Thursday, September 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 21

தேசிய துக்க தினமாக அறிவித்தது கானா அரசு!

கானா நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு நேற்று காலை 9.00 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முகமது உள்ளிட்ட 8 அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்த ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது நேரத்தில் அங்குள்ள வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

பல சிரமத்திற்கு மத்தியில் விபத்து நடைபெற்ற பகுதியை கண்டுபிடித்து சென்ற ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா, அதிகாரிகள் உள்பட 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, தேசிய துக்க தினமாகவும் கானா அரசு அறிவித்தது.

காஸா மீதான நேற்றைய தாக்குதலில் 135 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவும் காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 135 அப்பாவி பாலஸ்தீனர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார். ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா கூறுகையில், ‘நெதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் கூறுகையில், ‘தாக்குதலை தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார். காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முதல் இரண்டாம் தவணை விடுமுறை!

0

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், இன்று முதல் விடுமுறைக்காக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று நிறைவடைவதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாவது தவனை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை 25 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம்!

0

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. 

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தனர். 

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்பினர்களின் ஆதரவையும் திரட்டி கையொப்பங்கள் பெறப்பட்டதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை, குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

இன்றைய இந்த விசேட ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன, நிசாம் காரியப்பர் மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலேயே பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் 6வது பிரிவில், “உறுப்பினர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பகிரங்க நம்பிக்கைக்கு இணங்க செயலாற்றுதல் முக்கியமானதாகும். 

அவர்களின் நடவடிக்கைள் எப்போதும் நேர்மையுடனும், ஒருமைப்பாட்டுடனும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது மீறப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்துடன் 9வது பிரிவின் படி, மனசாட்சிப்படி நடத்தல், மக்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பை சிறக்கும் வகையில் செயற்படல் என்பன மீறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாலும் அவருக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுவிக்கப்படுமா சீனாவின் BYD வாகனங்கள்!

0

இலங்கை சுங்கத்தால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 991, BYD வாகனங்களை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ஒப்புக்கொண்டார். 

வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் சிஜி நிறுவனம் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களின் வரிகளுக்கு இடையிலான வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட 3.6 பில்லியன் ரூபாய் தொகையை, ஒரு அரசு வங்கிக்கு உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவாதத்திற்குப் பொருந்தக்கூடிய வட்டியை மனுதாரர் நிறுவனம் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன. 

முன்வைக்கப்பட்ட பல நிபந்தனைகளுக்கு மனுதாரர் தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில், இந்த வாகனங்களை விடுவிப்பது தொடர்பாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் தனது உடன்பாட்டைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லு பாடசாலையில் போதை தடுப்பு செயலமர்வு!

பாடசாலை மாணவர்களிடையே போதை தடுப்பு மற்றும் போதை பாவனை தொடர்பான விஷேட செயலமர்வு ஒன்று புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் புத்தளம் பிரதேச சபை பிரதான முகாமையாளர் ஜனாப் A.M.A. அஸீர் தலைமையில் இன்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

சமூகத்தில் வேரூண்டி போயுள்ள போதை பாவனை தற்போது பாடசாலை மட்டத்திலும் பரவியுள்ளதை தடுக்கும் வகையில் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் பிரதேச சபையினால் ஏற்பாடு செயப்பட்டிருந்த குறித்த செயலமர்வு, சிரேஷ்ட வளவாளர் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 தொடக்கம் 11 வரையான மாணவ மாணவிகளுக்கு விஷேடமாக நடத்தப்பட்ட குறித்த செயலமர்வில், போதை பாவனை மற்றும் போதை தடுப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் போதைக்கு எதிராக மாணவர்களின் பங்களிப்பு தொடர்பிலும், அதே போல் ஆசிரியர்களின் முன்னுதாரணமான செயற்பாடுகள் தொடர்பிலும் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், நமது நாட்டில் பெண்கள் மத்தியில் பரவி வருகின்ற போதை பாவனை கலாச்சாரம் தொடர்பிலும் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.

சில முஸ்லீம் நாடுகளில் பெண்கள் மத்தியில் குறித்த போதை கலாச்சாரம் பரவியுள்ளதாகவும், அதே போல் தற்போது நமது நாட்டிலும் முஸ்லீம் பெண்கள் மத்தியில் குறித்த போதை கலாச்சாரத்தை பரப்பும் நடவடிக்கையில் பல நாசகார கும்பல்கள் பின்னால் இருந்து செயற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில், பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் ஷாஹீன் ரீஸா, லரீப் காசிம், புத்தளம் பிரதேச சபை அதிகாரிகள், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் M.S. நாசர், மற்றும் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களின் இணைப்பாளர் ஜனாப் ஷபீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

0

பின்தங்கிய பிரதேச மருத்துவமனையாகக் குறிப்பிடப்பட்ட, பெரும்பாலான மருத்துவமனைகளின் பெயர்களை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (7) வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக, 7 கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது. 

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் பின்தங்கிய பிரதேச மருத்துவமனையாகக் காணப்பட்டிருந்த மருத்துவமனைகளின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக நீக்கச் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 

திருகோணமலை மாவட்டம் உட்பட, நாடு முழுவதும் 134க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தக் காரணத்தால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிலையில், அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடொன்றை உருவாக்கிய 20 வயது இளைஞன்!

0

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். 

அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதன் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளதாக, தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு அரசியல் அகாடமி!

0

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அரசியல் கல்வியறிவை வழங்குவதற்காக “அரசியல் அகாடமி” ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும் YoLoGo (Youth in Local Govrnance) திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று (05) மேல் மாகாண சபை பிரதான கேட்போர் கூடத்தில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் சேனாரத்ன, கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலீ பல்தாசர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முடிவெடுக்கும் பதவிகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் எதிர்காலத்தில் தலையிடும் என்றும், தீவு முழுவதும் நிறுவப்பட்ட இளைஞர் கழகங்களுக்குப் பொறுப்பான இளைஞர்களுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பிராந்திய மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடுகளுக்குப் பொறுப்பான இளைஞர்களுக்கு, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அணுகல் வழங்கப்படும் என்று “YoLoGo (உள்ளூர் ஆளுகையில் இளைஞர்கள்)” திட்டத்தின் மேற்கு மாகாண தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

1971 மற்றும் 1987-89 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இளைஞர் எழுச்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேராசிரியர் லக்ஷ்மன் ஜெயதிலக 1990 ஆம் ஆண்டு இளைஞர் ஆணைக்குழுவை அறிமுகப்படுத்தினார். பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர்களுக்கான (18-35) பரிந்துரைக்கப்பட்ட 40% ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் இளைஞர்களை அரச நிர்வாகத்தில் அதிகம் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,அது இதுவரை வெற்றிபெறவில்லை என்பதுடன், ஆளுநரின் ஆதரவின் கீழ் செயல்படுத்தப்படும் YoLoGo திட்டமானது சர்வதேச ஆதரவுடன் அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாகும் என்று ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி அருண பிரதீப் குமார ஆரம்ப விழாவில் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் உள்ள 49 நகர மற்றும் பிரதேச சபைகளிலிருந்தும் இளைஞர் கவுன்சிலர்களை பிரதிநிதிகளாக நியமிப்பதன் மூலம் ஒரு மாகாண இளைஞர் நிர்வாக வலையமைப்பு நிறுவப்படும் என்றும், அவர்களின் தலைமையில் இளைஞர் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

இந்த நிகழ்வில் கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துணை அமைச்சர் ருவான் செனரத், மேல் மாகாண ஆளுநர் ஹானீஸ் யூசுப் மற்றும் மேல் மாகாண ஆணையர் சாகரிகா ஜெயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடும் எதிர்ப்பை வெளியிட்ட ரவூப் ஹக்கீம் எம்.பி!

மட்டு.மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை
மீண்டும் முருங்கையேறும் வேதாளம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் காணிப்பிரச்சினையை இழுத்தடிக்கும் செயற்பாட்டிற்கு உடன்பட முடியாது. அது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையை நினைவூட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் சபை ஒத்திவைப்பு வேளையில் கொண்டு வரப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணி மற்றும் எல்லைப்பிரச்சினை தொடர்பான பிரேரணையை ஆதரித்து பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரையை வழிமொழிகின்றேன். அதேவேளை, இன்று அமைச்சரவையில் புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிப்பதாக தீர்மானம் எட்டப்பட்டிருப்பதான அறிவிப்பை அமைச்சர் வெளியிடவுள்ளதாக அறிகின்றேன்.

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது மாதிரியான செயற்பாடு என்பதுடன், திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் இவ்விவகாரத்தை அரசு இழுத்தடிக்க முயல்கின்றது. இது தான் அரசின் நிலைப்பாடென்றால், இதற்கு உடன்பட முடியாதென்பதை கூறிக்கொள்கின்றேன்.

அன்ரூ சில்வா, நாணயக்கார, பனம்பலன எனப்பல ஆணைக்குழுக்கள் அன்றிலிருந்து இன்று வரை நியமிக்கப்பட்டுள்ளன. இதுதான் அரசாங்கத்தினுடைய நிலைப்பாடா? ஏனென்றால் இதில் மிகத் தெளிவாக நாங்கள் எல்லோரும் காணுகின்ற ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத சில கிராம சேவகர் பிரிவுகளை ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு முறையிலும், மற்ற பிரதேச செயலகத்திற்கு இன்னுமொரு முறையிலும் நிர்வகிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அதிகாரிகள் அனுமதித்திருக்கிறார்கள் என்பது மிக மோசமான அநீதியாகும். இதன் பின்னணியில் தான் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஹ் இப்பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்.

இது போன்றதொரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை 30.11.2021ம் ஆண்டு கடந்த அரசாங்க காலத்திலும் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஹாபிஸ் நஸீர் அஹமட் கொண்டு வந்த போது, இதே விவகாரத்தை நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

எனவே, இவவாறான குளறுபடிகளை அடிக்கடி ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் தொடர்ந்தும் இழுத்தடிப்புச்செய்யாமல் உண்மையில் செய்யப்பட வேண்டிய விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.

கிராம சேவகர் பிரிவு எல்லைகளை இன விகிதாசார அடிப்படையில் அல்லாமல் நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்டு, மக்கள் தொகைக்கேற்ப மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப்பிரிவில் 31,565 பேரும், கோறளைப்பற்று வடக்கு, வாகரையில் 27,681 பேரும், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனையில் 35,126 பேரும், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடியில் 28,360 பேருமாக இருக்கின்ற நிலையில், கோறளைப்பற்று தெற்கு, கிரான் 620 சதுர கீமீ, கோறளைப்பற்று வடக்கு, வாகரை 589 சதுர கீமீ இருக்கத்தக்கதாக, கோறளைப்பற்று மத்தி, மேற்கு என்ற இரண்டு பிரதேசங்களும் வெறும் 8 சதுர கீமீ, 31 சதுர கிமீ இருக்கிறது. இது எந்த அடிப்படையில் நியாயமாக முடியும். இந்த அநியாயத்திற்குத்தான் மக்கள் நீதி கோரி நிற்கின்றனர். ஏனென்றால், இதில் மிகத்தெளிவான நாம் எல்லோரும் கண் முன்னே காண்கின்ற அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகள் சரிவர நடைமுறைக்கு வருவதற்கு நிருவாகங்கள் தடையாக இருக்கின்ற அதேநேரம், அரசாங்கங்களும் இது பற்றி பாரமுகமாக இருப்பதும் தொடர்ந்தும் இழுத்தடிக்கின்ற விவகாரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் விக்கிரமாதித்தன் கதையாகவுள்ளதையிட்டு என்னுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன் எனத்தெரிவித்தார்.