 2016 ஆம் ஆண்டில், பல்வேறு பகுதிகளில் மலேரியா நோயாளிகள் அவ்வப்போது கண்டறியப்பட்டனர். மலேரியா தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பரவலாக உள்ளது மற்றும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நோயாகும். 2023 ஆம் ஆண்டில் நாட்டில் 62 மலேரியா வழக்குகள் கண்டறியப்பட்டன, மேலும் 2024 ஆம் ஆண்டில் 38 வழக்குகள் கண்டறியப்பட்டன.

இந்த நோயாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு திரும்பியவர்கள். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 14 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், யாத்ரீகர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அடங்குவதாகவும் மலேரியா ஒழிப்பு பிரச்சாரம் கூறுகிறது. மலேரியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் சில சந்தர்ப்பங்களில், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

முதியவரை அடித்துத் தூக்கிய கார்!

நேற்றிரவு கிளிநொச்சி A9 வீதி கனகாம்பிகைக்குளம் சிவன்கோயில் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திரும்பும் சமயம் துவிச்சக்கரவண்டியில் சென்ற குறித்த முதியவர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரதிபுரம் பகுதியைச்சேர்ந்த 56 வயதான முதியவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு தயாராகும் ரணில்!

0

எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளார்.

வத்திக்கான் சென்றார் விஜித ஹேரத்!

0

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அமைச்சர் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் வத்திக்கானுக்கு பயணிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலை இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கையின் கத்தோலிக்க அரசியல் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில், திருத்தந்தையின் இறுதி ஆராதனை  நடைபெறும் நாளைய தினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மூண்டது இந்திய பாகிஸ்தான் போர்!

0

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சில இடங்களில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைவிடப்பட்ட வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம்!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக கிளிநொச்சியில் தெரிவைத்துள்ளார்.

வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ​​ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திபின் பின்னர் ஊடகவியலாளரிடம் கேள்விக்கு பதிலளிக்கும் போது குறித்த விடயத்தை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியியின் முன்னேற்றம், அறிவியல் நகர் நகர அபிவிருத்தி, மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்களை மாவட்ட அரசாங்கதிபரிடம் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

0

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமாறும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை!

0

மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 2025.05.04 அன்று சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவேவாவால் ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.