Friday, June 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 6

முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா?

0

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே.

இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் சில பொதுவான விடயங்களுமே பேசப்பட்டன.

மேலும், முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவைக் களமிறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவிப்பது தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

கனடாவில் மற்றுமொரு நினைவுத்தூபி!

0

கனடாவில் மற்றுமொரு தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமன்றி இலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த மண்ணில் நீதி மறுக்கப்பட்டு தாம் புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் அதனை வெளிப்படுத்தி ஆறுதலை அடைந்துகொள்வதாக புலம்பெயர் இலங்கை தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கனடா தூதுவரை அழைத்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், கனடாவில் ஸ்காப்ரோவில் மற்றும் ஒரு நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமாவின் ராணியின் இறுதிக் கிரியை இன்று!

0

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) இடம்பெறவுள்ளது. 

அதன்படி, இறுதிக் கிரியை அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

‘இலங்கை சினிமாவின் ராணி’ என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா கடந்த சனிக்கிழமை தனது 78ஆவது வயதில் காலமானார். 

மாலினி பொன்சேகாவின் பூதவுடல் இன்று காலை 8 மணிக்கு கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலே கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது. 

பின்னர் மத சடங்குகள் நிறைவுற்ற பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்து கலைஞர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன. 

பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இதேவேளை, மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ள காரணத்தால் சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

அதற்கமைய, கிரியை நிகழ்வுகள் மற்றும் இறுதி ஊர்வலம் இடம்பெறுவதை முன்னிட்டு எந்தவொரு வீதியும் மூடப்படாது எனவும், இறுதி ஊர்வலம் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து சுதந்திர மாவத்தை வழியாக சுதந்திர வளாகம் வரையில் பயணிக்கும் போது, சுமார் 15 நிமிடங்களுக்கு சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர மாவத்தை வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதிக் கிரியை நிகழ்வுகள் நடைபெறும் போது, ​​அருகிலுள்ள சுதந்திர மாவத்தை மற்றும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் செல்லும் பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு!

0

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. 

இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், தற்போது சந்தையில் 245 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் உப்புக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தரின் உயிரை பறித்த சொகுசு ரயில்!

புகையிரத கடவையை கடக்க முயன்றவர் விபத்தில் பலியாகியுள்ளார். விபத்தினால் புகையிரத சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.

குறித்த விபத்து இன்று காலை 11.50 மணியளவில் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த புகையிரதம் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

புகையிரத ஊழியர்கள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்ததுடன், கிளிநொச்சி பொலிசாரும் மக்களும் புகையிரத ஊழியர்களுடன் பேசி சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு மலர்ச்சாலை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

தானியங்கி சமிக்கை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொலைபேசி சிக்னல்கள் பலவீனமாக உள்ளதா?

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொலைபேசி சிக்னல்கள் பலவீனமாக இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி சிக்னல்கள் பலவீனமாக இருந்தால் எவ்வாறு அது தொடர்பாக புகார் செய்ய வேண்டும் என்று வெவ்வேறு வழிகள் உள்ளன.

உங்கள் சேவையகத்தின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு
தொலைபேசி சிக்னல் பலவீனங்களைப் பற்றி புகார் செய்வதது எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.

உங்கள் மொபைல் சேவை வழங்குநரை (டயலொக், மொபிடெல், ஹட்ச், ஏர்டெல்) அழைக்கவும். அவர்கள் உங்கள் சிக்கலை விளக்க உங்களுக்கு உதவுவார்கள். பெரும்பாலும், அவர்களின் வலைத்தளம் அல்லது பில்லில் வாடிக்கையாளர் சேவை எண்ணைக் காணலாம்.

மேலும் பல சேவை வழங்குநர்கள் தங்களுக்கென மொபைல் எப் (செயலி) பயன்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த பயன்பாடுகள் மூலம் நீங்கள் சிக்கல்களைப் புகார் செய்யலாம் அல்லது புகாரளிக்கலாம்.

சில நேரங்களில் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ Facebook, Twitter (X) பக்கங்கள் மூலம் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் விரைவான பதிலைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பவும் முடியும்.

    இதேவேளை அருகிலுள்ள சேவை வழங்குநர் கிளைக்குச் சென்று உங்கள் பிரச்சினையைச் சமர்ப்பிக்கலாம். புகார் அளிக்கும்போது, ​​நீங்கள் இருக்கும் இடம் (கிராமம், நகரம், குறிப்பிட்ட முகவரி), அறிகுறிகள் பலவீனமடையும் சூழ்நிலைகள் (உள்ளே, வெளியே, குறிப்பிட்ட நேரங்கள்) மற்றும் அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

    உங்கள் சேவை வழங்குநருடன் நீங்கள் தொடர்பு கொண்டு சிக்கலைத் தீர்க்கத் தவறினால் அல்லது அவர்களுடன் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் இலங்கை மின்சார ஆணைய ஒழுங்குமுறை ஆணையத்தில் – TRCSL இல் புகார் செய்யலாம். மின்சார போக்குவரத்து சேவைகள் தொடர்பான புகார்களைத் தீர்க்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

    TRCSL என்பது சேவை வழங்குநர்களுக்கு மேலான ஒரு ஒழுங்குமுறை நிறுவனம், அவர்கள் உங்கள் புகாரை விசாரித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேலை செய்வார்கள்.

    புகார் அளிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:

    குறிப்பிட்ட தகவல்: நாள், நேரம், நீங்கள் யார் புகார் அளித்தீர்கள், நீங்கள் இருக்கும் இடம், தொலைபேசி பயன்முறை, சிக்னல்கள் பலவீனமடையும் சூழ்நிலைகள் மற்றும் அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய குறிப்பிட்ட தகவலை வழங்கி,
    அவர்கள் அளித்த பதில் ஆகியவற்றைப் பதிவு செய்து பொறுமையாக இருங்கள். சிக்கலைத் தீர்க்க சிறிது நேரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    இந்த நுட்பங்களைப் பின்பற்றுவது உங்கள் தொலைபேசி சிக்னல் பலவீனப் பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

    அடுத்தடுத்து விழும் ஐக்கிய மக்கள் சக்தியின் விக்கட்!

    0

    ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

    ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனகிபுர அசோக சேபால தெரிவித்துள்ளார். 

    தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். 

    நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தை விளக்குவதற்காக இன்று (25) காலை தலவாக்கலையில் உள்ள தனது அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

    அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    மாவட்ட இணை அமைப்பாளராக என்னை நம்பி வாக்குகளைப் பெற்ற உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் தலைமையகம் வழங்கவில்லை. 

    மேலும் தாய்க் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் சிறிய கட்சிகளின் நோக்கங்களை மட்டுமே தலைமையகம் எப்போதும் நிறைவேற்ற முயற்சி செய்து வருவருவதால், நாம் இந்தப் பதவிகளை வகிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார்.

    கிளிநொச்சி பகுதியில் காலையில் ஏற்பட்ட சோகம்!

    கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி என்ற நபரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சடலத்திற்கு அருகில் வாய்க்காலில் விழுந்த நிலையில் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

    சாலமாக மீற்க்கப்பட்ட 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தையின் மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாட்டில் அதிகரித்த உயிர்க்கொல்லி நோய்!

    0

    நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். 

    தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டிகிறார். 

    காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதி அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்தினார். 

    இதற்கிடையில், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து பிரதியமைச்சர் அமைச்சர் கூறுகையில், 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

    40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பலி!

    0

    கடந்த 40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா கூட்டத்தில் இந்திய பிரதிநிதி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதநேனி ஹரீஷ் பேசுகையில்,

    “பாகிஸ்தானை பொருத்தமட்டில் அந்த நாட்டிற்கு தீவிரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் வித்தியாசம் பார்க்காத நாடாகும். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் முதல், ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதல் வரை, இந்தியாவின் முன்னேற்றத்தையும், மன உறுதியையும் தாக்குவதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்து வருகிறது.

    இந்தத் தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதாரமும், மக்களின் மன உறுதியும் பாதிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்திய எல்லைக் கிராமங்களை தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், 20க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதுடன், 80க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தினர். கோவில்கள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்க முயன்றனர். ஆனால் இதற்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது.

    இந்தியாவின் இந்த நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. எனவே பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்து ஐ.நா-வில் பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத் தாக்குதல்களால் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன’ என்று குற்றம் சாட்டினார்”