Monday, November 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 7

சமூக ஊடகங்களில் பரவிய போலி ஆவணம்!

0

சமூக ஊடகங்களில் பரவி வரும் தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான போலி சட்டமூலம் தொடர்பான போலி ஆவணம் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ.

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான ஒரு சட்டமூலமாக தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலும் இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தாலும் வெளியிடப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விசாரித்த பின்னர் எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

தர்கா நகர் அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழா இன்று!

0

களுத்துறை தர்கா நகரில் உள்ள அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழா இன்று (23) இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தர்கா நகரில் உள்ள அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழாவில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமா ஹெட்டியாராட்சி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் சமூக சேவைக்கான கல்லூரியின் நீண்டகால அர்ப்பணிப்பு, கல்வியில் சிறந்து விளங்குவதற்காக குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் அசைக்க முடியாத முயற்சிகள் மற்றும் பல்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்த மாணவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கல்லூரியின் பங்கை ஆளுநர் பாராட்டினார்.

கல்வி என்பது ஆர்வம், அனுபவம் மற்றும் கற்பனை ஆகியவற்றின் வாழ்நாள் பயணம் என்றும், இது பொறுப்புள்ள, இரக்கமுள்ள குடிமக்களை வளர்க்கிறது என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்கு அறிவை வழங்குவதற்கும், ஒழுக்கமான குழந்தையை வளர்ப்பதற்கும், ஒற்றுமையை வளர்ப்பதற்கும் பள்ளியின் உறுதியான அர்ப்பணிப்புக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார், மேலும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் திறமையான நபர்களை உருவாக்குவதில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்த மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தின் வெற்றி மற்றும் கூட்டு சாதனைகளுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம்!

0

பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நேற்று அதிகாலை, நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை வந்தடைந்திருக்கிறார்.

இலங்கை, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார்.

கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிரான்சு நாட்டிலிருந்து கிளம்பிய அவர், ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 3 மாத பயணத்தை நாகையில் முடித்த அவர் நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் இலங்கை யாழ்பாணம் வந்தடைந்தார்.

நேற்று அதிகாலை இந்திய துறைமுகம் வந்த அவருக்கு சுபம் நிறுவனத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை சைக்கிளில் சென்றதால் அறிய முடிந்தது என்று கூறியுள்ள இனோசூரண், பல ஆண்டுகள் கழித்து பூர்வீக நாடான இலங்கை செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகல பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்!

0

2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தாலும், அது 2027 ஆம் ஆண்டுக்கு திருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, திருத்தப்பட்ட அறிவிப்பு கீழே.. 

2027 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஆரம்பப் பிள்ளைப்பருவ பாடத்திட்ட கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஒவ்வொரு மாகாணத்திலும் ஆசிரியர் பயிற்சி நடத்தப்படும் என்றும், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி கற்பித்தல் செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். 

எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார். 

கல்வி முறையின் தரமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தூக்கு தண்டனை பட்டியலில் 5 பாடசாலை மாணவர்கள்!

0

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

“தூக்கிலிடப்பட 805 ஆண்கள் சிறையில் உள்ளதுடன், தூக்கிலிடப்பட 21 பெண்களும் உள்ளனர். 

இதேவேளை தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. 

இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். 

எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல.” என்றார்.

கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு!

வெற்றிலைக்கேணி பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்த்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

புத்தளம்-நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!

0

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி நாகவில்லு பகுதியில் இன்று காலை 23.10.2025 ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை பின்னால் வந்த தண்ணீர் பவுசர் வண்டி முந்திச்செல்ல முற்பட்டதில் குறித்த விபத்து நாகவில்லு வைட் ஹோல் அருகில் இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை பின்னால் வந்த தண்ணீர் பவுசர் வண்டி முந்திச்செல்ல முற்பட்டபோது, கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் செயற்பட்ட தண்ணீர் பவுசர் வண்டி, முன்னாள் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி கடும் சேதத்திற்குள்ளாகியது.

அதே சமயம், குறித்த தனியார் பஸ் வண்டி விபத்து இடம்பெற்ற குறித்த இடத்தில் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலுடனும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலில் இருந்த நபர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி, தண்ணீர் பவுசர் வண்டி, தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகிய வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும்போக செய்கைக்கான வங்கிக்கடன் வழங்கிவைப்பு!

0

கட்டுக்கரைக்குளத்தின் கீழான 2025 /2026 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கை முன்னோடிக் கூட்டம் மன்னார் மாவட்டசெயலாளர் க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று 22.10.2025 இடம்பெற்றது.

விவசாய அமைச்சு ஊடாக 4% வட்டி உடனான கடன் தொடர்பான விழிப்புணர்வு மாவட்ட விவசாய பணிப்பாளரினால் எடுத்துரைக்கப்பட்டது .

விவசாய கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விளக்கங்கள் மன்னார் மக்கள் வங்கி அலுவலர்கள் மூலமாக சாதகமான முறையில் வழங்கப்பட்டது. விவசாயத்திற்கு போதுமான அளவு நீர் கிடைக்க பெற்று வருவதாக நீர் பாசன திணைக்கள அதிகாரிகள் உறுதி செய்ததுடன், சாதகமான நிலை உள்ளத்தையும் உறுதிப்படுத்தினர்.

விவசாய கடன் திட்டத்தின் முதற் கட்டமாக நான்கு விவசாயிகளுக்கு மக்கள் வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்கள் காசோலைகள் வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்ட பெரும்போக பயிர்ச்செய்கைக்கான வங்கிக்கடன் இம்முறை முதன்முதலாக மக்கள் வங்கியின் மன்னார் கிளை ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது.

கமநல காப்புறுதி சபையின் காப்புறுதி நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் உதவி பணிப்பாளர் ஊடாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் (நானாட்டான், மன்னார், மாந்தைமேற்கு), உதவி பிரதேச செயலாளர்கள் (மன்னார் நகரம், மாந்தை மேற்கு), உதவி மாவட்ட செயலாளர், கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் மன்னார், விவசாய திட்ட முகாமையாளர் மற்றும் தலைவர், பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் (முருங்கன்), கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் (மன்னார்), பிரதி விவசாயப் பணிப்பாளர் (உயிலங்குளம்), பிரதிப் பணிப்பாளர் கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், உதவிப்பணிப்பாளர், வங்கிகள் அலுவலர்கள், கமத்தொழில் காப்புறுதிச்சபை, திட்ட முகாமைத்துவக் குழு அங்கத்தவர்கள், விவசாய அமைப்புகளின் அங்கத்தினர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல!

தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ் மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (22.10.2025) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் ஒரு மாத காலத்தினுள் தயார் செய்யப்பட வேண்டும். திட்டங்கள் தயாரிக்கப்படும்போது திணைக்களத் தலைவர்கள் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதன் தேவைப்பாடுகளை உரியவாறு மதிப்பீடு செய்யவேண்டும். திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

வாழ்வாதார உதவிக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அதன் நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை. எனவே அவ்வாறான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது கூடுதல் அவதானம் தேவை. குறிப்பாக மத்திய அரசாங்கத்தாலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிக்கு மேலதிகமாக தூய்மை இலங்கை செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக மேலதிக நிதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அதற்குரிய திட்டங்களையும் திணைக்களத் தலைவர்கள் தயாரிக்கவேண்டும்.

மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யாமல் எந்தப் பிரதேசங்களுக்கு தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.

கடல்கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார் ஆளுநர்.

2025ஆம் ஆண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் குறிப்பாக சில திட்டங்களுக்கான கேள்விகோரல்களை வெளியிட்டபோது ஒப்பந்தகாரர்கள் யாரும் அதற்கு விண்ணப்பிக்காமை தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதனை அடுத்த ஆண்டு எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், திணைக்களத் தலைவர்கள் அதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான கௌரவிப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்தாலும் உடனடியாக வந்து அவற்றைப் பார்வையிடுவதில்லை என மக்களால் முறைப்பாடு முன்வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அதிகாரிகளின் இத்தகைய பின்னடிப்பு நடவடிக்கைகள் மீது மக்களால் சந்தேகம் எழுப்பப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆளணி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு சேவைப் பிரமாண குறிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சுச் செயலாளர்களை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் ஒவ்வொரு பணியாளரதும் தனிப்பட்ட கோவைகள் உரிய காலத்துக்கு காலம் இற்றைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பணியாளர் ஒருவர் ஓய்வுபெற்று ஒரு மாத காலத்தினுள் அவருக்கான ஓய்வூதியம் கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, கடந்த காலங்களில் பிழையான ஒன்றைச் செய்து வந்தால், அந்தப் பிழையைத் தொடர அனுமதிக்குமாறே சில தொழிற்சங்கங்கள் கோருகின்றன எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதனைத் திருத்த முற்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என எச்சரிக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது தொடர்பில் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், இதில் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரிகள் இறுக்கமான நடவடிக்கை எடுத்தேயாகவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன் பின்னர் அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களால் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

வடக்கில் தொடரும் ஆசிரியர் இடமாற்ற விவகாரம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஊடக சந்திப்பு இன்று 22.10.2025 இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

2026ம் ஆண்டு ஆசிரியர் இடமாற்றமானது, சேவையின் தேவைகருதிய என்ற போர்வையில் வடமாகாண கல்வியமைச்சினால் முறைகேடாக, நீதிக்கு புறம்பான இடமாற்றம் இடம்பெற்றிருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 82 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வந்துள்ளது.

இந்த இடமாற்றத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஆசிரியர்களின் நலன்களை கருதாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலைமையை கருதாமல் போரினால் கல்வியை இழந்து பின்தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியை மேலும் பாதிக்கின்ற வகையில் இடம்பெற்றிருக்கின்றது என ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை கண்டித்துள்ளது.

82 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 60 பேர் வரை 2009 யுத்த காலத்தில் பதுங்கு குழிகளில் யுத்த எறிகணைகளுக்கு மத்தியில் கடமையாற்றியவர்கள், கடந்த கால சேவைகளையும் ஆராயாமல் அவர்ளின் இடமாற்றமானது அடிப்படை மனித உரிமை மீறப்படுகின்ற விடயம் என சுட்டிக்காட்டியுள்ளது.

போர் முடிய உயர் ல்வியை கற்று ஆசியர் தொழிலுக்கு வந்தவர்களுக்கு கூட இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புவிசார் நிலமைகளை கூட ஆராயாமல் ஒவ்வொரு பாடசாலைகளுக்குமிடையில் பல கிலோ மீற்றர் தூரம் கொண்ட கிராஞ்சி, வேரவில் போன்ற போக்குவரத்து வசதியில்லாது பல வருடங்கள் கடமையாற்றியவர்கள் இவர்களையும் இடம்மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

நாங்கள் எங்கும் பணியாற்றக்கூடியவர்கள் அதன் உறுதிப்பாட்டில் நாங்கள் உள்ளோம். ஆசிரியர் பற்றாக்குரை மாவட்டத்தில் நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டு ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு இடம்மாற்றத்தை வழங்க வேண்டும்.

தற்போது வெளியிட்டுள்ள ஆசிரிய இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24ம் திகதி கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிமனை முன்பாக பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் பொது அமைப்புக்களும் பெற்றோர்களும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தார் செயலாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன்.